Showing posts with label ஜாலி. Show all posts
Showing posts with label ஜாலி. Show all posts

Monday, March 7, 2011

திடீர் திருப்பம் - திமுகவில் இணைந்தார் ஒ.பன்னீர் செல்வம்


உலகத்திலயே வேகமா பரவும் ஜந்து என்ன தெரியுமா ? பாக்டீரியா ? வைரஸ் ? எய்ட்ஸ் ? ஹுஹும்ம் இது எதுவும் இல்ல சார்..  ஆனா ஒரு வகைல இது எல்லாமே நல்லதுதான் . ஏனா நம்மலா போயி வம்பா மாட்டுனாத்தான் இதுக எல்லாம் புடிச்சுக்கும். இதை  எல்லாம் தாண்டி ஒன்னு இருக்குனா அதுக்கு பேருதான் வதந்தி ..


என்னது ? வதந்தி..வதந்தி....

 தீ மாதிரி பரவறதுனால வதந்தீ அப்படினும் சொல்லுவாங்க.  இந்த வதந்தியோட கேரக்டர இப்போ ஒரு அனலிசிஸ் பண்ணலாமா ?







வதந்தி எனப்படுவது யாது ?அதன் வகைகள் எவை ? விளக்குக . 2X1 = 2 


வதந்தி எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
உண்மை இலாத சொலல். 

வதந்தி இருவகைப்படும். ஒன்று பொய்யான ஒன்றை ,  இல்லாத ஒன்றை  பரப்புவது. உதாரணம் - பதிவின் தலைப்ப பாருங்கப்பா 
 மற்றது உண்மையை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் ஊதி பெரியதாகி ஆக்கி பரப்புவது. உதாரணம் - தினந்தோறும் சன் , ஜெயா செய்திகள் பாருங்கப்பா ..
-------------------------------------------------------------------------
வதந்தியின் குணங்கள் பற்றி விளக்குக . 6X1 = 6  

வதந்திக்கு எப்போதுமே நிகழ் காலம்தான். இறந்த காலம் கெடையாது. 


'ஆட்சியில இருந்தப்ப அந்த ஆளு எவ்வளவு சம்பாதிச்சான் தெரியுமா ?'

'அட போடா..இப்பவும்  கூட அவனுக்கு ஒரு பங்கு போய்ட்டு இருக்காம். நம்ம எழாவது வட்டம் சொன்னாரு.. ' 


ஏழாவது வட்டத்துக்கு யார் சொன்னாங்கனு எவனுக்கும் தெரியாது. அவன கேட்டா மூணாவது பிளாக் கவுன்சிலர்னு  சொல்லுவான் .. 
வதந்தியோட பெரிய ப்ளஸ் பாய்ண்டே அத  ஆரம்பிச்ச ஆள கண்டுபிடிக்க முடியாது . நூறு பெர்சென்ட் சேஃப்டி. 


---------------------------------------------------------------
 சரி இறந்த காலந்தான் கிடையாதுனா அது இறக்கற காலமும் கெடையாது. அஞ்சு வருசமா தூங்கிட்டு இருக்குற வதந்திய அரை நிமிசத்துல்ல ரீ-ஓபன் பண்ணிடலாம்.


'அவரு பொண்ணு கல்யாணத்துக்கு அப்புறம் குடிக்கறதயே விட்டுட்டாருப்பா '


'இல்லேங்க .. போன வாரம் கூட டாஸ்மாக்ல கலாட்டா பண்ணி பெரிய பிரச்சனை ஆயிடுச்சுங்க..'


'அப்படியா ..அப்போ ஏன் நான் கூப்பிட்டா கூட வர மாட்டேங்கறாரு.. '

அது உண்மையோ பொய்யோ (வதந்தி என்பதே பொய்தான் என்று ஒரு சாரார் கொடி பிடிக்கிறார்கள் , ஆனால் 'நெருப்பிலாமல் புகையாது' என்ற பழமொழி சற்றே யோசிக்க வைக்கிறது ..) அன்னைக்கு நைட்டே ஒழுங்கா இருக்குற மனுஷன் வீட்டுக்கு வந்ததுமே , என்னைக்குமே மதிக்காத ரெண்டாவது பொண்ணு பக்கத்துல வந்து 'அப்பா ..ஏன்பா லேட்டு ? வயசாகுதுல.. உடம்ப பாத்துக்கோங்க.. என்னப்பா உங்ககிட்ட வாசம் ..  ஊதுங்க'னு அவர் அமைதிக்கு சங்கு ஊத ஆரம்பிச்சிடும். 

-----------------------------------------------------------
 வதந்தி ஒரு முற்போக்குவாதி. எந்த விஷயம் நடந்தாலும் கண் மூக்கு காது வைச்சு முற்போக்கா சொல்லும் . 


'அவங்க கல்யாணத்துக்கு யாரையுமே கூப்பிடல .. ஏன்னு தெரியல ? ' - இது ஆரம்ப செய்தி வடிவம்  .


'அவங்க பொண்ணு லவ் மேரேஜாமா ? உங்களுக்கு தெரியுமா ? - இது இடை நிலை செய்தி வடிவம் .


அடுத்து.. சாரி ..இந்த இடத்துலதான் உங்க எதிர்பார்ப்பு உடையும் . வதந்திக்கு கடை நிலை வடிவமோ சாவோ கிடையாது. அனுமாருக்கு அப்புறம் சாகா வரம் பெற்று சிரஞ்சீவியாக இருப்பது வதந்தி மட்டும்தான்.


-------------------------------------------------------------
வதந்தியின் மிகபெரிய பலமே அதன் எளிதாக மாறும் தன்மைதான். Its flexible sir...


'இந்த அம்மா ஏதோ நல்ல பையன பெத்த மாதிரி பேசிட்டு போறாங்க. நேத்து அவன் தம் அடிக்கிறத நான் பாத்தேங்க.. '


'உளறாத.. அவன் நேத்து என பையனோட க்ரூப் ஸ்டடி பண்ணிட்டு இருந்தானாம். ரெண்டு பெரும் அவன் பிரெண்ட் வீட்டுக்கு போயிருந்தாங்க.. '


'ஒ .. ஆமா ஆமா .. உங்க பையன் கூடத்தான் பக்கதுல இருந்தான் .. நான் மறந்துட்டேன்..'


'என் பையனுமா தம் அடிச்சான் ?'


'அப்படிதான் நெனைக்கிறேன். எதுக்கும் கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க . '

----------------------------------------------------------------


வதந்தி  உருவாக்கத்தின் காரணம் என்ன ? சுருக்கமாக விளக்குக 6X1=6

ஒ .. ரெம்ப சுருக்கமா விளக்கலாமே ..

  • வெட்டியா இருக்குற வீணா போனவங்க தங்கள் பொன்னான காலத்தை நல்ல முறையில் போக்க வதந்தி உதவுகிறது.
  • தங்கள் நண்பர்களோ  தெரிந்தவர்களோ சந்தோசமாக இருந்தால் பொறுக்க முடியாத மன உளைச்சலுக்கு வடிகால் - வதந்தி. 
  • வதந்தியின் காரணமாக வருத்தப்படும் மக்களை காண்பதில் கிடைக்கும் பேரின்பம்.

மேல்கூறிய மூன்றுக்கும் ஒரே உதாரணம் :
காலேஜ் ஹாஸ்டல இருந்தப்போ ராக்கிங் , சைட் அடிப்பது எல்லாம் போர் அடிச்சு வீட்டு நெனப்பு வரும். எங்கள டென்சன் பண்ற மாதிரி , பக்கத்துக்கு ரூம் பசங்க படுதீவிரமா படிச்சுட்டு இருப்பாங்க. இவனுகளுக்கு வீட்டு நெனப்பே வராதான்னு கேட்டா ' படிக்கதாண்டா ஐநூறு கிலோமீட்டர் தாண்டி வந்துருக்கோம். அத விட்டுட்டு .. போடா போயி முன்னேற வழிய பாருடா 'னு நம்மளயே கலாய்ப்பாங்க. அவங்க சந்தோசமா இருப்பாங்க. நமக்கு பொறுக்குமா ? 

ஒருத்தன அவங்க ரூமுக்கு அனுப்புவோம் .


'என்னங்கடா.. நீங்க எப்போ கிளம்பறீங்க ?'


'எங்கடா ?' 


