Friday, February 11, 2011

காதலர் தினம்

கல்லூரி முடித்தப்பின் ,கடந்த ஆறு வருடங்களாக அதிர்ஷ்டவசமாகவோ துரதிஷ்டவசமாகவோ காதலர் தினம் அன்று , முழுநாளும் பயணத்திலோ அல்ல என்னை  யாருக்குமே தெரியாத  புது ஊரிலோ , குடும்பத்துடன் கோவில் குளம் என்று சுற்றிக்கொண்டோ இருந்திருக்கிறேன். To put in simple ,I was not accessable .

இந்த முறை எப்படியென்று தெரியவில்லை (இன்னுமாடா உன்ன நம்பிட்டு இருக்க?!!? ). அதுவும் கடந்த மூன்று வருடம்  இப்படி ஒரு நாள் கடந்து போகிறது என்றே தெரியாமல் சில பிரச்சனைகளால்  மன உளைச்சலில் மறந்திருக்கிறேன். ஆனாலும் அசைபோட சில நினைவுகள் இன்னும் பசுமையாக நினைவில்.

1995 :
 'டேய் .. நீ காந்தி நகர்லதான இருக்க ? '

'ஆமானா. ஏன்? '

'அந்த 8 -ஆம் நம்பர் வீட்டு அக்காகிட்டதான ட்யுஷன் படிக்கற ?   இந்த லெட்டர நாளைக்கு சாயந்தரம்  அவங்ககிட்ட கொடுத்திரு. '

'இன்னைக்கே போவேன்னா . கொடுத்தரேன் '

'இல்ல இல்ல நாளைக்குத்தான் கொடுக்கணும். ப்ளீஸ்டா'

'இல்லனா , நாளைக்கு மிட் டெர்ம் பேப்பர் எல்லாம் கொடுப்பாங்க. மார்க் எதாவது கம்மியா இருந்தா  , ட்யுஷன் போகமாட்டேன்.'

'ஹ்ம்ம், உன் கவலை உனக்கு.சரி கார்த்திய நான் சொன்னேன்னு கூட்டிட்டு வா '

'அவன் கிளாஸ்ல இன்னைக்கே பேப்பர் கொடுத்துட்டாங்கன்னா'

'நாசமா போங்கடா .. நீங்களும் ஒரு நாள் அவஸ்தைப்படுவீங்க.. அப்போ தெரியும்டா..'

1997 :
'டேய்..யாருகிட்டயாவது சும்மாவது சொல்லுடா'

'ஏன்டா , நீ சொல்லு , இல்ல சதீஷ் சொல்லட்டும்.. என்னை ஏண்டா மாட்டிவிடுறீங்க.. '

'நீ சரியான பயந்தாங்கொள்ளிடா. சதிஷு..நீ  '

'உனக்கு வேணும்னா நீ சொல்லுடா.'

'அந்த மூணு பேருக்கு எப்போவுமே எதோ ஒன்னு பேசறதுக்கு இருக்கு . என்னனு எல்லாத்துக்கும் சொல்லுங்களே.. எந்திரிங்க'

'பரதேசி , மாட்டி விட்டுட்டீயேடா. இன்னைக்கு என்ன நாளா இருந்தா எனக்கு என்ன ..'

1998 :
'என்னடா..இன்னைக்கு சொல்ல போறேன்னு ஆறு மாசமா சொல்லிட்டு இருந்த. போய் சொல்லுடா'

'டேய் சும்மா இருடா . அவனே  கடுப்பா இருக்கான்'

'டேய் ஏன்டா மச்சான்?'

'என்ன என்னடா மச்சான். அவள நல்லா பாருடா. ஆறு மாசத்துள்ள ஒன்றரை  அடி வளந்துட்டா. ப்ரேயர்ல பொண்ணுக சைடுல  இப்போ அவ கடைசியா நிக்குறா.நம்ம பையன் இன்னும் ரெண்டாவதா நிக்கறான்.'

2000 :

'எப்போடா சொல்ல போற? இன்னைக்கு என்ன நாளுன்னு தெரியும்ல  ?'

'மொதல எக்ஸாம் நல்லா பண்ணிட்டு அப்புறம் சொல்லலாம்னு இருக்கேன்டா'
 ------------------------
'entrance எக்ஸாம் முன்னாடி சொல்லிடுறா'

'மார்க் வரட்டும்டா.. யாருக்கு தெரியும் , நாங்க ரெண்டு பெரும் ஒரே காலேஜ் சேர்ந்தா நெறைய பேசிட்டு அப்புறமா சொல்லலாம்ல'

----------------------
'என்னடா மச்சான் இப்படி ஆயிடுச்சு ? நம்ம மார்க்குக்கு பேமென்ட் சீட் கிடைக்கறதே கஷ்டம்டா . அதுவும் எதாவது வெளியூர் காலேஜ்தான். உன் ஆளு மெடிக்கல் எடுக்கப்போகுதாம்ல'

'இப்போ உன்கிட்ட நான் எதாவது கேட்டேன்னா? பேசாம வாடா'

'சரி விடுறா. நம்ம விஷ்ணுவும் அதே காலேஜ்தான் சேர போறான் . அவன்கிட்ட அப்பப்போ எதாவது கேட்டுக்கலாம்'

'அவனும் அதே காலேஜாடா..எனக்கென்னவோ அது டேஞ்சர்னு தோணுது . மச்சான் நீ சீக்கிரமே அவகிட்ட சொல்லிடுடா. '

'ஐயோ .. ரெண்டு பெரும் பேசாம இருங்கடா'

-------------------------
'ஹாய்.. தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் சேரப்போறியா? congrats .'

