tag:blogger.com,1999:blog-12026468971359811122024-02-21T02:33:50.280+05:30அபிமன்யு வலைக்களம்உங்களுக்கு பிடிச்சிருந்தா படிங்க .. பிடிக்கலேன்னாலும் படிங்க .. என்ன இப்போ ?அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-33963410119400531852016-03-17T18:01:00.000+05:302016-03-17T18:09:29.188+05:30உடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
எல்லா ஊரிலும் நல்லதும் கெட்டதும் எல்லா காலங்களிலும் உண்டு.<br />
<br />
சாதியைக் காரணமாக்கி நடக்கும் அக்கிரமங்கள் புதிதல்ல..<br />
காதலை எதிர்த்து , காதலரை அழிக்கும் கோபத்தின் கொடூரமும் புதிதல்ல..<br />
பகை முற்றி பழி தீர்ப்பதும் புத்தம் புதியதல்ல ..<br />
நடுத்தெருக்களில் , சுற்றியிருக்கும் மக்கள் நடுங்க , கொலைகள் நடப்பதும் கண்டிப்பாக புதியதல்ல..<br />
<br />
ஆனால் இந்த கொடுமைகளின் நிழல் கூட உடுமலை ஊர் எல்லையை நெருங்கியதில்லை.<br />
இன்றோ எங்கள் இதயத்தின் மையப்புள்ளியில் , கோரத்தின் நிஜம் , அதன் கூரிய நகத்தினால் கொத்திக் கிழித்திருக்கிறது .<br />
<br />
அமைதியான ஊர்; மக்களும் சரி , ஊரில் அடிக்கும் வெயிலுக்கும் மழைக்கும் சரி : ஒரே குணம் - நிதானம்.<br />
<br />
சேர நாட்டு வாசல் அருகில் என்பதால் , தெருவுக்கு ஒருவராவது கேரளத்து பூர்விகம் ; கடவுளின் சொந்த நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு , உடுமலையில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. சொந்தத்தில் கல்யாணம் செய்த பெண்ணுக்கு புகுந்த வீடு முன்னமே பழக்கப்பட்டது போல , சேட்டன்களுக்கும் சேச்சிகளுக்கும் எங்கள் ஊர் சொந்த ஊரானது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRbZwjWyfVsehWm2-o5n49oW05eJ_NqxqeCtgNZRyJi9r_HgO2HlcLbMi0LDQbBVQg4JZALypmn7VHnmjNJSQnJMZcYfiNVQwq9954z4dzz8Fh6PYJeWCuBEQcLSGdzaB-GCQRUHhR378V/s1600/10608266_821672167900806_1579941629165315728_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRbZwjWyfVsehWm2-o5n49oW05eJ_NqxqeCtgNZRyJi9r_HgO2HlcLbMi0LDQbBVQg4JZALypmn7VHnmjNJSQnJMZcYfiNVQwq9954z4dzz8Fh6PYJeWCuBEQcLSGdzaB-GCQRUHhR378V/s320/10608266_821672167900806_1579941629165315728_o.jpg" width="292" /></a></div>
<br />
<br />
சுந்தரத் தெலுங்கும் , கொங்குத்தமிழும் சரிசமமாய் புரளும். மனதில் எந்த பாரம் இருந்தாலும் , பக்கத்துக்கு வீட்டு குடும்பத்தோடு பேசும் பேச்சு மயிலறகு.<br />
<br />
அடுத்த வீட்டில் என்றைக்கும் சாரோ மேடமோ எங்களுக்கு இருந்ததில்லை. நடுத்தர வயதிருந்தால் அக்கா மாமா ; அதற்கும் மேலிருந்தால் அப்பா அம்மா.<br />
<br />
எல்லாருடைய நிலங்களையும் மனங்களையும் குளிர வைத்து ஊர் சுற்றி ஓடும் வாய்க்கால் நீருக்கும் , எங்கள் ஊருக்கும் - சாதி மதம் என்பது சத்தியமாய், ஒதுக்கி ஓரமாய் புறந்தள்ளும் குப்பைதான்.<br />
<br />
கடந்த நூறு வருடங்களை சற்று புரட்டி பார்த்தால் , உடுமலை அமைதியின் அரவணைப்பில் திளைத்து வளர்ந்த குழந்தை என்பது தெரியும். அதனால்தான் அறிவுதிருக்கோவிலும் , அதன் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது.<br />
<br />
வருடந்தோறும் ஊர் குட்டையில் நடக்கும் மாரியம்மன் திருவிழாவில் , மதமோ சாதியோ நிறமோ , இப்படி எந்த ரேகையும் தென்படாமல் , பாசமான உள்ளூர்வாசிகளின் உற்சாகத்தை பார்க்கலாம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjheUDuSxgwzNLNvDgyxi1ofvyjJz_dhQXuJfjL80uByV42nssFG7Nh5V70IJYe3zc5q1UmuFHA6sDR4Kj5-kf1GXBXtdncF8oTYNNlhqliFQdSN-o_1ZheqDBxVXbUlEZpAKHYdwVruWBq/s1600/11080778_806743126060377_8373815373874495040_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjheUDuSxgwzNLNvDgyxi1ofvyjJz_dhQXuJfjL80uByV42nssFG7Nh5V70IJYe3zc5q1UmuFHA6sDR4Kj5-kf1GXBXtdncF8oTYNNlhqliFQdSN-o_1ZheqDBxVXbUlEZpAKHYdwVruWBq/s320/11080778_806743126060377_8373815373874495040_o.jpg" width="320" /></a></div>
<br />
<br />
தலைசிறந்த பள்ளிகளை கொண்ட ஊரில் , எங்கள் உச்சகட்ட பிரிவினையே - 'நல்லா படிக்கிற பிள்ளை ; சுமாரா படிக்கிற பிள்ளை ' ; இந்த இரண்டே ரகம்தான். பக்கத்துக்கு கிராமத்து குழந்தைகள் , ஊருக்குள் பள்ளித்தோழனின் வீட்டில் தங்கியிருந்து படிப்பதும் , குடும்பத்தில் இன்னொரு பிள்ளையாய் இருப்பதும் வெகு சாதாரண நிகழ்வு.<br />
<br />
அருகிலிருக்கும் திருப்பூருக்கும் , கோவைக்கும் , பொள்ளாச்சிக்கும் பீடித்து வரும் சுற்றுசூழல் மாசுக்கு இன்னும் பலியாகாமல் பசுமையின் ஆரோக்கியத்தை காத்து கம்பீரமாய் நிற்கிறது , ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் உடுமலைப்பேட்டை.<br />
<br />
இப்படி எல்லா புகழும் இருக்கும் ஊர் பெயர்தான் இப்போது முகநூலிலும் , வாட்ஸப்பிலும் , எல்லார் வாய்க்கும் கிடைத்த அவலாக பரிதாபப்பட்டு மாட்டியிருக்கிறது.<br />
<br />
ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் பகைக்கு , ஒரு உயிர் மட்டும் அல்ல ; ஒரு ஊரின் பெயரும் பலியாகியிருக்கிறது.<br />
'வேறு எங்கோ போய் கொலை செய்வதுதானே?' என்று உணர்ச்சி மேலிட கேட்கும் அளவுக்கு நாங்கள் சுயநலக்காரர்கள் அல்ல . எந்த ஊரிலும் இது போல தவறு நிகழக்கூடாது.எங்கும் அது மன்னிக்கமுடியாத குற்றமே.<br />
<br />
ஆனால் , இது எங்கள் ஊர் . எல்லா சாதியினரும் எந்த பேதமும் இல்லாமல் வாழும் ஊர்.எங்கள் ஊர் பெயரில் , சாதிச்சாயமோ , கலவரக்கீற்றோ உள்ளே வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.<br />
<br />
ஊடகங்கள் என்ற பெயரில் ஊர் பெயரைக் கெடுக்க ஓராயிரம் வண்டிகள் வந்தாலும் , உண்மை என்பது மிகத் தெளிவு ; உடுமலை களங்கமற்றது.<br />
<br />
நடந்தது கௌரவக் கொலையோ பகையின் மிச்சமோ; அதன் முடிவின் களம் எங்கள் ஊராய் அமைந்ததற்கு , நாங்கள் படுவது நரக வேதனை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மட்டுமல்ல , ஊருக்கும் இப்போது தேவை அனுதாபம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaykeSJURo6T47ks8SnnxL8VNJK76f_0XO2sQpBZAheNmAvwdUG6toWWAecAHQY75MPbfYCyRiMeSu8GL37IeM8vVqquuj7bdjJHAPyDe2QFGs0ajO5GxpqmljvJLCIRYvFRDlltQfNOh_/s1600/f1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaykeSJURo6T47ks8SnnxL8VNJK76f_0XO2sQpBZAheNmAvwdUG6toWWAecAHQY75MPbfYCyRiMeSu8GL37IeM8vVqquuj7bdjJHAPyDe2QFGs0ajO5GxpqmljvJLCIRYvFRDlltQfNOh_/s1600/f1.jpg" /></a></div>
<br />
<br />
ஊர் மொத்தமும் ஒன்றாய் கைக்கோர்த்து , உரக்க முழக்கமிடுகிறோம் - சாதிகளுக்கோ , பிரிவினைக்கோ ஊருக்குள் இடமில்லை. அதை வளர்ப்பவருக்கும் இங்கே வேலையில்லை.<br />
<br />
நினைவிருக்கட்டும் - இந்த ஒரு கொடிய நிகழ்வால் , தன் தவறு ஏதுமின்றி , ஒரு ஊர் களங்கமில்லாத தன் சரித்திரத்தில் , கருப்பு புள்ளியை ஒரு பக்கத்தில் தெளிக்க நேர்ந்துள்ளது. நாளை உங்கள் ஊருக்கும் இதே நடக்கலாம்.<br />
<br />
சாதியின் பசிக்கு இன்னும் எத்தனை காலம் , எத்தனை ஊர்களும் நகரங்களும் தங்கள் முகவரியின் புனிதத்தைக் காவு கொடுப்பது?<br />
<br />
இப்படியா நம் மண்ணின் பெருமை உலகத்திற்கு அறியப்படுவது ?<br />
<br />
<br />
-<br />
அசோக் மூர்த்தி<br />
<br /></div>
அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-71851084268344735022013-01-27T07:46:00.000+05:302013-01-27T13:17:35.381+05:30விஸ்வரூபம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ராஜபார்வை - வணிகரீதியாக உலக நாயகனுக்கு விழுந்த முதல் பெரிய அடி. அதனால் எந்த தளர்வும் இல்லாமல் , தன்னை வளர்த்து விடும் கலையுலகத்திற்கு தொடர்ந்து நல்ல படங்களை கொடுப்பது மட்டுமல்லாமல் , உலகத்தின் ஏதோ ஒரு கோடியில் எங்கோ ஒரு புது தொழில்நுட்பம் கண்ணில் பட்டாலும் அதை தமிழுக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் தன் கஷ்டங்களை பார்த்ததில்லை கமல்.<br />
<br />
' எத்தனை தோல்விகள் வந்தாலும் , எனக்கு சினிமா தவிர வேறு எதுவும் தெரியாது' என்று பிரகடனப்படுத்தி , அரை நூற்றாண்டு காலமாக தன் கடமையை இம்மியளவும் தொய்வில்லாமல் செய்யும் கலைஞனை , அவன் பாதையில் கல்லையும் முள்ளையும் வாரியிறைக்கும் ஒரு சாரார் ஆரம்பத்திலிருந்தே தொல்லை கொடுத்து வந்தது உலகறியும்.<br />
<br />
முதன்முதலில் தன் ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றமாக மாற்றிய நடிகர் , தன் உடலுறுப்புகளை தானம் செய்து ,அதன் விழிப்புணர்வை வெகுஜன மக்களுக்கு கொண்டு சென்றவர் என்ற பல நன்மைகளை செய்தாலும் , அவரை குற்றம் சாட்டியே கொடுமை படுத்திய கூட்டம் எப்போதும் உண்டு. <br />
<br />
'அவ்வை சண்முகி , பிராமணர்களை குறி வைத்து கேவலப்படுத்துகிறது'<br />
<br />
'ஹே ராம் படத்தை நிறுத்து . காந்தியை கேலி செய்கிறாயா?'<br />
<br />
'சண்டியர்' பெயரை மாற்று. சாதிய வன்மத்தை தூண்டாதே.'<br />
<br />
அது என்ன வசூல்ராஜா ? மருத்துவர்களை அவமதிக்காதே ' <br />
<br />
'தசாவதாரத்தை தடை செய். கடவுள் மறுப்பை திணிக்காதே '<br />
<br />
இப்படி ஏறக்குறைய தனது எல்லா படத்திற்கும் போர் தொடுக்கும் எதிரிகளுக்கு - பொறுமை இழக்காமல் , நிமிர்ந்து நின்று கமல் எடுத்து காட்டிய 'விஸ்வரூபம்' தான் இந்த படம் . <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWgI81dO7ap_Y_qqVIOzvcHx82qS11A_rhV3BEoF6d52iWoscsC9IhHDfG7YApNQv0ZdCaw5-Jt_2BOdXpx1LqJzuhqMIz9aUs9UUwGYtdN7Bh_Fz0ssiZ5x7Ah-PnF3Di4W3cim3P4sLj/s1600/images+(2).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWgI81dO7ap_Y_qqVIOzvcHx82qS11A_rhV3BEoF6d52iWoscsC9IhHDfG7YApNQv0ZdCaw5-Jt_2BOdXpx1LqJzuhqMIz9aUs9UUwGYtdN7Bh_Fz0ssiZ5x7Ah-PnF3Di4W3cim3P4sLj/s1600/images+(2).jpg" /></a></div>
<br />
<br />
எப்போதும் போல கமலின் இந்த படத்தையும் ,கண்டிப்பாக நமது அடுத்த தலைமுறை 'அப்போவே எப்படியா இந்தாளு இப்படி படம் எடுத்துருக்காரு ?' என்று சிலாகித்து பேசும் அளவுக்கு புதிய தொழில்நுட்பம் தொடங்கி , தீவிரவாதியம் சார்ந்த கதை களன் , முதிர்ந்த கூர்மையான வசனங்கள் , தேர்ந்த பாத்திர படைப்பு என்று எந்த விஷயத்திலும் கமல் - 'Exceeds the Expectation'<br />
<br />
ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ், 'எலிசபெத்' இயக்குனர் சேகர் கபூர் என அனைவரின் நடிப்பும் துல்லியம். <br />
<br />
படம் ஆரம்பமே டாக்டரிடம் கவுன்சலிங் செய்யும் பூஜா ,'அவர் நார்மல் ஆனவர் இல்ல' என்று கமலை பற்றி சொல்லி Intro கொடுக்க ,அடுத்த <br />
நொடி கமல் நடனமாடியபடியே வரும் காட்சிக்கு கைதட்டல் அள்ளுகிறது. நடனமும் , சகல வித பாவனைகளும் காட்ட , பரதத்தை முறைப்படி கற்ற கமலுக்கு சொல்லிதர தேவையில்லை ; எனவே ஆச்சரியப்பட ஏதுமில்லை. <br />
<br />
பாடல் முடிந்ததுமே பிராமண பாஷை பேசும் கமலின் முதல் டயலாக்கிலிருந்தே சர்ச்சைக்கு விஷயம் கிடைக்கிறது.என்னவென்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.<br />
<br />
கமல் முஸ்லிம் என்று தெரிவதிலிருந்து தொடங்கும் சுவாரசியம் , அவர் அடி மேல் அடி வாங்கி , சாவதற்கு முன் தொழுகை செய்ய கைகட்டை அவிழ்க்க சொல்லி , பிறகு அதிரடியாக தன் விஸ்வரூபத்தை காட்ட ஆரம்பிக்க , ஜெட் வேகத்தில் ஏறுகிறது. அந்த ஒரு காட்சியை முதலில் சண்டைக்கும் , பிறகு 'யார் என்று தெரிகிறதா ?' என்ற பாடலுக்கு சேர்த்து மறுமுறையும் வேறு கோணத்தில் காட்டியிருப்பதில்<br />
கமலின் இயக்கம் கை தட்ட வைக்கிறது.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJljfMAOYZcISHQ-jYhgLOrc4rCY9UXVbrAJ_RRNdtetoE3G9kmZMU7x6G7kkJzHFskUpkBw_lYSAHQJD6IIKaFi2u9OBLUzEEWCRkQukK54hyphenhyphenx1dkuAppqokhta82nDBkPSuUPMhI7UhJ/s1600/images+(3).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJljfMAOYZcISHQ-jYhgLOrc4rCY9UXVbrAJ_RRNdtetoE3G9kmZMU7x6G7kkJzHFskUpkBw_lYSAHQJD6IIKaFi2u9OBLUzEEWCRkQukK54hyphenhyphenx1dkuAppqokhta82nDBkPSuUPMhI7UhJ/s1600/images+(3).jpg" /></a></div>
<br />
<br />
ஷங்கர் - இசான்-லாய் மூவரின் இசை - துப்பாக்கி சத்தங்களுக்கு ஏற்ற தாளங்கள் , காட்சிகளின் விறுவிறுப்புகேற்ற பின்னணி இசை என பாராட்ட வைக்கிறது.குறிப்பாக கடைசி இருபது நிமிட காட்சிகளில்.<br />
<br />
நான் லீனியராக நகரும் கதையை , தெளிவாக, பார்ப்பவருக்கு புரிய வைக்க மிகவும் மெனக்கெட்டிருக்கிறார் கமல்.உபயம் - முந்தைய ஆளவந்தானிலும் , ஹே ராமிலும் தமிழை அதிகம் பயன்படுத்தாமல் அடி வாங்கிய அனுபவம். ஹ்ம்ம் ..கமலுக்கும் அடி சறுக்கும். நல்ல வேளை ,இந்த படத்தில் அந்த தவறை செய்யவில்லை.<br />
<br />
சேகர் கபூர் நல்ல தேர்வு. பூஜாவை ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆன்ட்ரியாவுக்கு வேலை அதிகம் இல்லை.<br />
வெடிகுண்டை தடுக்கும் ஹீரோ என்ற அரத பழசான ஒற்றை நாடி கதைக்கு , கமலின் புது ட்ரீட்மென்ட் ஒன்றே எல்லாரையும் திரையை விட்டு கண்ணை நீக்காமல் இருக்க செய்கிறது. ஆப்கானில் நடைபெறும் நிகழ்ச்சிகளாக காட்டும் இடங்களில் , ஒளிப்பதிவு அட்டகாசம். நடிப்பு தொடங்கி Location முதல் எதிலேயுமே Compromise ஆகாமல் படம் கொடுக்க வேண்டும் என்று கமல் முடிவு செய்திருந்த போது இத்தனை கோடி செலவு ஏன் ஆகாது? . <br />
<br />
விருமாண்டி ஒலி நாடா வெளியீட்டின் போது இயக்குனர் இமயம் பாலச்சந்தர் , ஆளவந்தான் படத்தை பற்றி பேசும் போது 'உன்னை போல நடிகனும் யாரும் இல்லை. உன்னை போல இயக்குனரும் யாரும் இல்லை ' என்று சொன்ன வார்த்தைகள் ,ஒரு குருவின் உணர்ச்சி மிகுதலால் கொடுக்க பட்ட மிகைபடுத்திய பாராட்டோ ? என்ற ஐயத்தை சிலருக்கு கொடுத்திருக்கும்.இந்த படத்தை பார்த்த பின் அந்த சந்தேகமும் அவர்களுக்கு இல்லாதிருக்கும். இயக்கம் கனகட்சிதம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgf79XKTqtnB-TpBPTVlYOPpe7DW2evoJ6u7lsdCqmznxtSfYRtoNruJ8x5dm8MmBzQxWSekZq9Gz-LJ0IK6r6V7f56wQ4oEYEtyQF54tuO0GT0SR-OdiKaKExfzzdBB443lUnA9eWkzPNk/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgf79XKTqtnB-TpBPTVlYOPpe7DW2evoJ6u7lsdCqmznxtSfYRtoNruJ8x5dm8MmBzQxWSekZq9Gz-LJ0IK6r6V7f56wQ4oEYEtyQF54tuO0GT0SR-OdiKaKExfzzdBB443lUnA9eWkzPNk/s1600/images.jpg" /></a></div>
<br />
<br />
மொத்தத்தில் , ஒரு சிறந்த கலைஞனின் சீரிய படைப்பு. கமலுக்கு இருக்கும் ,எல்லாரையும் எதிர்க்கும் தைரியம் , ரசிகர்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக அவர் ஆணித்தரமாக நம்புவதால் மட்டுமே. இது போன்ற தரமான படங்கள் கொடுக்கும் வரை அந்த நம்பிக்கை கண்டிப்பாக வீண் போகாது. <br />
<br />
இங்கே இந்த படத்தை எதிர்க்கும் சினிமா அதிபுத்திசாலிகள் , இதே படத்தை ஹாலிவுட் இயக்குனர்கள் ,<br />
அப்படி இப்படி மாற்றி எடுத்திருந்தால் உற்சாகமாக பாராட்டி எழுதிவிட்டு IMDB-இல் பத்துக்கு 8.1 ரேட்டிங் கொடுத்திருப்பார்கள். பிறகு அதே இயக்குனர்கள் ,தன் படம் எடுக்க 'விஸ்வரூபம்' படமே ஒரு உந்துதலாக இருந்தது என்று அறிவித்தால் , <br />
நம் மரியாதைக்குரிய புத்திசாலிகள் வெட்கமில்லாமல் ஒளிந்து கொள்வார்கள். <br />
<br />
இதை எதிர்ப்பவர்களுக்கு ஒரு கேள்வி ? - தீவிரவாதத்தைப் பற்றிய படத்தை , தீவிரவாதிகளை காட்டாமல் எப்படி எடுப்பது என்று யாராவது தெளிவாக சொல்லுங்களேன்?<br />
<br />
இந்த படம் உணர்த்தும் கருத்தை விட - எந்த களமாக இருந்தாலும் சரி , தான் செய்யும் தொழிலில் திறமையும் ,தான் எடுத்த முடிவில் நம்பிக்கையும் வைத்திருப்பவன் எவனுக்கும் அடிபணிய தேவையில்லை என்ற உண்மையை உணர்த்தியிருக்கிறது அது வெளியான விதம்.<br />
<br />
விஸ்வரூபம் - 'தீ என்று தெரிந்திருக்கும்.இவர் யார் என்று புரிந்திருக்கும்.'<br />
<br />
<br />
<br />
<span style="background-color: #f3f3f3;"><span style="color: #6aa84f; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px;">பேஸ்புக்கில் தொடர , வலது பக்க மேல் ஓரத்தில் உள்ள 'Find us on Facebook'</span><span style="color: #6aa84f; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px;">ல்</span><span style="color: #6aa84f; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 20px;"> Like பட்டனை அழுத்தவும்.</span></span></div>
அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-31378225322800349162012-11-10T01:16:00.000+05:302012-11-10T01:16:21.168+05:30தீபாவளி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 class="post-title entry-title">
</h3>
<div class="post-body entry-content" id="post-body-5384465992047763915">
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: #38761d;">டிஸ்கி - கொஞ்சம் பெரிய பதிவு. </span><br /><br />என் பள்ளி
நாட்கள் வரை தீபாவளி என்பது வருடத்துக்கு ஒரு முறை <br />
<div>
மலரும் ஒரு தெய்வீக காதல் போல். ஒரு மாதம் முன்பிலிருந்தே ஒன்றிலிருந்து
முப்பது வரை ஒரு பேப்பரில் எழுதி ஒவ்வொரு நாளாக அடித்துவிட்டு 'இன்னும் 24 நாள்
இருக்கு ' 'இன்னும் 17 நாள் இருக்கு ' என்று காலையில் தொடங்கும் என் நாட்கள் ,
பண்டிகைக்கு பத்து நாள் முதலிருந்து அடுத்த கட்ட விறுவிறுப்புக்கு போகும்.காரணம் -
பட்டாசு. </div>
<div>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQxO65S3j0d7eD9N6Y_5SvIyNTqxV9HosFLKi6rTkCp_EtD8gbHYj0Mu0H2COIsc5NfOAVpkBdbuRInHxmCYd-tRA96tyVO3auJTm_tkHiYpgQL62H1NzjM4h5l1Vx2Ip8LvFjDAbb8waK/s1600/diwali1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" closure_uid_drtru3="2" height="209" ida="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQxO65S3j0d7eD9N6Y_5SvIyNTqxV9HosFLKi6rTkCp_EtD8gbHYj0Mu0H2COIsc5NfOAVpkBdbuRInHxmCYd-tRA96tyVO3auJTm_tkHiYpgQL62H1NzjM4h5l1Vx2Ip8LvFjDAbb8waK/s320/diwali1.jpg" width="320" /></a></div>
<div>
</div>
எதிர் வீட்டு பிரபு
அண்ணன்,பக்கத்துக்கு வீட்டு ஆனந்த் , அதற்கடுத்த வீட்டு ரவி,ராஜா சகோதரர்கள்
என்ற பட்டாளம் நட்பை மறந்து ஒரு போட்டி மனப்பான்மையோடு முறைத்துக் கொண்டு அலையும்
நாட்கள் அவை.காரணம் - பட்டாசு.<br /><br />சிந்தாமணியில் போய் முதல்
கட்ட பரிவர்த்தனையை ஆரம்பித்து வைத்தால் ,தீபாவளிக்கு மூன்று நாள்
முன்னரே அனைத்தையும் வெடித்து தீர்த்து விடும் அபாயம் உண்டு என்பதால் அப்பா வேறு
ஒரு யோசனையை , நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது செய்ய ஆரம்பித்தார்.<br /><br /> கூட
வேலை பார்க்கும் அனைவரிடமும் என்ன விதமான பட்டாசுகள் தேவை என கேட்டு , சிவகாசிக்கு
ஆள் அனுப்பி மொத்தமாக வரவழைத்து வீட்டில் வைப்பார்.சரியாக பண்டிகைக்கு ஐந்து நாள்
முன்னாடிதான் அந்த
பெரிய 'மங்காத்தா' பணப்பெட்டி அளவுக்கு பெரியதாய் இருக்கும் பட்டாசு
பெட்டியை பிரிக்க ஆரம்பிப்பார். கூட உதவிக்கு மூன்று
பேர். இம்சைக்கு நான்.<br /><br />எல்லாரும் கொடுத்திருக்கும் லிஸ்டை எடுத்து
ஒவ்வொன்றாக படித்து , அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பெட்டியில்
பட்டாசுகளை நிரப்ப வேண்டும். <br />உதவிக்கு
என வந்தாலும் எல்லாரும் அமர்ந்துகொண்டு 'அதுல ஒன்னு எடுத்து அவங்க பாக்ஸ்ல போடு ;
இந்த பாக்ஸ்ல ரெண்டு கலர்
மத்தாப்பு' என என்னை வேலை வாங்கினாலும் எனக்கு அது அலுப்பாகவே