'ஊருக்குதான். வெள்ளிகிழமை லீவு தெரியும்ல '


'லீவா ? எதுக்குடா ? '


' டேய் .. போன வாரம் கிரிக்கெட்ல ஸ்டேட் லெவல் வரைக்கும் போனோமே . அதுக்கு லீவ்  விட்டுருக்காங்க.. சரிடா. நான் இப்போவே போயி ட்ரெயின் புக் பண்றேன் '

ஒரு மணி நேரம் கழிச்சு எங்க ரூம்லயே வந்து ஒருத்தன் கேப்பான். - 'என்னங்கடா.. நீங்க எப்போ கிளம்பறீங்க ?'

அப்புறம் அந்த பசங்க அங்க இங்க போன் பண்ணி வீட்டுல சொல்லிட்டு , திரும்ப வந்து துணியெல்லாம் எடுத்து பேக் பண்ணிட்டு வியாழகிழமை மத்தியானம் வரைக்கும் இன்னும் எதுவும் நியூஸ் வரலயேன்னு பீல் பண்ணிட்டு நம்மகிட்ட கேப்பாங்க . நாங்க இப்போ சொல்லுவோம் -  ' படிக்கதாண்டா ஐநூறு கிலோமீட்டர் தாண்டி வந்துருக்கோம். அத விட்டுட்டு .. போடா போயி முன்னேற வழிய பாருடா '.


அவங்க மூஞ்சிய பாக்கும்போது ஒரு சந்தோசம் கிடைக்கும் பாருங்க . அதுக்கு பேர்தான் பேரின்பம்னு எங்க பசங்க சொல்லுவாங்க .. மத்தபடி நான் இப்படி யாருக்கும் பண்ண மாட்டேன் . உங்களுக்குதான் தெரியுமே நான் நல்லவன்னு..ஆனா இந்த ஐடியாவுக்கு ஆக்கம் ஊக்கம் இயக்கம் எல்லாம் நான்தான்... ஹிஹிஹி.. 



எனவே BEWARE OF வதந்தி.

இதையே சிறுவர்மலர் ஸ்டைல சொல்லனும்னா ,
ஆகவே குழந்தைகளே , 
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் ... அட போங்கப்பா சலிச்சு போய்டுச்சு.. 

Friday, February 18, 2011

ஹாஸ்டல் காம்பவுண்ட்

காலேஜ்ல பசங்கள சேர்க்கணும்னு முடிவு பண்ணுன உடனே பெத்தவங்க பையன் கிட்ட சொல்ற அடுத்த வார்த்தை  ' நீ ஹாஸ்டல்லதான் தங்கி படிக்கணும். வெளிய தங்குனா கெட்ட பசங்களோட சேர்ந்து கெட்டு போயிடுவ. '

காத கொடுங்க சார் - 'நீங்க சொல்றது நூத்துக்கு நூறு தப்பு .. ஹாஸ்டல்லதான் எல்லா அயோக்யதனமும் நம்ம பையனுக்கு அறிமுகம் ஆகும் . எப்படின்னு கேக்கறீங்களா? வெளிய ரூம் எடுத்தான்னா கூட இருக்கறவன் சரி இல்லேன்னா வேற எடத்துக்கு போயிடலாம். ஆனா ஹாஸ்டல்ல அப்படி இல்ல.. இவன் ரூம்ல பசங்க ஒழுங்கா இருந்தாலும் , சுத்தி இருக்குற நூறு ரூம்ல வெந்தது, வேகாதது, அரைவேக்காடுனு நூறு விதமா பசங்க இருப்பாங்க. நல்லா என்ஜாய் பண்ண ,கெட்டு போக  options அதிகம். ஒரு வருசத்துல்ல கேங் சேர்த்துட்டு அடுத்த வருஷம் அவனுகளே ஒரே ரூம்மேட்ஸ் ஆகிடுவாங்க.. புரிஞ்சிக்கோங்க '


(இந்த ரகசியத்த  சொல்லி எத்தன பசங்க சாபத்துக்கு ஆளாக போறேனோ? சரி பரவாயில்ல...பெத்தவங்க ஆசிர்வாதம் என்னை காப்பாத்தும் ) 

ஹாஸ்டல்ல நடக்கற வேடிக்கை உலகத்துல வேற எங்கயும் பாக்க முடியாது.



ஒரு ரூம்ல ஒருத்தனுக்கு நைட்டுலதான் படிக்க மூடு வரும். இன்னொருத்தனுக்கு லைட் போட்டிருந்தா தூக்கம் வராது. ' டேய் .. லைட் ஆப் பண்ணுடா..லைட் ஆப் பண்ணுடா 'னு ரெண்டு நிமிசத்துக்கு ஒரு தடவ கத்தி , படிக்கற பையன அழுக வெச்சுடுவான். சரி காலைல ,  நேரத்துல எந்திரிச்சாவது படிப்போம்னு அலாரம் வெச்சா  , இவன் தூங்குன உடனே அடுத்தவன் அலாரத்த ஆப் பண்ணிடுவான்.

 காலைல நம்ம புத்திசாலி ஏன் அலாரம் அடிக்கலைன்னு கிளாக்க செக் பண்ணுனா நம்ம பையன் அப்பாவியட்ட முகத்த வெச்சுட்டு ' அது அடிச்சுது மாப்ள .. நீதான் ஆப் பண்ணிட்ட'னு சொல்லுவான். இந்த லூசு அத நம்பி நாளைக்கு  எப்படியாவது எந்திரிச்சு படிச்சிடனும்னு முடிவு பண்ணுவான் . அடுத்த நாளும் இதேதான் நடக்கும் .
 -------------------------------------------------------------------

அடுத்த தொல்லை  - ஒரு ப்ளோருக்கு ஒரே போன்தான் இருக்கும் . யாராவது பையன்  அவங்க அப்பா அம்மா கூட பேசிட்டு இருந்தா , அந்த பக்கமா போறவன் சும்மா போக மாட்டான் .. ' டேய் , தம்ம கீழ போடுடா.. வார்டன் வராரு ' னு போன்ல கேக்குற மாதிரி பத்த வெச்சுட்டு எடத்த காலி பண்ணிடுவான் .
ஏற்கனவே நம்ம பெத்தவங்களுக்கு பையன் மேல ரெம்ப நம்பிக்கை .. இதுல புதுசா இது வேற .

தப்பி தவறி எவனாவது ஒருத்தனுக்கு காலேஜ்ல பிகர் செட் ஆகிருக்கும். நம்ம ஆளுக்குதான் பெருமை ஜாஸ்தியே. லவ் சக்சஸ் ஆனதுக்கு ட்ரீட் கொடுக்கறேன்னு , அதே ஹாஸ்டல் ஒரு பத்து ரூபாய்க்கு சமோசா வாங்கி கொடுத்துட்டு பசங்கள ஒரு ரெண்டு மணி நேரம் அறுத்து எடுத்துருப்பான்.அத நம்ம பசங்க ஞாபகம் வெச்சுகிட்டு , அந்த பொண்ணு போன் பண்ணுனா கீழ இருந்து கத்துவானுக ' ரூம் நம்பர் 39 , சரவணனுக்கு போ.........ன்.. வாடா உன் மூணாவது ஆளு லைன்ல இருக்கு '..

இவன் வேகமா ரூம விட்டு ஓடி போறதுக்குள்ள அங்க ஒரு சின்ன கூட்டமே சேர்ந்துருக்கும்.. போனை கைல கொடுத்துட்டு 'பேசுடா மச்சி ..ஹிஹி'னு சொல்லி பக்கத்துலயே நிப்பானுக.. இவன் என்னத்த பேச முடியும் .. ? அந்த பக்கம் இருக்குற லூசுக்கு அது எதுவும் புரியாது .எதாவது பேசிட்டே போகும்.. இவன் போன வையின்னு சொல்ல முடியாம ஒரு மணி நேரமா 'அப்புறம் ..அப்புறம்..அப்ப்புறம்..'னு சொல்லிட்டே இருப்பான்.


சரி இந்த தொல்லைக்கு செல்போனயாவது   வச்சிக்கலாம்னு பாத்தா , காலேஜ் ரூல் போட்டுருப்பாங்க -' நோ செல் போன் இன் காலேஜ் ப்ரிமிசஸ்' அப்படின்னு.