'ஹ்ம்ம் , ஆமா உடனே போகணும் . இப்போதான் எங்க அம்மா உங்க அம்மாகிட்ட பேசிட்டு வந்தாங்கலாம். நீ என்னடா பண்ண போற ? இம்ப்ருவ்மெண்டா ?'

'அது.. அது எல்லாம் தேவையிருக்காது..கொஞ்சம்தான் கம்மியாயிடுச்சு.. இன்ஜினியரிங் சேர்ந்துடுவேன் எப்படியாவது'
-------------------------
'டேய் அவள பாரேன்..என்ன பாக்குதா உன்ன பாக்குதானே தெரியல . இது எல்லாம் டாக்டருக்கு படிச்சு என்னடா பண்ணபோகுது?'

'என்னடா உன் ஆள நீயே இப்படி பேசுற ?'

'என்னடா சொல்ற ? நான் எப்போ என் ஆளுன்னு சொன்னேன். நீ வேற , எப்போ பாத்தாலும் எதாவது சொல்லிட்டு இருப்ப. என் காலேஜ் சீனியர்கிட்ட பேசுனேன்டா.. காலேஜ்  ஸ்ட்ரிக்ட் எல்லாம் இல்லையாம். ஜாலியா சுத்தலாம் போல. பிகர்  எல்லாம் நெறய இருக்குமாம் மச்சான்.  '

----------------------------
2001 - 2004 :
'இன்னைக்கு ப்ரெண்ட்ஷிப் டே .. கைய காமி..'

'இது..இது ராக்கி இல்லையே ?!!'

'சேச்சே..'

'அப்போ சரி..'
------------------------

'ஃப்ரைடே ஊருக்கு போகும்போது எனக்கு வெயிட்  பண்றியா ? நாம அடுத்த பஸ்ல போலாம்.  '

'இல்ல.. பசங்க எல்லாம் ஒன்னா போவோம் .. '
'சரி.. அப்போ போ..'
'பரவாயில்ல .. நான் வெயிட் பண்றேன் .. நீ வா'
----------------------------
'போன வாரம் ஊருக்கு போகும்போது யார் கூட போன ?'

'ஏன் ? பசங்களோடதான் '

'உங்க ஊர் பொண்ணுகூட போனதா சொன்னாங்க ?'

'யாரு சொன்னா?'

'அது தேவை இல்ல.உண்மையா  இல்லையா? '
 --------------------------------
'எல்லாம் நல்லாதானடா போயிட்டு இருந்துது? எவன் போட்டுகொடுத்தானே தெரியலடா ? எவனையும் நம்ப முடியல மாப்ள'

'விடுறா.. சும்மா அதவே நெனச்சுட்டு.. ஆமா நாளைக்காவது  ஸ்ரீபதில வரியா ? இல்ல அடுத்த பஸ்தானா ?'
--------------------------------
'டேய்.. நம்ம  ரன் படத்துக்கு கூட ரெண்டு  தடவதாண்ட  போனோம்.. ஏன்டா ஆட்டோக்ராப்க்கு மட்டும் வாரம் ஒருதடவ கூப்புடுற..'

'டேய் வாடா.. எனக்கு நீ பண்ணுனதுக்கு இப்படியாவது பிராயச்சித்தம் பண்ணு ..'

'ஏன்டா மாப்ள கோபப்படுற ? ..வானு சொன்னா வரப்போறேன்.. இதுக்கு போயி பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு '
------------------------------------
'நான் ஜூனியர் ..அன்னைக்கு சிம்போசியம்ல கூட பேசுனோமே..'

'ஒ .. கரெக்ட்.. என்ன?'

' இன்னைக்கு ப்ரெண்ட்ஷிப் டே .. கைய காமிங்க '

'தேங்க்ஸ் சிஸ்டர்..'

'அய்யயோ .. இது ராக்கி இல்ல'

'அதனால என்ன ? உன்ன பாத்தா என் சித்தி பொண்ணு மாதிரியே இருக்கு .. பரவாயில்ல'

-------------------------------------

'ஏன்டா இப்படி பண்ணுன? அந்த கதைதான் முடிஞ்சுடுச்சே .. அவ இப்போ உன் பக்கத்துல்ல கூட வரதில்லயேடா '

'அவ இல்லேன்னா என்னடா? அதான் நீ இன்னும் என் பக்கத்துலயே இருக்கியே..உன்ன வெச்சுட்டு மறுபடியும் நான் ரிஸ்க் எடுக்கனுமா ?'

'பாத்துக்கோடா .. சில விஷயங்கள் நமக்கு திரும்பவும் கெடைக்கவே கெடைக்காது '

'ஹ்ம்ம்..அதுவும் கரெக்ட்தான்.. இன்னைக்கு கடைசி நாளாம்.. வா ஆட்டோக்ராப்க்கு போவோம்'

----------------------------------------------


ஆக என்னைப்பொறுத்தவரைக்கும் இதுவரைக்கும் காதலர் தினம் 'இன்றும் மற்றொரு நாளே'ங்கற அளவுலதான் இருக்கு.

மத்தப்படி .. பூ வாங்கிட்டு ப்ரொபோஸ் பண்ண போறவங்களுக்கும் ,ப்ரொபோஸ் பண்ணி அடி வாங்க போறவங்களுக்கும் ,  அடி வாங்கிட்டு 'த்ரிஷா இல்லேன்னா திவ்யா'-னு அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தம் ஆகறவங்களுக்கும்  என் ஆசியும் ஆல் தி பெஸ்டும்...


 என்ன நடந்தாலும் தைரியத்தையும் நம்பிக்கையையும் கைவிட்டுடாதீங்க.. அடுத்த வருசத்துக்கு உதவும்.. 

No comments:

Post a Comment