இருக்காது.<br /><br />எல்லாருக்கும் ஒரு பெட்டி என்றால் எங்கள் வீட்டுக்கு மட்டும்
இரண்டு பெட்டி. எனக்கொன்று ; என் அக்காவுக்கு ஒன்று.காரணம் எனது முந்தைய தீபாவளி
காலத்தில் நடந்த ஊழல்கள்தான். மொத்தமாக வாங்கி இதில் பாதி உனக்கு ;பாதி எனக்கு
என்று மிக நியாயமாக தொகுதி பங்கீடு செய்தாலும் , கூட்டணி தர்மத்தை <br />துச்சமென
மதித்து , அக்கா வீட்டில்
இல்லாத<br />போது கொஞ்சத்தை எடுத்து ,ஓரிரு நாளில் ஏறக்குறைய முழுதும்<br />என்
பொக்கிஷ குவியலில் இருக்கும்.<br />ஆகவே என் வீட்டுக்கு இரண்டு பெட்டி பட்டாசுகள்
என்பது எழுதபடாத விதியாய் இருந்தது.<br /><br />ஆனாலும் தீபாவளி
அன்று மாஸ்டர் பிளான் செய்து , அக்கா நான்கைந்து வெடி வெடித்ததும் , பக்கத்தில்
அலறும்படி ஒரு வெடியை தூக்கிப் போட்டால்
,பயந்து போய் ' எல்லாத்தையும் நீயே வெடிச்சு தொலைடா' என உள்ளே ஓடி
விடுவாள்.திரியைக் கிள்ளி தரும் பொறுப்பு அப்பாவுக்கு. <br /><br /><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgF7X5x8wHsq7rlj-zO8SkThz2IlCrdgpcK_7QWKwIqfmHI6qYiEwdyqcEvpizqNPDR_4BxUtc0S89DBqiyxCzVBUbpXZqwW5jLCh1FpgRpRlq66Y5GbdGwWOBXqeSDsfUQf28Y58m_5eES/s1600/tamilnadu-state-assembly-election-2011.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" closure_uid_drtru3="3" height="240" ida="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgF7X5x8wHsq7rlj-zO8SkThz2IlCrdgpcK_7QWKwIqfmHI6qYiEwdyqcEvpizqNPDR_4BxUtc0S89DBqiyxCzVBUbpXZqwW5jLCh1FpgRpRlq66Y5GbdGwWOBXqeSDsfUQf28Y58m_5eES/s320/tamilnadu-state-assembly-election-2011.jpg" width="320" /></a></div>
<br />எல்லா
வருடமும் என் லிஸ்ட்தான் பெரியதாய் இருக்கும் என்றாலும் ,
எந்த பெட்டியைப் பார்த்தாலும் பொறாமையாகவும் , இந்த பெட்டி என்னுடையதை விட
பெரிதாக இருக்கிறதே என்ற அவநம்பிக்கையும் இருக்கும். ஆனால் அப்பா கூட வேலை
பார்க்கும் எல்லாருக்கும் வீட்டில்
பெண் குழந்தைகள்தான் என்பதனால் வெறும் சங்கு சக்கரம்,பூவாணம் ,
மத்தாப்பு போன்ற காந்தியவாதி பட்டாசுகளாக இருக்கும். அதையெல்லாம் பார்த்து ஏதோ சோலே
பட அம்ஜத்கான் போல
ஒரு ஏளன சிரிப்பு என்னிடம் பிறக்கும்.<br /><br />எனக்கெல்லாம் பச்சை<br />கயிறு இறுக்கி
கட்டிய நைட்ரஜன் பாம் , செவென் ஷாட் எனப்படும் எங்கெங்கோ அலைபாய்ந்து வெடிக்கும்
இன்னொரு தீவிரவாத வெடி , சரவெடி , லட்சுமி வெடி , நேதாஜி வெடி , இது எல்லாம் போக ,
என் சொந்த ஊரிலிருந்து சித்தப்பா கொண்டு வந்த ஓலை வெடி , நானும் வீரன்தான் என
காண்பிக்க கையில் பற்ற வைத்து தூக்கி போடும் ஊசி வெடி என ஒரு படுபயங்கர
வெடிபொருட்கள் லிஸ்டில் இருக்கும். <br /><br />பிள்ளையார் சுழி போடுவது ரோல் கேப்
மூலம்தான்.அதிலும் ரோல் கேப் துப்பாக்கி எதுவும் ஒரு நாளைக்கு மேல் வராது. பத்து
முறை லோட் செய்தால் பதினோராவது தடவை பயன்படாது. அதிகபட்சமாக ஒரு முறை நான்கு
துப்பாக்கி வாங்கியிருக்கிறேன். பிறகு எனக்கே மனம் பொறுக்காமல் மீதி
கேப்பை சுவற்றில் தேய்த்தும் , வெடிகளுக்கு சுற்றும்
டெட்டனேட்டராக பயன்படுத்துவேன்.<br /><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji3JCXNpJzcaW-IjrcWn8BBXtv_ngN_yLuwxTZHXcp_RVBjCDbhsJGH_T6c4fMjwCRQ6T9fcLSpnZ6U09JiIl3gvnTb6m07RVpGGoVuSQZTvkGVHi4UXQ_UtlkgJUrPqV1O4xy9FP2Z99h/s1600/capgunmp.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" closure_uid_drtru3="4" height="239" ida="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji3JCXNpJzcaW-IjrcWn8BBXtv_ngN_yLuwxTZHXcp_RVBjCDbhsJGH_T6c4fMjwCRQ6T9fcLSpnZ6U09JiIl3gvnTb6m07RVpGGoVuSQZTvkGVHi4UXQ_UtlkgJUrPqV1O4xy9FP2Z99h/s320/capgunmp.jpg" width="320" /></a></div>
<br />வெங்காய
வெடி என்கிற மாப்பிளை வெடி அப்போதே தடை செய்யபட்டிருந்தாலும் , எங்களுக்கு
எப்படியாவது கிடைக்கும்படி தேவராஜன்
கடை அண்ணாச்சி ஏற்பாடு பண்ணியிருப்பார். இப்போதெல்லாம்
கிடைக்கிறதா என்று தெரியவில்லை. சரியான ரவுடி வெடி.<br /><br />இது மட்டும் வைத்து
சமர்த்தாக வெடிக்கும் ரகம் அல்ல எங்கள் கோஷ்டி. பாம் என்றால் அது எவ்வளவு
சத்தமாக, விதவிதமாக வெடிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய தயாராய் இருக்கும்
தன்மானபடை. வெயிட்டான பொருள் எது சிக்கினாலும் , அதற்கு அடியில் வெடி வைப்பது ,
பத்தியை அழகாக வெட்டி , வெடியுடன் சேர்த்து பற்ற வைத்து ஏறக்குறைய நாட்டு
வெடிகுண்டை டைம்பாம் போல ஆக்கி வெடிக்க வைப்பது என பலவிதங்கள்.<br /><br />இதில்
நாங்கள் எல்லை மீறியது எதிலென்றால் , தீபாவளி சமயத்தில் மழை பெய்து
தேங்கியிருக்கும் தண்ணீரில் , வெகு பக்குவமாக எதாவது ஒரு காய்ந்த இலையை மிதக்க
வைத்து ,அதில் பாம் வைப்பது. <br />பற்ற வைக்கும்போது கொஞ்சம் அதிர்ந்தாலும் வெடி
தண்ணீரில் மூழ்கி செயலிழந்து விடும் அபாயம் இருப்பதால் , எந்த யோகாவும் ,
ப்ராணயாமாவும் கற்றுகொள்ளாமலேயே மூச்சை முறைபடுத்தி ஒரு
பட்டாம்பூச்சி அமர்வது போல் பற்ற வைத்து ஓடி வருவோம். <br /><br />இந்த சின்ன வயதில்
, இந்த செயற்கரிய செயலை பாராட்டாமல், பெருசுகள் எதோ அந்த பக்கம் சரியாக வெடி
வெடிக்கும்போது வந்து சட்டையை சேறாக்கி கொண்டு , எதோ நாங்கள்தான் தப்பு செய்த
மாதிரி <br />' உங்க பையன் என் தீபாளி சட்டைய என்ன பண்ணிருக்கானு பாருங்க ' என
வீட்டில் பற்ற வைத்து விடுவார்கள். பிறகு பண்டிகை நாளில் என் முதுகில் வெடி
வெடிக்கும்.<br /><br />ஒரு வழியாக எல்லா பட்டாசையும் வெடித்து , பிறகு இரவானதும் ,
ராக்கெட் , பூவாணம் , சங்கு சக்கரம் என ஒரு ரவுண்ட் வந்து அதையும் முடித்து ,
பாம்பு பட்டாசு புகையை முடித்து கொண்டு , எல்லா பசங்களும் ஆயுதம் தீந்த
போர்வீரர்கள் மாதிரி நிராயுதபாணி ஆக நிற்போம். (நிற்க;கார்த்திகை பட்டாசு கோட்டா
தனி.) <br /><br />பிறகு வெடித்த எல்லா பட்டாசையும் மொத்தமாக ஓரிடத்தில் கொட்டி ,
நெருப்பு மூட்டி அதில் வரும் வண்ண வண்ண புகைகளை ரசித்த பிறகே எங்கள் போர் குணம்
தணியும். இருந்தாலும் எங்கள் தினவெடுத்த தோள்களுக்கு இன்னும் வெடி தேவை என்று
பரிதாபமாக யாரை பார்த்தாலும் , எல்லாரிடமும் சொல்லி வைத்ததுபோல் ஒரு ஏளன புன்னகை
தோன்றும் ' கொஞ்சமாடா ஆடுனீங்க..இனி என்னடா பண்ணுவீங்க ? '
என்பதுபோல்.<br /><br />அடுத்த நாள் எந்த வீட்டுக்கு முன்னால் பட்டாசு குப்பை அதிகமாக
இருக்கிறதோ அங்கு எதாவது ஒரு வாண்டு இருக்கிறது என்று அர்த்தம்.<br /><br />கால
மாற்றத்தில் எது மாறினாலும் , தீபாவளி நாளின் பரபரப்பு மட்டும் மாறாமல் இருக்கிறது.
இப்போதும் ஊருக்கு சென்று எங்கள் வீதியை பார்த்தால் புதிய கோஷ்டி ஒன்று நாங்கள்
செய்த அதையே திரும்ப அனுபவித்து செய்து கொண்டிருப்பது தெரிகிறது.ஆனால் எனக்கு
இப்போதெல்லாம் வெடி வெடிக்க பயம் ஏற்பட்டுள்ளதை ஒத்துக்கொள்ள வேண்டும். அக்கா பையன்
ரோல்கேப் வெடித்தாலே கண்ணை முடிகொள்ளும் பய உணர்ச்சி வந்து விட்டது. என்ன
காரணமோ?<br /><br />ஆனாலும் குடும்பத்துடன் ஒன்றாய் இருப்பது , மகிழ்ச்சியாய்
கொண்டாடுவது என தீபாவளியின் தனிச்சிறப்பு மாறவில்லை.டிவி சேனல்களின் பிடிகளில்
சிக்காமல் அந்த நல்ல நாளை காப்பாற்றுவது நம் பொறுப்பு.<br />அன்றைக்கு ரிலீஸ் ஆகும்
படத்தை கூட வேறொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்.
குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடும் சந்தோசம் வேறு
நாள் கிடைக்காது.<br /><br />வேலையில் மூழ்கி, பொறுப்புகளில் சிக்கிக்கொண்டு ,எப்போதும்
முகத்தில் ஒரு கண்டிப்பை போலியாய் காட்டிகொண்டு , கண்டம் தாண்டி வாழ்ந்து வரும்
இந்த சமயத்தில் , எல்லாரும் ஊரில் தீபாவளி கொண்டாடி அதை படம்
எடுத்து அனுப்புகிறோம் என்று சொன்னாலும் ,அது முழு சந்தோசத்தை
கொடுக்காது என்பது நிதர்சனம். <br /><br />எப்போதும் தீபாவளி பின்னிரவில் ,அப்பாவை
கட்டிக்கொண்டு ஏக்கமாய் கேட்கும் கேள்வி ஞாபகத்துக்கு வருகிறது - 'அடுத்த
தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்குப்பா?' . <br /><br />அதிக நாள் ஆகும் என்று
தெரிந்திருந்தாலும் , அவர் அன்பாக அணைத்துக்கொண்டு , 'சீக்கிரமா வந்திரும்ப்பா '
என்று சொல்லும் ஆறுதலுக்கு மயங்கும் அந்த கணம் கவிதை. <br /><br />ஹ்ம்ம்
..குழந்தையாகவே இருந்திருக்கலாமோ?</div>
</div>
</div>
அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-49833428385172572312012-06-16T04:37:00.002+05:302012-06-16T04:42:01.625+05:30பாப்கார்ன் பாக்கெட் - 20120616<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div>'அனுதாப அலை ' மிக மோசமானது என்பது மற்றொரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. </div><div></div><div>கழுத்தில் காயம்பட்ட எம்ஜிஆர் போஸ்டர் மட்டுமே ஓட்டுகளை அள்ளி குவித்தது இதற்கு ஒரு எடுத்துகாட்டு. போன முறை சன் டிவி ,கலைஞர் கைதை திரும்ப திரும்ப காட்டி ஒட்டு வாங்கியது இந்த முறையில்தான்.</div><div></div><div>உண்மைகளை மறக்க வைத்து வெறும் <span id="6_TRN_6e">உணர்ச்சிகளால்</span> பெருமளவில் குத்தப்படும் இந்த ஓட்டுகள் , ஆந்திர இடைதேர்தலில் காங்கிரஸ்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. </div><div>ஜெகன்மோகன் கட்சிக்கு 15 சீட்டுகள் கிடைத்திருக்கிறது. காங்கிரஸ்க்கு 2 மட்டும்.</div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbFamdvdIr_QTFHLdNuiXT-MgssH0Sql1uc2BDz7rvUVt_UfqdDK8YUEAs4-zzH-bCFmjxmKSCz2rmGT5kQY87rLhegzsAyruXfHQHxFEnzewLzbgR3TIm_xHv6CKGYStWAnL54Q8yIIOA/s1600/ys-jagan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="211" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbFamdvdIr_QTFHLdNuiXT-MgssH0Sql1uc2BDz7rvUVt_UfqdDK8YUEAs4-zzH-bCFmjxmKSCz2rmGT5kQY87rLhegzsAyruXfHQHxFEnzewLzbgR3TIm_xHv6CKGYStWAnL54Q8yIIOA/s320/ys-jagan.jpg" width="320" /></a></div></div><div>சொத்துகுவிப்பு வழக்கில் கைதாகி சிறைப்பட்டிருக்கும் ஜெகன் , இடைதேர்தல் பிரசாரத்துக்கு ஜாமீன் கேட்க , அதுவும் கொடுக்கப்படாத நிலையில் ,அதுவே அவருக்கு பெரிய அநுகூலமாகி விட்டது. </div><div>2014 தேர்தலில் அவரே முதல்வர் ஆவார் என்று இப்போதே அரசியல் ஆருடங்கள் ஆரம்பித்து விட்டன. </div><div></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div>வெட்டவெளிச்சமாக அவர் குற்றங்கள் , ஊழல்கள் எல்லாம் வெளியே உலா வரும்போதும் இந்த வெற்றி கிடைத்திருப்பது நியாயமான அரசியல்வாதிகளை தலைகுனிய வைக்கிறது ( அதற்காக ,காங்கிரஸ் நியாயமான் கட்சி என்பதல்ல அர்த்தம்) . </div><div></div><div>இப்படி எந்த ஒரு புரிதலும் இல்லாமல் மக்கள் இருக்கும் வரை , இது போன்ற ஆச்சர்யங்கள் அரசியலில் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருக்கும். கண்டிப்பாக இவை மக்களுக்கு நல்லதல்ல. </div><div></div><div>போகிற போக்கை பார்த்தால் , முதல்வர் பதவிக்கு போட்டி போட , முதல் தகுதியே அந்த நபர் ஊழல் வழக்கிலும்,சொத்துகுவிப்பு வழக்கிலும் கைதாகியிருக்க வேண்டும் </div><div>என்பதாக மாறிவிடும் போல.</div><div> அது சரி , அக்கம் பக்கம் எல்லா மாநிலத்திலும் இந்த நிலை இருக்கும்போது ஆந்திரா மட்டும் என்ன புண்ணியம் செய்திருக்கிறது , தப்பிக்க ? </div>-------------------------------------------------<br />
<br />
அதிமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியிருக்கும் நிலையில் , இந்த காலகட்டத்தில் என்ன சாதனை நிகழ்ந்துள்ளது என்று அலசினால் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது. முக்கிய பிரச்சனையான மின்வெட்டு அதிகமாகியிருக்கிறதே தவிர எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. அண்ணா நூலக மாற்றம் , இரண்டு இடைதேர்தல் , புதுக்கோட்டை இடைதேர்தலுக்கான 32 அமைச்சர்கள் கொண்ட குழு <br />
அமைத்தது , முன்னாள் எம்எல்ஏக்கள் வீடுகளில் சோதனை செய்வது, எதிர்கட்சியான தேமுதிகவை அவமதிப்பது என்ற வட்டத்துக்குள் மட்டுமே ஒரு வருடம் செலவாகியிருக்கிறது.<br />
<br />
எதற்கு ஒரு இடைதேர்தலுக்கு 32 அமைச்சர்கள் கவனம் தேவை ? கூடவே முதல்வரின் நேரடி பிரசாரமும்? ஓராண்டு ஆட்சி திருப்தி அளிக்கும்படியிருந்தால் மக்கள் தாங்களாகவே அரசுக்கு வாக்களிக்க போகிறார்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxJTmHNnGPWGTha27ix5Q64LEq1wwoixdBU1_MDaEdA1Tg1nZn08NBdwBgwHRJM5YydnshVr4yue40VK19f9Mq1lWpLMqwhJK_NIhMr6QmFNIyLaGngFudh6DYWdccIHS8p1KvDU2T3h2f/s1600/05TH_JAYA-VIJAYAKAN_494290f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="190" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxJTmHNnGPWGTha27ix5Q64LEq1wwoixdBU1_MDaEdA1Tg1nZn08NBdwBgwHRJM5YydnshVr4yue40VK19f9Mq1lWpLMqwhJK_NIhMr6QmFNIyLaGngFudh6DYWdccIHS8p1KvDU2T3h2f/s320/05TH_JAYA-VIJAYAKAN_494290f.jpg" width="320" /></a></div><br />
ஆளுங்கட்சி செயல் இப்படி என்றால் எதிர்கட்சியின் செயல்திறன் அதையும் மிஞ்சிவிட்டது. தேமுதிக செயல்பாட்டை விமர்சனம் செய்யும் முன் எங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் என்று விஜயகாந்த் சொல்லி பல மாதங்கள் ஓடி விட்டது. பொறுப்பான ஒரு எதிர்க்கட்சி செய்யவேண்டிய எந்த ஒரு பணியையும் இவர்கள் செய்யவில்லை.இவர்களும் இடைதேர்தலில் மட்டுமே சக்தியை <br />
செலவழிப்பது வேதனை.<br />
<br />
ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் இடைதேர்தல்களில் மட்டுமே கவனம் செலுத்தினால் மக்களை யார் பார்ப்பது?<br />
<br />
வாழ்க ஜனநாயகம் <br />
---------------------------------------------------------<br />
<br />
கப்பார்சிங் கலக்கி எடுத்துட்டு இருக்கு - ஆந்திரா மட்டுமல்ல உலகம் முழுக்க.<br />
'பத்து வருஷம் பெரிய ஹிட் இல்லைனாலும் பரவாயில்ல ; சுமாரான ஒரு படமாவது கொடுங்க தலைவா'ன்னு பவன் கல்யாண் ரசிகர்கள் வெறித்தனமான வேண்டுக்கோள் வைக்க , பவனும் அங்க இங்க தேடி, 'தபாங்'கை கையில் எடுத்து , அவரைப்போலவே தொடர் தோல்விய தந்துட்டு இருந்த இயக்குனர் ஹரிஷ் கையில கொடுத்து படம் பண்ணலாம்னு சொன்ன தைரியத்துக்கு கிடைச்ச வெற்றி இது. <br />
<br />
கூடவே நம்மூர் ஸ்ருதி கமல். அந்த பொண்ணுக்கும் அங்க ராசியில்லாத நடிகைனுதான் பேர். இப்படி எல்லாம் வெளங்காத ராசியும் ஒண்ணா சேர்ந்து , நல்ல ராசியான படத்த கொடுத்துட்டாங்க..<br />
<br />
இதுவரைக்கும் இந்த படத்தை எனக்கு தெரிஞ்ச எல்லா தெலுங்கு நண்பர்களும் 2 தடவை பாத்துட்டாங்க.சண்டை , நக்கல் வசனம், அலற வைக்கிற பாட்டுன்னு கமர்சியல் பார்முலா சரியான கலவைல கலந்த காக்டெயில் ,<br />
தெலுங்குதேசத்தில் யாருக்குதான் பிடிக்காது?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYrCadAuNzz28YOIWG_urlFIv_En8Nl1zEziPI_F5IlfmIZ07l3KhYsg3-uXGZog9hPY8rWO2h3Zmq5QwAxDKqNG_NkeCV-KimsxEWCyaAYpqFn7l7xZ8-_9Z2FGipWX0ScR9FTDaXQq-x/s1600/Gabbar+Singh+20+Days.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYrCadAuNzz28YOIWG_urlFIv_En8Nl1zEziPI_F5IlfmIZ07l3KhYsg3-uXGZog9hPY8rWO2h3Zmq5QwAxDKqNG_NkeCV-KimsxEWCyaAYpqFn7l7xZ8-_9Z2FGipWX0ScR9FTDaXQq-x/s1600/Gabbar+Singh+20+Days.jpg" /></a></div><br />
<br />
ரீமேக் படம்னா ,சட்டை கூட மாத்தாம அப்படியே சீனுக்கு சீன் காப்பி அடிக்க தேவையில்லன்னு , விஜய்க்கும் ,ஜெயம் ராஜாவுக்கும், ஒஸ்தி தரணிக்கும் சொல்லாம சொல்லி கொடுத்திருக்கு இந்த படம். கெவ்வ்வ்வ் கே<span id="6_TRN_ph">கா..</span><br />
--------------------------------------------------------------------------<br />
<br />
அப்துல் கலாம் பரிசீலனையில் இல்லை என்பது உறுதியாகி விட்ட பிறகு , யார் வந்தால் என்ன என்ற மனநிலை வந்துவிட்டது.<br />
<br />
இந்தியாவின் முதல் குடிமகனாக <span id="6_TRN_96">கண்டிப்பாக</span> ஒரு அரசியல்வாதி வரகூடாது என்பதுதான் மீதியுள்ள இந்திய குடிமக்களின் ஆசை. அதுவும் இன்று வரை கலாம் பல நாடுகளில் சென்று ஆற்றிய உரைகளை பார்க்கும்போது , ஒரு ஏக்கம் நம்மையறியாமல் மனதை வாட்டுகிறது. <br />
<br />
காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பிரணாப்க்கு மார்க்சிஸ்ட் , திமுக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள நிலையில் மக்கள்தான் என்ன செய்வது என்று புரியாமல் வழக்கம் போல திணறுகிறார்கள். 51 சதவீதம் தாண்டி ஆதரவு இருப்பதால் அவர் ஜெயித்தது போலதான். பிரதமர் ஆக வேண்டும் என்று விரும்பிய அவருக்கு ஜனாதிபதி பதவி கிடைக்கிறது.<br />
<br />
கலாமை ஆதரித்த மம்தாவுக்கு நன்றிகள்.அடுத்த 'ரப்பர் ஸ்டாம்ப்'க்கு வாழ்த்துக்கள்.<br />
---------------------------------------------------<br />
<br />
MIB 3 - மிக ரசித்து பார்த்தேன். நான் முதல்முதலில் தனியாக தியேட்டர் போய் பார்த்த படம் MIB முதல் பாகம். அதன் பின்னால் வந்த இரண்டாம் பாகத்தில் எனக்கு எந்த குறையும் தெரியவில்லை என்றாலும் , படம் படுவிமர்சனத்துக்கு உள்ளானது, இழந்த நிலையை மீட்ட , மீண்டும் இணைந்த இந்த குழு மிகபெரிய வெற்றி அடைந்துள்ளது. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOBexGDub0S788fc9k8MXDdsnHvM-AmuHoavA25OuhGr8MfElnHalcbQgdTAybhTNPElIMXURZ1GY9rXUAQCWTsfi5EIvs-uznd-o0DM4p8knTWc_Nvkqz5mbhyEhWJZg3VzgjzZi9UKe9/s1600/new-men-in-black-iii-trailer-mib3-andy-warhol-01.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOBexGDub0S788fc9k8MXDdsnHvM-AmuHoavA25OuhGr8MfElnHalcbQgdTAybhTNPElIMXURZ1GY9rXUAQCWTsfi5EIvs-uznd-o0DM4p8knTWc_Nvkqz5mbhyEhWJZg3VzgjzZi9UKe9/s320/new-men-in-black-iii-trailer-mib3-andy-warhol-01.jpeg" width="320" /></a></div><br />
வில் ஸ்மித் பதினைந்து வருடம் கழித்தும் அப்படியே இருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருந்தாலும் , கதைக்கு இன்னமும் பொருந்துகிறார். அதே அவசரத்தனம்,சின்ன தவறுகள் செய்து முழிப்பது என்று நொடிக்கு நொடி ரசிக்க வைக்கிறார்.<br />
<br />
டாமி லீ ஜோன்ஸ் வயதிற்கு தக்கவாறு கதை அமைத்து , அதை பல முடிச்சுகள் போட்டு குழப்பிவிட்டு , பின் கடைசி காட்சி வரும் வரை ஒவ்வொன்றாக தெளியவைத்து முடித்திருப்பது மிக அருமை. கடைசி ஐந்து நிமிடம் ,வில் ஸ்மித்தின் தந்தை யார் என்று விளக்கி , அவருக்கும் ஜோன்ஸ்க்கும் உள்ள உறவைப்பற்றி உணரும்போது , கதை அமைத்த விதம் ஆச்சர்யப்படுத்துகிறது.<br />
<br />
எனக்கு படம் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. அவ்வளவு சுவாரஸ்யம். கூட வந்த மீதி இரண்டு பேர், படம் முடிந்ததும் ஒரே மாதிரி சொன்னார்கள் - 'சரியான மொக்கை டா.. எப்போ முடியும்னு ஆகிடுச்சு' - ஹ்ம்ம் Yes..Opinion differs.<br />
--------------------------------------------<br />
<span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 31px; text-align: -webkit-auto;">வைரமுத்து வரிகளும் ரஹ்மானின் இசையும் ... காதல் பிரிவின் வலியை இதை விட உணர்ச்சிபூர்வமாய் யாரும் உணர்த்தமுடியாது என்னும்படி சவாலான பாடல்..</span> <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/e4cgBHU26DQ?feature=player_embedded' frameborder='0'></iframe></div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-16743203565385369162012-05-19T02:41:00.001+05:302012-05-19T03:21:38.129+05:30கலகலப்பு @ மசாலா கஃபே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div>1996 -இல் நவரச நாயகன் கார்த்திக் மார்க்கெட் இழந்து , நடிப்பதை விட்டுவிட்டு சொந்த ஊர் போய்விடலாம் என்று முடிவு செய்தபோது ஒரு பட வாய்ப்பு வந்தது. அதை முடித்து விட்டு நம்பிக்கையில்லாமல் கிளம்ப தயாரானபோது, படம் சரவெடி போல படு ஹிட் ஆகி ,கார்த்திக்கை கம்பீரமாக அடுத்த ரவுண்ட் வரவைத்தது. படம் - உள்ளத்தை அள்ளித்தா . இயக்கம் - சுந்தர் சி.</div><div></div><div><br />