 ------------------------------------------------------------------------

அடுத்து எவனுக்காவது பர்த்டே வந்தா , அவன் அன்னைக்கு   இருந்து 'இனி பர்த்டேவே கொண்டாடகூடாது'னு முடிவு பண்ற அளவுக்கு அவன நடுராத்திரி பன்னெண்டு மணிக்கு எழுப்பி , கேக்க முகம் பூரா அப்பி , முட்டை , தக்காளின்னு மிக்ஸ் பண்ணி அபிஷேகம் பண்ணி ,அவன குளிக்க வெச்சு ' அடுத்த நாள் கிளாசுக்கு வரும்போது ஏதோ ஆக்சிடெண்ட்ல அடி பட்டவன் மாதிரி இருப்பான். இத்தனையும் பண்ண நம்ம பசங்களுக்கு செலவு அதிகபட்சம் முப்பது ரூபாய்.

இத்தனையும் பண்ணிட்டு வருத்தமே படாம அப்புறமா அன்பா கேப்பாங்க . 'மச்சான் ட்ரீட் எங்கடா போலாம்'னு ..

----------------------------------------------------------------------------

எல்லா ஹாஸ்டல் உள்ளேயும் வார்டன்னு ஒரு காமெடி பீஸ் சுத்திட்டு இருக்கும். பர்ஸ்ட் இயர் பசங்க இவர மதிச்சு நடப்பாங்க . செகண்ட் இயர் வந்துடுச்சு .. இப்ப அந்த ஆள் எதாவது பேசினா அவளவுதான். சண்டை எல்லாம் போட மாட்டாங்க. 'போ.. போ.. பெரியவங்க பேசிட்டு இருக்கோம் .. நீ போயி டீ ரெடி ஆயச்சானு கவனி 'னு சொல்லிட்டு அவங்க அலப்பரைய கன்டினியு பண்ணுவாங்க. அதுக்கும் மேல எதாவது வேற எங்கயாவது கம்ப்ளைன்ட் பண்ணிடாருனு வைங்க .. அதுக்கப்புறம் இவங்க எதிர் நடவடிக்கை பயங்கரமான சதி நிகழ்வுகளா இருக்கும் .

அவர்கள் கடைபிடிக்கும் போர்கால உத்திகள் சில :
  • வார்டன் ரூம (அவர் தூங்கும்போது) பூட்டிறது.
  • அவர் கீழ நடந்து போய்ட்டு இருக்கும்போது மேல இருந்து ஒரு முழு பக்கெட் தண்ணிய கொட்டறது.
  • டைம் பாம் மாதிரி ஊதுபத்தியில  பட்டாச கட்டி , அவர் இல்லாதப்போ ரூம்ல கொளுத்தி போடறது..  
  • பர்ஸ்ட்  இயர் பசங்ககிட்ட அவர் பேசிட்டு இருக்கும்போது , எங்கயாவது ஒளிஞ்சு நின்னுட்டு   'டேய் ..'னு அவர் பேர சொல்லி கத்தறது.
  • அவர் ரூம் ஜன்னல் வழியா உள்ள இருக்கிற பொருட்கள்  எல்லாத்தையும் கீழ தள்ளி விடறது. முடிஞ்சா வெளிய எடுத்து நாலு பேருக்கு அன்பளிப்பா கொடுக்கறது..
இந்த மாதிரி அஹிம்சை வழிலதான் அவரை பழிவாங்குவாங்க. என்ன இருந்தாலும் அவர் வயசுல பெரியவர்.. அதனால கை எல்லாம் வைக்க மாட்டாங்க.

குறிப்பு : இது வார்டன் கூட இருக்கும் ஜால்ராக்கள் , அவரை சப்போர்ட் செய்யும் ஹாஸ்டலில் தாங்கும் வாத்தியார்களுக்கும் பொருத்தும்.

ஒரு காலேஜ் ஹாஸ்டல்ல வார்டன் வேலைய ரெண்டே ரெண்டு வருஷம் பாத்தா போதும் . வெளிய எந்த கஷ்டமான வேலையையும் பாத்துடுவீங்க. வடிவேல் பாணில சொல்லனும்னா ' நீங்க அடிச்சா அடி அப்படி ஒரு அடிடா. அந்த அடிக்கு அப்புறம் எவன் அடிச்சாலும் தாங்கற பலம் வந்துருச்சுடா...'

 -------------------------------------------------------------------------------------------------

எதாவது புது படம் ரிலீஸ் ஆனாத்தான் வம்பே.. ஹாஸ்டல் பசங்கள கடுப்பேத்தரதுக்காகவே , day scholar பசங்க கேப்பாங்க ..'உங்களுக்கு என்னடா பிளான் .. ? நாங்க இன்னைக்கே நைட் ஷோ போறோம்'   .. இது பத்தாதா.. ஒருத்தன் ஆரம்பிப்பான் 


' கம்ப்யூட்டர் கிளாஸ் லேட் ஆகிடுச்சுன்னு சொல்லுவோம்டா '      
 
'அறிவுடா உனக்கு.. எந்த கம்ப்யூட்டர் கிளாஸ் ராத்திரி ஒரு மணி வரைக்கும் இருக்கு ?'
 
'சரி விடு .. இந்த ரமேஷ் பையனுக்கு உடம்பு சரியில்ல .. டாக்டருக்கு கூட்டிட்டு போயிட்டு வரோம்னு சொன்னா ?'
 
'ஹ்ம்ம் .. பாப்போம் '
----------------------------- 

 'என்னங்கடா..நைட் ரெண்டு மணிக்கு வந்திருக்கீங்க.  நீங்க சொல்ற கதைய நம்பவா என்னை இங்க வேலைக்கு வெச்சிருக்காங்க? நாளைக்கு  எல்லாம் அவங்க அப்பா அம்மாவுக்கு போன் பண்ணி வர சொல்லுங்க '
  
'சார் .. அப்பா ஊருல  இல்ல சார்.. '
 
'அம்மா?'
 
'அவங்க அப்பா இல்லாம எங்கயும் வரமாட்டாங்க சார் '
  
'போன் பண்ணுனேன் சார்.. ரிங் போய்டே இருக்கு. யாரும் எடுக்க மாட்டீங்கறாங்க ..'
 
'எங்க நம்பர் கொடு பாப்போம்..'
 
'இருங்க சார் ..மறுபடியும் ட்ரை பண்றேன்.'
  

'சார் ..இந்த ஒரு தடவ விட்டுருங்க சார் ..'
 
'ஏன்டா கெஞ்சற? எங்க அப்பா வரட்டும்டா.. நான் கூட இங்க நெறைய ப்ராப்ளம்  இருக்குனு அப்பாகிட்ட சொல்லணும்..   உனக்குத்தான் தெரியுமே .. எங்கப்பா பிரின்சிபாலுக்கு தெரிஞ்சவர்னு..'


'சரி சரி இதான் லாஸ்ட் வார்னிங் .. கிளாசுக்கு போங்க '

-------------------------------------------------------------------------


அதுல்ல இன்னொரு கொடுமையான விஷயம் ஆறு மாசத்துக்கு ஒரு தடவ நடக்கும். ஏறக்குறைய எல்லா காலேஜ் மேனேஜ்மெண்டும்  இந்த தப்பான கணக்க போடுறாங்க ; அது என்னன்னா , பொண்ணுக ஹாஸ்டலுக்கு மெஸ் பீஸ் எப்போவும் பசங்க ஹாஸ்டல  விட ஆயிரம் ரூபா கம்மியா இருக்கும்   - பசங்க  மெஸ் பீஸ்  பார்த்து டென்ஷன் ஆகிடுவாங்க.

ஏதோ பொண்ணுகளுக்கு சாப்பிடவே தெரியாத மாதிரியும் , பசங்க அதுக்குதான் காலேஜ் வந்துருக்கற மாதிரியும் அவங்க எண்ணம். உண்மை என்னனா பொண்ணுகளுக்கு காலேஜ்ல  இருக்குற ஒரே பொழுதுபோக்கு சாப்பிடறதுதான் . பசங்க அங்க இங்கன்னு சுத்திட்டு எதோ ஹாஸ்டல் பக்கம் வரும்போது சாப்பிடுவாங்க. அதுவும் காலைல நம்ம பசங்க கரெக்டா கிளாஸ் ஆரம்பிக்க பத்து நிமிஷம் முன்னாடிதான் எந்திரிப்பாங்க . so ப்ரேக்பாஸ்ட் பெரும்பாலும் கட்.

