Thursday, February 3, 2011

யுவர் ஆர்டர் ப்ளீஸ்..


ஒரு சில நாட்களா எல்லாருக்கும் வர  forward mail போட்டோ இது . கூடவே - எங்கு செல்லும் நம் கலச்சாரம்? என்று கேள்வியுடன்

படத்த பாத்ததுமே நானும் கிண்டல் பண்ண போறேன்னு நெனைக்காதீங்க..  சத்தியமா அந்த தப்ப நான்  செய்ய மாட்டேன் .ஆனா கொஞ்சம் தீவிரமா சிந்திக்க வேண்டிய விஷயம் இது!
இத பத்தி 'நீயா நானா'ல பேசுனா , கீழ இருக்குற 2 தரப்புல  எதாவது ஒரு பக்கம்தான் சாயணும்.
1 . எங்க போகுது நம்ம கலாச்சாரம் ? பொண்ணுகளுக்கு எப்படி இவ்ளோ தைரியம் ? இதுகள  வளர்த்திருக்காங்க  பாரு , அவங்கள சொல்லணும் ..
2 . இதுல்ல தப்பு ஒன்னும் இல்ல .. அவங்க மட்டும் என்ன பாவம் பண்ணுனாங்க ?  இதுவும் ஒரு நாகரீக வளர்ச்சிதான் ..

நீங்க எந்த பக்கம்னு முடிவு பண்ணிட்டீங்களா ? சரி அப்போ ஓவர் டு சப்போர்ட் பாய்ண்ட்ஸ்.

எதிர்ப்பு :

காந்தி மதுவிலக்கு ஆரம்பிச்சப்போ தமிழ்நாட்டுலதான் அமோக வரவேற்பு இருந்துச்சு . கள்ளுக்கடை மறியலுக்கு தாய்க்குலங்கள் பங்கு அதிகமா இருந்துச்சு. ஆனா இப்போ நெலமை தலைகீழ் . பசங்களுக்கு  எப்போவோ 'தண்ணி'க்கு பர்மிசன் கொடுத்து தண்ணி தெளிச்சு விட்டாச்சு ( வேற வழியும் இல்ல) . ஆனா இப்போ பொண்ணுக அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பிச்சிருக்காங்க . அதுக்கு முழு காரணம் , இதோ குற்றவாளி கூண்டில் இருக்கும் இந்த நாகரீக சீர்கேடுதான்.
வீட்டுக்குள்ள அடங்கி இருந்தப்போ ஒழுக்கம்னா என்ன , வரைமுரைனா  என்னனு தெரிஞ்சுது . இப்போ வெளி உலகத்துள்ள போய் எல்லாத்துக்கும் சரிசமமா பழக விட்டதுமே , சேர்க்கை சரியில்லாம பார் வரைக்கும் போக ஆரம்பிச்சுட்டாங்க..
 இப்படியே போனா கூடிய சீக்கிரம்
  •  'இது ஒரிஜினல் இல்ல , போலி சரக்க கொடுத்து கவர்மென்ட் அதிகமா சம்பாதிக்குது. 
  •  எனக்கு டான்ஸ் கிளாசுக்கு  நேரமாச்சுடீ   , ஒரே ஒரு லார்ஜ் மட்டும் போதும் .  
  •  hangover அதிகமா இருக்குடீ .however  காலேஜுக்கு வர பாக்கறேன் 'னு  
டயலாக் பேச ஆரம்பிச்சுருவாங்க..அட அத விடுங்க , வீட்டுக்கு தண்ணியடிச்சுட்டு வந்த புருசன ,பொண்டாட்டி அடிக்கிற காலம் போய் இனி பொண்டாட்டி தண்ணி அடிச்சுட்டு வந்து புருசன அடிப்பாங்க .. ஒன்னு மட்டும் பாத்தீங்களா , அப்பவும் அடி வாங்கறது அப்பாவி புருசன்தான் .. ஆகவே  இதை  எல்லாம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.


ஆதரவு :

என்னங்க புரியாம பேசறீங்க ? நாடு எங்க போயிட்டு இருக்கு ? நீங்க இன்னும் பொதிகை டிவி வயலும் வாழ்வும் கணக்கா பேசிட்டு இருக்கீங்க.
இதுல்ல மட்டும் சின்ன சமாதான உடன்படிக்கை பண்ணிட்டோம்னா அரசுக்கு ரெண்டு மடங்கு வருமானம் பெருகும்.
இதே மாதிரி வேற எந்த நாடுலயாவது , ஒரு பொண்ணு சரக்கு வாங்க போறத இவ்ளோ முன்னிலைப்படுத்தி யோசிப்பானா? பசங்களுக்கு ஒரு சுதந்திரம் , பொண்ணுகளுக்கு ஒண்ணா?
 தண்ணிய விடுங்க , ஒரு தம் வாங்கணும்னா கூட பொண்ணுகளுக்கு கஷ்டம்தான். ஏன்டா தம் அடிக்கறேன்னு பையன கேட்டா , ஒரே டென்ஷன் , அதான் அடிக்கரேங்கறான் .. பொண்ணுகளுக்கு டென்ஷன் வராதா ? வந்தா தம் அடிக்க கூடாதா ? இத்தனைக்கும்  ரெண்டு பெரும் ஒரே கம்பெனில ஒரே வேலைலதான் இருக்காங்க.. 