பதினைந்து வருடங்களுக்கு பிறகு 'நடிகர்' சுந்தர் சி ,ஏறக்குறைய அதே நிலைமையில் இருக்க, இயக்குனர் சுந்தர் சி அவரை காப்பாற்றியிருக்கிறார். படம் - கலகலப்பு @ மசாலா கஃபே. நல்ல இயக்குனர் தமிழுக்கு திரும்ப கிடைத்ததற்கு மகிழ்ச்சி.</div><div></div><div><br />
லாஜிக் என்ற ஒரே ஒரு விதியை தளர்த்திவிட்டு சுந்தர் சி படத்துக்கு போனால் , கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்ற மாட்டார் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார். படம் இரண்டரை மணி நேரம் புன்னகைக்க - ரசிக்க -விலா நோக சிரிக்க வைக்கிறது. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0arRJuyBmVa43Kgi1vE05nHUJoKCTC9UELS86Wcx54I_syLa3SGzn2ZMbWekN3hCcMuWOkCoeWr63YIqxt2gOFPEURk4zxAVgrvcQD7CgOAePhaXHAxF_BBP8MNdNqkgTbblSTFOhGda9/s1600/Kalakalappu-Movie-Release-Wallpapers-+(19).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="261px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0arRJuyBmVa43Kgi1vE05nHUJoKCTC9UELS86Wcx54I_syLa3SGzn2ZMbWekN3hCcMuWOkCoeWr63YIqxt2gOFPEURk4zxAVgrvcQD7CgOAePhaXHAxF_BBP8MNdNqkgTbblSTFOhGda9/s320/Kalakalappu-Movie-Release-Wallpapers-+(19).jpg" width="320px" /></a></div><br />
</div><div></div><div>விமல் - சிவா - சந்தானம் என்று மூன்று நாயகர்கள். அப்பாவி நடிப்பில் வழக்கம் போல கிண்டல் கலந்து விமல் கலக்கினால், பஞ்ச் டயலாக் கொடுத்து அவருக்கு இணையாக கூடிய வரை நடிக்கிறார் சிவா. ஆனால் நடிப்பில் வெல்வது விமல்தான். </div><div></div><div><br />
கும்பகோணத்தில் நடக்கும் கதை. அப்பா காலம் வரைக்கும் நன்றாக ஓடிய ஹோட்டல் டல்லடிக்க தொடங்கியதும் , அதை மீண்டும் முன்னுக்கு கொண்டு வர அவர் படும் பாடும் , ஒவ்வொரு முயற்சியும் தோற்கும்போதும் அவர் கட்டும் ரியாக்சனும் , இளவரசுவிடம் கடன் வாங்கி கட்ட முடியாமல் </div><div>அவரிடம் இருந்து தப்பிக்க போராடுவதும் - நல்ல நடிப்பு.</div><div></div><div><br />
காமெடி தாண்டி சிவா எந்த படத்திலும் <span id="6_TRN_a3">நடிக்க</span> முடியாது என்பதை தெரிந்து , இயக்குனர் அவரை உபயோகபடுத்தியிருப்பது நன்றாக வேலை செய்கிறது. டீக்கடையில் நண்பன் 'மச்சான் உன் ஆளு போறாடா' என்றவுடன் 'அண்ணே..இவனுக்கு மட்டும் ரெண்டு பிஸ்கட் கொடுங்க' என்பதிலிருந்து விமலிடம் ' கேள்வி கேக்கறது ரெம்ப சுலபம்.பதில் சொல்றதுதான் கஷ்டம். அதுவும் மகாநதி பாக்காதவன்கிட்ட பதில் சொல்லவே முடியாது' என கத்துவதிலும் 'சகோதரர்' என்று விமலை அழைப்பதிலும் -ஹ்ம்ம் நல்ல முயற்சி சிவா.குறை ஏதும் இல்லை. </div><div></div><div><br />
இடைவேளை தாண்டி சந்தானம் வந்ததும் , ஏதோ பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறக்கும்போது ஏற்படும் ஆனந்த கூச்சல் போல தியேட்டர் எங்கும் கைதட்டல் எதிரொலிக்கிறது. '<span id="6_TRN_5j">அவ்வ்வ்ளோ </span>பெரிய ஜோக் இல்ல இது ' என்ற டயலாக் கூட சிரிப்புக்கு மினிமம் கேரன்ட்டி. <br />
<div>அதிரடி introவுக்கு அடுத்த சீனிலேயே , ' வழக்கம் போல இன்னைக்கும் உங்கள ஒருத்தன் என்ன பத்தி படு கேவலமா பேசியிருப்பானே..அவன் யார்னு போட்டு கொடுத்தா ஐநூறு ரூபா தருவேன்' ன்னு தன் அக்மார்க் அலம்பலை ஆரம்பித்து விடுகிறார்.</div><div><br />
</div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQU-AR_UB7LdyjyIhPhCppWfwf-cXc6eYsHwJ1Uqsrwwp5zH7YPP4ivukX9brYHMCeya1R4n60LIM42WtvzfPhdPgBPJmiZlapT94xd1i-OuQlaXmViqldeec6-WMKR9dn4_C2YfFCiI1g/s1600/Kalakalappu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="203px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQU-AR_UB7LdyjyIhPhCppWfwf-cXc6eYsHwJ1Uqsrwwp5zH7YPP4ivukX9brYHMCeya1R4n60LIM42WtvzfPhdPgBPJmiZlapT94xd1i-OuQlaXmViqldeec6-WMKR9dn4_C2YfFCiI1g/s320/Kalakalappu.jpg" width="320px" /></a></div><br />
<br />
</div><div>அதுவும் <br />
வள்ளி பட ரஜினி வசனத்தை சொல்லும் <br />
அஞ்சலியிடம் ' ஏன் இத இப்டி சொல்லேன்.நீ விரும்புற பையனை விட உன்னை விரும்பற பையனை கட்டிகோன்னு.' என்று நச் கேள்வி கேட்டு பிறகு உதிர்க்கும் மொட்டைமாடி டயலாக் பின்னுகிறது.இம்சை அரசன் திரும்பி வருவதற்குள் ஒரு நல்ல உயரத்துக்கு போய்விடுவார் சந்தானம்.இவரோடு போட்டி போட்டு கலக்கும் மனோபாலா கேரக்டர் ஸ்கெட்ச் அசத்தல். அவர் கெட்டப் படு பொருத்தம்.</div><div></div><div><br />
அஞ்சலி , ஓவியா நடிப்பு ஓகே. not bad.</div><div></div><div><br />
ஹீரோக்கள் மூன்று பேர் இருந்தாலும் படத்தின் நிஜ ஹீரோக்கள் திரைக்கதையும் வசனமும்தான். ஹோட்டல் நிகழ்வையும் , வைரம் கைமாறும் கதையையும் சரியாக பொருத்தி அமைத்த விதம் அருமை. வசனங்கள்தான் படத்தின் ஆணிவேர். சுந்தர் சி - பத்ரி இருவரின் உழைப்பு தெள்ளதெளிவாக தெரிகிறது. <br />
சுந்தர் சி-யின் 25வது படம் இது.சொல்லும்படியான லேண்ட்மார்க். ஒவ்வொரு காட்சியிலும் perfection தெரிகிறது </div></div><div></div><div><br />
'அட்டு பிகருக்கு குட்டு பாய்' உட்பட சில வசனங்கள் கேபிள் சங்கரின் கைவண்ணம் என்று நினைக்கிறேன்.திரையுலகில் அவர் பிள்ளையார் சுழி வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது .மகிழ்ச்சி.அவர் பயணம் தொடர வாழ்த்துக்கள்.</div><div></div><div><br />
கடனை திருப்பி கேட்டு விமலை மிரட்டும் இளவரசுவை , <br />
சிவா வந்தவுடன் , இன்ஸ்பெக்டரிடம் மாட்டிவிட்டு அவரை பல கெட்டப்களில் ஓட வைக்கும் காட்சிகள் செம கலக்கல். இளவரசு - ஜான் விஜய் - பஞ்சு சுப்பு என எல்லாரும் நிறைவாக செய்திருக்கிறார்கள்.</div><div></div><div><br />
மொத்தத்தில் , ரசிகர்களின் மாறிவரும் ரசனையை உணர்ந்து ,அதற்கு ஈடுகொடுக்கும் திறமையான ஒரு குழு இணைந்து , தரமான காமெடி படத்தை கொடுத்திருக்கிறார்கள். தாராளமாக ரசிக்கலாம். </div><div></div><div><br />
கலகலப்பு - நல்ல பொழுதுபோக்கு படம்.<br />
<br />
<br />
<span style="color: #6aa84f;">பேஸ்புக்கில் தொடர , வலது பக்க மேல் ஓரத்தில் உள்ள 'Find us on Facebook'</span><span style="color: #6aa84f;">ல்</span><span style="color: #6aa84f;"> Like பட்டனை அழுத்தவும்.</span></div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-11816465520698984332012-04-16T09:03:00.004+05:302012-04-16T10:20:55.509+05:30ஒரு கல் ஒரு கண்ணாடி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div><br />
'சினிமா என்னும் ஊடகத்தை வியாபாரமாக மாற்றுகிறார்கள்; கமர்ஷியல் என்னும் பெயரால் அதை அழிக்கிறார்கள்' என்று அடிதொண்டையில் கத்தும் சினிமா விமர்சகர்கள் ஓகே ஓகே தியேட்டர் பக்கம் வர வேண்டாம்.<br />
எப்படியும் இவர்களும் யாருக்கும் தெரியாமல் ராத்திரி வந்து படம் பார்க்கத்தான்<br />
போகிறார்கள்; முழுக்க பார்த்து ரசித்து பிறகு அடுத்த நாள் கலைத்தாயின் காவல்காரர்களாக படத்தை குற்றம் சாட்டுவார்கள்.<br />
<br />
ஆனால் இது எதைபற்றியும் கவலைப்படாமல், படம் பார்க்க வரும் சாமான்ய ரசிகர்களை , இரண்டரை மணி நேரம் சிரிக்க வைத்து , கவலையை மறக்க வைத்த இயக்குனர் ராஜேஷ்க்கு பெரிய கைதட்டல் கொடுக்கலாம். நிச்சயமாக சொல்லி அடித்த கல் இது - டார்கெட் மிஸ் ஆகல.</div><div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI4acfAie3FP0wbH4Fcd6a9Dn6AGUK4mftj31KU-iOkwNPa5bDc4_mldrOYeIESaPoFdvkzoXdbTD0yNX7SWzaMaEBSQm48heyI-fQZTNvfak6ZljB9aJVBRelCYbfwORSlBNmb_iLl1zI/s1600/ok.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="263px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI4acfAie3FP0wbH4Fcd6a9Dn6AGUK4mftj31KU-iOkwNPa5bDc4_mldrOYeIESaPoFdvkzoXdbTD0yNX7SWzaMaEBSQm48heyI-fQZTNvfak6ZljB9aJVBRelCYbfwORSlBNmb_iLl1zI/s320/ok.jpg" width="320px" /></a></div><br />
</div><div>இதுதான் யதார்த்தம். என்னதான் கலை , உலகத்தரம் என்று எத்தனையோ மேதைகள் சினிமாவைப் பற்றி பேசினாலும் , சாதாரண ரசிகனின் சந்தோசமான கைதட்டல் சத்தத்தில் அவை எதுவுமே யாருக்கும் கேட்காது.இந்த உண்மையால்தான் சிவாஜி காலத்தில் எம்ஜீஆரும் , கமல் காலத்தில் ரஜினியும் ஓவர்டேக் செய்து வெற்றிபெற முடிந்தது. </div><div></div><div><br />
நாலாயிரத்து <span id="6_TRN_6h">முன்னூற்றி </span>இருபத்தி ஏழு தடவை பார்த்த கதை. அதில் கடைசி இரண்டு , இதே இயக்குனர் தன் போன இரண்டு படத்தில் ஏற்கனவே காட்டி விட்டார். இப்போதும் அதே. ஆனால் நடிகர்கள் வேறு வேறு. அதனாலென்ன? படத்தின் தோல்வி என்பது நிர்ணயம் ஆவது - படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கு சலிப்பு வந்தால் மட்டுமே . அதை ஒவ்வொரு நிமிடமும் மனதில் வைத்து ஒவ்வொரு சீனையும் தரமான சிரிப்பிற்காக செதுக்கி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர். </div><div><br />
சிவா மனசுல சக்தி , பாஸ் என்கிற பாஸ்கரன் - இந்த இரண்டு படங்களும் இப்போதும் டிவியில் போட்டால் ,அது எத்தனை முறை பார்த்ததானாலும் மீண்டும் பார்க்க தோன்றும் ஈர்ப்பு உண்டாகியிருக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் இனி கண்டிப்பாக இடம்பெறும்.</div><div></div><div><br />
படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின். தளபதி மகன் என்பதால் பன்ச் டயலாக்கோ , தலைவர் பேரன் என்பதால் பக்கபக்கமாய் வசனமோ வேண்டும் என்று கேட்காமல் , ஒரு சராசரி யூத் கேரக்டர் மூலம் அறிமுகம் ஆகி பெரிய பாராட்டை பெறுகிறார். கொஞ்சமே கொஞ்சம் அரசியலை கலந்திருந்தாலும் , மண்ணை கவ்வியிருக்கும் இந்த படம்.<br />
<br />
நல்ல ஒரு <span id="6_TRN_5x">தயாரிப்பாளர்க்கு </span>இருக்க வேண்டிய புத்திசாலித்தனம் உதய்க்கு இருக்கிறது. அதற்கு கிடைத்த பரிசு - படத்தின் இமாலய வெற்றி. மென்மையான குரல், உணர்ச்சிகளை வேறுபடுத்தி காட்டத்தெரியாத நடிப்பு, வராத நடனம் என்று எத்தனையோ மைனஸ் இருந்தாலும் , கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்த விதத்தில் எல்லாவற்றையும் ஓரங்கட்டி கைதட்டல் பெறுகிறார் உதயநிதி.<br />
<br />
சந்தானத்தை பேச விட்டு , அடக்கி வாசித்து நடிக்கும் உத்தி ஜெயித்திருக்கிறது.<br />
குரலிலும் மேனரிசத்திலும் ஜீவாவை நினைவுபடுத்தினாலும் , முதல் படத்துக்கு நல்ல ஹோம் வொர்க் செய்து உழைத்திருப்பது தெரிகிறது. சரண்யா - அழகம்பெருமாள் காட்சிகள் யதார்த்தம் - சண்டைக்கு சொல்லும் காரணம் தவிர.<br />
<br />
படத்தில் சகிக்க முடியாத ஒன்று , சந்தானத்துக்கு ஜோடியாக வரும் பெண்ணை கிண்டலடிக்கும் காட்சிகள். அழகில்லாததால் மட்டுமே அந்த பாத்திரம் இவ்வளவு கிண்டலுக்கு உட்படுகிறது என்ற நினைப்போடு டைரக்டர் காட்சிப்படுத்தியிருந்தால் ,அது மிக கண்டிக்கப்படவேண்டிய விஷயம்.<br />
<br />
போன இரு படத்திலும் செய்த அதே தவறு இந்த படத்திலும் மீண்டும் எதிரொலிக்கிறது. கிளைமாக்ஸ் சொதப்பல். தேவையில்லாமல் ஆர்யா , ஆண்ட்ரியா என நட்புக்கு ஆளை நடிக்க கூட்டிவந்து இழுத்தடித்த <span id="6_TRN_ki">கடைசி </span> இருபது நிமிட கொடுமை தவிர மற்றவை எல்லாம் ஓகே. இந்த படத்தை இப்படிதான் முடிக்க முடியும் என்பது திரையுலக டிக்சனரியில் உள்ளதென்பது பார்க்கும் எல்லாருக்கும் தெரியும்.அதனால் டைரக்டர் பிழைக்கிறார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguKFRzFE_0IfQVzo4_OKJGW3UGdZrIqvUVfiat270qz7bToPzuvUIaDCDfpV_DvG8WoD5b37ICIBKvQnWd86gkOTKiUSBKmtAJEQ37A28YSiY483NG5HMPJiId9zORdRsorNvR9Rhf4hOr/s1600/oru_kal_oru_kannadi_mp3_songs_download.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguKFRzFE_0IfQVzo4_OKJGW3UGdZrIqvUVfiat270qz7bToPzuvUIaDCDfpV_DvG8WoD5b37ICIBKvQnWd86gkOTKiUSBKmtAJEQ37A28YSiY483NG5HMPJiId9zORdRsorNvR9Rhf4hOr/s320/oru_kal_oru_kannadi_mp3_songs_download.jpg" width="261px" /></a></div><br />
</div><div></div><div>படத்தின் இரண்டு சறுக்கல்கள் இசை மற்றும் கதாநாயகி. சரக்கு தீர்ந்து போன ஹாரிஸ் ,ஏற்கனவே ஹிட்டடித்த தன் பாடல்களை வைத்து ஒட்டியிருக்கிறார். பின்னணி இசை காட்சிக்கு ஏற்ற தாளம் பிசகுகிறது. எதிர்பார்த்து ஒன்றுதான்.<br />
<br />
SMS அனுயா போலவோ , பாஸ் நயன்தாரா போலவோ நடிக்க தெரியவில்லை ஹன்சிகாவுக்கு.Just chubby yet cute. போகட்டும். மற்ற பாசிடிவ் விஷயங்களால் இவை இரண்டும் மறைந்து விடுகிறது. </div><div></div><div><br />
படத்தின் ஆணிவேர் , தூண் , ஏன் மொத்த பலமுமே சந்தானம்தான். போன விஜய் அவார்டில் சந்தானத்துக்கு விருது கொடுக்கும்போது , மூன்றாம் முறையும் இந்த படம் மூலம் சந்தானத்துக்கே கிடைக்கும் என்று அடித்து சொன்ன ராஜேஷ் அதை உறுதிபடுத்தியிருக்கிறார். நல்ல நடிகரும் , அந்த நடிகரிடம் இருந்து சிறந்த நடிப்பை வாங்க தெரிந்த இயக்குனரும் சேர்ந்தால் கிடைக்கும் ரிசல்ட் நூற்றுக்கு நூறு என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த படம். </div><div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihCELk7RlH_dEJ1ulHIpsLk5mc2nQxMQkWzsYfhuw1teJUMvJbk8EroKGBcKOE-5lL8Dm0KPrtcMap6oIJfESBnmpDx3_y8JCOm6y5C15aBrJeIrbC4ndKiDWKPFWb-bHSlAnZ1vVIOJoh/s1600/santhanam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihCELk7RlH_dEJ1ulHIpsLk5mc2nQxMQkWzsYfhuw1teJUMvJbk8EroKGBcKOE-5lL8Dm0KPrtcMap6oIJfESBnmpDx3_y8JCOm6y5C15aBrJeIrbC4ndKiDWKPFWb-bHSlAnZ1vVIOJoh/s320/santhanam.jpg" width="320px" /></a></div><br />
<br />
</div><div>கண்ணை உறுத்தும் கலர் பேன்ட் , பொருந்தாத டி ஷர்ட் ,<br />
எண்ணெய் வைத்து ஒழுங்காய் வாரிய தலைமுடி என ஒரு மாதிரியான கெட் அப்பில் அசத்துகிறார் சந்தானம். அடிக்கடி சிவாஜியையும், கமலையும் மிமிக் செய்து அடிக்கும் அட்டூழியமும் , உச்சகட்டமாக கிளைமாக்ஸ் காட்சியில் மதபோதகரை இமிடேட் செய்யும் காட்சியிலும், என கிடைத்த எல்லா கேப்பிலும் பவுண்டரி அடித்து விளையாடியிருக்கிறார்.<br />
<br />
வடிவேலுவின் இடம் காலியாய் இருக்கும் நேரத்தில், விவேக்கின் காமெடி காலி பெருங்காயமாய் கரைந்து முடிந்திருக்கும் நேரத்தில், இருக்கும் மிச்ச சொச்சங்களை புறந்தள்ளி டாப் காமடியனாக கம்பீரமாக உயர்ந்திருக்கிறார் சந்தானம்.இது போன்ற <span id="6_TRN_bq"><span id="6_TRN_br">படங்களை ஒரு ஐந்து வருடங்கள் </span></span>தொடர்ந்து கொடுத்தால், பல வருடம் காத்திருந்த கவுண்டமணியின் கிரீடத்தை சந்தானத்துக்கு தாராளமாக வழங்கலாம். </div><div></div><div></div><div></div><div><br />
எந்த லாஜிக்கும் பார்க்காமல் மூன்று மணி நேரம் சிரிக்க , சரியான மினிமம் கேரன்ட்டி இந்த படம்.<br />
<br />
ஓகே ஓகே - டபுள் ஓகே.<br />
<br />
<br />
<span style="color: #6aa84f;">பேஸ்புக்கில் தொடர , வலது பக்க மேல் ஓரத்தில் உள்ள 'Find us on Facebook'</span><span style="color: #6aa84f;">ல்</span><span style="color: #6aa84f;"> Like பட்டனை அழுத்தவும்.</span></div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-65297204269955407672012-04-10T05:27:00.000+05:302012-04-10T05:27:26.083+05:30பாப்கார்ன் பாக்கெட் - 20120410<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div>'மூணு' படத்தின் என் <a href="http://www.abimanyuonline.blogspot.com/2012/04/3.html">விமர்சனத்தைப்</a> பார்த்து எனக்கு தெரிந்த ஒருவர் <br />
'உங்களுக்கு என்ன அந்த படத்து மேல அவ்ளோ கோபம்? அப்படியே இருந்தாலும் அதை சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? ரொம்ப ஓவரா போறீங்க' என்று தாளித்தார். 'பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பார்த்த எனக்கு இல்லாத உரிமை யாருக்கு இருக்கு?'ன்னு மட்டும் சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.<br />
</div><div><br />
'இவ்ளோ பேசறீங்களே..என் விமர்சனத்தை விமர்சனம் செய்ய உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?ன்னு அவர் பாய்ண்டை திருப்பி அவரையே எதிர் கேள்வி கேட்க கடைசி வரைக்கும் நான் யோசிக்கவே இல்லை.பழகின தோஷம். </div><div></div><div><br />
இவங்க எல்லாம் தான் என்ன நினைக்கிறோமோ அதையே பார்க்கணும், அதை ஆமோதிக்கிற கருத்தை மட்டுமே மத்தவங்க எழுதணும் பேசணும்ன்னு நினைக்கிறாங்களே தவிர அடுத்த கோணத்துல ,மத்தவங்க ரசனைக்கும் மதிப்பு கொடுக்கணும்னு யோசனை கூட செய்யறது இல்ல.</div><div> <br />
<div></div>படத்தை நல்லாயிருக்குன்னு சொல்றவங்ககிட்ட நாம எதிர்வாதம் செய்ய கூடாது. </div><div>.'படம் நல்லாயிருக்கு'ன்னு நீயும் சொல்லித்தான் ஆகணும்ன்னு சொல்றவங்கள மதிக்கவே கூடாது.<br />
<br />
இது எல்லாத்துக்கும் பொருந்தும்.<br />
<br />
'சுய கருத்துரிமையை விட்டுகொடுத்துதான் நட்பை காப்பாத்திக்கணும்னா அந்த நட்பே தேவை இல்ல'ங்கறது என் கருத்து. <br />
-----------------------------------------------------------------------<br />
<br />
அடுத்த ஜனாதிபதி யாரென்று இன்னும் மூன்று மாதத்தில் தெரிந்து விடும். தற்போதைய ரப்பர் ஸ்டாம்ப் பிரதீபா பாட்டில் ,இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை தவிர வேறு எந்த ஒரு சிறு துரும்பையும் கிள்ளி போடவில்லை. எதிர்பார்த்ததுதான்.அதனால் ஏமாறவில்லை.<br />
<br />
வாழ்த்துக்கள் பிரதீபா. வரலாறு மிக முக்கியம் என்பதை தெரிந்து அதில் உங்கள் பேரையும் இடம்பெற செய்து விட்டீர்கள்.நீங்கள் ஜனாதிபதியாய் வரவேண்டும் என்று இந்தியாவில் முதன்முதலில் ஆதரவு <span id="6_TRN_b8">கூட்டம்</span> போட்ட கலைஞருக்கு ஒரு நன்றியை அறிவித்து விட்டு விடைபெறுங்கள்.<br />
<br />
காங்கிரஸ் சார்பில் மக்களவை சபாநாயகர் மீராகுமார், துணை ஜனாதிபதி ஹமித்அன்சாரி, பிரபல தொழில் நுட்ப நிபுணர் சாம்பிட்ரோடா, நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி, கரண்சிங் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. போன முறை போல இந்த முறையும் கலாம் இந்த போட்டியில் கலந்துகொள்ளாமல் இருந்து விடுவாரோ என்ற வருத்தம் கலந்த எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOMx04-u72t_iRRWLfmFetMM6pfeEkOC6an-KXZHOk7C1fEGKX2ukO9B4X7OUAp4Qb6tHYuSn14SrDKDYufnFjHvwegW_4KpWJ5LTK-SZc20gcvZ2zprwNi_oL4C4sOoL9jmwJGB5X2BV1/s1600/glitterati_apj_abdul_kalam_20060327.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="228px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOMx04-u72t_iRRWLfmFetMM6pfeEkOC6an-KXZHOk7C1fEGKX2ukO9B4X7OUAp4Qb6tHYuSn14SrDKDYufnFjHvwegW_4KpWJ5LTK-SZc20gcvZ2zprwNi_oL4C4sOoL9jmwJGB5X2BV1/s320/glitterati_apj_abdul_kalam_20060327.jpg" width="320px" /></a></div><br />