 ஆனா பொண்ணுக 'அதிகாலை விழித்தெழுந்து படிப்பதனால்' கரெக்டா சாப்பிட்டு கிளாசுக்கு வருவாங்க. எனக்கு தெரிஞ்சு ஒரு பெஞ்சுல நாலு பசங்க அசால்டா அம்சமா பிட் ஆவோம் . பொண்ணுக மூணு பேருக்கே பெஞ்ச பாகம் பிரிப்பாங்க . அப்போ யாருப்பா அதிகமா சாப்பிடறது ?

--------------------------------------------------------------------------------------

ஹாஸ்டல்டேனு வருஷம் ஒரு வெளங்காத  நாள் வரும் .. நைட்தான் கச்சேரி களைகட்டும்.. இந்த நேரத்துலதான் பசங்க பகை எல்லாம் தீர்த்துக்குவாங்க.. எங்க இருந்தாவது ஒரே ஒரு குவார்டர் வாங்கிட்டு வந்து அத பதினாறு பேரு தீர்த்தம் மாதிரி அடிச்சுட்டு , பயங்கர போதைல இருக்கற  மாதிரி எவன அடிக்கணுமோ அவன அடிக்கவோ இல்ல பஞ்ச் டயலாக் பேசவோ ஒரு நல்லா வாய்ப்பா பயன்படுத்திக்குவாங்க.. அடுத்த நாள் எல்லாரும் சொல்லி வெச்ச மாதிரி நடந்தத மறந்துருவாங்க..

----------------------------------------------------------------------------    



இத்தனை அடாவடி நடந்த பின்னாடி , காலேஜ் கடைசி நாள் எல்லாரும் பிரியும்போதுதான்  ஒரு உண்மை புரியும் .. 'இந்த உருப்படாதவனுகள பாக்காம எப்படி இருக்க போறோம்'னு.. அப்போ கண்ண கட்டிட்டு வர கண்ணீர்தான் சின்ன வயசுல பொம்மை வாங்கி தரலேன்னு அழுததுக்கு அப்புறம் வர நிஜமான  கண்ணீர் .
அதுக்கப்புறம் எப்போவும் அப்படி உண்மையா அழுகவும் மாட்டோம்... 


செஞ்சது எல்லாம் தப்புன்னு நெறைய பேருகிட்ட மன்னிப்பு கேக்கத் தோணும் .. ஆனா இது வரைக்கும்  கேட்டுருக்க மாட்டோம்..


இப்படி இவ்வளவு கலாட்டா நடந்த ஹாஸ்டல எப்படிங்க மறக்க முடியும் ?  ஒரு தடவ டைம் இருந்தா போயிட்டு வாங்க.. தனியா
போகாதீங்க.. மறுபடியும் அழுவீங்க.. பசங்களோட போங்க..  

Monday, February 14, 2011

கிரிக்கெட் காலம்

வேர்ல்ட் கப் வந்துடுச்சு. இதுல இந்தியன் டீம் எப்படி இருக்கு ? என்ன லெவல்ல இருக்குன்னு அலசி ஆராய்ச்சி பண்ண ஆயிரம் பேரு இருக்காங்க. அட டோனி ராசிக்காரப்பையங்க; எப்படியாவது கோப்பையைத் தூக்கிட்டு வந்துடுவான்.
 நமக்கு அந்த அளவுக்கு கிரிக்கெட் ஞானம் கிடையாது.ஆனா இந்த கிரிக்கெட் சீசன் வந்தாத்தான் சில பேரோட இன்னொரு முகத்த பாக்க முடியும் .அதுல்ல நெறைய அனுபவம் இருக்கு.
--------------------------------------------
உலகத்துலயே நம்ம பசங்க ராசி பாக்கறதுன்னா அது கிரிக்கெட்ல தான் . எக்ஸாம்க்கு கூட எரும மாடு எதிர்ல வந்தாலும் கண்டுக்காம போய் பெயில் ஆவான். ஆனா கிரிக்கெட்ல விட்டு கொடுக்க மாட்டான்.

 ' டேய் .. கால் மேல கால் போடாதடா. சச்சின் அவுட் ஆயிடுவான். '

'மச்சான் .. சொன்னேன்ல.. நான் இந்த சட்டை போட்டா அன்னைக்கு இந்தியா ஜெய்ச்சுடும்டா..'

'டேய் எனக்கு ஒவ்வொரு மெசேஜ் வரும்போது நம்மாளு ஒரு பவுண்டரி அடிக்கராண்டா.. நீ ஒரு மெசேஜ் அனுப்புடா..'

 --------------------------------------------
கிரிக்கெட் பாக்கும்போது சில பேரு காரணம் இல்லாம யார் மேலயாவது கோவப்படுவாங்க.அதுல்ல லாஜிக் எல்லாம் இருக்காது..

' இந்த ரவி சாஸ்திரி கமெண்ட் பண்ணுனாவே இப்படித்தான்.. 'Today he is in good form '-னான்.. அடுத்த பால்ல மிடில் ஸ்டெம்ப் பறந்துடுச்சு. அன்னைக்கு அப்படித்தான் 'yuvraj is waiting  in pavilion for his turn '-னு சொல்லி மைக்க வெச்சிருக்க மாட்டான் ;நல்லா போய்ட்டு  இருந்த பார்ட்னர்ஷிப் ரன் அவுட்ல கவுந்துடுச்சு..'

'எவண்டா அம்பயர செலக்ட் பண்றான்? அதான் ஏற்கனவே ரெண்டு எல்பி கொடுத்தாச்சுல்ல.. மூணாவது இப்போ கொடுத்தே ஆகணுமா ?'

 --------------------------------------------
அப்பப்போ சில பேர் , திடீர்னு கிரிக்கெட் சுப்புடு ஆகிடுவான்.

'தடிமாடு மாதிரி நிக்கிறான் பாரு. அவன் அடிச்சதுமே ஓட வேண்டியதுதான? இவனுக்கு பிட்னஸ் கொஞ்சம் கூட இல்லடா'

'ஒரு ஸ்கொயர் கட் அடிக்க தெரியல. இவன போய் பர்ஸ்ட் டௌன்ல ஏறக்கிருக்காணுக..'

'அட பாவி..  ட்ரை பிட்ச்..  பேட்டிங்  எடுத்திருக்கணும்டா. சே, டாஸ் வேஸ்ட் பண்ணிட்டானுக.. '
 --------------------------------------------
சில பேரு கிரிக்கெட்ட விட்டுட்டு மத்ததைத்தான் பாப்பாங்க. உண்மைலயே கிரிக்கெட்ல பெருசா நாட்டம் இருக்காது.

'ஏன் தம்பி , யாரு இந்த சிங்கு? போன வேர்ல்ட் கப்ல ஒரு பொண்ணு பேசுமே  அது பேரு கூட என்னமோ போடின்னு?'

'அதுவா , அது மந்த்ரா பேடிங்க'

'அதான் அதான் .. அதுக்கு எனன ஆச்சு ?'

'இந்த தடவ இவருதாங்க'

'என்னமோ போங்கப்பா..அது எவ்ளோ அழகா பேசிட்டு இருந்துச்சு ?  இவன் ஏன் இப்படி இங்கிலிஷ கடிச்சு துப்பறான்..இவனுக்கு எனன தெரியும் கிரிக்கெட்ட பத்தி..?'

'இவர்தான் சித்து. பழைய பிளேயர். '

'சரி வரேன்பா.. அப்போ இந்த தடவ அந்த பொண்ணு  கண்டிப்பா வராதா ?'

(எரிச்சலாக ) 'தெரியாது '

'படிப்ப பாருங்கப்பா. கிரிக்கெட்டா மார்க் வாங்கிதரபோகுது. உங்க அப்பா எங்க ?'
--------------------------------------------
இல்லத்தரசிகளை பழிவாங்க நம்ம ஆளுகளுக்கு கெடைச்ச ஒரே ஆயுதம் கிரிக்கெட்தான்.
'இந்த மனுஷனுக்கு நான் சீரியல் பாக்கறது பொறுக்காது. ஆனந்தம்ல முக்கியமான கட்டம் .. பாக்கலாம்னு பாத்தா ,சீக்கிரமே வந்து உயிரை வாங்குது ?'

உண்மை என்னவோ மனுசனுக்கும் கிரிக்கெட் பத்தி எதுவும் தெரியாது ..ஆனா மனைவிய பழிவாங்க வேற வழி.. ?

'ஆ.. சூப்பர் ஷாட்.. என்னமா அடிக்கிறான் பாரு.. நம்ம ஆளுக சாதாரணம் இல்ல..தெரிஞ்சுக்கோ ..'

