Tuesday, April 19, 2011

பாப்கார்ன் பாக்கெட்- 20110419





//இந்த ப்ளாக்க நான் போன வெள்ளிகிழமை  செட்யூல் பண்ணி , சரியா பதிவு பண்ணிடும்னு  நம்பி ஊருக்கு போனேன். பிளாக்கர் ஏமாத்திருச்சு.. இப்போ வந்து பார்த்தா லிஸ்டுல இருக்கு .. என்ன பிளாக்கர் இது ? ஐ  திங் . இது என்ன இருந்தாலும் ஒரு முட்டாள் எந்திரம்தான.. மனுசங்க மாதிரி வர முடியுமா ? //


இப்போதெல்லாம் வார இறுதியில் டிவி சேனல்களில்  நிறைய ஹாலிவுட் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு காண்பிக்கப்படுகின்றன. இது ஒரு சந்தோசமான அனுபவம். இப்போதுள்ள குழந்தைப் பட்டாளத்துக்கு இது மிக பெரிய வரப்பிரசாதம்.


 எனக்கு தெரிஞ்சு நான் பார்த்த முதல் டப்  செய்யப்பட்ட படம் 'ஜுராசிக்  பார்க்' . படு  மொக்கையாக டப் செய்திருப்பார்கள்.. ஒரு டைனோசர் ஒரு கூட்டத்தை கொல்ல ஓடி  வரும்போது ஒருவன் திரும்பி பார்த்து மற்றவரிடம் எச்சரிப்பான். 'ரன் அவே.. ஹரி  அப்' என்று கிட்டத்தட்ட கத்துவான் . அதை தமிழில் ' அதோட அம்மா கோவமா இருக்கு..' என்று சத்தே இல்லாத சத்தமே வராதபடி டப் செய்து சிரிப்பு வரவழைத்து  கொன்றிருப்பார்கள்.


அதை போலவே 'டுமாரோ  நெவெர் டை'யிலும்  மோட்டார் பைக் சேசிங் சீனில் ,ஜேம்ஸ் பாண்ட் இப்படி சொல்லுவார்  - 'க்ளட்சை பிடி; கியரை  போடு' என்று..


நல்ல வேலை இப்போதெல்லாம் ரெம்ப மெனக்கெட்டு டப் செய்து படத்தின் சுவையை அதிகப்படுத்துகிறார்கள். எல்லா படங்களும் வார்த்தையும் வாய் அசைவும்   தெளிவாக மேட்ச் ஆகும்படி சமாளிக்கிறார்கள். தற்போதைய உதா : இன்செப்சன்.   அதுவும் சில ஆக்சன் காமெடி படங்களில் நம்ம சென்னை பாஷை கலந்து கலகலப்பை அதிகம் ஆக்குகிறார்கள்.



நல்ல உதாரணம் : ஷங்காய் நைட்ஸ்.

 'நீ இன்ன வேணாலும் பண்ணிக்கோ. உனக்கு ஜாக்கி வந்து  ரிவிட் அடிக்க போறான்..  வர்ட்டா. அடி தூள் கிளப்பு மாமு'

So nice..

-----------------------------------------------------------------------------
காந்தியம் செத்துவிடவில்லை என்று இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது அன்னா ஹசாரே விசயத்தில். தனி ஒரு மனிதர் தன்னிடம் இழக்க ஏதுமில்லை என்னும்படி , எதற்கும் அஞ்சாமல் ஒரு கொள்கைக்காக போராடி வெற்றியை சுவைத்திருக்கிறார் .  சத்தியாகிரகம் மிக சிறந்த ஆயுதம் என்பதை பிரிட்டிஷ் ஆட்சியே அனுபவப்பட்டு உணர்ந்து பணிந்த போது , சுண்டைக்காய் தற்போதைய அரசு என்ன செய்யும்.?




அதுவும் அவருக்கு கிடைத்த ஆதரவு  அலைகளும் , பின்னால் வந்து நின்ற இளைஞர்கள் கூட்டமும்  ஒன்றை மட்டும் தெளிவாக சுட்டிக்காட்டியது. நல்லதற்கு ஒருவர் குரல் கொடுத்தால் கூட வர ,எழுந்து நிற்க அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது ஆறுதல். என்ன யாராவது ஒருவர் இப்படி முதலில் குரல் எழுப்ப வேண்டும் என்று எதிர்பார்த்து கொண்டிருப்பது நம் பலவீனம்.