மீண்டும் அழைக்கும்படி அவர் அப்படி என்ன செய்து விட்டார் என்று கேட்பவர்கள் , அவரின் முன்னும் பின்னும் இருந்தவர்கள் யாரும் செய்யாத ஒன்றை செய்தவர் என்பதை அறியாதவர்கள். நாட்டுக்கு தன் இளமை காலம் தொட்டு சேவை செய்து அதன் புகழை தாங்கி நிற்கும் தூணாக இருந்த பின்தான் ஜனாதிபதி தேர்தலில் நின்றார்.ஐந்து வருடங்கள் எத்தனையோ மாணவர்களுக்கு தன் பேச்சின் , ஆலோசனையின் சேவையை வழங்கினார்.<br />
<br />
இது எல்லாம் அவர் ஜனாதிபதியாய் இருந்து செய்யவேண்டும் என்பது இல்லை என்பதையும் விளம்பரம் ஏதும் இல்லாமல் அடுத்த ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து செய்து நிருபித்தார். இவரைத் தவிர பொருத்தமானவர் வேறு யார் ?<br />
<br />
பாஜக இவரை ஆதரிப்பதாக செய்திகள் வருகிறது. உண்மையாய் இருந்தால் மிக்க நல்லது. வாருங்கள் கலாம்.<br />
----------------------------------------------------------<br />
<br />
மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்ததுபோன்று தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்திருக்கிறார். கூடவே , இந்த உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,383.49 கோடி செலவு ஏற்படும் என்றும் ஒரு ஓரத்தில் கோடிட்டு காட்டியுள்ளார்.சந்தோஷம். <br />
<br />
மின் பற்றாகுறை பிரச்சனை பூதாகாரமாய் இருக்கும் சமயத்தில் இந்த அறிவிப்பு ஒன்றும் பெரிய அனுகூலத்தை அரசுக்கு கொடுக்காது. இருந்தாலும் ஆசிரியர்கள் உட்பட சத்துணவு ஊழியர்கள்,வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள் என பலருக்கும் இந்த உயர்வு கொஞ்சம் நிம்மதி அளிக்கும். <br />
<br />
இதை நம்பி நடுத்தர மக்கள் யாரும் குடும்ப பட்ஜெட்டில் உடனே எந்த திட்டத்தையும் செலவு வகையில் வைத்து விட <br />
முடியாது. காரணம் பால் , மின் கட்டணம் , மூன்று முறை பெட்ரோல் விலை உயர்வு என்று எல்லாம் சேர்ந்து இதை நேர்படுத்தி விடும்.<br />
<br />
எது இங்கிருந்து கொடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.<br />
There exists an equation. <br />
<div>---------------------------------------------------<br />
<br />
'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' எரிச்சலூட்டுகிறது. கேள்விகள் தரம் பற்றி அதிகம் விமர்சனம் கேட்டாகி விட்டது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivbAe6iMaPk3AAY5Gck_QyX50UkHGQA-B-bu74VxeYaz25UPDYyQSF418sw5QtdDTSJOJOa6OcjMbiKeM3NFNcX-uEUzEQ-6Wvziqi3daFeIne4YfaYJBzHYJWKBiufNGkhgE6HiabEAeH/s1600/Neengalum-Vellalam-Oru-Kodi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivbAe6iMaPk3AAY5Gck_QyX50UkHGQA-B-bu74VxeYaz25UPDYyQSF418sw5QtdDTSJOJOa6OcjMbiKeM3NFNcX-uEUzEQ-6Wvziqi3daFeIne4YfaYJBzHYJWKBiufNGkhgE6HiabEAeH/s320/Neengalum-Vellalam-Oru-Kodi.jpg" width="320px" /></a></div><br />
<br />
எனக்கு பெரிய உறுத்தல் சூர்யாவின் தடுமாறும் செந்தமிழ் உச்சரிப்பும்,அந்த மெனக்கெடலுக்காக அவர் படும் பாடும்தான். என்னதான் அவர் சிரித்தாலும், பதட்டத்தை மறைக்க முற்பட்டாலும் ஒருவித இறுக்கம் அவரை மீறி தெரிகிறது.<br />
<br />
அதை விட போட்டியில் கலந்து கொள்பவர்களின் சுய புராணத்தை விஜய் டிவி அளிக்கும் விதம் மிக கொடுமை. பொழுதுபோக்கு நிகழ்ச்சியை , அதில் கலந்து கொள்பவர்கள் சோகத்தை<br />
( வருத்தத்திற்குரியதுதான் ) வைத்து , நிகழ்ச்சியின் தரத்தை கெடுக்கிறார்கள்.<br />
<br />
பல வருடங்கள் முன்னால் வந்த கோடிஸ்வரன் நிகழ்ச்சி இதை விட நூறு மடங்கு நன்றாக இருந்தது. சரத்குமார் சூர்யாவை விட நல்ல முறையில் செய்திருப்பார்.<br />
நகைச்சுவையோடு ஒரு எதார்த்தம் அவரிடம் இருந்தது.</div>-----------------------------------------------------------<br />
<br />
சச்சினின் பின்வாங்கல் பெரிய ஷாக். சென்னையை விட மும்பைக்கு இந்த முறை ஆதரவு அளிக்கலாம் என்ற என் எண்ணத்தில் பெரிய தடுமாற்றம். ஹர்பஜனுக்கு எல்லாம் சென்னையை விட்டுகொடுக்க முடியாது.<br />
<br />
ஆனால் சென்னைக்கு கோப்பை இல்லை என்ற கட்டம் உருவானால் என் ஓட்டு தாதாவுக்கே. கங்குலி தலைமையில் புனே அணி கொல்கத்தாவை பந்தாட வேண்டும் என்பதே கொல்கத்தா மக்களின் எதிர்பார்ப்பும் கூட. இவர்களுக்கு கோப்பையை விட கங்குலிக்கு போன வருடம் ஷாருக் அளித்த அதிர்ச்சி வைத்தியத்துக்கு மருந்து கொடுப்பதே முக்கிய குறிக்கோள். கானுக்கு இது தேவைதான். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGJS4T1okWHQ4Fq8c_w80RyiUwoNWP3GU1bQFAPeVjdBuzwLNLxNwuS1aIFjvxkywI0ROXsdL8G-JkpYFXDJ3eDL38gPkeft_YRxGDZpiAX65GP6_Wq-Mszagar4eHiR5XP5v-Ls7xP-7v/s1600/ShahrukhKhanSauravGanguly_thumb.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGJS4T1okWHQ4Fq8c_w80RyiUwoNWP3GU1bQFAPeVjdBuzwLNLxNwuS1aIFjvxkywI0ROXsdL8G-JkpYFXDJ3eDL38gPkeft_YRxGDZpiAX65GP6_Wq-Mszagar4eHiR5XP5v-Ls7xP-7v/s320/ShahrukhKhanSauravGanguly_thumb.jpg" width="305px" /></a></div><br />
சென்னை டீம் வழக்கம் போல கலக்கலாகத்தான் இருக்கிறது. தோனி தவிர ரைனா , முரளி விஜய் , பிராவோ கூடவே அஷ்வின் என நல்ல பலமான பட்டாளம். சறுக்கலான காலகட்டத்தில் ஸ்ரீகாந்த் அனிருதா போன வருடம் நன்றாக உதவினார். தோனி எப்போதும் செய்யும் தப்பான , முக்கியமான தருணத்தில் ஜோஹிந்தருக்கு ஓவர் கொடுக்காமல் இருந்தால் பல வெற்றிகளை சென்னை பார்க்கலாம். <br />
<br />
இந்த முறை என் சாய்ஸ் சென்னை மற்றும் புனே. Let see who deserve.<br />
----------------------------------------------------<br />
<br />
உன்னி மேனன் குரலில் ரஹ்மானின் அற்புதம்.வைரமுத்து வார்த்தை கையாடல் இந்த பாடலில் உச்சகட்டத்தை எட்டியிருக்கும். <br />
அதிர்ஷ்டவசமாக ஒளிப்பதிவும், பாடலின் லொக்கேஷனும் ,கண்களை உறுத்தாமல் பாடலை முழுதாக ரசிக்க வைக்கிறது. இந்த படம் வணிகரீதியாக தோல்வி அடைந்தாலும் , தமிழுக்கு புதிய முயற்சி. பாடல்கள் அனைத்தும் மிக அருமை.<br />
<br />
சுரேஷ் மேனன் இயக்கத்தில் 'புதிய முகம்' படத்தில் வந்த பாடல். தெலுங்கில் இதே பாடலை எஸ்பிபி பாடியிருந்தாலும் , உன்னி மேனனின் குரல் அதிகம் மயங்க வைக்கிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/g7rEIW0etRU?feature=player_embedded' frameborder='0'></iframe></div><br />
<br />
'கள்வர்க்கு இரவழகு;காதலர்க்கு நிலவழகு ' - <br />
<div>ஆகச்சிறந்த கற்பனை ஊற்று.</div>-----------------------------------------<br />
</div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-55209929202039881662012-04-04T03:34:00.000+05:302012-04-04T03:34:52.177+05:30'3' - தனுஷின் ரத்த சரித்திரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div>ஒரு ஆறு மாசமா படத்தோட தலைப்புக்கு என்ன அர்த்தம்னு தெரியாம முழிச்சிட்டு இருந்த ரசிகர்களுக்கு ரெண்டரை மணி நேரம் மூச்சு திணற திணற சுத்தி சுத்தி அடிச்சிட்டு '' கேளாய் மானிடா .. 3 என்பது 3 அடிமுட்டாள்கள் என்பதன் சுருக்கமே . ..இயக்குனரும் , நடிகரும் முதல் இரண்டு பேர். மூன்றாவது நபர் நீதான் எங்கள் செல்லமே... 'ன்னு புரியாம புரிய வெச்சிருக்காங்க..<br />
<br />
இத அனுபவபட்டுதான் புரியனும்னு இன்னும் நினைக்கிறவங்க ,வீட்டுல ஒருதடவைக்கு ரெண்டு தடவை சொல்லிட்டு தியேட்டர்க்கு போகலாம்.மத்தவங்க போஸ்டர் பக்கம் கூட போய்டாதீங்க.. டிவில இந்த படத்தை போடும்போது , தப்பித்தவறி உங்க வீட்டுல கரண்ட் இருந்ததுனா , வெளிய ஓடிபோய் வெயில்லுல நின்னுக்கோங்க...</div><div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDAMPcxJIUCvrLUo3znvAUYrATauSTOUTvXjeHcvaBxyGqMuczPVysCcv0CPDe-KB-3NDOsfu-WauV10b4aOgkSdIzn7eye5CYH9YzIfHA_BOkqkL8oGi3dxayms_5WlWsxp-hT_HQHOsB/s1600/3+tamil.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDAMPcxJIUCvrLUo3znvAUYrATauSTOUTvXjeHcvaBxyGqMuczPVysCcv0CPDe-KB-3NDOsfu-WauV10b4aOgkSdIzn7eye5CYH9YzIfHA_BOkqkL8oGi3dxayms_5WlWsxp-hT_HQHOsB/s320/3+tamil.jpg" width="320px" /></a></div><br />
</div><div>தனுஷ் மூணாவது தடவையா லூஸா நடிக்கிற படம். தலைப்பு இதுக்கும் பொருந்துது. </div><div></div><div><br />
ஸ்கூல் காலத்துல இருந்து வர காதல், ப்ரெண்ட்ஸ் கூட்டத்தோட நாலு காமெடி, அப்பா செண்டிமெண்ட்,ரெண்ட வீட்டுலயும் காதலுக்கு எதிர்ப்பு , பல பரிணாம வளர்ச்சிக்கு பிறகு கல்யாணம்.இப்படி தமிழ் திரைவரலாற்றிலயே இதுவரைக்கும் யாரும் தொடாத கதையை கையில எடுத்து திரைக்கதை எழுதி அப்புறம் அதை படமா ரிலீஸ் செஞ்சிருக்காங்க.<br />
<br />
படத்துல இவ்வளவு இருந்தாலும் இது தனுஷ் படம் ஆச்சே...எதோ மிஸ் ஆவுதேன்னு நீங்க நெனச்சா எல்லாம் தெரிஞ்ச இயக்குனருக்கு தெரியாதா என்ன? ஆடியன்ஸ் பல்ஸ கரெக்டா தெரிஞ்சிக்கிட்டு கல்யாணத்துக்கு அப்புறம் தனுஷ்க்கு மனநோய் தாக்குதுன்னு ஒரு ட்விஸ்ட் வெச்சிருக்காங்க.. அதுக்கு அப்புறம் கதை என்னவாகுதுங்கறதுதான் படம்.பாக்குற நாம என்னவாகறோம்ங்கறது நம்ம விதி.</div><div></div><div><div><br />
பிரபு , பானுப்ரியா , ஸ்ருதிஹாசன் ,சிவகார்த்திகேயன்னு வரிசையா நல்ல ஸ்டார் வேல்யு உள்ள நடிகர்கள் இந்த படத்துல தேவை இல்லாம இருக்காங்க. அனிருத் , கொலைவெறி பாட்டு தவிர இன்னும் ரெண்டு மெலடி நல்லபடியா கொடுத்திருக்காரு.இவர் ஓபனிங் மட்டும்தான் இந்த படத்துல உருப்படியான விஷயம்.</div></div><div></div><div><br />
ஐஸ்வர்யாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. ஒரு கமர்ஷியல் இயக்குனர் ஆக முதல் தகுதி அடுத்த படத்துல இருந்து கதையை சுடறதுதான். அது இவங்களுக்கு அழகா வருது. என்ன ஒன்னே ஒன்னு .. எல்லாமே தனுஷ் நடிச்ச பழைய படங்கள்ல இருந்தே உருவனதுனால நம்ம பசங்க கரெக்டா கண்டுபிடிச்சிடாங்க... </div><div><br />
அவரோட முதல் படத்துல இருந்து கடைசியா வந்த படம் வரைக்கும் இருக்குற எல்லா சீனையும் எடுத்து 'இங்க்கி பிங்க்கி பாங்க்கி' போட்டு எது வருதோ அத எடுத்து இதுல மறுபடியும் யூஸ் பண்ணிருக்காங்க. நல்ல வருவீங்க மேடம். உங்கள மாதிரி திறமையான இயக்குனர்கள் சினி பீல்டுக்கு தேவை.</div><div></div><div><br />
அம்மா..நாங்கெல்லாம் பேரரசு படத்தை கூட விசிலடிச்சு பார்ப்போம். மரண மொக்கை படமா இருந்தாலும் சிரிச்சிக்கிட்டே கமென்ட் அடிச்சிட்டு பாப்கார்ன மென்னுட்டு படத்தை ஜீரணம் பண்ணிக்குவோம். சத்தியமா இந்த மாதிரி கைக்குழந்தை கணக்கா தேம்பி தேம்பி அழுது பாத்தா படம் இதுதான். <br />
<br />
பவர் ஸ்டார் உட்பட மத்தவங்க யாருமே எங்கள அழ வெச்சி பாக்க விருப்பபட்டதில்ல.. நீங்க மட்டும் ஏன்? உங்களுக்கு செல்வராகவன் படங்கள்தான் இயக்குனர் ஆக இம்ப்ரெஸ் பண்ணுச்சுதுனா அதுக்காக இப்படியா? செல்வராகவன் மாதிரி படம் எடுக்க செல்வராகவன் இருக்காரே.நீங்க எதுக்கு?</div><div></div><div><br />
தனுஷ் நீங்க ரொம்ப அடக்கமான மனிதர்.நல்ல நடிகர். தறுதலை,ரவுடி,வீட்டுக்கு அடங்காத பிள்ளை,லோக்கல் ஆளு,மெண்டல் கேரக்டர் எல்லாம் நல்லா பண்ணுவீங்க. அதுக்காக கேப் விடாம மெண்டலாவே நடிச்சிட்டு இருந்தா உண்மைலயே அப்படி ஆகிடற அபாயம் உங்களுக்கு இருக்கோ இல்லையோ ,பாக்கற எங்களுக்கு இருக்கு.<br />
<br />
ஒரு நாலஞ்சு வருஷம் உங்க வீட்டு ஆளுககிட்ட இருந்து விலகி நல்ல இயக்குனர்களோட சேர்ந்து நடிச்சா ,பேர காப்பாத்திக்க சான்ஸ் இருக்கு.என்ன பண்றது? சிம்பு தொல்லைல இருந்து தப்பிக்க எங்களுக்கு நீங்கதான கதி.</div><div></div><div><br />
இது எல்லாத்தையும் மீறி இந்த படம் முதல் மூணு நாளுல ஒன்னே கால் கோடி வசூல் அள்ளி ஹவுஸ்ஃபுல்லா ஓடிட்டு இருக்கறது என்னைய மாதிரி சாதாரண ரசிகனுக்கு வெளங்கல. ஒரு வேளை நமக்குதான் கலை கண்ணோட்டம் அந்த அளவுக்கு இல்லையோ..?!!? </div><div></div><div><br />
அத விட <span id="6_TRN_hd">இந்த படத்தோட </span> தெலுங்கு பதிப்பு பத்து கோடிக்கு வியாபாரம் ஆயிருக்காம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு , மக்கள் கூட்டம் சாரிசாரியா படத்துக்கு போகுதாம். <span id="6_TRN_hu">ஹிந்திக்கு அடுத்த மாசம் படம் போகுதாம். </span></div><div><br />
நல்லது .. ரெம்ப நல்லது.. எவ்வளவு அள்ளணுமோ இந்த ஒரு தடவைலயே அள்ளிடுங்க எஜமான் அள்ளிடுங்க .. ஆனா தயவுசெஞ்சு இதே மாதிரி '4 ' , '5 'ன்னு எடுத்துராதீங்க..அந்த விபத்தை சந்திக்க எங்ககிட்ட <br />
தைரியம் இல்ல...<br />
</div><div></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKRHafE88MJQqLlAJvFqgafCHxFU0YTs6e7XOYNLMH3A5y62mUfx-Iv9FLD3Q2_DnBMqWl5Lnr_TFqt9qQEqSQ0ki9-agiqASwnR5MYkgCKW2AdHTVmBfbjcH7bK884nxqOAA_-XtfzoJ3/s1600/3-movie-premiere-show-111.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" dea="true" height="320px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKRHafE88MJQqLlAJvFqgafCHxFU0YTs6e7XOYNLMH3A5y62mUfx-Iv9FLD3Q2_DnBMqWl5Lnr_TFqt9qQEqSQ0ki9-agiqASwnR5MYkgCKW2AdHTVmBfbjcH7bK884nxqOAA_-XtfzoJ3/s320/3-movie-premiere-show-111.jpg" width="214px" /></a></div><div></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div><br />
மூணு - முடியல..<br />
<br />
</div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-59635154045603682872012-03-15T03:53:00.000+05:302012-03-15T03:53:25.927+05:30வலியும் வலி சார்ந்த தீவும்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div>உலகத்தின் எங்கோ ஒரு ஓரத்தில் எப்போதும் ஏதோ ஒரு கொடூரம் நடந்து கொண்டே இருக்கும். பரிதாபம்தான். வருத்தத்திற்குரியதுதான். ஆனால் அவை எதுவுமே நம்மால் தடுக்க முடியாத ஒன்றாக இருக்குமானால் , கடந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இலங்கை அப்படியில்லை. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhKfru5Asa7K-Zxl69yF8CxuO4JoGzOeoDa_sFBhX1fuB8Ace2i3qst34737Xh6FQ21EpbOY3FzZfPKSCIyJV37rvY5BZqGhkNGyAtrXGpxsQbHy_K7cvVOPq7oO-17O2-7J3PNJxnpGk5/s1600/190nerudaltamileelam.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhKfru5Asa7K-Zxl69yF8CxuO4JoGzOeoDa_sFBhX1fuB8Ace2i3qst34737Xh6FQ21EpbOY3FzZfPKSCIyJV37rvY5BZqGhkNGyAtrXGpxsQbHy_K7cvVOPq7oO-17O2-7J3PNJxnpGk5/s200/190nerudaltamileelam.bmp" width="200px" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
</div><div></div><div>கடந்த முப்பது வருடங்களாக இலங்கை விஷயத்தில் இந்தியாவின் பங்கு என்ன என்று யோசித்தால் , முதுகில் குத்தும் நிகழ்வே மாறி மாறி நடந்திருக்கிறதே தவிர <br />
<div>ஆறுதலுக்கு கூட நம் கரங்கள் அங்கே அண்டியதில்லை. நம்மவர்கள் நலனை மட்டுமல்ல ,உயிரைக் கூட காப்பாற்ற இயலாத சகோதர நாடாகத்தான் இருந்திருக்கிறோம்.</div></div><div></div><div><br />
ஒவ்வொரு அடிக்கும் கண்ணில் நம்பிக்கையுடன் கடல் தாண்டி பார்த்த சகோதரர்கள் ,அடி வாங்கி வாங்கி , பொறுமை மீறி , தானே எழுந்து திருப்பி அடிக்கத் தொடங்கியவுடன் இலங்கை பின்வாங்கியது.தடுமாறியது. <br />
<br />
ராணுவ கட்டுக்கோப்பாய் ஒரு படை , தனக்கு சிம்மசொப்பனமாய் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்காத இலங்கை , கிறங்கி போய் பயத்தின் பிடியில் துவண்ட காலம் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் .</div><div></div><div><br />
கூப்பிடும் தூரத்தில் தமிழ் உறவு. உலகின் தலைசிறந்த படைபலம் கொண்ட நாடு. <span id="6_TRN_4u">படை </span>அனுப்பக் கூட தேவையில்லை. ஒரு உறுமல் கொண்ட அறிக்கை மட்டுமே போதும் - பின்வாங்கி பதுங்கியிருக்கும் சிங்களம். இந்த பக்கமிருந்து ஒரு சின்ன ஆறுதல் குரல் கூட அவர்களை அணுகவில்லை.<br />
<br />
கடைசிவரை கதறிவிட்டு ஒரு சதுர மைல் சுற்றளவில் அடங்கும் வரை போராடி, இறுதியில் மாண்டது வீரம். 2009 -இல் இலங்கையில் வென்றது அராஜகம். </div><div></div><div><br />
புலிகளுக்கு எதிரான போரை காரணம் காட்டி நடந்தேறிய கொலைகளும், அட்டூழியங்களும் மூன்றாண்டுக்குப் பிறகே வெளிவந்திருக்கிறது. நமது ஊடகங்கள் செய்ய வேண்டிய கடமையை , இங்கிலாந்தின் சேனல் 4 செய்திருக்கிறது. அவர்கள் வெளியிட்ட வீடியோவின் ஒவ்வொரு நொடியும் ரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகளும், 'யாருக்கு தெரியப் போகிறது?' என்று ராவண வம்சம் போட்ட ஆட்டத்தையும் காண யாருக்கும் இதயத்தில் பலம் இருக்காது.<br />
<br />
அதுவும் கொடுமைப்படுத்தி அழிக்கப்பட்டது நம் தமிழினம் என்றால் இதை பார்த்த பின்பும் உயிர் மிச்சமிருப்பது விசித்திரமே.</div><div></div><div>போன உயிர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை நாற்பதாயிரம். போர் மரபை மீறிய அநாகரீகம் நடந்திருக்கிறது. போருக்கு நடுவில் சிக்கிகொண்ட அப்பாவி மக்களின் உயிரும் மானமும் சூறையாடப்பட்டிருக்கிறது .இதை முக்கால் மணி நேர காட்சிகளில் கூட பார்க்க தெம்பில்லாத நமக்கு இயலாமையும் , குற்றவுணர்வும் மனதை அரிப்பதை தடுக்க முடியாது.</div><div></div><div><br />
<div>கடந்த பத்து வருடங்களாக சிங்கள ராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்த ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை இந்திய அரசு.</div><div>போரின் போது அப்பாவி தமிழ்மக்கள் சாரி சாரியாக கொல்லப்படும்போதும் வாய் திறந்து பேச மறுத்தது. </div><div>அகதிகள் நிலைமையை அறியச்சென்ற எம்.பிக்கள் குழுவினாலும் எந்த பயனும் இல்லை. </div><div><br />
இடைப்பட்ட நேரத்தில், தமிழக மீனவர்களையும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சுட்டுத்தள்ளும் போக்கை பழக்கமாய் கொண்டது சிங்களம்.அதற்கும் எதிர்ப்புக்குரல் வெறும் சம்பரதாயமாகவே இங்கிருந்து வெளிப்பட்டது.</div><div></div><div><div><br />
இங்கு நிலை இப்படி இருக்க , உலகின் போலிஸ் அமெரிக்காவிற்கு , காலம் தாண்டி மனசாட்சி உறுத்தியிருக்கிறது. விளைவு - ஐ நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம். இதை தடுக்க இலங்கை மிக தீவிர முயற்சி எடுக்கிறது. </div></div></div><div>தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகள் உடன்பட்டிருக்க இன்னும் மவுனம் சாதிக்கிறது இந்தியா. </div><div>எந்த ஒரு உறுதிப்பாடான நிலையும் இது வரை அளிக்கப்படவில்லை.</div><div></div><div><br />
அண்ணன் தம்பி இருவருமே போரிட்டு சாவது தவறில்லை - கோழைத்தனமில்லை . அண்ணன் நல்ல பலத்துடன் கம்பீரமாய் உலகில் வாழ்ந்திருக்கும்போதே , தம்பி அடிபட்டு மரணிப்பதை எந்த வகையில் சேர்ப்பது?</div><div></div><div><div></div><div><br />
'இலங்கையுடனான உறவு வரலாற்றுப் பூர்வமானது ; நட்பு ரீதியானது ' என்று இன்று வரை சொல்லி வரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவின் அறிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான். காஸ்மீர் விவகாரத்தில் , பாகிஸ்தான் உறவைப் பற்றியும் இதையே சொல்லுவாரா என்பதுதான் கேள்வி. <br />
<br />
இலங்கையில் இதுவரை இருந்த இந்திய சொந்த பந்தங்களும், சகோதர உறவுகளும் மாண்டபின் , என்ன நட்பு ரீதியான உறவு இனியும் தேவைபடுகிறது என்ற கேள்விக்கு யார் விடை சொல்வது? </div></div><div></div><div><div><br />
அமெரிக்காவின் இந்த தீர்மானம் வெற்றிபெற்று உலக நாடுகளின் பிடியில் இலங்கை பதுங்கி அடங்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். அதைத் தவிர நம்மால் செய்ய இயல்வது இப்போதைக்கு எதுவும் இல்லை. அந்த காலம் எப்போதோ தாண்டி போய்விட்டது.<br />