'என்னங்க  சொல்றீங்க .. அந்த நாட்டுக்காரங்க சந்தோசமா கட்டிபுடிச்சுட்டு இருக்காங்க .. ?'

'அது அது ..நம்ம ஆளு நல்லாத்தான் அடிச்சான் .. ஆனா எதோ தப்பா நடந்துருக்கு.. இதுக்குதான் கவனமா பாக்கணும்.. பேச கூடாது.. நீ போய் சமையல் வேலைய பாரு'

--------------------------------------------

இந்த சின்ன பசங்கள வெச்சுகிட்டு கிரிக்கெட் பாக்கறதுக்கும்  ஒரு பொறுமை வேணும்.

'அப்பா .. இந்தியா ஜெயிச்சுடுமாப்பா?'

'ஹ்ம்ம்'

'ஹ்ம்ம்னா .. சொல்லுங்க ?'

'பேசாம இருடா'

'அம்மாஆஆஆ அப்பா எனன கார்ட்டூன் பாக்க விடமாட்டீங்கறாரு..'

'டேய் டேய் .. கத்தாத.. இந்தியா ஜெயிக்கும்'

'சச்சின் நூறு அடிப்பாரா ?'

'இப்போதாண்டா 13 ரன் எடுத்துருக்கான்.. தெரியல '

'அம்மாஆஆ '

'ஆமா ஆமா கண்டிப்பா  நூறு அடிப்பான்..'

'எனக்கு பேட் வாங்கி தரனும் ..இல்லேன்னா அம்மாவை கூப்புடுவேன்..'

'சரி'

'எப்போ வாங்கி தருவீங்க?'

'ஆண்டவா......'
--------------------------------------------
சில பேரு கிரிக்கெட்ல கொலை வெறியா இருப்பாங்க.. எங்க அப்பாவும் அதுல ஒரு உறுப்பினர்.ஜெயிக்கிற மாட்ச பாத்தா பரவாயில்ல .. தோக்கற மாட்சையும், அதுவும் படு கேவலமா தோக்கற மாட்சையும் Presentation வரைக்கும் பாக்கறது அவங்க பழக்கம்..

'அப்பா.. போதுமப்பா.. பாக்கறதுக்கே கஷ்டமா இருக்கு..சேனல்ல மாத்துங்க..'

'போடா .. எப்போவுமே ஜெயிச்சுகிட்டே இருக்கணுமா எனன ? இது வெளையாட்டுடா. வெற்றியும் தோல்வியும் மாறி மாறித்தான் வரும் '

அதோட நிறுத்திக்கணும் ... 'ஹ்ம்ம்..அப்புறம் ஏன் அழுகறீங்க ?'-னு கேட்டோம்னா  , படிக்காதவன் விவேக் மாதிரி 'அது வலி.. வேற டிபார்ட்மென்ட்'னு சொல்லிட்டு டிவி வால்யுமை அதிகப்படுத்துவாரு..

-------------------------------------------

எது எப்படியோ .. இதுல்ல ஒரு சந்தோசமும் திருப்தியும் இருக்கு..ஆனா வர்த்தக ரீதியா யாருக்கு லாபம்னு பாத்தா நம்ம  கவர்மெண்டுக்குதான்.. சரக்குல கொள்ளை லாபம் பாப்பாங்க .. காரணம் நம்ம பசங்க ,இந்தியா தோத்தாலும் கவலைல குடிப்பாங்க .. ஜெயிச்சாலும் சந்தோசத்துல்ல அடிப்பாங்க..

நம்மளும் ஜோதில ஐக்கியம் ஆவோம் ..வாங்க..  
Get ready for the fun I say ..   

Friday, February 11, 2011

காதலர் தினம்

கல்லூரி முடித்தப்பின் ,கடந்த ஆறு வருடங்களாக அதிர்ஷ்டவசமாகவோ துரதிஷ்டவசமாகவோ காதலர் தினம் அன்று , முழுநாளும் பயணத்திலோ அல்ல என்னை  யாருக்குமே தெரியாத  புது ஊரிலோ , குடும்பத்துடன் கோவில் குளம் என்று சுற்றிக்கொண்டோ இருந்திருக்கிறேன். To put in simple ,I was not accessable .

இந்த முறை எப்படியென்று தெரியவில்லை (இன்னுமாடா உன்ன நம்பிட்டு இருக்க?!!? ). அதுவும் கடந்த மூன்று வருடம்  இப்படி ஒரு நாள் கடந்து போகிறது என்றே தெரியாமல் சில பிரச்சனைகளால்  மன உளைச்சலில் மறந்திருக்கிறேன். ஆனாலும் அசைபோட சில நினைவுகள் இன்னும் பசுமையாக நினைவில்.

1995 :
 'டேய் .. நீ காந்தி நகர்லதான இருக்க ? '

'ஆமானா. ஏன்? '

'அந்த 8 -ஆம் நம்பர் வீட்டு அக்காகிட்டதான ட்யுஷன் படிக்கற ?   இந்த லெட்டர நாளைக்கு சாயந்தரம்  அவங்ககிட்ட கொடுத்திரு. '

'இன்னைக்கே போவேன்னா . கொடுத்தரேன் '

'இல்ல இல்ல நாளைக்குத்தான் கொடுக்கணும். ப்ளீஸ்டா'

'இல்லனா , நாளைக்கு மிட் டெர்ம் பேப்பர் எல்லாம் கொடுப்பாங்க. மார்க் எதாவது கம்மியா இருந்தா  , ட்யுஷன் போகமாட்டேன்.'

'ஹ்ம்ம், உன் கவலை உனக்கு.சரி கார்த்திய நான் சொன்னேன்னு கூட்டிட்டு வா '

'அவன் கிளாஸ்ல இன்னைக்கே பேப்பர் கொடுத்துட்டாங்கன்னா'

'நாசமா போங்கடா .. நீங்களும் ஒரு நாள் அவஸ்தைப்படுவீங்க.. அப்போ தெரியும்டா..'

1997 :
'டேய்..யாருகிட்டயாவது சும்மாவது சொல்லுடா'

'ஏன்டா , நீ சொல்லு , இல்ல சதீஷ் சொல்லட்டும்.. என்னை ஏண்டா மாட்டிவிடுறீங்க.. '

'நீ சரியான பயந்தாங்கொள்ளிடா. சதிஷு..நீ  '

'உனக்கு வேணும்னா நீ சொல்லுடா.'

'அந்த மூணு பேருக்கு எப்போவுமே எதோ ஒன்னு பேசறதுக்கு இருக்கு . என்னனு எல்லாத்துக்கும் சொல்லுங்களே.. எந்திரிங்க'

'பரதேசி , மாட்டி விட்டுட்டீயேடா. இன்னைக்கு என்ன நாளா இருந்தா எனக்கு என்ன ..'

1998 :
'என்னடா..இன்னைக்கு சொல்ல போறேன்னு ஆறு மாசமா சொல்லிட்டு இருந்த. போய் சொல்லுடா'

'டேய் சும்மா இருடா . அவனே  கடுப்பா இருக்கான்'

'டேய் ஏன்டா மச்சான்?'

'என்ன என்னடா மச்சான். அவள நல்லா பாருடா. ஆறு மாசத்துள்ள ஒன்றரை  அடி வளந்துட்டா. ப்ரேயர்ல பொண்ணுக சைடுல  இப்போ அவ கடைசியா நிக்குறா.நம்ம பையன் இன்னும் ரெண்டாவதா நிக்கறான்.'

2000 :

'எப்போடா சொல்ல போற? இன்னைக்கு என்ன நாளுன்னு தெரியும்ல  ?'