  வாழ்த்துக்கள் ஹசாரே...


இதை சந்தோசமாக ஏற்றுகொள்ளும் அதே வேளையில் , மனதில் ஓரமாக ஒரு பயமும் இருக்கிறது. இதே முறையை சிலர் தங்கள்  அரசியல் வளர்ச்சிக்கும் உபயோகப்படுத்தும் அபாயமும் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் தெலுங்கானா விஷயத்தை பெரிதாக்க , பிரிவினை பிரச்சினையை  கொம்பு சீவ  கே.சீ.ஆர்  இதே முறையை பயன்படுத்தியது இன்னமும் உறுத்துகிறது.  ஆக இதை ஆதரிப்பதும் , எதிர்ப்பதும் மக்களின் அராய்ந்து அறியும் திறனை பொருத்தது.

------------------------------------------------------------------------

என் திரைப்பாடல்கள் விருப்பப்பட்டியலில் இப்போதும் முதல் இடம் இருப்பது 'கேள்வியின் நாயகனே'  - அபூர்வ ராகங்கள் படத்தில் கிளைமாக்ஸ் காட்சி பாடல். மெல்லிசை மன்னரின் அசாத்தியமான இசையில் , மனதை மயக்கும் வாணி ஜெயராம் மேஜிக் மெலோடியில் கமல் , ஸ்ரீவித்யா , ஜெயசுதா & மேஜர் நடிப்பில் உருவான இந்த வசீகரப்பாடலில் கண்ணை மூடி ஐந்து நிமிடம் இருந்து , மெல்ல  கண் விழித்தால் ஒரு தூய்மையான தியானத்தில் ஆழ்ந்திருந்த மன அமைதி கிடைக்கும்.



 ரஜினியின் அறிமுகப்படலம்  இந்த படமே . என் அப்பா இந்த படம் வந்த போது  , இந்த பாடலை மட்டும் பார்க்கவே எங்களுக்கு நெருங்கிய நண்பர் தியேட்டரில்  தினமும் ஒரு காட்சி கடைசி இருபது நிமிடம் போய் பார்ப்பாராம்.




கதையையே பாடலாய் சொல்லும் விதம் இப்போது ஒழிந்து வருவது வேதனை. அதை சுவைப்பட சொல்லும் விதத்தில் இந்த பாடல் இன்று வரை முதலிடம் வகிக்கிறது. ஹாட்ஸ் ஆப் எம்.எஸ்.வீ சார்.


'இல்லாத மேடை ஒன்றில் எழுதாத  நாடகத்தில் எல்லாரும் நடிக்கின்றோம் ' :  'All the world is stage .........'

----------------------------------------------------------------------
சிலவற்றின் பெருமை அதன் மாற்று ஒன்றை கொண்டு வந்து , அது மட்டமாக இருந்தால் மட்டுமே நமக்கு தெரிய வரும் . அதுபோலத்தான் மாப்பிள்ளை வந்திருக்கிறார். ஏற்கனவே ஹிட் ஆன படத்தை மீண்டும்  எடுக்க வேண்டுமானால் அதில் மக்கள் எதை ரசித்து பார்த்தார்களோ அந்த காட்சிகளை   சுவை கூட்டி, காலத்திற்கேற்ப மாற்றி தர வேண்டும். புது மாப்பிள்ளை பில்ட்-அப் மட்டும்தான் தருகிறாரே தவிர 'என்ன செய்தாலும் ரஜினியை தாண்ட முடியாது ' என்ற அடிமன எண்ணத்தில் முழு நடிப்பை தருவதில் சறுக்கியிருக்கிறார். அனால்


உண்மை முற்றும் வேறு தனுஷ் ... அந்த படத்தில் ரஜினி மிக எதார்த்தமாக அண்டர்-ப்ளே செய்திருப்பார்.ஸ்ரீவித்யாவுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதை என்பதால் மிக மிக அடக்கி வாசித்திருப்பார் ரஜினி .


அமலா-ரஜினி செமிஸ்ட்ரி இதில் இல்லை.நல்ல தமிழில் ஸ்ரீவித்யா-ரஜினி மோதலும் இதில் இல்லை. மாறாக  புது மாப்பிள்ளை ஒரு கத்தலாக , காமெடி எங்கு இருக்கிறது என்று தேடும் விதமாக இருக்கிறது.