இந்திய வரைபடத்தில் இன்னும் இலங்கையை ஒட்டி வைத்திருப்பதற்கான காரணம் இனி அர்த்தமற்றது.<br />
<br />
மொழி புரியாத, இனத்தால் ,நிறத்தால் வேறுபட்ட நாடுகளுக்கு புரிந்த வலி, கேட்ட கூக்குரல், தெரிந்த நியாயம் , வெகு அருகில் கரை தாண்டி வசிக்கும் நமக்கு இன்னும் உரைக்காததற்கு <br />
காரணம் : அரசியல் பாஷையில் சொன்னால் 'அஹிம்சை' , வேறு எந்த பாஷையில் சொன்னாலும் - 'சுயநலம்'</div><div></div></div><div><div><br />
மற்றபடி, இங்கு குறை ஒருத்தரிடம் மட்டும் அல்ல.ஒரு கட்சியிடம் மட்டும் அல்ல. </div><div>இது பொது அவமானம். வரலாற்றுப் பக்கங்களில் இது எப்படி பதியுமோ , அதை தலை குனிந்து ஏற்றுகொள்ள தயாராய் இருப்போம். </div></div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-39530934592478700582012-03-09T04:54:00.001+05:302012-03-09T22:30:42.050+05:30தேசிய விருதுகள்: வாகை சூடிய தமிழ்த்திரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div><div>மெகா பட்ஜெட் ஆடம்பர செலவுகள் இல்லை. படத்தின் அரை வாசி செலவை சம்பளமாக கேட்கும் நட்சத்திர நாயகர்கள் இல்லை. பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகள் இல்லை. கவர்ச்சியான கதாநாயகி இல்லை. முக்கியமாக ,சேட்டிலைட் டிவிகளில் <span id="6_TRN_13">நிமிடத்துக்கு </span>ஒரு முறை வரும் விளம்பரம் இல்லை. </div><div></div><div><br />
இப்படி எதுவுமே இல்லாமல் ஐந்து தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறது தமிழ் திரையுலகம்.<br />
<br />
</div><div></div><div>சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் : அழகர்சாமியின் குதிரை </div><div><div>சிறந்த தமிழ் திரைப்படம் : வாகை சூட வா</div></div><div>சிறந்த துணை நடிகர் : அப்புக்குட்டி (அழகர்சாமியின் குதிரை )</div><div><div>சிறந்த புதுமுக இயக்குனர் : தியாகராஜன் குமாரராஜா (ஆரண்ய காண்டம் )</div></div><div>சிறந்த படத்தொகுப்பாளர் : பிரவீன் கே .எல் (ஆரண்ய காண்டம் )</div><div></div><div><br />
சாதிக்க திறமை மட்டுமே போதும் என்பது இன்னொரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. மேற்கூறிய எல்லா படங்களுமே வசூலில் அடி வாங்கிய படங்களே. </div><div>திரையிட சரியான அரங்குகளும் நாட்களும் கிடைக்காமல் , கமர்சியல் படங்களின் வரவுகளுக்கு இடையே இருந்த மிக குறுகிய காலகட்டத்தில் திரையரங்குகளை சந்தித்தவை.ஆனால் அரங்குகளை நிரப்பவில்லை. காரணம் - படிக்க பதிவின் முதல் பத்தி. </div><div></div><div><br />
இப்போதைய காலகட்டத்தில் பலகாரம் சுவையாய் தரமாய் இருப்பதை விட அதை பார்ப்பதற்கு அழகாக wrap செய்து மக்களை வாங்க வைக்கும் உத்தியே வெற்றி பெறுகிறது.ஆனால் வெற்றி என்பது வேறு. அங்கிகாரம் என்பது வேறு. இரண்டாவதற்கு , கடின உழைப்பையும்,திறமையையும் தவிர எந்த மேற்பூச்சு வேலையும் தேவை இல்லை. ஆதாரம் - இந்த ஐந்து விருதுகள்.</div><div></div><div>திரையுலகின் பல விதிகளை உடைத்திருக்கின்றன மேற்கூறிய படங்கள்.<br />
<br />
</div><div></div><div><strong>ஆரண்ய காண்டம் :</strong></div><div><br />
கதையும் அதன் களமும் முடிவான உடனே , <span id="6_TRN_2m"><span id="6_TRN_2o">தயாரிப்பாளருக்கு </span></span>புரிந்திருக்கும் - கல்லாவை நிரப்ப தேவைப்படும் தாய்க்குலங்கள் ஆதரவு இந்த படத்திற்கு சைபர் என்று. உபயம் - படத்தில் தவிர்க்க முடியாத வசனங்கள்.ஆனாலும் முட்டி மோதி படத்தை வெளியிட்ட சரணுக்கு வாழ்த்துக்கள்.</div><div><br />
மீதி வர வேண்டிய சொற்ப கூட்டத்தையும் சாதாரண தமிழ் ரசிகனுக்கு புரியாத தரமான போஸ்டரின் ஆங்கில தாக்கத்தால் இழந்தது இந்த படம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGLLwAkkkS7NZkNcoV8C_-rJlB9RPTmLkYdODZxWadsljxWRa1stO1-h_jPNy47I9DCNnc8wQD21-ncZK0Y50vXI_BvXmyYSYb0germOErnJv8yRbD8IuJO31Bl20oFauPcj2qtwmVu6lQ/s1600/419608_323825440988146_231943803509644_786707_2057440778_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGLLwAkkkS7NZkNcoV8C_-rJlB9RPTmLkYdODZxWadsljxWRa1stO1-h_jPNy47I9DCNnc8wQD21-ncZK0Y50vXI_BvXmyYSYb0germOErnJv8yRbD8IuJO31Bl20oFauPcj2qtwmVu6lQ/s1600/419608_323825440988146_231943803509644_786707_2057440778_n.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div></div><div>படம் வெளிவந்து ஓடி முடித்த நான்கைந்து நாட்கள் தாண்டியே இது ஒரு தமிழ் படம் என்று பெரும்பானவர்களுக்கு புரிந்தது. </div><div> ஆனாலும் இயக்குனரும் , தொகுப்பாளரும் படத்தின் நாயகர்களாய் மிளிர்ந்தது சத்தியம். </div>படத்தின் வேகத்தில் பிரவீனின் உழைப்பு நன்றாக தெரிந்தது. </div><div></div><div><div>ஆரண்ய காண்டம் , கேங்ஸ்டர் படங்களின் புது கோணத்தை , வேறு பாணியில் சொல்லும் விதத்தை அறிமுகப்படுத்தியது.<br />
<br />
வசனங்களின் கூர்மையையும் , திருப்பங்களையும் நம்பிய இந்த படம் தமிழ் திரை சரித்திரத்தில் ஒரு மைல்கல்.</div><div></div><div><br />
<strong>அழகர்சாமியின் குதிரை:</strong></div><div><br />
வெண்ணிலா கபடிகுழு சுசீந்திரனின் இன்னொரு காவியம். ஒரு கதையை திரைப்படம் ஆக்கும்போது அந்த மாற்றத்திற்கு தேவையான அனைத்தையும் படத்தில் உபயோகித்த விதத்திற்கு பரிசு கிடைத்திருக்கிறது. <br />
அப்புக்குட்டி , அழகர்சாமி பாத்திரத்தின் கனகச்சிதமான நல்ல தேர்வு. இளையராஜா இசை , காட்சிகளில் தெறித்த உணர்வுகளுக்கு மேலும் அழுத்தம் கொடுத்திருக்கிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguPcx9PNTI0ETKpTp3MLM3il3H9-WzSK6Ik1tL5fWXUikLD6PAC54y_bUR9WAzY0LQ2sjiJnLSB4lcyYax9XFvoJnuJT48GTIngYzZ-wqG3DQW5YTlHNVFny1Nglp3reJxW63Aese6Tana/s1600/419608_323825440988146_231943803509644_786707_2057440778_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguPcx9PNTI0ETKpTp3MLM3il3H9-WzSK6Ik1tL5fWXUikLD6PAC54y_bUR9WAzY0LQ2sjiJnLSB4lcyYax9XFvoJnuJT48GTIngYzZ-wqG3DQW5YTlHNVFny1Nglp3reJxW63Aese6Tana/s320/419608_323825440988146_231943803509644_786707_2057440778_n.jpg" width="320px" /></a></div><br />
பொழுதுபோக்குக்கு தேவையான அனைத்து நல்ல அம்சமும் படத்தில் உண்டு.ஆனால் அவை யாவும் யதார்த்த கோட்டுக்குள் மட்டுமே நின்று சாதித்திருக்கிறதே தவிர , காதை அடைக்கும் குத்து பாட்டும் , கண்ணை உறுத்தும் சண்டை காட்சிகளும் அல்ல. கதை ,குதிரையை சுற்றிய நூலை நழுவவிடாமல் மற்ற <span id="6_TRN_97">துணை கதைகளை</span> இணைத்து சென்ற விதம் அருமை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhR-ny8Sts4uwKwX-l7JwQsGZ6l-qMWQA9ZGk5TzweOUVBK_bQoRK5_P9bRqfE5oANFaFMm-i6CBCF-f6wpCgrc8njQLor9vt6wQ_Idedy4yIoZpQCltGrNxf6liLuBgCS__Ka7KqaFv2cB/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhR-ny8Sts4uwKwX-l7JwQsGZ6l-qMWQA9ZGk5TzweOUVBK_bQoRK5_P9bRqfE5oANFaFMm-i6CBCF-f6wpCgrc8njQLor9vt6wQ_Idedy4yIoZpQCltGrNxf6liLuBgCS__Ka7KqaFv2cB/s320/images.jpg" width="214px" /></a></div><br />
</div><div></div><div>ஒரு நடிகனுக்கு , நாயகனுக்கு தேவையான எந்த அடையாளமும் அப்புகுட்டிக்கு இல்லை. அதுவே இந்த வெற்றிக்கும் காரணம். அப்புகுட்டியின் இந்த வளர்ச்சி கண்டிப்பாக திரையுலகில் நுழைய நினைக்கும் எந்த சாமானியனுக்கும் ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.<br />
<br />
</div><div></div><div>சுசீந்திரன் ,தமிழுக்கு இன்னொரு பாரதிராஜாவாக வர தகுதியான இயக்குனர். அவசரப்பட்டு 'ராஜபாட்டையில்' பயணிக்காமல் நிதானமாய் சென்றால் வளர்ச்சி தொடரும்.<br />
<br />
</div><div></div><div><strong>வாகை சூட வா:</strong></div><div></div><div><br />
வசூலில் கடும் இழப்பு , நாயகன் விமல் , வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுக்க வைத்தது. நல்ல படங்களுக்கு மட்டுமே உண்டான சாப நிலை இது.</div><div><br />
பீரியட் படங்கள் வரிசையில் நல்ல கருத்தையும் முன்வைத்து வெளியான படம். வெயில் தகிக்கும் சூழலில் , கலகலப்பான கிராமிய பின்னணியுடன் அழகான காதலையும் சேர்த்து கொடுத்த படம். கிப்ரானின் இசை புது மாதிரியாய் கிறங்கடிக்க வைத்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXKEI_d4kU9L8E6xu91v8tOuBvKruvYUae_qJ4FkisXa0KHrWTGTc36feL7csC2ncsB_h9iSKH3TtCGD22s9dby7VHog8lZw4567_bISO6vofchd_qdwEEF0ra6P7EYvFq8JPwpeuma4VZ/s1600/images+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXKEI_d4kU9L8E6xu91v8tOuBvKruvYUae_qJ4FkisXa0KHrWTGTc36feL7csC2ncsB_h9iSKH3TtCGD22s9dby7VHog8lZw4567_bISO6vofchd_qdwEEF0ra6P7EYvFq8JPwpeuma4VZ/s1600/images+%25281%2529.jpg" /></a></div><br />
விமலின் அப்பாவித்தனமான நடிப்பும் , <span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 31px; text-align: -webkit-auto;">இனியா</span>வின் வாயாடித்தனம் கலந்த துடிப்பும் , ஏனைய நடிகர்களின் ஆரவாரமில்லாத பங்களிப்பும் , படத்தின் தரத்தை உயர்த்தியது. சிறந்த படங்களில் இந்த படத்துக்கு முதலிடம் கிடைத்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.வெகு பொருத்தமான தேர்வு.<br />
<br />
-------------------------------------<br />
<br />
இந்த படங்கள் வெளியாகி , மக்களின் மவுத்டாக் மூலம் ' நல்ல படம் , பார்க்கலாம்' என்று கூட்டம் தயாரவதற்குள், திரையரங்குகளில் இருந்து காணாமல் போக நேர்ந்தது. இது போன்ற நல்ல முயற்சிகளை 'ஆவண படம்' அல்லது 'அவார்டுக்கு மட்டும் தகுந்த படம் ' என்று ஒதுக்குகிற விபத்தும் எப்போதும் நேர்கிறது.<br />
<br />
ஆனால் இந்த மூன்று படங்களும் , ஆவணப்படம் போல வெறும் செய்தியை மட்டும் சொல்லாமல் அதை சுவாரஸ்யமாகவும் . நகைச்சுவையுடனும் <span id="6_TRN_ff">சொல்லி பார்ப்பவரை சிரிக்க வைத்திருந்தாலும் ,</span>தயாரிப்பாளர்களை அழ வைத்தவை என்பது உண்மை.<br />
<br />
ஒரு பெரிய நடிகனின் பட பட்ஜெட்டில் ,இது போன்ற பத்து படங்கள் செய்து விடலாம் என்பது நிதர்சனம். <br />
<br />
ஒரு பக்கம் , நல்ல படங்களை கொடுக்க தயாரிப்பாளர்கள் இருக்க வேண்டும். அப்படி மிக கடினப்பட்டு அவர்கள் கொடுக்கும் படத்தை வரவேற்று அதை காப்பாற்றும் ரசிகர்கள் இருக்க வேண்டும். இரண்டும் இல்லை என்றால் நல்ல கதை சொல்லி இயக்குனர்கள் காணாமல் போய் , ஹீரோயிசத்தில் கதையை பலி கொடுக்கும் இயக்குனர்கள் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்.<br />
<br />
தொடரட்டும் இந்த அங்கீகாரங்கள்.</div><div> </div></div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-61656194416338501172012-03-01T06:15:00.000+05:302012-03-01T06:15:23.196+05:30பாப்கார்ன் பாக்கெட் - 20120301<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div><span style="color: #38761d;">//டிஸ்கி : வேலை மாற்றம். புது ஊர் , புது இடம் , புது மக்கள் , வந்த இடத்துல 'நான் நல்லவன்'ன்னு மறுபடியும் எல்லாரையும் ஏமாத்த வேண்டிய கட்டாயம் - இதெல்லாம் சேர்ந்து மூணு மாசம் பதிவு பக்கம் தலைவைக்க விடாம பண்ணிடுச்சு. என் நல்ல நேரம் , உங்க கெட்ட நேரம் - மறுபடியும் வந்துட்டேன். //</span></div><div>-------------------------------------------------------<br />
</div><div><a href="http://www.abimanyuonline.blogspot.com/2011/03/blog-post.html">சுஜாதா</a> மறைந்து சரியாக நான்கு வருடங்கள் ஓடி விட்டன. இன்னும் எனக்கு அவர் இழப்பு உறைக்கவில்லை. ஒரு படைப்பாளிக்கு இதை விட பெரிய வெற்றி எதுவும் கிடையாது. இப்போதும் சக்கைபோடு போட்டு விறபனையில் முன்னணியில் இருக்கிறது அவர் படைப்புகள். ஆதாரம் - இந்த வருட புத்தக கண்காட்சி. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2jjY3pCwbpzvP0i19d-wRF56O7ndnij6j_nn3X4fqt7I477rGCqfzNkgBz-wt6strUkZplnDI-JNo93Fu_YaOzSx_6Ldcxy0FEeBWzF4rzdxSX_6QmflsYC162GbTyqK6KthiFywOKYst/s1600/sujatha.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2jjY3pCwbpzvP0i19d-wRF56O7ndnij6j_nn3X4fqt7I477rGCqfzNkgBz-wt6strUkZplnDI-JNo93Fu_YaOzSx_6Ldcxy0FEeBWzF4rzdxSX_6QmflsYC162GbTyqK6KthiFywOKYst/s320/sujatha.jpg" width="252px" /></a></div><br />
பொழுதுபோக்கு படைப்புகளில் மட்டும் சிக்கியிருந்த வாசக வட்டத்தை , சிந்திக்க வைக்கும் படைப்புகளின் ரசிகர்களாக மாற்றிய பெருமை சுஜாதாவுக்கு மட்டுமே உண்டு.<br />
விஷயங்களை அறிவிக்கும் புத்தகமாக இருந்தால் , அது மொந்தை மொந்தையாக , பெரிய பெரிய பாராவாக , படிக்க ஆரம்பித்ததும் தூக்கம் வரவைக்கும் வஸ்துவாகவே இருக்கும் என்று நினைத்திருந்தவர்களுக்கு , ஒரு படம் பார்ப்பதை விட , சுவாரஸ்யமாக விஷயங்களை தர முடியும் என்று உணர்த்தியவர்.<br />
<br />
எந்த துறையிலும் வல்லவர்கள் எவ்வளவோ பேர் வரலாம்;போகலாம். ஒரு சிலரே அந்த துறையின் வண்ணத்தையும் , வடிவத்தையும் மாற்றி செல்வார்கள். எழுத்துக்கும் ,சினிமாவுக்கும் சுஜாதா அத்தகையவர்.<br />
<br />
ஒரு வேளை, மறு ஜென்மம் உண்மை என்றால் , எங்கு இருக்கிறதோ படு சூட்டிகையான , துறுதுறுப்பான ,மெல்லிய நக்கல் தெறிக்க பேசும் ,புதியவருக்கு அதிகப்ரசங்கியாய் தெரியும் எங்கள் சுஜாதா குழந்தை?<br />
----------------------------------------------------</div><div></div><div><br />
கேப்டன் பொங்கி எழுந்துட்டார். இனி தினம் தினம் தமிழ் மக்களுக்கு தலைவலி.திமுகவுக்கு சரவெடி.</div><div><br />
சட்டசபை நாகரீகம்-ன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசவேண்டாம். அதெல்லாம் அப்போவே எல்லாரும் ஒழுங்கா கடைபிடிச்சிருந்தா அதிமுக இன்னைக்கு வேற தலைமைல இருந்திருக்கும். துரைமுருகனுக்கு நன்றி. </div><div></div><div><br />
படிச்சவங்க . கொஞ்சம் பண்பானவங்க அரசியலுக்கு சரியாய் வராதுன்னு சொல்றது சரிதான்னு தேமுதிக எம்.எல்.ஏ அருண்பாண்டியன பாக்கும்போது நல்லா தெரியுது.. <br />
<br />
கட்சித்தலைவர் , தனக்கு முன்னாடி எதிர்க்கட்சிய பாத்து , உச்ச குரல்ல பேசிட்டு இருக்கும்போது , மத்தவங்க மாதிரி கை தட்டாம , கூட சேர்ந்து கத்தாம ,கைய கட்டி இருந்திட்டு , அப்புறமா வேற வழியில்லாம ,கூட சேர்ந்து எழுந்து நின்னு , என்ன செய்றதுன்னு தெரியாம ஒரு அப்பாவி சிரிப்போட முழிச்சிட்டு இருந்தத பார்க்கும்போது .. ஐயோ பாவம் ..உங்க ஃபீலிங் எங்களுக்கு புரியுது சார்..<br />
<br />
</div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3XetopanSWJA8m7Nx-zHrnlGpDSa3S93HSFLj9gFDw5UyuAkpfTWJZd7apNTto55_Fp9SxXJp7aFxu9DklV-VlwYlls7G47LP51S4L_k3M_N3mxgj52y6m5_BLF0WEUuKn3MTaCHh_qCB/s1600/vijayakanth-dm1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="248px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3XetopanSWJA8m7Nx-zHrnlGpDSa3S93HSFLj9gFDw5UyuAkpfTWJZd7apNTto55_Fp9SxXJp7aFxu9DklV-VlwYlls7G47LP51S4L_k3M_N3mxgj52y6m5_BLF0WEUuKn3MTaCHh_qCB/s320/vijayakanth-dm1.jpg" width="320px" /></a></div></div><div><br />
இது தேமுதிகவுக்கு பொன்னான காலம்.ஒரே அணியில ரெண்டு பெரிய தலைகளும் இருந்தா ஒருத்தர் வளர முடியாது. காங்கிரஸ்ல இருந்து பெரியாரும் , பெரியார்கிட்ட இருந்து அண்ணாவும் , கலைஞர்கிட்ட இருந்து எம்ஜீஆரும் பிரிந்த பின்னாடிதான் மக்களுக்கு அவங்க மேல கவனமும் , சிதறாத அடையாளமும் வேகமா கெடைக்க ஆரம்பிச்சுது. எல்லாரும் எதிர்பார்த்தபடிதான் நடக்குது..அதுதான் மக்களுக்கு நல்லது.. </div><div><br />
2016 , முன்னாடி சொன்னமாதிரியே அம்மா-கேப்டன் நேருக்கு நேர்தான். </div><div>-------------------------------------------------</div><div><div><br />
வீரப்பன் சுடபட்டபின் வெள்ளதுரைக்கு கிடைத்த புகழுக்கு பிறகு , என்கவுண்டர் செய்வது ஒரு ஹீரோயிசமாக உருப்பெற்று வருகிறது. போன வருடம் கோவை , இந்த வருடம் சென்னையில் ஐவர் கொலை என நீண்டுகொண்டே போகிறது என்கவுண்டர் லிஸ்ட்.<br />
<br />
அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் அட்டகாசம் குறையும் என்பதற்காக , எல்லாரும் இந்த செயல்களை ஆதரிக்க வேண்டும் என்பது தேவை அல்ல.</div><div></div><div>வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டிருந்ததாக சொல்லப்படும் ஐவரும் , எந்த வகையில் குற்றவாளிகள் என்று ஊர்ஜிதபடுத்தப்பட்டனர் என்பது இது வரை விளங்கவில்லை. <br />
<br />
இங்கு காவல்துறை தவறு செய்ததா இல்லையா என்பதைவிட அதிக கவனம் கொள்ள வேண்டியது , இந்த செயலுக்கு மக்களின் உணர்ச்சிப்பெருக்கான ஆதரவுதான். எந்த ஒரு அடிப்படை தகவல்களும் இல்லாமல் அவர்கள் குற்றவாளிகள் என்று முடிவு செய்து , கொலையை வரவேற்பது முட்டாள்தனம். <br />
<br />
அதே நேரத்தில் , காவல்துறை பக்கம் உயிர்சேதம் நடந்திருந்தால் என்ன சொல்வீர்கள் என்று கேட்டால் , ஏற்றுக்கொள்கிறேன் - என்னிடம் பதில் இல்லை. உண்மையை ,விசாரணையும் , மனித உரிமை அமைப்புகளும் பார்த்துக்கொள்ளட்டும். மக்களின் எண்ணபோக்குதான் இங்கு பிரதானமே தவிர , விவாதம் அல்ல. <br />
<br />
</div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiATcIIHlF1yRm0mw7zLCbubCaoXlWX-Wh_GC5nNHAKTMvurIhZe0re0NzsM3IsLV_joix6xppW-Q8shbVXjpFa_qHsKATcZCjnPgt3yOvCWVklw-crxADAwjIBkEI3M4faRlQodJ4Kbl2u/s1600/chennai_encounter4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiATcIIHlF1yRm0mw7zLCbubCaoXlWX-Wh_GC5nNHAKTMvurIhZe0re0NzsM3IsLV_joix6xppW-Q8shbVXjpFa_qHsKATcZCjnPgt3yOvCWVklw-crxADAwjIBkEI3M4faRlQodJ4Kbl2u/s320/chennai_encounter4.jpg" width="320px" /></a></div></div><div><br />
இதே எண்ணம் வளர்ந்தால் , நாளை குற்றம் செய்தவனை சவுக்கடி கொடுத்து நடுத்தெருவில் சாகடிக்கும் மனிதர்களையும் வரவேற்கும் மூர்க்கத்தனம் வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. ஈராக்கும் ,சவுதியும் இந்தியாவுக்குள் வர வேண்டாமே..</div><div>-------------------------------------------------------------</div><div><div><br />
'தோனி' மேனியா மெல்ல சரிகிறது. இது எப்போதும் நடப்பதுதான். முன்பு கங்குலி. இப்போது தோனி. 'Captain of the Ship' விமர்சனத்திற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டிய கட்டாயம் உண்டு.இவர் மேல் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம்.<br />
</div><div></div><div><br />
இங்கிலாந்துக்கு பிறகு , ஆஸ்திரேலியாவிடமும் மரண அடி வாங்கிக் கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு , நின்று ஆட கூடிய ஒரு பேட்ஸ்மேன் கண்டிப்பாக தேவை.<br />
சேவாக் 219 எடுத்த சிறந்த ஆட்டக்காரர்தான் என்றாலும் , ஆட்டத்தின் நிலைமையை கவனிக்காமல், பொறுப்பிலாமல் விக்கட்டை கொடுக்கும் பழக்கத்தை விடும் வரை இந்திய அணியை 'Consistant Team' என்று சொல்ல முடியாது.<br />
<br />
அவர் மட்டுமே , ஆட்டம் தொடங்கியவுடன் , பார்முக்கு வந்து அடிக்கும் தன்மை படைத்தவர். சச்சினோ நேரம் எடுத்து பின் நின்று ஆடுவார். ஆனால் துரத்ரிஷ்டம் , சமீப காலங்களில், அவர் ஆட்டத்தை தன் கையில் கொண்டு வரும் முன்பே வெளியேறி விடுகிறார். ஆக மிக முக்கிய பொறுப்பு சேவாக் கையில். உணர்ந்தால் இந்திய ஜெயிக்குமா என்னமோ , கவுரவமாக தோற்கும். திருந்துவாரா?<br />