'மொதல எக்ஸாம் நல்லா பண்ணிட்டு அப்புறம் சொல்லலாம்னு இருக்கேன்டா'
 ------------------------
'entrance எக்ஸாம் முன்னாடி சொல்லிடுறா'

'மார்க் வரட்டும்டா.. யாருக்கு தெரியும் , நாங்க ரெண்டு பெரும் ஒரே காலேஜ் சேர்ந்தா நெறைய பேசிட்டு அப்புறமா சொல்லலாம்ல'

----------------------
'என்னடா மச்சான் இப்படி ஆயிடுச்சு ? நம்ம மார்க்குக்கு பேமென்ட் சீட் கிடைக்கறதே கஷ்டம்டா . அதுவும் எதாவது வெளியூர் காலேஜ்தான். உன் ஆளு மெடிக்கல் எடுக்கப்போகுதாம்ல'

'இப்போ உன்கிட்ட நான் எதாவது கேட்டேன்னா? பேசாம வாடா'

'சரி விடுறா. நம்ம விஷ்ணுவும் அதே காலேஜ்தான் சேர போறான் . அவன்கிட்ட அப்பப்போ எதாவது கேட்டுக்கலாம்'

'அவனும் அதே காலேஜாடா..எனக்கென்னவோ அது டேஞ்சர்னு தோணுது . மச்சான் நீ சீக்கிரமே அவகிட்ட சொல்லிடுடா. '

'ஐயோ .. ரெண்டு பெரும் பேசாம இருங்கடா'

-------------------------
'ஹாய்.. தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் சேரப்போறியா? congrats .'

'ஹ்ம்ம் , ஆமா உடனே போகணும் . இப்போதான் எங்க அம்மா உங்க அம்மாகிட்ட பேசிட்டு வந்தாங்கலாம். நீ என்னடா பண்ண போற ? இம்ப்ருவ்மெண்டா ?'

'அது.. அது எல்லாம் தேவையிருக்காது..கொஞ்சம்தான் கம்மியாயிடுச்சு.. இன்ஜினியரிங் சேர்ந்துடுவேன் எப்படியாவது'
-------------------------
'டேய் அவள பாரேன்..என்ன பாக்குதா உன்ன பாக்குதானே தெரியல . இது எல்லாம் டாக்டருக்கு படிச்சு என்னடா பண்ணபோகுது?'

'என்னடா உன் ஆள நீயே இப்படி பேசுற ?'

'என்னடா சொல்ற ? நான் எப்போ என் ஆளுன்னு சொன்னேன். நீ வேற , எப்போ பாத்தாலும் எதாவது சொல்லிட்டு இருப்ப. என் காலேஜ் சீனியர்கிட்ட பேசுனேன்டா.. காலேஜ்  ஸ்ட்ரிக்ட் எல்லாம் இல்லையாம். ஜாலியா சுத்தலாம் போல. பிகர்  எல்லாம் நெறய இருக்குமாம் மச்சான்.  '

----------------------------
2001 - 2004 :
'இன்னைக்கு ப்ரெண்ட்ஷிப் டே .. கைய காமி..'

'இது..இது ராக்கி இல்லையே ?!!'

'சேச்சே..'

'அப்போ சரி..'
------------------------

'ஃப்ரைடே ஊருக்கு போகும்போது எனக்கு வெயிட்  பண்றியா ? நாம அடுத்த பஸ்ல போலாம்.  '

'இல்ல.. பசங்க எல்லாம் ஒன்னா போவோம் .. '
'சரி.. அப்போ போ..'
'பரவாயில்ல .. நான் வெயிட் பண்றேன் .. நீ வா'
----------------------------
'போன வாரம் ஊருக்கு போகும்போது யார் கூட போன ?'

'ஏன் ? பசங்களோடதான் '

'உங்க ஊர் பொண்ணுகூட போனதா சொன்னாங்க ?'

'யாரு சொன்னா?'

'அது தேவை இல்ல.உண்மையா  இல்லையா? '
 --------------------------------
'எல்லாம் நல்லாதானடா போயிட்டு இருந்துது? எவன் போட்டுகொடுத்தானே தெரியலடா ? எவனையும் நம்ப முடியல மாப்ள'

'விடுறா.. சும்மா அதவே நெனச்சுட்டு.. ஆமா நாளைக்காவது  ஸ்ரீபதில வரியா ? இல்ல அடுத்த பஸ்தானா ?'
--------------------------------
'டேய்.. நம்ம  ரன் படத்துக்கு கூட ரெண்டு  தடவதாண்ட  போனோம்.. ஏன்டா ஆட்டோக்ராப்க்கு மட்டும் வாரம் ஒருதடவ கூப்புடுற..'

'டேய் வாடா.. எனக்கு நீ பண்ணுனதுக்கு இப்படியாவது பிராயச்சித்தம் பண்ணு ..'

'ஏன்டா மாப்ள கோபப்படுற ? ..வானு சொன்னா வரப்போறேன்.. இதுக்கு போயி பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு '
------------------------------------
'நான் ஜூனியர் ..அன்னைக்கு சிம்போசியம்ல கூட பேசுனோமே..'

'ஒ .. கரெக்ட்.. என்ன?'

' இன்னைக்கு ப்ரெண்ட்ஷிப் டே .. கைய காமிங்க '

'தேங்க்ஸ் சிஸ்டர்..'

'அய்யயோ .. இது ராக்கி இல்ல'

'அதனால என்ன ? உன்ன பாத்தா என் சித்தி பொண்ணு மாதிரியே இருக்கு .. பரவாயில்ல'

-------------------------------------

'ஏன்டா இப்படி பண்ணுன? அந்த கதைதான் முடிஞ்சுடுச்சே .. அவ இப்போ உன் பக்கத்துல்ல கூட வரதில்லயேடா '

'அவ இல்லேன்னா என்னடா? அதான் நீ இன்னும் என் பக்கத்துலயே இருக்கியே..உன்ன வெச்சுட்டு மறுபடியும் நான் ரிஸ்க் எடுக்கனுமா ?'

'பாத்துக்கோடா .. சில விஷயங்கள் நமக்கு திரும்பவும் கெடைக்கவே கெடைக்காது '

'ஹ்ம்ம்..அதுவும் கரெக்ட்தான்.. இன்னைக்கு கடைசி நாளாம்.. வா ஆட்டோக்ராப்க்கு போவோம்'

----------------------------------------------


ஆக என்னைப்பொறுத்தவரைக்கும் இதுவரைக்கும் காதலர் தினம் 'இன்றும் மற்றொரு நாளே'ங்கற அளவுலதான் இருக்கு.

மத்தப்படி .. பூ வாங்கிட்டு ப்ரொபோஸ் பண்ண போறவங்களுக்கும் ,ப்ரொபோஸ் பண்ணி அடி வாங்க போறவங்களுக்கும் ,  அடி வாங்கிட்டு 'த்ரிஷா இல்லேன்னா திவ்யா'-னு அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தம் ஆகறவங்களுக்கும்  என் ஆசியும் ஆல் தி பெஸ்டும்...


 என்ன நடந்தாலும் தைரியத்தையும் நம்பிக்கையையும் கைவிட்டுடாதீங்க.. அடுத்த வருசத்துக்கு உதவும்.. 

Tuesday, February 8, 2011

இக்கரைக்கு அக்கரை...

நேற்று என் ஆருயிர் நண்பர் , ஒட்டன்சத்திரம் பண்ணையார் கோபிநாத் வேலை நிமித்தம் புனே சென்றிருந்தாலும் கூட  மிகவும் தேச அக்கறைப்பட்டு மின்மடலில் என்னைத்தாளித்து விட்டார். ' என்ன இப்படி கண்டுக்காம இருக்கீங்க ? எவ்வளவு பெரிய ஊழல் நடந்துருக்கு. இதே அதிமுக செஞ்சிருந்தா இந்நேரம் இப்படி இருப்பீங்களா ? ' என்று தொடங்கி ஏதோ என் சித்தி பையன் தப்பு பண்ணி நான் கண்டிக்காத மாதிரி மிகவும் வருத்தப்பட்டார். அவருக்கு என் முதல் பதிவை வாசிக்க சொல்லி அதில்  நான் குறிப்பிட்ட 'செய்ய போகும் சில குற்றங்களுக்கான முன்ஜாமின்கள்' பத்தியில் மூன்றாவது பாயிண்டை மீண்டும் பார்க்க வலியுறுத்துகிறேன்.

சரி அதற்காக ஒரு கேள்வி என்னை நோக்கி வீசும்போது அதைப்பற்றி கவலைப்படாமல் வேறு ஒருவரை அறிக்கை விட செய்து கொடநாடு சென்று ரெஸ்ட் எடுக்க என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை..

ஓவர் டு மெயின் கோர்ஸ் :

நீதிபதி: 'பெத்தவங்க ரெண்டு பேரையும்  ஈவு இறக்கம் இல்லாம கொலை பண்ணியிருக்க. இதுக்கு என்ன தண்டனை தெரியுமா ?'
குற்றவாளி :'எந்த தண்டனையா இருந்தாலும் யோசிச்சு கொடுங்கய்யா. நான் அப்பா அம்மா இல்லாத அநாதைங்க!'