அப்புறம்  விவேக் சார் ? - சரி விடுங்க .. எத்தனை தடவ திட்டறது ???


புது மாப்பிள்ளை பார்த்தவுடன் அன்று இரவே பழைய மாப்பிள்ளையை   தேடி தரவிறக்கம் செய்து பார்த்து   சாபவிமோசனம் அடைவீர்களாக !!!

------------------------------------------------------------------------------
கடைசி கார்ன்:

எப்பவும்  ஒரே மாதிரி இருக்காதீங்க. வாழ்க்கை சலிச்சு போய்டும்.

தினம் ஆபிஸ்க்கு கார் ,பைக்ல போனீங்கனா   ஒரு சேஞ்சுக்கு பஸ்ல போங்க. ஒரே சேனல் மட்டும் பாக்கறவரா  இருந்தா கார்ட்டூன் , டிஸ்கவரி , மொழி புரியாத எதாவது ஒரு படம்னு பாருங்க.

ஹிஹி..ஒரே பிகர பாக்கறவரா இருந்தா ( அது கஷ்டம்தான்  ) ,  அத   விட்டுட்டு புதுசா எதாவது பாருங்க ... யாருக்கு தெரியும் , பழைய பிகரே வந்து 'ஏன் என்னை இன்னைக்கு  கவனிக்கலை'ன்னு கேட்டாலும் கேக்கும் . கண்ணுல பாக்கறவங்க எல்லாத்தையும் எதாவது மொக்கை காரணத்துக்காக கூட  பாராட்டுங்க.


வீட்டுல ஒய்ப் சமையல வேண்டாம்னு சொலிட்டு நீங்களே களம் இறங்குங்க. புதுசா ட்ரை பண்ணுங்க.. நல்ல வந்தா என்ஜாய். இல்லேன்னா கடைசி நிமிசத்துல 'வா.. நாம ஹோட்டல் போலாம்'னு சொல்லி கூட்டிட்டு போய் நல்ல சாப்பாடு சாப்பிடுங்க..

ரெம்ப நாளா போன் பேசாத நண்பர்களுக்கு எல்லாம் ஒரு ரவுண்டு கால் பண்ணுங்க .. அன்னைக்கு நைட் ஒரு முழு திருப்தியா தூங்குவீங்க.


 அறிவாய் மானிடா.. - இததான் 'வாழும் கலை'-னு சொல்லித்தராங்க.
(டேய் ... நான் எப்போவுமே இப்படிதாண்டா   இருப்பேன்னு  சொன்னீங்கன்னா ... நோ ப்ராப்ளம். நீங்க சாக 100  வருஷம் ஆகும்..அது வரை அப்படியே இருங்க .. )

-------------------------------------------------------------------------------

//பிளாக்கர்: சொல்லிட்டாருப்பா பில் கேட்ஸ் ... வெளங்காத அரை லூசு ஊருக்கு போற அவசரதுள்ள தேதிய மாத்தி கொடுத்திட்டு இப்போ  என்னை குத்தம் சொல்லுது.  இதெல்லாம் ஒரு பதிவர்னு பதிவெழுதி அத நாலு பேரு படிச்சு ... ஹ்ம்ம் என்னமோ...நாசமா போங்க.. இப்படி அடுத்தவன குத்தம் சொல்றதுதான் மனுசங்க குணம்னா நான் முட்டாள் எந்திரமாவே இருந்திட்டு போறேன்... உதவாக்கரை வந்துட்டான் பதிவெழுத.. //

2 comments:

பாலா said...

நீங்கள் சொல்வது போல ஆங்கில படங்களில் பல்வேறு வட்டார தமிழ் பேசுவது நன்றாக இருக்கிறது. குறிப்பாக சென்னை தமிழ், நெல்லை தமிழ் என்று கலக்குகிறார்கள்.

அன்னாஹசாரே சாதனையை நோக்கி முதல் அடி. வரவேற்போம்.

வாழும் கலை நல்லாத்தான் இருக்கு.

இராஜராஜேஸ்வரி said...

வாழ்த்துக்கள் ஹசாரே...

Post a Comment