<br />
</div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXjmaKlplSFrqqcec8RRNKJ-uSM7TNDbACWrgQhI3fNuH4naSfE2lsCp0AF6-cTtNeCRmIzOioMm49KniBbhgHdFTbfpeqAqSxAH-OOK_4FpdbWB2TiRFte4ZvCyNUKRTzdeIHc_xj1spE/s1600/virender-sehwag.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="263px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXjmaKlplSFrqqcec8RRNKJ-uSM7TNDbACWrgQhI3fNuH4naSfE2lsCp0AF6-cTtNeCRmIzOioMm49KniBbhgHdFTbfpeqAqSxAH-OOK_4FpdbWB2TiRFte4ZvCyNUKRTzdeIHc_xj1spE/s320/virender-sehwag.jpg" width="320px" /></a></div></div><div></div><div><br />
தன்னை சாம்பியன் என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் , இந்த வருடம் இந்திய அணிக்கு ஐபிஎல் தேவையா? எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் ஒன்றும் செய்ய முடியாது ..Money Money Money..<br />
<br />
</div><div></div><div><div>கிரிக்கெட் நிலைமை இப்படி இருக்க , ஹாக்கியில் , இந்தியாவின் கவுரவம் காப்பாற்றப்பட்டு வருகிறது. வழக்கம் போல ,அவ்வளவாக கவனிக்கபடாமல் அலட்சியபடுத்தப்பட்டும் வருகிறது. ஓரவஞ்சனை எப்போது ஒழியுமோ?</div><div>--------------------------------------------------------</div><div><br />
எல்லாரும் வெள்ளித்திரையில் வெற்றிபெற , முட்டி மோதி புதுமை செய்து கொண்டிருக்க , கால சக்கரத்தை பின்னால் ஓட்டி ஐந்து ஆஸ்கார்களை அள்ளியிருக்கிறது 'The Artist' .<br />
<br />
பேசும் படங்கள் புதிதாய் வரத்தொடங்கிய தருணத்தில் நடக்கும் கதையாக , அதன் பின்புலத்தை உணர்ந்து தெளிவாக கையாளபட்டிருக்கிறது தி ஆர்டிஸ்ட்.ஒரு முன்னணி நடிகனுக்கும் , முன்னேறி வந்துகொண்டிருக்கும் ஒரு நடிகைக்கும் இடையே ஏற்படும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை. வசனங்கள் எங்கும் இல்லை - இறுதி காட்சியை தவிர. <br />
<br />
முழுக்க கருப்பு வெள்ளை திரைப்படம்.சிறந்த நடிகர்,இயக்குனர்,திரைப்படம் உட்பட ஐந்து விருதுகள் இந்த படத்திற்கு மட்டுமே. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPeaivc6IUi3ru9btz2LeuIdZP6QnB7iaIlosObIKczrDHcKBomTSjIPLpoyX7PIi-ky3_2gQi5NxzTBNDXzkKUdP1LSpRB1gjUbU-Jbugc1Jd1Rb-Ntrqi_vkglcAovp-6b0WJDMkl438/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPeaivc6IUi3ru9btz2LeuIdZP6QnB7iaIlosObIKczrDHcKBomTSjIPLpoyX7PIi-ky3_2gQi5NxzTBNDXzkKUdP1LSpRB1gjUbU-Jbugc1Jd1Rb-Ntrqi_vkglcAovp-6b0WJDMkl438/s1600/images.jpg" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div style="text-align: left;">படம் முழுக்க ஓடும் மெல்லிய நகைச்சுவையும் , வசனம் இல்லாததால் , உணர்ச்சிகளை வெளிக்காட்ட நடிகர்களின் கண்களும் ,முக பாவனைகளும் கொடுக்கும் இனிய அனுபவத்தையும் , காட்சிகளை அதிக மடங்கு அழகாக்க , சிறந்த ஆர்ப்பாட்டம் இல்லாத இசையும் , நம்மை கட்டிபோட்டு விடுகிறது.<br />
</div><div style="text-align: left;">இந்த படம் விருதுகளை வென்றது ஆச்சர்யம் இல்லை.வாழ்த்துக்கள்.</div><div style="text-align: left;">--------------------------------------------------------</div><br />
<div> சுசீலா கானமழை. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை. சௌகார் ஜானகியின் நடிப்பு. மூன்றும் சேர்த்து மயக்க வைக்கும் மந்திரம் இந்த பாட்டுக்கு உண்டு. </div><div>காட்சியில் எல்லாரும் புன்னகைத்துக் கொண்டே இருப்பதும் , ஜானகி தன் வாழ்க்கையை நினைத்து கலங்குவதும், அதை வெளிக்காட்டாது பாடுவதும் அற்புதம் என்றால் அதை விட அற்புதம் கண்ணை மூடி இந்த பாடலை கேட்டால் தானாக வரும் கண்ணீர். இசையின் வரைமுறை இல்லாத சக்திக்கு இந்த பாட்டு ஓர் உதாரணம். </div><div> </div><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/Rw8rpXctl78?feature=player_embedded' frameborder='0'></iframe></div><br />
காலம் தாண்டி நிற்கும் இனிய படைப்பு.<br />
---------------------------------------------</div></div></div></div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-28168501869022768542011-11-12T06:25:00.000+05:302011-11-12T06:25:29.484+05:30அண்ணா நாமம் வாழ்க..அண்ணா நூலகம்???<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div><br />
மிக அருகில் இது <span id="6_TRN_y">நடக்கலாம்</span>. தாராளமாக 'திமுக கால திட்டங்கள் ஒழிப்பு' என்ற புது இலாக்காவை அதிகாரபூர்வமாக உருவாக்கி அதை அம்மா தன் கட்டுபாட்டில் வைக்கக்கூடும். நல்லது. திமுக காலத்தில் உருப்படியில்லாத எந்த திட்டத்தையும் ஒழிக்க எல்லார் ஆதரவும் அம்மாவுக்கு உண்டு. ஆனால் அண்ணா நூலக விஷயம் கண்டிப்பாக அதில் இல்லை. </div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiclaCUxmqjUTicV3bYbwR-J7DfFqzPURin6SN8sroB6h-g40ig6Qcx6Cn2g31J4fZgaquG8e9IuXRG0RddGcfDUy4mvYUkDYZmyP81eTFw8MYjN7yd0arU9dV8xvzN-MMBaA6PTfY9ml00/s1600/Anna_library_161470f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" nda="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiclaCUxmqjUTicV3bYbwR-J7DfFqzPURin6SN8sroB6h-g40ig6Qcx6Cn2g31J4fZgaquG8e9IuXRG0RddGcfDUy4mvYUkDYZmyP81eTFw8MYjN7yd0arU9dV8xvzN-MMBaA6PTfY9ml00/s320/Anna_library_161470f.jpg" width="320" /></a></div><br />
<div>புதிய சட்டபேரவையை உப்பு பெறாத காரணம் சொல்லி அதை மருத்துவமனை ஆக்கியபோது , அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் அது யாரையும் பாதிக்கபோவதில்லை. யார் பதவியில் இருந்தாலும் அவர் ஒழுங்காக ஆட்சி செய்தால் அதை கொடநாட்டில் செய்தால் என்ன ? கோபாலபுரத்தில் செய்தால் என்ன? நல்லாட்சிதான் முக்கியம். எனவே அது விவாததிற்கு தேவை இல்லாதது. <br />
<div> </div><div>ஊழல் செய்த முன்னாள் மந்திரிகளை கைது செய்வதும் , மேலவை வேண்டாம் என்று நிராகரித்ததும் உத்தமமே. </div>ஆனால் அண்ணா நூலகம் அப்படி இல்லை. அது அங்குதான் இருக்க வேண்டும்.காரணம் அதன் பயன்பாடும் பெருமையும்.<br />
<br />
<div>சுமார் இருநூறு கோடியில் செலவு செய்து உருவாக்கிய நூலகம். மொத்தம் ஒன்பது தளங்களில் நூலகத்தின் ஒவ்வொரு பாகத்திலும் கொட்டிகிடக்கும் புத்தகங்கள்.ஏறக்குறைய பனிரெண்டு லட்சம் புத்தகங்கள் அடங்கிய நூலகம். ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும் எல்லா வகையான நூல்களும் வகைபடுத்தி அடுக்கிவைக்கப்பட்டு ,அவைகளை படிக்க தனியாக படிப்பறைகளும் கொண்ட நூலகம். பல்வேறு புத்தகங்களுடன் , ஆடியோ - வீடியோ மூலம் தகவல்களை அறிந்து கொள்ள வசதியும் ,புகைப்பட நூல்களும் தனியாக உள்ளன. கூடவே உணவுகூடமும். ஆசியாவின் இரண்டாவது பெரிய <span id="6_TRN_37"><span id="6_TRN_38">நூலகமாக </span></span>கருதப்படுவது.</div><div> </div><div>இதைதான் குறிவைத்திருக்கிறது தற்போதைய அரசு. சொல்லும் காரணம் - கூட்டம் வரவில்லை என்பது. உண்மையான காரணம் உலகறிந்தது.</div><div> </div><div>புதிய சட்டசபையை மருத்தவமனையாக்குவோம் என்று அறிவித்தபோது மக்கள் சந்தோசப்பட காரணம் 'இவ்வளவு செலவு செய்து கட்டிய கட்டிடம் அப்படியாவது பயன்படட்டுமே ' என்றுதானே தவிர 'இதை போல எந்த கட்டிடத்தையும் மருத்துவமனை ஆக்கினால் நல்லது ' என்றல்ல. </div><div> </div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjG4RDDIzZZyOIkTyK6CHTdQ2onf74QTEPnFF0qI3dSzOpr69oNoD1_1vP-8EaJlCckkkn_UJHUqMjQSQE1MxH2o1GW_3m-pFrt-Zi0v5-RA42HHTKtAsTKlKLt7uScbGR7W7m16OeCp90J/s1600/photo0110.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" nda="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjG4RDDIzZZyOIkTyK6CHTdQ2onf74QTEPnFF0qI3dSzOpr69oNoD1_1vP-8EaJlCckkkn_UJHUqMjQSQE1MxH2o1GW_3m-pFrt-Zi0v5-RA42HHTKtAsTKlKLt7uScbGR7W7m16OeCp90J/s320/photo0110.jpg" width="320" /></a></div><div> </div><div>இப்போது நூலகமும் மருத்துவமனை ஆக்கப்படும் என்பது </div><div>அறிவிப்பு.மருத்துவனைகள் மிக அவசியம்தான். அதை புதிதாக உருவாக்கி கொடுங்கள். வணங்குகிறோம்.வாழ்த்துகிறோம்.ஆனால் நூலகத்தை மாற்றி அல்ல. </div><div> </div><div>பெரிய கோவிலை சுற்றிபார்க்க வருபவர்களுக்கு கால் வலிக்கும்தான். எங்கேயாவது அமர ஏதாவது இடம் கிடைக்குமா என மனம் நினைக்கும்தான்.அதற்காக அழகான சிற்பத்தை உடைத்து , அதை கீழே போட்டு , இதில் அமருங்கள் என்று பெருமிதமாக சொல்லுவதை எந்த கணக்கில் சேர்ப்பது ? கண்டிப்பாக இதற்கு நன்றியோ பாரட்டுதலோ கிடைக்காது. </div><div> </div><div>தவிர நூலகம் கட்டும்போதே ,இதன் பயன் புத்தகங்களை அடுக்க, வாசிக்க என திட்டமிட்டு ஒரு அமைப்பாய் இருக்கும்.அதை மருத்துவமனை ஆக்கும்போது , முழுதும் தலைகீழாக மாற்ற வேண்டும். அதன் செலவு கண்டிப்பாக புது மருத்துவமனை கட்டுவதை விட அதிகம் ஆகும். இது வேண்டாமே. <div>இருக்கும் அறிவை <span id="6_TRN_59">அழித்து</span> உடல்நலத்தை வாங்கும் முட்டாள்தனம் போல ஆகிவிடும் இதன் பயன்.</div></div><div> </div><div>இப்படி பெரிய பணத்தை போட்டு அதிநவீன மருத்துவமனை ஒன்றை பெருநகரத்தின் மத்தியில் கட்டுவதை விட , குறைந்தது இருபது மைல் தொலைவில் இருக்கும் மருத்துவமனையை நம்பியிருக்கும் கிராமங்களுக்கு சிறு சிறு மருத்துவமனைகளாக அவர்கள் கிராமத்திலேயே கட்டி உதவலாம். காலகாலம் அவர்கள் ஓட்டு உங்களுக்குதான்.சத்தியம். </div><div> </div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXqAiKWtrmRDUx7o_0uYcxx5jz8_Cw6ZxHN2yMmdJn_5tjuUe7kKbmRIviNlKxFSa69XjUL3SCt6W6teJscExW3EV-m6JXZUe-zMFe3KZmEz4UYkrg2pBSjmQzpbArKWBMVlakFAFIWoH6/s1600/5150193431_1ecaee3ec0.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="122" nda="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXqAiKWtrmRDUx7o_0uYcxx5jz8_Cw6ZxHN2yMmdJn_5tjuUe7kKbmRIviNlKxFSa69XjUL3SCt6W6teJscExW3EV-m6JXZUe-zMFe3KZmEz4UYkrg2pBSjmQzpbArKWBMVlakFAFIWoH6/s320/5150193431_1ecaee3ec0.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div>நூலகம் சரியாக பயன்படுத்தபடுவதில்லை என்ற அக்கறைக்கு நன்றி. அதை பிரபலமாக்க அரசு பலவழிகளில் முயற்சிக்கலாம். சென்னை பள்ளிகள் , கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நூல்களின் பலன்களை எடுத்துரைத்து , அவர்களை வர செய்யலாம். கண்டிப்பாக புரிந்து வருவார்கள். குமுதம் , கல்கண்டு படித்து புத்தி தடுமாறிய 80 ,90 காலகட்ட மாணவர்கள் அல்ல இப்போது. 'புதிய தலைமுறை'யும் நாணயம் விகடனும் படித்து முன்னேற ஆர்வமுள்ளவர்கள் காலம் இது. </div><div> </div><div>பழி வாங்குவதுதான் முக்கியம் என்று நினைத்திருந்தால் 2006 -இல் கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்றதும் ஆயிரக்கணக்கான டாஸ்மாக் ஊழியர்கள் வேலை இழந்திருப்பார்கள். அதற்கு நன்றிக்கடனாக நூலகமும் , கண்ணகி சிலையும் , கன்னியாகுமரி வள்ளுவர் சிலையும் , சிவாஜி சிலையும் இனி பிழைத்து <span id="6_TRN_b0">போகட்டுமே </span>. நூலகம் தப்பினால் அந்த பெருந்தன்மைக்கு 2016ல் நன்றிகள் ஓட்டுகளாக அதிமுகவிற்கு கிடைக்கும். </div><div> </div><div>எம்ஜீஆர் ஆத்மா உங்களை கண்டிப்பாக வாழ்த்தும். </div><div>--------------------------------</div></div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-66020762123577269062011-11-08T08:17:00.000+05:302011-11-08T08:17:52.928+05:30பாப்கார்ன் பாக்கெட் - 20111108<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgx0IndiHhNunokWKvp4gzYEz2Cwp67YPfxzJsZ5dw88W7zjRWxz51HuxObIuq9HBLbBX0VPmDt08yReBMwWX44S7M99fMLXngvhtmk8Nq7xhWt4nq3FCNY2ZPnEhH3FzJ1cdFXa2zU-Cyu/s1600/imagyes.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" m$="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgx0IndiHhNunokWKvp4gzYEz2Cwp67YPfxzJsZ5dw88W7zjRWxz51HuxObIuq9HBLbBX0VPmDt08yReBMwWX44S7M99fMLXngvhtmk8Nq7xhWt4nq3FCNY2ZPnEhH3FzJ1cdFXa2zU-Cyu/s1600/imagyes.jpg" /></a><br />
<br />
ஐம்பத்தி எழு வயதை தொட்டிருக்கிறார் கலைஞானி. சச்சினின் கிரிக்கெட் சாதனைகளை போல , சினிமாவில் கமல் சரியாக செய்திருக்கிறார்.வயது ஏற ஏற புது முயற்சிகளை இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கும் சாதனையாளர். மக்கள் சலிக்கும் வரை மரத்தை சுற்றி சுற்றி பாடாமல் , மாற்றத்தை கொண்டு வந்து மக்களை மகிழ்விக்கும் கலைஞன். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyMMCLNVB7mwQCi3ICKlrBA6njh6p0nEQzQmJ2SXdlFVCnzDXs6TJQboqdvFvUxJKKJhgEsuHpmcm9oE5br68tr0TxGSJf-0EihN-VvArU2qilUXijW5rHKB_fIilmuGrHYiqHNFkRKN7V/s1600/kamal_hassan2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" ida="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyMMCLNVB7mwQCi3ICKlrBA6njh6p0nEQzQmJ2SXdlFVCnzDXs6TJQboqdvFvUxJKKJhgEsuHpmcm9oE5br68tr0TxGSJf-0EihN-VvArU2qilUXijW5rHKB_fIilmuGrHYiqHNFkRKN7V/s320/kamal_hassan2.jpg" width="320" /></a></div><br />
சிவாஜிக்கு வயதானதும் தமிழுலகம் அவரை சரியாக பயன்படுத்தவில்லை. தாவணி கனவுகளும் ,முதல் மரியாதையும் ,தேவர் மகனையும் தவிர சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் இல்லை. காரணம் திரையுலகம் அவர் மேல் வைத்திருந்த மரியாதையும் அதனால் ஏற்பட்ட தூரமும்தான். <br />
<br />
கமல் அந்த விஷயத்தில் மிக கவனம் கொள்ள வேண்டும். இளைய இயக்குனர்களோடு படம் செய்தால் அமிதாப்பின் செகண்ட் இன்னிங்க்ஸ் போல நல்ல வெற்றி கிடைக்கும். நல்ல வேளை இன்னும் கமலுக்கு முதல் இன்னிங்ஸே முடியவில்லை. அதையே இன்னும் பத்து வருடமாவது தொடர்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. <strike>கடவுள்</strike> இயற்கை அதற்கு ஆதரவு கொடுக்கட்டும். <br />
<br />
கமலின் மாஸ்டர்பீஸ்:<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/iYesV4sJ-C8?feature=player_embedded' frameborder='0'></iframe></div><br />
பிறந்த நாள் வாழ்த்துக்கள் உலகநாயகனே..<br />
<div></div><div>--------------------------------------</div><br />
ரசித்தது:<br />
<br />
<a ajaxify="https://www.facebook.com/photo.php?fbid=199934440077905&set=a.199934373411245.49751.100001840516094&type=1&ref=nf&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-a.akamaihd.net%2Fhphotos-ak-snc7%2F299242_199934440077905_100001840516094_489143_236614778_n.jpg&theater&size=649%2C448" class="uiPhotoThumb largePhoto" data-ft="{"type":41}" href="https://www.facebook.com/photo.php?fbid=199934440077905&set=a.199934373411245.49751.100001840516094&type=1&ref=nf" rel="theater" target="" title=""><img alt="" class="img" height="207" src="https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-snc7/s320x320/299242_199934440077905_100001840516094_489143_236614778_n.jpg" width="300" /></a><br />
<br />
<div class="fsm fwn fcg"><div class="uiAttachmentTitle" data-ft="{"type":11}"><span class="caption"></span></div></div><div class="fsm fwn fcg"><div class="uiAttachmentTitle" data-ft="{"type":11}">தங்கச்சி !!! டில்லில இருக்குற எல்லா கடையிலையும் கேட்டுட்டு வந்துட்டோம்.... வஞ்சர<span class="text_exposed_show">மீன் இருக்குன்றான், வாலமீன் இருக்குன்றான், நெய் மீன் இருக்குன்றான், நெத்திலி மீன் இருக்குன்றான், கென்டமீன் இருக்குன்றான், கெலுத்தி மீன் இருக்குன்றான் இவ்வளவு ஏன்ணே சுறா மீன் முதற்கொண்டு இருக்குன்றான்.... ஆனா நீ கேட்ட ஜாமீன் மட்டும் இல்லையாம்...</span><br />
</div><div class="text_exposed_root text_exposed" id="id_4ea648fd40b9b0a28642421"><span class="text_exposed_show">கடல்லயே இல்லையாம்... :-)</span></div><div class="text_exposed_root text_exposed"><span class="text_exposed_show">------------------------------------</span><br />
<br />
கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டிய செய்தி<br />
<br />
ஆதார் அடையாள அட்டை:<br />
<br />
இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ஆதார் அடையாள அட்டையை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.<br />
<br />
தபால் நிலையத்தில் உங்கள் அப்ளிகேஷனைப் பூ<span class="text_exposed_show">ர்த்தி செய்து, உங்கள் பத்து விரல் கை ரேகை பதிந்து, புகைப்படம் எடுத்த பிறகு உங்களுக்கு தற்காலிக ஐடி கொடுப்பார்கள். 30 - 60 நாட்களுக்குள் வீட்டுக்கு உங்களுக்கு ஒரிஜினல் கார்டு கிடைக்கும். உங்களுடைய கார்டு ஸ்டெட்டஸை ஆன்லைன் மூலம் உங்களிடம் இருக்கும் தற்காலிக ஐடி மூலம் தெரிந்து கொள்ளலாம். </span><br />
<br />
<span class="text_exposed_show">இதற்கு கட்டணம் ஒன்றும் கிடையாது. இந்த கார்டு மூலம் உங்கள் வங்கி கணக்கும் இணைக்கப்படும். இது தான் நமது நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு அடுத்த பெரிய ஐடி. இதை வைத்து நேபாலுக்கு கூட பாஸ்போர்ட் இல்லாமல் செல்லலாம். </span><br />
<br />
<span class="text_exposed_show">நவம்பர் 1-ம் தேதி முதல் மயிலாப்பூர், தியாகராய நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமைத் தபால் நிலையங்கள் மூலம் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்கி உள்ளது. நவம்பர் 21-ம் தேதி முதல் 31 மாவட்டங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்கவுள்ளது. கார்டு பெற அப்ளிகேஷனை <a href="http://uidai.gov.in/index.php?option=com_content&view=article&id=148&Itemid=41">இங்கு</a> டவுன்லோடு செய்யலாம்.</span><br />
அங்கே சென்று , மாநிலம் - தமிழ்நாடு-ஐ கிளிக்கவும்.<br />
-------------------------------<br />
<br />
'மாற்றம் என்பது மானுட தத்துவம்' என்ற கண்ணதாசன் வார்த்தை இந்த விஷயத்தில் பொய்த்து போகிறது. சில வழக்கங்கள் எப்போதும் மாறுவதில்லை.<br />
<br />
'திராவிட' கழகங்கள் மேடையில் கூவும் 'சுயமரியாதைதான் எங்கள் முதல் குறிக்கோள் ' என்பது சும்மா 'மைக் ஒன் டெஸ்டிங் ஓவர் ஓவர் ' போலத்தானா ?<br />
<div></div></div><div class="text_exposed_root text_exposed"><span class="text_exposed_show"></span><br />
<div class="mvm uiStreamAttachments clearfix fbMainStreamAttachment" data-ft="{"type":10}"><div><a ajaxify="https://www.facebook.com/photo.php?fbid=279153495440656&set=a.276986518990687.63072.100000380243039&type=1&ref=nf&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-a.akamaihd.net%2Fhphotos-ak-ash4%2F297467_279153495440656_100000380243039_850876_1845701413_n.jpg&theater&size=320%2C179" class="uiPhotoThumb largePhoto " data-ft="{"type":41}" href="https://www.facebook.com/photo.php?fbid=279153495440656&set=a.276986518990687.63072.100000380243039&type=1&ref=nf" rel="theater" title="எழுந்திரு! எழுந்திரு!!
அதான் தென்சென்னை MP ஆகியஆச்சே இன்னும் என்ன?