இப்படிதான் போயிட்டு இருக்கு ஸ்பெக்ட்ரம்  வழக்கு. தப்பு பண்ணிடாங்க . மாட்டிகிட்டாங்க.. அதுவும் திமுக தப்பு பண்ணி மாட்டறது  இதுதான் முதல் தடவ. ஏன்னா எந்த ஒரு விசயத்தையும் பிளான் பண்ணி பண்றதுல கலைஞர்தான் ப்ளாக் பெல்ட் சங்கி மங்கி.

என்னடா   இவனும் ஸ்பெக்ட்ரம்  பத்தி பேச வந்துட்டானான்னு பயப்படாதீங்க.. அதோட ஹிஸ்டரி ஆப்
தி இன்சிடென்ட் ;ஜியாக்ரபி ஆப் தி ஆக்சிடென்ட் எல்லாம் நான் பேச போறதில்ல..ஆனா  இனி என்ன பண்ணலாம்-னு ஒரு முடிவு பண்ணணும்ல.. தேர்தல் வேற வேகமா வந்துட்டு இருக்கு.. நீங்க பாட்டுக்கு அவசரமா எப்போவும் இல்லாம கோபப்பட்டு ஓட்ட மாத்தி போட்டுற போறீங்க..?!!

அதுல்ல பாருங்க ..எல்லாருக்கும் அடிப்படையா ஒரு விஷயம் தெரியும். இவன் கெட்டவன் , அவன் நல்லவன் ,அதனால அவனுக்குதான்  ஓட்டு போடணும்னு நம்ம யாரும் நினைக்கறதில்ல. இவன் பெரிய திருடன் , அவன் சின்ன திருடன் , அதனால அவனுக்கு சப்போர்ட் பண்ணலாம்னுதான் ஒவ்வொரு தடவையும் நாம நெனைப்போம். வேற வழி இல்ல. அப்படியும் இல்லாம என்ன பண்றதுனே தெரியலேன்னா நம்மளே பெருந்தன்மையா 'அட அஞ்சு வருஷம் இவன் அடிச்சுட்டான். அடுத்த சான்ஸ் இவனுக்கு கொடுப்போம். அவனும் எத்தனை நாளைக்குதான் நமக்கு குரல் கொடுக்கற மாதிரியே நடிப்பான்'-னு ஆட்சிய மாத்தி விட்டுடுவோம்.

இதுதானயா காலங்காலமா நடந்துட்டு இருக்கு ? இப்போ மட்டும் என்ன உங்களுக்கு புதுசா ரோசம் ? அட மஞ்ச கலரு  தாத்தாவ பாத்துப்பாத்து போர் அடிச்சுடுச்சு; பச்சை கலரு அம்மாவ நெக்ஸ்டு பாப்போம்னு சொன்னீங்கனா அது நியாயம் .. நான் உங்க கட்சி .. அத விட்டுட்டு  எதோ இந்த பக்கம் ரெம்ப நல்லவங்க இருக்குற மாதிரி , 'ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு சாட்டையடி கொடுப்போம் ; ஆதரிப்போம் தென்னகத்து தெரசாவை..'-னு சொன்னா ரணகளம் ஆகிடும் ; ஆகிடுவீங்க..

அட நாம எதுக்கு இந்தியா பூரா பாக்கணும் ? உனக்கு  இப்போ தமிழ்நாட்டுல என்ன குறை ? டிவி இருக்கு ; ஒரே ஒரு ரூபாய்க்கு அரிசி இருக்கு ; ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு.. இந்தா கொஞ்ச நாளுல ப்ரீ சிம்கார்டு , மொபைலுனு அறிவிப்பாங்க. உனக்கு கொடுக்கத்தான அங்க இருந்து எடுத்திருக்காங்க..அது ஏன் உன் புத்திக்கு எட்டமாட்டிங்குது? அதுவும் இல்லாம அவங்களுக்கே மறுபடியும்  ஓட்டு போட தனியா பணம் கொடுப்பாங்களே .. நீ வேணாம்னு சொல்லிடுவியா ?

அப்புறம் அதிமுக ஆட்சிக்கு வந்தா திமுக தலைக சும்மா இருக்குமா ? பழைய கேஸ் எல்லாம் கிளருவாங்க. அப்புறம் அம்மாவைக் காப்பாத்த மத்தியஅரசு ஒன்னும் பண்ணாது . ஏனா டெல்லி அம்மாவுக்கும் நம்ம அம்மாவுக்கும்தான் பலகாலமா வாய்க்கால் தகராறு இருக்கே.. 

அட நம்ம அம்மா எப்போதான் யாருகூட சண்டை போடாம இருந்திருக்காங்க. அது பி.ஜே.பினாலும் சரி காங்கிரஸ்னாலும் சரி , கொஞ்சமே கொஞ்ச காலம் ஓட்டிட்டு இருந்த மூன்றாம் அணினாலும் சரி , எல்லாரோடவும்   ' நேனே உயரதிகாரி'னு பல்ராம் நாய்டு மாதிரி வெறைப்பா இருப்பாங்க .. அம்மா மேல நடந்த/நடக்கற  ஊழல் வழக்குகள் எல்லாம் இன்னும் நிலுவைல இருக்கேப்பா? அதோட மொத்த மதிப்பு தெரிய வரும்போது அப்புறம் அதுக்கு ஒரு தடவ கோபப்படுவியா?  புரிஞ்சிக்க மாட்டிங்கறியே?


ஆக நம்ம மாநிலத்த பொறுத்தவரைல நல்லவங்க அரசாண்டதெல்லாம் காமராஜர் காலத்துக்கு அப்புறமா காணாம போய்டுச்சு. அதுக்கப்புறம் வந்தவங்களும் சரியில்ல.. நாமளும் சரியில்ல. நம்ம தப்ப எல்லாம் பட்டியல் போட்டா நாள் எல்லாம் அதையே பண்ணிட்டு இருக்க வேண்டியதுதான். அதனால நல்லபுள்ளைக்கு அழகு அமைதியா ஆர்ப்பாட்டம் பண்ணாம எப்பவும்  போல  யாருக்காவது ஓட்ட போட்டுட்டு வேலைய  பாரு.. அது திமுகவுக்கு எதிராக்கூட இருக்கட்டும். ஆனா அவங்க ஊழல் செஞ்சாங்க அதனால்தான்  நான் எதிரா போட்டேன்னு சொன்னா அத ஏத்துக்கமுடியாது. ஏனா எதிர்தரப்பு அதவிட ஏடாகூடமாத்தான் இருக்கு.


முக்கியக்குறிப்பு:மேற்குறிப்பிட்ட யாவும் சராசரி குடிமகனுக்கு எதிராக எழுப்பியவை. இந்த கேள்விகள் எதுவும் உண்மையான, நேர்மையான , வருடம் தவறாமல் வரி கட்டுகிற , மனசாட்சிக்கு தகுந்தபடி வாக்களிக்கிற வெகு சில நல்லவர்களுக்கு அல்ல.
நீங்க எதாவது என்மேல  கோபப்பட்டு  டூ விடாதீங்க..

அதிமுக்கியக்குறிப்பு : நான் திமுக கெடியாதுங்கோவ்...

Thursday, February 3, 2011

யுவர் ஆர்டர் ப்ளீஸ்..


ஒரு சில நாட்களா எல்லாருக்கும் வர  forward mail போட்டோ இது . கூடவே - எங்கு செல்லும் நம் கலச்சாரம்? என்று கேள்வியுடன்

படத்த பாத்ததுமே நானும் கிண்டல் பண்ண போறேன்னு நெனைக்காதீங்க..  சத்தியமா அந்த தப்ப நான்  செய்ய மாட்டேன் .ஆனா கொஞ்சம் தீவிரமா சிந்திக்க வேண்டிய விஷயம் இது!
இத பத்தி 'நீயா நானா'ல பேசுனா , கீழ இருக்குற 2 தரப்புல  எதாவது ஒரு பக்கம்தான் சாயணும்.
1 . எங்க போகுது நம்ம கலாச்சாரம் ? பொண்ணுகளுக்கு எப்படி இவ்ளோ தைரியம் ? இதுகள  வளர்த்திருக்காங்க  பாரு , அவங்கள சொல்லணும் ..
2 . இதுல்ல தப்பு ஒன்னும் இல்ல .. அவங்க மட்டும் என்ன பாவம் பண்ணுனாங்க ?  இதுவும் ஒரு நாகரீக வளர்ச்சிதான் ..

