Saturday, May 19, 2012

கலகலப்பு @ மசாலா கஃபே

1996 -இல் நவரச நாயகன் கார்த்திக் மார்க்கெட் இழந்து , நடிப்பதை விட்டுவிட்டு சொந்த ஊர்  போய்விடலாம் என்று முடிவு செய்தபோது ஒரு பட வாய்ப்பு வந்தது. அதை முடித்து விட்டு நம்பிக்கையில்லாமல் கிளம்ப தயாரானபோது, படம் சரவெடி போல படு ஹிட் ஆகி ,கார்த்திக்கை கம்பீரமாக அடுத்த ரவுண்ட் வரவைத்தது. படம் - உள்ளத்தை அள்ளித்தா . இயக்கம் - சுந்தர் சி.

பதினைந்து வருடங்களுக்கு பிறகு 'நடிகர்' சுந்தர் சி ,ஏறக்குறைய அதே நிலைமையில் இருக்க, இயக்குனர் சுந்தர் சி அவரை காப்பாற்றியிருக்கிறார். படம் - கலகலப்பு @ மசாலா கஃபே. நல்ல இயக்குனர் தமிழுக்கு  திரும்ப கிடைத்ததற்கு  மகிழ்ச்சி.

லாஜிக்  என்ற ஒரே ஒரு விதியை தளர்த்திவிட்டு சுந்தர் சி படத்துக்கு போனால் , கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்ற மாட்டார் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார். படம் இரண்டரை மணி நேரம் புன்னகைக்க  - ரசிக்க -விலா நோக சிரிக்க வைக்கிறது.


விமல் - சிவா - சந்தானம் என்று மூன்று நாயகர்கள்.  அப்பாவி நடிப்பில் வழக்கம் போல கிண்டல் கலந்து விமல் கலக்கினால், பஞ்ச் டயலாக் கொடுத்து  அவருக்கு இணையாக கூடிய வரை நடிக்கிறார் சிவா. ஆனால் நடிப்பில் வெல்வது விமல்தான்.

கும்பகோணத்தில் நடக்கும் கதை. அப்பா காலம் வரைக்கும் நன்றாக ஓடிய ஹோட்டல்  டல்லடிக்க தொடங்கியதும் , அதை மீண்டும் முன்னுக்கு கொண்டு வர அவர் படும் பாடும் , ஒவ்வொரு  முயற்சியும் தோற்கும்போதும் அவர் கட்டும் ரியாக்சனும் , இளவரசுவிடம்  கடன்  வாங்கி கட்ட முடியாமல் 
அவரிடம் இருந்து தப்பிக்க போராடுவதும் - நல்ல நடிப்பு.

காமெடி தாண்டி சிவா எந்த படத்திலும் நடிக்க முடியாது என்பதை தெரிந்து , இயக்குனர் அவரை உபயோகபடுத்தியிருப்பது நன்றாக வேலை செய்கிறது. டீக்கடையில் நண்பன் 'மச்சான் உன் ஆளு போறாடா' என்றவுடன் 'அண்ணே..இவனுக்கு மட்டும் ரெண்டு பிஸ்கட் கொடுங்க' என்பதிலிருந்து  விமலிடம் ' கேள்வி கேக்கறது ரெம்ப சுலபம்.பதில் சொல்றதுதான் கஷ்டம். அதுவும் மகாநதி பாக்காதவன்கிட்ட பதில் சொல்லவே முடியாது' என கத்துவதிலும் 'சகோதரர்' என்று விமலை அழைப்பதிலும் -ஹ்ம்ம்  நல்ல முயற்சி சிவா.குறை ஏதும் இல்லை.   

இடைவேளை தாண்டி சந்தானம் வந்ததும் , ஏதோ பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறக்கும்போது ஏற்படும் ஆனந்த கூச்சல் போல தியேட்டர் எங்கும் கைதட்டல் எதிரொலிக்கிறது. 'அவ்வ்வ்ளோ  பெரிய ஜோக் இல்ல இது ' என்ற டயலாக் கூட சிரிப்புக்கு மினிமம் கேரன்ட்டி.
அதிரடி introவுக்கு அடுத்த சீனிலேயே , ' வழக்கம் போல இன்னைக்கும் உங்கள ஒருத்தன் என்ன பத்தி படு கேவலமா பேசியிருப்பானே..அவன் யார்னு போட்டு  கொடுத்தா ஐநூறு ரூபா தருவேன்' ன்னு தன் அக்மார்க் அலம்பலை ஆரம்பித்து விடுகிறார்.



அதுவும்
வள்ளி பட ரஜினி வசனத்தை சொல்லும்
அஞ்சலியிடம் ' ஏன் இத இப்டி சொல்லேன்.நீ விரும்புற பையனை விட உன்னை விரும்பற பையனை கட்டிகோன்னு.' என்று நச் கேள்வி கேட்டு பிறகு உதிர்க்கும் மொட்டைமாடி டயலாக் பின்னுகிறது.இம்சை அரசன் திரும்பி வருவதற்குள் ஒரு நல்ல உயரத்துக்கு போய்விடுவார் சந்தானம்.இவரோடு போட்டி போட்டு கலக்கும் மனோபாலா கேரக்டர் ஸ்கெட்ச் அசத்தல். அவர் கெட்டப் படு பொருத்தம்.

அஞ்சலி , ஓவியா நடிப்பு ஓகே. not  bad.

ஹீரோக்கள் மூன்று பேர் இருந்தாலும் படத்தின் நிஜ ஹீரோக்கள்  திரைக்கதையும் வசனமும்தான். ஹோட்டல் நிகழ்வையும் , வைரம் கைமாறும் கதையையும் சரியாக பொருத்தி அமைத்த விதம் அருமை. வசனங்கள்தான் படத்தின் ஆணிவேர். சுந்தர் சி -  பத்ரி இருவரின் உழைப்பு தெள்ளதெளிவாக தெரிகிறது.  
சுந்தர் சி-யின் 25வது படம் இது.சொல்லும்படியான லேண்ட்மார்க்.  ஒவ்வொரு காட்சியிலும் perfection தெரிகிறது

'அட்டு பிகருக்கு குட்டு பாய்' உட்பட சில வசனங்கள் கேபிள் சங்கரின் கைவண்ணம் என்று நினைக்கிறேன்.திரையுலகில் அவர் பிள்ளையார் சுழி வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது .மகிழ்ச்சி.அவர் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

கடனை திருப்பி  கேட்டு விமலை மிரட்டும் இளவரசுவை ,
சிவா வந்தவுடன் , இன்ஸ்பெக்டரிடம் மாட்டிவிட்டு அவரை பல கெட்டப்களில் ஓட வைக்கும் காட்சிகள் செம கலக்கல். இளவரசு - ஜான் விஜய் - பஞ்சு சுப்பு என எல்லாரும் நிறைவாக செய்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் , ரசிகர்களின் மாறிவரும் ரசனையை உணர்ந்து ,அதற்கு ஈடுகொடுக்கும்  திறமையான  ஒரு குழு இணைந்து , தரமான காமெடி படத்தை கொடுத்திருக்கிறார்கள். தாராளமாக ரசிக்கலாம்.

கலகலப்பு - நல்ல பொழுதுபோக்கு படம்.


பேஸ்புக்கில் தொடர , வலது பக்க மேல் ஓரத்தில் உள்ள 'Find us on Facebook'ல்  Like பட்டனை அழுத்தவும்.