தமிழா இப்படியும் ஒருவாழ்க்கை தேவையா?????????????????????..............."><img alt="" class="img" height="222" src="https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/s320x320/297467_279153495440656_100000380243039_850876_1845701413_n.jpg" width="400" /></a><br />
<br />
------------------------------<br />
<div class="mts uiAttachmentDesc translationEligibleUserAttachmentMessage"><div class="text_exposed_root text_exposed" id="id_4eb3015eed2850447365792"><br />
<span class="text_exposed_show">'வாகை சுட வா' இரண்டாவது தடவையாக பார்த்தேன். காட்டுக்குள் ஒரு செங்கல் சூளையும், அதை சுற்றி ஒரு முப்பது குடிசையும் மட்டும் செட் போட்டு , அதில் மட்டுமே இரண்டு மணி நேரத்தை ஓட்டியிருந்தாலும் , இயக்குனர் வெற்றி பெற்று விட்டார் என்ற அறிவிப்பது , பார்ப்பவர் சலிப்படையாமல் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை சிரிப்பதிலும் , கை தட்டுவதிலும் தெரிந்து விடுகிறது.</span><br />
<br />
<span class="text_exposed_show"></span></div><div class="text_exposed_root text_exposed"><span class="text_exposed_show"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW7qkDMC_4_DzabM06kQntmkSb3PXATZ6ud5oxRLAI5lamqegVG76kw2LYCcXRlhJK1npnzC57OBxlKhAz2TMJ60InCcsbXbNsN031khQqdiMMYJlTAVEI0riTGMkorZvhFVITXpU3GoAU/s1600/Vaagai_Sooda_Vaa.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" ida="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW7qkDMC_4_DzabM06kQntmkSb3PXATZ6ud5oxRLAI5lamqegVG76kw2LYCcXRlhJK1npnzC57OBxlKhAz2TMJ60InCcsbXbNsN031khQqdiMMYJlTAVEI0riTGMkorZvhFVITXpU3GoAU/s320/Vaagai_Sooda_Vaa.jpg" width="265" /></a></div><br />
</span><span class="text_exposed_show">களவாணி கிளாசிக்கல் காமெடியாக கொடுத்து கல்லா கட்டியிருந்தாலும், போன ரூட்டிலேயே போகாமல் , நல்ல கருத்தை அறிவிக்கும் படமாக இரண்டாவது படத்தை கொடுத்திருக்கிறார் சற்குணம். </span><br />
<br />
<span class="text_exposed_show">விமல் நடிப்பு படத்துக்கு படம் மெருகேறுகிறது.இனியா இனிய நடிப்பு.பாடல்கள் ஏற்கனவே சொன்னது போல் எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரி - அட்டகாசம் கிப்ரான். </span><br />
<br />
<span class="text_exposed_show">சூழலின் வெப்பத்தை ,மக்களின் கடின வாழ்க்கையை காண்பிக்க படம் முழுக்க பயன்படுத்திய கேமரா டோன் மிக அருமை.பொருத்தம்.<br />
இது போன்ற முயற்சிகள் கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டும். </span><br />
<br />
<span class="text_exposed_show">ஹ்ம்ம். புது இயக்குனர்கள் பட்டையை கிளப்புகிறார்கள்.</span><br />
<span class="text_exposed_show">அனுபவ இயக்குனர்கள்தான் குட்டையை குழப்புகிறார்கள்.</span><br />
<span class="text_exposed_show"><br />
----------------------------------------------------</span><br />
<span class="text_exposed_show">உன்னிமேனனின் முதல் பாடல். பல வருடம் , இதை யேசுதாஸ்தான் பாடியிருக்கிறார் என்று நம்பியிருக்கிறேன்.<br />
உன்னிமேனன் குரலும் , கமலின் போலீஸ் கெட்டப்பில் மிதமான புன்னகை கலந்த காதலின் உணர்ச்சியும் , ரேவதியின் அழகும்... <br />
அற்புதம்.என் ஹிட் லிஸ்டில் எப்போதும் இருக்கும் பாடல். </span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/hqc4rsMBXzI?feature=player_embedded' frameborder='0'></iframe></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;">---------------------------------------</div></div></div></div></div></div></div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-61087803634272187122011-11-04T06:51:00.000+05:302011-11-04T06:51:14.410+05:30ஏழாம் அறிவு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div><span id="6_TRN_8">'தமிழர்</span> பண்பாடு சிறந்தது. அதன் சரித்திரம் மிக பன்மையானது. அதை மறந்துகொண்டிருக்கும் தலைமுறை அதை மீண்டும் போற்ற வேண்டும். அதன் பெருமையை காக்க வேண்டும்.' - இந்த மிக முக்கியமான கருத்தை உணர்த்தும் படம் ஏழாம் அறிவு. <br />
<br />
ஆனால் நாம் மறந்த இந்த கசப்பான உண்மையை உணர்த்த இனிப்பு தடவி தரும் விஷயத்தில் கோட்டை விட்டதால் படம் கசக்கிறது. ஆனால் ஆச்சர்யம் முக்கிய கதையான போதிதர்மன் கதை காட்சிகள் மட்டும் ரசிக்கத்தக்க வண்ணம் இருக்கிறது. <br />
<br />
சக்கரைப் பொங்கல் சுவையாய் சூடாக இருந்தாலும் , நைந்த இலையில் வாங்கியதால் ரசித்து சாப்பிட முடியாமல் அவசரகதியில் விழுங்க வேண்டிய நிர்பந்தம் போல இருக்கிறது படம். </div><div></div><div><br />
படங்கள் பெரும்பாலும் இருவகைகளில் அடங்கி விடும். ஆவணம் அல்லது கருத்தை மட்டும் க்ளாசிக்கலாக தரும் படம் , கமர்சியல் படம் . இரண்டும் தனித்தனியே இருக்கும் வரை பிரச்சனை இல்லை. ஆனால் இரண்டையும் சேர்த்து தரும்போது இயக்குனர் அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். <br />
<br />
காஞ்சிவரம்,பெரியார்,<span id="6_TRN_2u"><span id="6_TRN_2v">கல்லூரி போன்ற படங்கள் கிட்டத்தட்ட முதல் வகை. விஜய் , எஸ்.ஜே.சூர்யா ,சிம்பு,தரணி,பேரரசு படங்கள் இரண்டாம் வகை. </span></span></div><div><br />
<div>இந்த இரண்டையும் கலந்து தரும்போது மிக நுட்பமாக கையாள வேண்டிய படமாக இருக்கும். ஜென்டில்மேன் ,இந்தியன்,அந்நியன் போன்ற ஷங்கர் படங்களும், தற்போது வந்த வானம், எங்கேயும் எப்போதும் ( கவனிக்க வேண்டிய irony -இது முருகதாஸ் தயாரித்த படம்) போன்ற படங்கள் கலவை பட்டியலில் சேரும் .<br />
<br />
ஏழாம் அறிவும் இந்த பட்டியலில் சேர்ந்திருக்க வேண்டிய படம். துரதிர்ஷ்டவசமாக திரிசங்கு மாதிரி இங்கேயும் அல்லாமல் அங்கேயும் இல்லாமல் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கிறது.</div><div></div><div><br />
ஈழம் முதல் தமிழ் பற்று , தமிழர் பெருமை என மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் பல வசனங்கள் படத்தில் உள்ளன. ஆனால் வசனம் மட்டுமே அந்த உணர்ச்சியை படம் பார்ப்பவர்களுக்கு தராது. அதை காட்சியில் ஊட்ட வேண்டும். அதில் சறுக்கியிருக்கிறார் இயக்குனர். <br />
</div></div><div></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGaa7d1vqf8OS6OOgbabGXh0V5RU9BrhpHMvqzQysk040F6r-MrdJKR0lphqywr2fZpmn6OyR1_vyl_DM-82msSo01pbzQL-fpLM4E4GZsUtfQMGenP3weghptVr7tofZznHs2dnsSkt5V/s1600/dasavatharam-dvd-rip-online.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" ida="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGaa7d1vqf8OS6OOgbabGXh0V5RU9BrhpHMvqzQysk040F6r-MrdJKR0lphqywr2fZpmn6OyR1_vyl_DM-82msSo01pbzQL-fpLM4E4GZsUtfQMGenP3weghptVr7tofZznHs2dnsSkt5V/s320/dasavatharam-dvd-rip-online.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div>கிருமியை பரப்புவது என்ற ஆதி கால ஜேம்ஸ் பாண்ட் பட வில்லன் உத்திதான் Operation Red என்று தெரிந்ததும் தலை வலிக்கிறது. படத்தை பார்ப்பவர்களும் அதே ட்ரீட்மென்ட்டில் சிக்கியது போல ஒரு வலி.<br />
<br />
<div>முதல் பதினைந்து நிமிடம் முருகதாஸ் இயக்கியிருக்கிறார். பிறகு அவரின் ஏதோ ஒன்றிரண்டு கத்துக்குட்டி உதவி இயக்குனர்கள் படத்தை எடுத்து முடித்துள்ளனர் - இறுதி காட்சி உட்பட. </div><div>தமிழின் மேல் நமக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் ஒரு இம்மியளவும் குறையவில்லை. இந்த படத்தை குறை சொல்லுபவர்களை , தமிழை மதிக்க தவறியவர்கள் என்று பிறர் கருதும் வகையில் படத்தில் அதன் கதையோடு தமிழை<br />
முடிச்சு போட்டு</div><div>விளையாடியிருக்கிறார் முருகதாஸ். படத்தின் ஒரே பலம் இதுதான்.<br />
<br />
</div><div></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV314duOsaFMPMu_5cDuzPymqg9YDfCwm9voF0nmoGjjnfRkTvjLWEymag_FFGvZvzKf8umAO11zeBf4H_aKLbYY42sZZzwLRRGn1FcReX6bLE0hW3c-EytCYYbb5jD9UpIrbQQyeUFEd_/s1600/Seeman-2-compressed.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" ida="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV314duOsaFMPMu_5cDuzPymqg9YDfCwm9voF0nmoGjjnfRkTvjLWEymag_FFGvZvzKf8umAO11zeBf4H_aKLbYY42sZZzwLRRGn1FcReX6bLE0hW3c-EytCYYbb5jD9UpIrbQQyeUFEd_/s320/Seeman-2-compressed.jpg" width="274" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div>'படம் நல்லா இல்லை' என்று சொன்னாலே ஏதோ தமிழ் மொழிக்கு நிரந்தர விரோதி போல மற்றவர்கள் பார்ப்பது குழப்பமடைய வைக்கிறது. முன் எச்சரிக்கையாக ' இந்த படம் தெலுங்கில் பார்தேன். நல்லாவே இல்ல 'என்று சொல்ல வேண்டியிருக்கிறது.<br />
<br />
<div>பதிவுக்கு சம்பந்தமான கேள்வி: </div><br />
<span style="color: #38761d;">'போதி தர்மர் தமிழர்தானே? காஞ்சிபுரத்தில் தானே பிறந்தார்.?அப்புறம் ஏன் தெலுங்கு பட</span><span class="text_exposed_show"><span style="color: #38761d;">த்துல அவர் குண்டூர்ல பிறந்ததாகவும் ..ஹிந்தி படத்துல தாரவில பிறந்ததாகவும் சொல்கிறார்கள்.இரண்டு மொழிகளிலும் அவர் தமிழர்ன்னு பெருமையா சொல்லி இருக்கலாமே<br />
<br />
தமிழர்களை பெருமைப்படுத்துற படம்னு சொல்லிட்டு தமிழர்களை ஏன் இப்படி அசிங்கப்படுத்தனும்???'<br />
- இயக்குனர் மு.களஞ்சியம்</span></span><br />
<br />
முதல் பார்வையில் காதல் என்றதும் கிளை கதை 'நான் ஒன்றும் வித்தியாசமான கதை அல்ல ' என்பதை அறிவித்து விடுகிறது.<br />
<br />
ஹீரோவுக்கு ஒரு நண்பன், எல்லாரும் <span id="6_TRN_5b">படியில் </span> இறங்கியதும் லிப்ஃட்டில் <span id="6_TRN_5h">வில்லன்</span> வருவது போன்ற வழக்கமான எல்லாரும் யுகிக்ககூடிய காட்சிகள் சலிப்படைய வைக்கின்றன. <br />
தன் மேல் கொண்டிருந்தது காதல் அல்ல நடிப்பு என்று தெரிந்ததும் சூர்யா பாடும் பாடல், ஹீரோயின் அப்பா நடித்த அபூர்வ சகோதரர்கள் படப்பாடலை நினைவு படுத்துகிறது.<br />
<div><div><div><br />
சண்டை காட்சிகளிலும் , ரோட்டில் நடக்கும் கார்களை பயன்படுத்தி சூர்யாவை வில்லன் கொல்ல முயலும் காட்சியில் மூன்றாம் தர கிராபிக்ஸ் சிரிக்க வைக்கிறது. <br />
<br />
கடைசியாக எல்லாரும் எதிர்பார்த்த சண்டைகாட்சியும் , பீட்டர் ஹெய்ன் அவசரகதியில் முடித்த , நிறைவைத் தராத ஒன்றாகவே இருக்கிறது. அவ்வளவு அடி கொடுத்த வில்லனை எப்படியெல்லாம் புரட்டி எடுக்க வாய்ப்புள்ள சண்டைக் காட்சி அது.. ஹுஹும்ம்.. failed the expectation..<br />
<br />
</div><div></div><div></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLI0iiGjCeQ6jSWHgaDgUuc7t13Uvg5TaXo8fH71qrOx5BkqXwmhDnOe6LVDCeErM3yiKRerVIkYBd1YOK3sMAd3Qf0FYuXmhfxGZnMu9zrWeHHK196sBdo31d-DWhHpxHeRbYxopOzLkT/s1600/433px-TheMatrix_Poster.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" ida="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLI0iiGjCeQ6jSWHgaDgUuc7t13Uvg5TaXo8fH71qrOx5BkqXwmhDnOe6LVDCeErM3yiKRerVIkYBd1YOK3sMAd3Qf0FYuXmhfxGZnMu9zrWeHHK196sBdo31d-DWhHpxHeRbYxopOzLkT/s320/433px-TheMatrix_Poster.jpg" width="231" /></a></div><div></div><div></div><br />
சுருதி ஹாசன் தமிழில் அறிமுகமான படம் என்று பின்னாளில் ஞாபகம் வைக்க பயன்படும் படமாக மட்டும் இது இருக்கும்.இவர் நடிப்பு பாராட்டகூடியது; தமிழ் உச்சரிப்பு ஏன் <br />
மூச்சு திணறும்படி , அழுத்தம் கொடுத்து ,இவ்வளவு சிரமப்பட்டு வருகிறது என்று புரியவில்லை. வேறு குறை இல்லை..முன்னேற வாய்ப்பிருக்கிறது . <br />
<br />
போதி தர்மர் சூர்யா மட்டுமே வித்தியாசமாய் தெரிகிறார். சர்க்கஸ் சூர்யா எல்லா படத்திலும் பார்த்த , பழகிய பாவனையுடைய ஒருவராகவே இருக்கிறார்.கெட்டப் மாற்றத்தில் இருக்கும் கவனம் , நடிக்கும் உடல் அசைவு,முக பாவனை ,மற்ற மேனரிசத்திலும் இருக்க வேண்டும்.<br />
இவரைப் பொறுத்த வரையில் , இதுவும் இன்னொரு படமே..நல்ல நடிப்பு என்று பெருமைப்படவும் முடியவில்லை.. மோசமான நடிப்பு என்று புறந்தள்ளவும் தேவையில்லை.... <br />
<br />
ஹாரிஸ் ஜெயராஜ் இன்னொரு திருஷ்டி. தான் கொடுத்த பழைய வெற்றி பாடல்களின் தாக்கத்திலிருந்து இவர் மீளாத வரை , இவரை நம்பி இருக்கும் இயக்குனர்கள் பரிதாபப் படவேண்டியவர்கள் .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf4UXgjBggAOAf49lzqFEFCmXlf6zoxiiCGs-On1WLHjnPBrQp-j36y_h2PHmp8f08O8GoRA70rqoLAEPcypBAx9oecR__gk6aevgkW0tiaal2Lc_wSX6ZJDbpekaLTK3RnAPFzzSqtjcR/s1600/sakkarakatti-14-07-08-02.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="185" ida="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf4UXgjBggAOAf49lzqFEFCmXlf6zoxiiCGs-On1WLHjnPBrQp-j36y_h2PHmp8f08O8GoRA70rqoLAEPcypBAx9oecR__gk6aevgkW0tiaal2Lc_wSX6ZJDbpekaLTK3RnAPFzzSqtjcR/s320/sakkarakatti-14-07-08-02.jpg" width="320" /></a></div></div><div></div><div><br />
முருகதாஸ்க்கு , நல்ல ஒரு கருத்தை சொல்ல முனைந்ததமைக்கு பாராட்டுகள். அதை சரியாக சொல்லாததற்கு <br />
பலமான ஒரு கண்டனம்.<br />
இரண்டையும் சொல்ல ரசிகர்களுக்கு உரிமை இருக்கிறது.<br />
<br />
கிளைகதையில் மெனக்கெட்டு , முக்கிய கதையில் இணைக்கும் வித்தையை இன்னும் கற்க வேண்டும். உங்கள் பலம் புதுகதையை உருவாக்குவதில் அல்ல.. அது எங்கிருந்தாலும் எடுத்து விடுவீர்கள். அந்த கதையை செதுக்குவதில் மட்டுமே உள்ளது. <br />
<br />
கஜினி வெற்றிக்கு காரணம் Memento அல்ல..அதில் நீங்கள் சேர்த்த சரக்கும் (improvising) , உங்கள் புதுவித ட்ரீட்மென்ட்டும் தான் காரணம்.இதில் அது துளியும் இல்லை. <br />
<div></div>விஜய் அவார்ட் நடுவர் குழுவில் அடுத்த வருடம் இடம்பெற நீங்கள் இன்னொரு முறை உங்களை நிரூபிக்க வேண்டும். <br />
கண்டிப்பாக இந்த படம் அந்த பெருமையைக் கொடுக்காது.<br />
<br />
மொத்தத்தில் நல்ல கதைக்கருவை , திறமையுள்ள ஒரு குழு , தங்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தாமல் ,அதை குறைபடுத்தி அரைகுறையாய் முடித்திருக்கும் படம் ஏழாம் அறிவு. <br />
<div></div></div><div><br />
<span id="6_TRN_ep">வெரி சாரி முருகதாஸ். அடுத்த</span> முயற்சியில் <span id="6_TRN_el">உங்களையும் </span> ரசிகர்களையும் <span id="6_TRN_em">ஏமாற்றாமல்</span> இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.</div></div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-53844659920477639152011-10-26T03:53:00.000+05:302011-10-26T03:53:46.660+05:30தீபாவளி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span style="color: #38761d;">டிஸ்கி - கொஞ்சம் பெரிய பதிவு. </span><br />
<br />
என் பள்ளி நாட்கள் வரை தீபாவளி என்பது வருடத்துக்கு ஒரு முறை <br />
<div>மலரும் ஒரு தெய்வீக காதல் போல். ஒரு மாதம் முன்பிலிருந்தே ஒன்றிலிருந்து முப்பது வரை ஒரு பேப்பரில் எழுதி ஒவ்வொரு நாளாக அடித்துவிட்டு 'இன்னும் 24 நாள் இருக்கு ' 'இன்னும் 17 நாள் இருக்கு ' என்று காலையில் தொடங்கும் என் நாட்கள் , பண்டிகைக்கு பத்து நாள் முதலிருந்து அடுத்த கட்ட விறுவிறுப்புக்கு போகும்.காரணம் - பட்டாசு. </div><div> </div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQxO65S3j0d7eD9N6Y_5SvIyNTqxV9HosFLKi6rTkCp_EtD8gbHYj0Mu0H2COIsc5NfOAVpkBdbuRInHxmCYd-tRA96tyVO3auJTm_tkHiYpgQL62H1NzjM4h5l1Vx2Ip8LvFjDAbb8waK/s1600/diwali1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="209" ida="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQxO65S3j0d7eD9N6Y_5SvIyNTqxV9HosFLKi6rTkCp_EtD8gbHYj0Mu0H2COIsc5NfOAVpkBdbuRInHxmCYd-tRA96tyVO3auJTm_tkHiYpgQL62H1NzjM4h5l1Vx2Ip8LvFjDAbb8waK/s320/diwali1.jpg" width="320" /></a></div><div> </div>எதிர் வீட்டு பிரபு அண்ணன்,பக்கத்துக்கு வீட்டு ஆனந்த் , அதற்கடுத்த வீட்டு ரவி,ராஜா சகோதரர்கள் என்ற பட்டாளம் நட்பை மறந்து ஒரு போட்டி மனப்பான்மையோடு முறைத்துக் கொண்டு அலையும் நாட்கள் அவை.காரணம் - பட்டாசு.<br />
<br />
சிந்தாமணியில் போய் முதல் கட்ட பரிவர்த்தனையை ஆரம்பித்து வைத்தால் ,தீபாவளிக்கு மூன்று நாள் முன்னரே அனைத்தையும் வெடித்து தீர்த்து விடும் அபாயம் உண்டு என்பதால் அப்பா வேறு ஒரு யோசனையை , நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது செய்ய ஆரம்பித்தார்.<br />
<br />
கூட வேலை பார்க்கும் அனைவரிடமும் என்ன விதமான பட்டாசுகள் தேவை என கேட்டு , சிவகாசிக்கு ஆள் அனுப்பி மொத்தமாக வரவழைத்து வீட்டில் வைப்பார்.சரியாக பண்டிகைக்கு ஐந்து நாள் முன்னாடிதான் அந்த பெரிய 'மங்காத்தா' பணப்பெட்டி அளவுக்கு பெரியதாய் இருக்கும் பட்டாசு பெட்டியை பிரிக்க ஆரம்பிப்பார். கூட உதவிக்கு மூன்று பேர். இம்சைக்கு நான்.<br />
<br />
எல்லாரும் கொடுத்திருக்கும் லிஸ்டை எடுத்து ஒவ்வொன்றாக படித்து , அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பெட்டியில் பட்டாசுகளை நிரப்ப வேண்டும். <br />
உதவிக்கு என வந்தாலும் எல்லாரும் அமர்ந்துகொண்டு 'அதுல ஒன்னு எடுத்து அவங்க பாக்ஸ்ல போடு ; இந்த பாக்ஸ்ல ரெண்டு கலர் மத்தாப்பு' என என்னை வேலை வாங்கினாலும் எனக்கு அது அலுப்பாகவே இருக்காது.<br />
<br />
எல்லாருக்கும் ஒரு பெட்டி என்றால் எங்கள் வீட்டுக்கு மட்டும் இரண்டு பெட்டி. எனக்கொன்று ; என் அக்காவுக்கு ஒன்று.காரணம் எனது முந்தைய தீபாவளி காலத்தில் நடந்த ஊழல்கள்தான். மொத்தமாக வாங்கி இதில் பாதி உனக்கு ;பாதி எனக்கு என்று மிக நியாயமாக தொகுதி பங்கீடு செய்தாலும் , கூட்டணி தர்மத்தை <br />
துச்சமென மதித்து , அக்கா வீட்டில் இல்லாத<br />
போது கொஞ்சத்தை எடுத்து ,ஓரிரு நாளில் ஏறக்குறைய முழுதும்<br />
என் பொக்கிஷ குவியலில் இருக்கும்.<br />
ஆகவே என் வீட்டுக்கு இரண்டு பெட்டி பட்டாசுகள் என்பது எழுதபடாத விதியாய் இருந்தது.<br />
<br />
ஆனாலும் தீபாவளி அன்று மாஸ்டர் பிளான் செய்து , அக்கா நான்கைந்து வெடி வெடித்ததும் , பக்கத்தில் அலறும்படி ஒரு வெடியை தூக்கிப் போட்டால் ,பயந்து போய் ' எல்லாத்தையும் நீயே வெடிச்சு தொலைடா' என உள்ளே ஓடி விடுவாள்.திரியைக் கிள்ளி தரும் பொறுப்பு அப்பாவுக்கு. <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgF7X5x8wHsq7rlj-zO8SkThz2IlCrdgpcK_7QWKwIqfmHI6qYiEwdyqcEvpizqNPDR_4BxUtc0S89DBqiyxCzVBUbpXZqwW5jLCh1FpgRpRlq66Y5GbdGwWOBXqeSDsfUQf28Y58m_5eES/s1600/tamilnadu-state-assembly-election-2011.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" ida="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgF7X5x8wHsq7rlj-zO8SkThz2IlCrdgpcK_7QWKwIqfmHI6qYiEwdyqcEvpizqNPDR_4BxUtc0S89DBqiyxCzVBUbpXZqwW5jLCh1FpgRpRlq66Y5GbdGwWOBXqeSDsfUQf28Y58m_5eES/s320/tamilnadu-state-assembly-election-2011.jpg" width="320" /></a></div><br />
எல்லா வருடமும் என் லிஸ்ட்தான் பெரியதாய் இருக்கும் என்றாலும் , எந்த பெட்டியைப் பார்த்தாலும் பொறாமையாகவும் , இந்த பெட்டி என்னுடையதை விட பெரிதாக இருக்கிறதே என்ற அவநம்பிக்கையும் இருக்கும். ஆனால் அப்பா கூட வேலை பார்க்கும் எல்லாருக்கும் வீட்டில் பெண் குழந்தைகள்தான் என்பதனால் வெறும் சங்கு சக்கரம்,பூவாணம் , மத்தாப்பு போன்ற காந்தியவாதி பட்டாசுகளாக இருக்கும். அதையெல்லாம் பார்த்து ஏதோ சோலே பட அம்ஜத்கான் போல ஒரு ஏளன சிரிப்பு என்னிடம் பிறக்கும்.<br />
<br />
எனக்கெல்லாம் பச்சை<br />
கயிறு இறுக்கி கட்டிய நைட்ரஜன் பாம் , செவென் ஷாட் எனப்படும் எங்கெங்கோ அலைபாய்ந்து வெடிக்கும் இன்னொரு தீவிரவாத வெடி , சரவெடி , லட்சுமி வெடி , நேதாஜி வெடி , இது எல்லாம் போக , என் சொந்த ஊரிலிருந்து சித்தப்பா கொண்டு வந்த ஓலை வெடி , நானும் வீரன்தான் என காண்பிக்க கையில் பற்ற வைத்து தூக்கி போடும் ஊசி வெடி என ஒரு படுபயங்கர வெடிபொருட்கள் லிஸ்டில் இருக்கும். <br />
<br />