நீங்க எந்த பக்கம்னு முடிவு பண்ணிட்டீங்களா ? சரி அப்போ ஓவர் டு சப்போர்ட் பாய்ண்ட்ஸ்.

எதிர்ப்பு :

காந்தி மதுவிலக்கு ஆரம்பிச்சப்போ தமிழ்நாட்டுலதான் அமோக வரவேற்பு இருந்துச்சு . கள்ளுக்கடை மறியலுக்கு தாய்க்குலங்கள் பங்கு அதிகமா இருந்துச்சு. ஆனா இப்போ நெலமை தலைகீழ் . பசங்களுக்கு  எப்போவோ 'தண்ணி'க்கு பர்மிசன் கொடுத்து தண்ணி தெளிச்சு விட்டாச்சு ( வேற வழியும் இல்ல) . ஆனா இப்போ பொண்ணுக அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பிச்சிருக்காங்க . அதுக்கு முழு காரணம் , இதோ குற்றவாளி கூண்டில் இருக்கும் இந்த நாகரீக சீர்கேடுதான்.
வீட்டுக்குள்ள அடங்கி இருந்தப்போ ஒழுக்கம்னா என்ன , வரைமுரைனா  என்னனு தெரிஞ்சுது . இப்போ வெளி உலகத்துள்ள போய் எல்லாத்துக்கும் சரிசமமா பழக விட்டதுமே , சேர்க்கை சரியில்லாம பார் வரைக்கும் போக ஆரம்பிச்சுட்டாங்க..
 இப்படியே போனா கூடிய சீக்கிரம்
  •  'இது ஒரிஜினல் இல்ல , போலி சரக்க கொடுத்து கவர்மென்ட் அதிகமா சம்பாதிக்குது. 
  •  எனக்கு டான்ஸ் கிளாசுக்கு  நேரமாச்சுடீ   , ஒரே ஒரு லார்ஜ் மட்டும் போதும் .  
  •  hangover அதிகமா இருக்குடீ .however  காலேஜுக்கு வர பாக்கறேன் 'னு  
டயலாக் பேச ஆரம்பிச்சுருவாங்க..அட அத விடுங்க , வீட்டுக்கு தண்ணியடிச்சுட்டு வந்த புருசன ,பொண்டாட்டி அடிக்கிற காலம் போய் இனி பொண்டாட்டி தண்ணி அடிச்சுட்டு வந்து புருசன அடிப்பாங்க .. ஒன்னு மட்டும் பாத்தீங்களா , அப்பவும் அடி வாங்கறது அப்பாவி புருசன்தான் .. ஆகவே  இதை  எல்லாம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.


ஆதரவு :

என்னங்க புரியாம பேசறீங்க ? நாடு எங்க போயிட்டு இருக்கு ? நீங்க இன்னும் பொதிகை டிவி வயலும் வாழ்வும் கணக்கா பேசிட்டு இருக்கீங்க.
இதுல்ல மட்டும் சின்ன சமாதான உடன்படிக்கை பண்ணிட்டோம்னா அரசுக்கு ரெண்டு மடங்கு வருமானம் பெருகும்.
இதே மாதிரி வேற எந்த நாடுலயாவது , ஒரு பொண்ணு சரக்கு வாங்க போறத இவ்ளோ முன்னிலைப்படுத்தி யோசிப்பானா? பசங்களுக்கு ஒரு சுதந்திரம் , பொண்ணுகளுக்கு ஒண்ணா?
 தண்ணிய விடுங்க , ஒரு தம் வாங்கணும்னா கூட பொண்ணுகளுக்கு கஷ்டம்தான். ஏன்டா தம் அடிக்கறேன்னு பையன கேட்டா , ஒரே டென்ஷன் , அதான் அடிக்கரேங்கறான் .. பொண்ணுகளுக்கு டென்ஷன் வராதா ? வந்தா தம் அடிக்க கூடாதா ? இத்தனைக்கும்  ரெண்டு பெரும் ஒரே கம்பெனில ஒரே வேலைலதான் இருக்காங்க.. 

சில விசயங்கள் பெண்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறதே .. அது 33 சதவிகித இட ஒதுக்கீடு  ஆகட்டும்,இல்ல தெருவோரத்துல  இருக்குற குட்டி சுவராகட்டும் ..
சரக்கு  மட்டும் டொமினோஸ் பீட்சா மாதிரி ஹோம் டெலிவரீயா இருந்தா  இந்த பிரச்சனையே இல்ல  - ' 100 pipers ஸ்காட்ச் ஒரு full . சைடு டிஷ் combo A , மறக்காம ஒரு மிராண்டா பாட்டில்'னு எங்க பொண்ணுகளும் அமைதியா ஆர்டர் பண்ணிட்டு , கார்டு பேமென்ட் பண்ணுவாங்க.
ஆகவே எவ்ளோ செலவானாலும் பரவால்ல.. இத பைசல் பண்ணுங்க ..

விவாதம் சூடு பறக்கிறது .. தொடர்ந்து விவாதிப்போம் ஒரு சிறிய விளம்பரத்துக்கு பிறகு-ன்னு சொன்னா நீங்க சரக்கு அடிச்சிட்டு என்ன அடிப்பீங்க.. so இப்போ நடுவுல நின்னு பாப்போம் :
இந்த தலைப்ப வெவரமா பாத்தாலும் சரி , விளையாட்டா பாத்தாலும் சரி , ஒரே balanced பீலிங்தான் இருக்கு .. எந்த தரப்பையும் பாத்து கோபம்  எதுவும் வரல .

  •  குடிப்பழக்கம் தவறானது - அது ஆணானாலும் சரி , பெண்ணானாலும் சரி.  ஆனால் அது பெண்கள் செய்யும்போது , அதிகமாக அல்ல மிகுதியாக விமர்சனத்துக்குள்ளாகிறது . அது தவறு . ஆனால் , புதிதாக ஒரு கண் உறுத்தும்படியான மாற்றம் சமுகத்தில் நடக்கும்போது அது அதிகமாக விவரிக்கபடுவது இயற்கையே.
  • 'social awareness பற்றி என் பெண்ணுக்கு தெரியும் சார் . அதனாலதான் அவளுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன்!' என்று பெருமையாக பேசும் பெற்றோர் , அதன் இன்னொரு பரிணாமத்தையும் சரியாக புரிந்து கொண்டு சற்றே விழிப்புடன் கவனித்திருந்தால் இந்த பிரச்சனையே எழுந்திருக்காது.ஆனால் ஒரு வரம்புக்கு மீறி எதையும் கட்டுக்குள் வைக்க  முடியாது என்பதே நிதர்சனம்.
  • பெண்களுக்கு தனியாக சில வசதிகளை செய்து கொடுத்தால் ஓரளவுக்கு இந்த நிகழ்வு சரிகட்டப்படும். ஆனால் அது நடைமுறைக்கு ஒத்து வராது . ஏன் என்பதற்கு காரணம் எல்லாரும் அறிந்ததே -  Culture . இருந்தாலும் நாடும் காலமும் மாற மாற எதுவும் சாத்தியப்படலாம் . அதுவரை அமைதி காப்போம் .
இதுவரை ஒத்துழைத்ததற்கு  நன்றி வணக்கம்..


ஹலோ ப்ரதர் ..எங்க போறீங்க..? கடைசி வரைக்கும் உங்க கருத்து என்னனு சொல்லவே இல்லையேன்னு கேக்கறீங்களா ?

 ஹிஹி ..கடவுள் உண்டா இல்லையா?
ரஜினி அரசியலுக்கு வருவாரா இல்லையா ?
நேதாஜி உயிரோட இருக்காரா(இருந்தாரா)  இல்லையா?
விஜய்க்கு ஒரு படமாவது ஹிட் ஆகுமா இல்லையா? -ன்னு நெறைய கேள்வி விடை கிடைக்காமலே இருக்கு .. கூட இதையும் ஒண்ணா சேர்த்துக்கோங்களே  .. இப்போ என்ன குறைஞ்சு போக போகுது ?
ஆனா இதுல்ல என் கருத்து என்னனு சிம்பிள்ளா சொல்லனும்னா
- ' but அந்த பொண்ணோட தைரியம் எனக்கு ரொம்ப  புடிச்சிருக்கு! :-) '