சில விசயங்கள் பெண்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறதே .. அது 33 சதவிகித இட ஒதுக்கீடு  ஆகட்டும்,இல்ல தெருவோரத்துல  இருக்குற குட்டி சுவராகட்டும் ..
சரக்கு  மட்டும் டொமினோஸ் பீட்சா மாதிரி ஹோம் டெலிவரீயா இருந்தா  இந்த பிரச்சனையே இல்ல  - ' 100 pipers ஸ்காட்ச் ஒரு full . சைடு டிஷ் combo A , மறக்காம ஒரு மிராண்டா பாட்டில்'னு எங்க பொண்ணுகளும் அமைதியா ஆர்டர் பண்ணிட்டு , கார்டு பேமென்ட் பண்ணுவாங்க.
ஆகவே எவ்ளோ செலவானாலும் பரவால்ல.. இத பைசல் பண்ணுங்க ..

விவாதம் சூடு பறக்கிறது .. தொடர்ந்து விவாதிப்போம் ஒரு சிறிய விளம்பரத்துக்கு பிறகு-ன்னு சொன்னா நீங்க சரக்கு அடிச்சிட்டு என்ன அடிப்பீங்க.. so இப்போ நடுவுல நின்னு பாப்போம் :
இந்த தலைப்ப வெவரமா பாத்தாலும் சரி , விளையாட்டா பாத்தாலும் சரி , ஒரே balanced பீலிங்தான் இருக்கு .. எந்த தரப்பையும் பாத்து கோபம்  எதுவும் வரல .

  •  குடிப்பழக்கம் தவறானது - அது ஆணானாலும் சரி , பெண்ணானாலும் சரி.  ஆனால் அது பெண்கள் செய்யும்போது , அதிகமாக அல்ல மிகுதியாக விமர்சனத்துக்குள்ளாகிறது . அது தவறு . ஆனால் , புதிதாக ஒரு கண் உறுத்தும்படியான மாற்றம் சமுகத்தில் நடக்கும்போது அது அதிகமாக விவரிக்கபடுவது இயற்கையே.
  • 'social awareness பற்றி என் பெண்ணுக்கு தெரியும் சார் . அதனாலதான் அவளுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன்!' என்று பெருமையாக பேசும் பெற்றோர் , அதன் இன்னொரு பரிணாமத்தையும் சரியாக புரிந்து கொண்டு சற்றே விழிப்புடன் கவனித்திருந்தால் இந்த பிரச்சனையே எழுந்திருக்காது.ஆனால் ஒரு வரம்புக்கு மீறி எதையும் கட்டுக்குள் வைக்க  முடியாது என்பதே நிதர்சனம்.
  • பெண்களுக்கு தனியாக சில வசதிகளை செய்து கொடுத்தால் ஓரளவுக்கு இந்த நிகழ்வு சரிகட்டப்படும். ஆனால் அது நடைமுறைக்கு ஒத்து வராது . ஏன் என்பதற்கு காரணம் எல்லாரும் அறிந்ததே -  Culture . இருந்தாலும் நாடும் காலமும் மாற மாற எதுவும் சாத்தியப்படலாம் . அதுவரை அமைதி காப்போம் .
இதுவரை ஒத்துழைத்ததற்கு  நன்றி வணக்கம்..


ஹலோ ப்ரதர் ..எங்க போறீங்க..? கடைசி வரைக்கும் உங்க கருத்து என்னனு சொல்லவே இல்லையேன்னு கேக்கறீங்களா ?

 ஹிஹி ..கடவுள் உண்டா இல்லையா?
ரஜினி அரசியலுக்கு வருவாரா இல்லையா ?
நேதாஜி உயிரோட இருக்காரா(இருந்தாரா)  இல்லையா?
விஜய்க்கு ஒரு படமாவது ஹிட் ஆகுமா இல்லையா? -ன்னு நெறைய கேள்வி விடை கிடைக்காமலே இருக்கு .. கூட இதையும் ஒண்ணா சேர்த்துக்கோங்களே  .. இப்போ என்ன குறைஞ்சு போக போகுது ?
ஆனா இதுல்ல என் கருத்து என்னனு சிம்பிள்ளா சொல்லனும்னா
- ' but அந்த பொண்ணோட தைரியம் எனக்கு ரொம்ப  புடிச்சிருக்கு! :-) '
  
  

1 comment:

Mohan said...

Asokku nee remba murpokka yosikiravannu theriyum. Adhukku oru sample-a idhu? Irundhalum, idhayum oru topic-a Vijay TV-la vaipanagalannu nee ketkum kelvi unmayanudhu... seekiram edhir pakkalam. enna poruthavarai, namma use panra soap mudhal mattrum pala porutkal varai velinattu kalacharatha kappunu pudichikitta namma indha vishayatha en vishama kannottadhoda pakkanum? free vidunga... give equal rights... so u get equal...

Post a Comment