பிள்ளையார் சுழி போடுவது ரோல் கேப் மூலம்தான்.அதிலும் ரோல் கேப் துப்பாக்கி எதுவும் ஒரு நாளைக்கு மேல் வராது. பத்து முறை லோட் செய்தால் பதினோராவது தடவை பயன்படாது. அதிகபட்சமாக ஒரு முறை நான்கு துப்பாக்கி வாங்கியிருக்கிறேன். பிறகு எனக்கே மனம் பொறுக்காமல் மீதி கேப்பை சுவற்றில் தேய்த்தும் , வெடிகளுக்கு சுற்றும் டெட்டனேட்டராக பயன்படுத்துவேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji3JCXNpJzcaW-IjrcWn8BBXtv_ngN_yLuwxTZHXcp_RVBjCDbhsJGH_T6c4fMjwCRQ6T9fcLSpnZ6U09JiIl3gvnTb6m07RVpGGoVuSQZTvkGVHi4UXQ_UtlkgJUrPqV1O4xy9FP2Z99h/s1600/capgunmp.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="239" ida="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji3JCXNpJzcaW-IjrcWn8BBXtv_ngN_yLuwxTZHXcp_RVBjCDbhsJGH_T6c4fMjwCRQ6T9fcLSpnZ6U09JiIl3gvnTb6m07RVpGGoVuSQZTvkGVHi4UXQ_UtlkgJUrPqV1O4xy9FP2Z99h/s320/capgunmp.jpg" width="320" /></a></div><br />
வெங்காய வெடி என்கிற மாப்பிளை வெடி அப்போதே தடை செய்யபட்டிருந்தாலும் , எங்களுக்கு எப்படியாவது கிடைக்கும்படி தேவராஜன் கடை அண்ணாச்சி ஏற்பாடு பண்ணியிருப்பார். இப்போதெல்லாம் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. சரியான ரவுடி வெடி.<br />
<br />
இது மட்டும் வைத்து சமர்த்தாக வெடிக்கும் ரகம் அல்ல எங்கள் கோஷ்டி. பாம் என்றால் அது எவ்வளவு சத்தமாக, விதவிதமாக வெடிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய தயாராய் இருக்கும் தன்மானபடை. வெயிட்டான பொருள் எது சிக்கினாலும் , அதற்கு அடியில் வெடி வைப்பது , பத்தியை அழகாக வெட்டி , வெடியுடன் சேர்த்து பற்ற வைத்து ஏறக்குறைய நாட்டு வெடிகுண்டை டைம்பாம் போல ஆக்கி வெடிக்க வைப்பது என பலவிதங்கள்.<br />
<br />
இதில் நாங்கள் எல்லை மீறியது எதிலென்றால் , தீபாவளி சமயத்தில் மழை பெய்து தேங்கியிருக்கும் தண்ணீரில் , வெகு பக்குவமாக எதாவது ஒரு காய்ந்த இலையை மிதக்க வைத்து ,அதில் பாம் வைப்பது. <br />
பற்ற வைக்கும்போது கொஞ்சம் அதிர்ந்தாலும் வெடி தண்ணீரில் மூழ்கி செயலிழந்து விடும் அபாயம் இருப்பதால் , எந்த யோகாவும் , ப்ராணயாமாவும் கற்றுகொள்ளாமலேயே மூச்சை முறைபடுத்தி ஒரு பட்டாம்பூச்சி அமர்வது போல் பற்ற வைத்து ஓடி வருவோம். <br />
<br />
இந்த சின்ன வயதில் , இந்த செயற்கரிய செயலை பாராட்டாமல், பெருசுகள் எதோ அந்த பக்கம் சரியாக வெடி வெடிக்கும்போது வந்து சட்டையை சேறாக்கி கொண்டு , எதோ நாங்கள்தான் தப்பு செய்த மாதிரி <br />
' உங்க பையன் என் தீபாளி சட்டைய என்ன பண்ணிருக்கானு பாருங்க ' என வீட்டில் பற்ற வைத்து விடுவார்கள். பிறகு பண்டிகை நாளில் என் முதுகில் வெடி வெடிக்கும்.<br />
<br />
ஒரு வழியாக எல்லா பட்டாசையும் வெடித்து , பிறகு இரவானதும் , ராக்கெட் , பூவாணம் , சங்கு சக்கரம் என ஒரு ரவுண்ட் வந்து அதையும் முடித்து , பாம்பு பட்டாசு புகையை முடித்து கொண்டு , எல்லா பசங்களும் ஆயுதம் தீந்த போர்வீரர்கள் மாதிரி நிராயுதபாணி ஆக நிற்போம். (நிற்க;கார்த்திகை பட்டாசு கோட்டா தனி.) <br />
<br />
பிறகு வெடித்த எல்லா பட்டாசையும் மொத்தமாக ஓரிடத்தில் கொட்டி , நெருப்பு மூட்டி அதில் வரும் வண்ண வண்ண புகைகளை ரசித்த பிறகே எங்கள் போர் குணம் தணியும். இருந்தாலும் எங்கள் தினவெடுத்த தோள்களுக்கு இன்னும் வெடி தேவை என்று பரிதாபமாக யாரை பார்த்தாலும் , எல்லாரிடமும் சொல்லி வைத்ததுபோல் ஒரு ஏளன புன்னகை தோன்றும் ' கொஞ்சமாடா ஆடுனீங்க..இனி என்னடா பண்ணுவீங்க ? ' என்பதுபோல்.<br />
<br />
அடுத்த நாள் எந்த வீட்டுக்கு முன்னால் பட்டாசு குப்பை அதிகமாக இருக்கிறதோ அங்கு எதாவது ஒரு வாண்டு இருக்கிறது என்று அர்த்தம்.<br />
<br />
கால மாற்றத்தில் எது மாறினாலும் , தீபாவளி நாளின் பரபரப்பு மட்டும் மாறாமல் இருக்கிறது. இப்போதும் ஊருக்கு சென்று எங்கள் வீதியை பார்த்தால் புதிய கோஷ்டி ஒன்று நாங்கள் செய்த அதையே திரும்ப அனுபவித்து செய்து கொண்டிருப்பது தெரிகிறது.ஆனால் எனக்கு இப்போதெல்லாம் வெடி வெடிக்க பயம் ஏற்பட்டுள்ளதை ஒத்துக்கொள்ள வேண்டும். அக்கா பையன் ரோல்கேப் வெடித்தாலே கண்ணை முடிகொள்ளும் பய உணர்ச்சி வந்து விட்டது. என்ன காரணமோ?<br />
<br />
ஆனாலும் குடும்பத்துடன் ஒன்றாய் இருப்பது , மகிழ்ச்சியாய் கொண்டாடுவது என தீபாவளியின் தனிச்சிறப்பு மாறவில்லை.டிவி சேனல்களின் பிடிகளில் சிக்காமல் அந்த நல்ல நாளை காப்பாற்றுவது நம் பொறுப்பு.<br />
அன்றைக்கு ரிலீஸ் ஆகும் படத்தை கூட வேறொரு நாள் பார்த்துக்கொள்ளலாம். குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடும் சந்தோசம் வேறு நாள் கிடைக்காது.<br />
<br />
வேலையில் மூழ்கி, பொறுப்புகளில் சிக்கிக்கொண்டு ,எப்போதும் முகத்தில் ஒரு கண்டிப்பை போலியாய் காட்டிகொண்டு , கண்டம் தாண்டி வாழ்ந்து வரும் இந்த சமயத்தில் , எல்லாரும் ஊரில் தீபாவளி கொண்டாடி அதை படம் எடுத்து அனுப்புகிறோம் என்று சொன்னாலும் ,அது முழு சந்தோசத்தை கொடுக்காது என்பது நிதர்சனம். <br />
<br />
எப்போதும் தீபாவளி பின்னிரவில் ,அப்பாவை கட்டிக்கொண்டு ஏக்கமாய் கேட்கும் கேள்வி ஞாபகத்துக்கு வருகிறது - 'அடுத்த தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்குப்பா?' . <br />
<br />
அதிக நாள் ஆகும் என்று தெரிந்திருந்தாலும் , அவர் அன்பாக அணைத்துக்கொண்டு , 'சீக்கிரமா வந்திரும்ப்பா ' என்று சொல்லும் ஆறுதலுக்கு மயங்கும் அந்த கணம் கவிதை. <br />
<br />
ஹ்ம்ம் ..குழந்தையாகவே இருந்திருக்கலாமோ?<br />
</div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-80500709827154776732011-10-24T08:25:00.000+05:302011-10-24T08:25:49.097+05:30பாப்கார்ன் பாக்கெட் - 20111024<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgx0IndiHhNunokWKvp4gzYEz2Cwp67YPfxzJsZ5dw88W7zjRWxz51HuxObIuq9HBLbBX0VPmDt08yReBMwWX44S7M99fMLXngvhtmk8Nq7xhWt4nq3FCNY2ZPnEhH3FzJ1cdFXa2zU-Cyu/s1600/imagyes.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" m$="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgx0IndiHhNunokWKvp4gzYEz2Cwp67YPfxzJsZ5dw88W7zjRWxz51HuxObIuq9HBLbBX0VPmDt08yReBMwWX44S7M99fMLXngvhtmk8Nq7xhWt4nq3FCNY2ZPnEhH3FzJ1cdFXa2zU-Cyu/s1600/imagyes.jpg" /></a><br />
<br />
' உள்ளாட்சி தேர்தல் முடிவு ஒன்றும் வியப்பில்லை'ன்னு திமுக , தேமுதிக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மாறி மாறி அறிக்கை விடும்போது, பாஸ் என்கிற பாஸ்கரன் சந்தானம் டயலாக்தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.<br />
<br />
பெரும்பாலான கட்சிகள் உள்ளாட்சித் தேர்தல்ல இந்த தடவ போட்டியிட்டதுக்கு காரணம் , கட்சி காணாம போகக் கூடாதுங்கற பயம்தான். அதுவும் குறிப்பா இந்த தடவ படுகேவலமா தோற்போம்னு தெரிஞ்சும் நாளுக்கு ரெண்டு பில்டப் அறிக்கை விட்டு, நாங்க இன்னும் இருக்கோம்னு மக்களுக்கு அட்டென்சன் போட்ட கட்சிகள் நிறைய..<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnkGAgPDQQEvj-C5sPvSGJ4DVbtX6J7RHui0P9E2EEvM7j23-DEVqnSDdBGiz6lY596bNN6i40pkJXcmv8HxS5Pb-syYZ7eFAKMP2sHf0tfSJr81d6BTMaDTr60aF1UbtEOzcbznGnoucZ/s1600/tamilnadu-state-assembly-election-2011.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="224" rda="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnkGAgPDQQEvj-C5sPvSGJ4DVbtX6J7RHui0P9E2EEvM7j23-DEVqnSDdBGiz6lY596bNN6i40pkJXcmv8HxS5Pb-syYZ7eFAKMP2sHf0tfSJr81d6BTMaDTr60aF1UbtEOzcbznGnoucZ/s320/tamilnadu-state-assembly-election-2011.jpg" width="320" /></a></div></div><div></div><div></div><div><br />
தேர்தல் முடிவ பார்த்ததும் தெரிஞ்ச விஷயம் -</div><div><br />
திமுக உயிரோடதான் இருக்கு. பிழைக்க வாய்ப்பிருக்கு.</div><div><br />
தேமுதிக , ஏற்கனவே சொன்னதுதான். ஒரு தடவை தப்பித்தவறி ஜெயிச்சதுக்காக எல்லா தடவையும் அப்படியே நடக்கும்னு நெனைக்கிறது முட்டாள்தனம்.</div><div><br />
வைகோ தன்னோட உண்மையான ஈழபோரட்டத்தோட பலனை ,அதன் அங்கிகாரத்தை மக்கள்கிட்ட இருந்து ஓரளவுக்கு வாங்கிட்டார். </div><div><br />
மீதிகட்சிகள் பத்தி அறிய ரெண்டாம் பத்தியை மறுபடியும் படிங்க.</div><div></div><div><br />
இந்த தேர்தலில் நான் பார்த்த சந்தோசமான விஷயம் , பத்து மேயர்கள்ல ஆறு பெண் மேயர்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeMr0TxdRV_OL5nb0-e3C_p-sZrOx6LfxMTy3Yu1aH0dToETI-u9cj883ZQ6KqJZN_VfqtdEC5uIPwThcrTa_MtQ2jLrPDSF7rK3pLUXlsN4-Cd7fEI5bAVM4tgltNlt88gGnneGDcW8rj/s1600/23-corporation-mayor300.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" rda="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeMr0TxdRV_OL5nb0-e3C_p-sZrOx6LfxMTy3Yu1aH0dToETI-u9cj883ZQ6KqJZN_VfqtdEC5uIPwThcrTa_MtQ2jLrPDSF7rK3pLUXlsN4-Cd7fEI5bAVM4tgltNlt88gGnneGDcW8rj/s1600/23-corporation-mayor300.jpg" /></a></div><br />
<br />
அட இனியும் என்ன முப்பத்தி மூணு சதவீதம் ? அறுபது சதவீதம் எடுத்துட்டாங்க.. வாழ்த்துக்கள்.</div><div>------------------------------------------------------------</div><div><br />
ஸ்டீவ் ஜாப் மறைவில் இருந்து மீள்வதற்குள் இன்னொரு அதிர்ச்சி செய்தி - '<span style="color: #0645ad;">சி'</span> நிரலாக்க மொழியை உருவாக்கிய டென்னிஸ் ரிட்ச்சி காலமானது. கணினி தோழர்களுக்கு பாலபாடமே சி-தான்.எந்த தொழில்நுட்பம் சார்ந்த கணினி தளத்தில் இருந்தாலும் இந்த மொழியறிவு இல்லாமல் ஒரு துரும்பு கூட அசைக்க முடியாது. இல்லை என்று சொல்லுபவர்கள் ,அவர்களை அறியாமல் அதன் சாரங்களை பயன்படுத்தியிருப்பார்கள்.</div><div>யுனிக்ஸ் இயங்குதளத்தை வேறு சிலரோடு சேர்ந்து உருவாக்கியவரும் <span id="6_TRN_86">இவர்தான்</span>. இவரும் புற்றுநோய்க்குதான் பலியாகியிருக்கிறார்.</div><div><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieSAlYoDUmM3O2Kbfu-H8wW_sr-FrET4HkrLn5YCqFNbD7koBvE97Hg7nxekK5D75Dxo6W2IN2WknNkbOO4p4_7odLBsBPQrwqpUPFhIfjYvcjSy9QUZG-uO103xZ3bQk9vTBoRJjLlNl2/s1600/dennis_ritchie.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" rda="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieSAlYoDUmM3O2Kbfu-H8wW_sr-FrET4HkrLn5YCqFNbD7koBvE97Hg7nxekK5D75Dxo6W2IN2WknNkbOO4p4_7odLBsBPQrwqpUPFhIfjYvcjSy9QUZG-uO103xZ3bQk9vTBoRJjLlNl2/s320/dennis_ritchie.jpg" width="247" /></a></div><br />
இவர்களைப் போன்ற சிறந்த அறிவு ஜீவிகளை மரணத்தை தவிர வேறு யாராலும் தோற்கடிக்க முடியாது.அதே சமயம் மரணம் வருவது தெரிந்தாலும் , அதை ஒத்திபோட தகுதி படைத்தவர்கள் இவர்கள் - 'இரு..என்ன அவசரம்? என் வேலையை முடிச்சுட்டு வரேன்.' என்று தங்கள் பணிகளில் ஐக்கியம் ஆகும் ரகத்தை சேர்ந்தவர்கள் இவர்கள். மரணமும் கைகட்டி ஒரு ஓரமாக நின்று ,அவர்கள் வேலை முடிந்ததும் அழைத்து செல்லும். <br />
<br />
ஆக மரணத்தை தள்ளிபோட சிறந்த வழி, எதாவது உருப்படியாக செய்ய முனைவதும் , அதில் முழுமுனைப்போடு ஈடுபடுவதும்தான் என்று வாழ்ந்து காட்டியவர்கள். They are Legends.</div><div>------------------------------------</div><div><br />
முரண் படம் தமிழுக்கு புதியது.நல்ல முயற்சி.சேரனும் சரி , பிரசன்னாவும் சரி ,தங்கள் நிலை உணர்ந்து பாத்திரத்தை தேர்ந்தெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கதையின் முதல் காட்சி விஷயத்தை , கடைசி காட்சிக்கு முடிச்சு போடும் உத்திக்கு பேர் என்னவென்று தெரியவில்லை. ஆனால் அதை படத்தில் நுழைக்க கதையை மிக கவனமாக கையாள வேண்டும். இயக்குனர் அதை செய்திருக்கிறார்.<br />
<br />
ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் 'Strangers on a Train' படத்தின் தழுவலாக இருந்தாலும் , அதை பெரிதாக எடுத்துகொள்ள தேவையில்லை. தெய்வதிருமகள் வெற்றிக்கு பிறகு ஏறக்குறைய எல்லா பெரும் 'அட விடுங்க பாஸ்..எங்க இருந்து எடுத்தா என்ன ? நமக்கு போர் அடிக்காம ரெண்டு மணி நேரம் ஓட்டரானுகளா.. அது போதும் ' என்ற மனப்பான்மை வந்திருக்கிறது. அதுவும் சரிதான். <br />
<br />
நான்கு படத்தை தெலுங்கில் இருந்து நல்லபடியாக அப்படியே திருப்பிபோட்ட ஜெயம் ராஜா கூட 'கிக்'கை தில்லாலங்கடி ஆக்கும்போது குப்புற விழுந்தார். தழுவலோ காப்பியோ , படத்தை ரசிக்கும்படி கொடுத்தால் போதும் போல. முரண் அந்த ரகம்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyEIuselpzCWnUaD-ITLnwv1419-6cHcbrgWaLJc4Z21BQZjkWCbVvsZeMhEzO-blsfuAZMhEVUpkK_fLXQQNY_JisGlM-MKUchSHRfwbirWO0FLaoET3AwI8AKYPP5olFD9C8YMeRlNHv/s1600/Muran.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="228" rda="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyEIuselpzCWnUaD-ITLnwv1419-6cHcbrgWaLJc4Z21BQZjkWCbVvsZeMhEzO-blsfuAZMhEVUpkK_fLXQQNY_JisGlM-MKUchSHRfwbirWO0FLaoET3AwI8AKYPP5olFD9C8YMeRlNHv/s320/Muran.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><br />
சேரனுக்கு 'யுத்தம் செய் 'க்கு பிறகு சொல்லிகொள்ளும்படி இன்னொரு படம். ஆனால் ஒரே குறை - இந்த விஷயத்துக்கு இப்படிதான் ரியாக்ட் பண்ணுவார் என்று பார்ப்பவருக்கு நன்றாக முன்னரே தெரிகிறது. <br />
<br />
வேறு வழியில்லை. விஜய்க்கு எப்படி முதிர்ச்சியான கேரக்டர் ஒத்து வராதோ , தனுஷ்க்கு எப்படி டீசென்டான கேரக்டர் ஒத்து வராதோ , அதே போல சேரனுக்கு முரட்டு கேரக்டர் ஒத்து வராது. தப்பில்லை.முயற்சி எடுக்கிறேன் பேர்வழி என்று காமெடி ஆக்காமல் இருக்கும் வரை இவர் பாராட்டப்பட வேண்டியவர்.<br />
முரண் - Classic Thriller.<br />
----------------------------------------<br />
<br />
எல்லாரும் எப்போதும் அரசியல் சுப்புடு ஆகி விட முடியாது. சோ போல பாலிடிக்ஸில் பின்னால் நடப்பதை அப்படியே ஒப்பிக்க முடியாது. ஆனால் சில விஷயங்கள் 'சூரியன் காலை உதிக்கும்.இரவில் மறையும்' என்பதுபோல் வெகு சுலபமாக கணிக்க முடியும். தேர்தலுக்கு முன்னால் <br />
கேப்டன் விஷயத்தில் அம்மாவின் போக்கு பற்றிய என்னுடைய கணிப்பும் நூறு சதம் <a href="http://abimanyuonline.blogspot.com/2011/03/blog-post_31.html">இதில்</a> உண்மையாயிருக்கிறது. <br />
<br />
//<br />
<div><div><b>ஆனால் இப்படியும் இருக்கலாம். கீழ்வருமாறு இவர் யோசித்திருந்தால் இவர் முடிவு சரிதான். </b></div><div><br />
</div><div>தனியாக நின்று மொத்தமாக தோல்வியுறுவதை விட இப்படி நாற்பது தொகுதிகளில் நின்றால் எப்படியும் ஆளும்கட்சி எதிர்ப்பலைகளினால் குறைந்தது முப்பதாவது கிடைக்கும்.திமுக படுதோல்வி அடைந்தால் அந்த கட்சி உடைந்து விடும் கூறு அழகாக கண் முன் தெரிகிறது. </div><div><br />
</div><div>பின் இந்த அம்மையார் எப்போதும் போல (தனி பெரும்பான்மையில் வந்தால் ) உடனே கூட்டணியில் இருந்து விலக்கி விடுவார். அதுதான் நமக்கும் வேண்டும்.</div><div><br />
</div><div><div>திமுக :குடும்ப சண்டையில் அழகிரி - ஸ்டாலின் - மாறன் என்று அடித்துக் கொண்டிருப்பார்கள். காங்கிரஸ் உட்கட்சி பூசல் - எந்த தலைவரும் இல்லை. .வைகோவின் மதிமுக மரணத்தருவாயில். பாமக எல்லாம் அம்மையாருக்கு ஒரு பொருட்டே அல்ல. </div></div><div><br />
</div><div><b>பிறகென்ன ? நாம்தான் பிரதான எதிர்க்கட்சி. ஐந்து வருடம் பொறுத்திருந்தால் அடுத்த முறை தேமுதிக - அதிமுக தான். வேறு யாரும் இல்லை. </b><br />
<b><br />
</b></div><div>2016 சரியான நீயா ? நானா ? போட்டியாக இருக்கும். இப்போது இருப்பது போல் நீயா ? நானா ? அவனா ? இவனா? என்பதெல்லாம் இருக்காது. தமிழ் மக்களுக்கே உரிய குணமான ஆட்சி மாற்ற எண்ணம் நம்மை முதல்வர் ஆக்கி விடும்.</div><div><br />
</div><div>ஆக , இப்படி இவர் காய் நகர்த்துவது இந்த முறை பலனை எதிர்பார்த்து அல்ல .இப்போது கிடைக்க போகும் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் , திமுகவை பின் தள்ளி இரண்டாம் இடத்தை தக்க வைத்துக்கொள்வதிலும் , பின் வரும் பெரிய பலனையும் எதிர்பார்த்துதான். </div></div>//<br />
<br />
அம்மாவும் ,தாத்தாவும்,ஐயாவும் குணம் மாறாமல் இருக்கும் வரை பல விஷயங்கள் இப்படிதான் எல்லாராலும் எளிதாக கணிக்க முடியும். <br />
--------------------------------------<br />
<br />
எம்ஜீஆர் சூட் போட்டாலே அவருக்கு ஒரு தனி அழகு வந்து விடும். அவரின் முக வசீகரம் இந்த பாடலில் மிக பிரகாசிக்கும்.தன்மையும் மிக கண்ணியமும் உள்ள நாயகன் பாடும் பாடல். எந்த காலத்துக்கும் பொருந்தும்.<br />
<br />
அதிலும் இந்த பாடலில் கையை அதிகம் ஆட்டாமல் , நடனம் ஆடாமல் மிக நளினமாக நடித்திருப்பார். (ராதாரவி இதே பாணியைத்தான் 'பூவே செம்பூவே' பாடலில் பயன்படுத்தியிருப்பார் ). கூடவே வாலியின் பாடல் வரிகள் ஆளை தலைகீழாக உலுக்கிபோடும்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/6PASXNuLOm4?feature=player_embedded' frameborder='0'></iframe></div><br />
<br />
'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்; வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்;<br />
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.' <br />
<br />
கடைசி வரியை எம்ஜீஆரை தவிர எந்த ஹீரோ பாட முடியும்? <br />
--------------------------------</div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-54892805323283302602011-10-11T08:06:00.000+05:302011-10-11T08:06:57.139+05:30அலைபேசி - சவால் சிறுகதை-2011<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div>'இதுல்ல இவ்வளவு ஆபத்து இருக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல.புதுசா முளைச்சிருக்கிற இந்த பிரச்னையை சத்தமில்லாம முடிச்சிடணும். எதாவது நம்ம கை மீறி நடந்தா...?' <br />
</div><div>மறுப்பாக தலையாட்டினான் இரண்டாமவன்.</div><div><br />
'பயப்படாத. நம்மள யாருக்கும் தெரியாது. தெரிய வாய்ப்பும் இல்லை. நிலைமை என்னனு தெரியாம நாம எதுவும் செய்ய முடியாது.'</div><div><br />
'நம்ம திட்டத்துல எதாவது மாறுதல் இருக்கா? '</div><div><br />
'கண்டிப்பா இல்ல.'</div><div><br />
'இனி இந்த மாதிரி விஷபரிட்சை எல்லாம் வேணாம். பேசாம இந்த பிளானையும் கூட பாதியிலேயே ட்ராப் பண்ணிடலாம் '</div><div><br />
'இன்னொரு தடவ இப்படி பேசாத. இது ஒரு புரட்சி. முத்துக்கள் சில கிடைக்க வேண்டுமானால் சிப்பிகள் சில உடையத்தான் வேண்டும். இது நமக்கான வேத வாக்கு. மனசுல வெச்சுக்கோ. '</div><div><br />
இதுவரை அமைதியாய் இருந்த நடுத்தர வயதுக்காரர் அவன் தோளைத் தட்டி கொடுத்தார்.</div><div><br />
'உன் தைரியம் என்னை பெருமைப்பட வைக்குது. உன்ன மாதிரி எல்லா தோழர்களும் இருந்துட்டா நம்ம இயக்கம் பெரிய வெற்றி அடைஞ்சிடும். சரி ஆயுதம் பத்திரமா இருக்கா ?'</div><div><br />
இரண்டாமவன் பேண்ட் பாக்கெட்டில் கை வைத்து பார்த்து உறுதிசெய்து கொண்டான்.வெளியில் தைரியமாக பேசினாலும் , அதன் கனமும் உறுத்தலும் அவனை கவலைக்குண்டாக்கியது. தலையாட்டினான்.</div><div><br />
'ஞாபகம் இருக்கட்டும்.வேற வழியே இல்லைனாதான் அதை உபயோக்கிக்கணும்.அது பிரமாஸ்திரம். அப்புறம் தகவல் எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியுமா? '</div><div><br />
'நம்பத்தகுந்த எடத்துல இருந்து வந்திருக்கு.சத்தமில்லாம போய் பார்ப்போம்'<br />
<br />
நிசப்தத்தை கிழித்து அலைபேசி கதறியது. எடுத்து திரையை பார்த்தவன் அலறினான். <br />
<br />
'மேலிடம். மேலிடம். என்ன சொல்றது?'<br />
<br />
'எதுவும் சொல்லாத.பேசாத.தேவையில்லாமல் நெறைய கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.<br />
<br />
</div><div>வீதியில் வெளிச்சம் குறைந்திருந்தது. </div><div><br />
'அதோ கடைசி வீடு. ஆள் பேர் முத்துசாமி.கவனமா பேசணும். வீட்டுல இருக்கறவங்களுக்கு நம்ம மேல ஒரு துளி சந்தேகமும் வந்துற கூடாது.'</div><div><br />
'ஆள் என்ன செய்றான்?'</div><div><br />
'சொன்னா சிரிப்பிங்க . பள்ளிக்கூட வாத்தியார்.அதுவும் சின்ன பசங்களுக்கு'</div><div><br />
'அதுக்காக குறைவா மதிக்க கூடாது.கொஞ்சம் தகவலை வெச்சுகிட்டே இவ்வளவு தூரம் போயிருக்கானா அவன் லேசுபட்ட ஆள் இல்ல. நிலைமை கொஞ்சம் விபரீதமானாலும் நம்மதான் பொறுப்பு. அட்ரஸ் சரிதான?'</div><div><br />
'மறந்துடீங்களா?. இது என் ஊர். நல்லா தெரியும்'</div><div><br />
கேட்டை சத்தமில்லாமல் திறந்தபடி உள்ளே சென்றார்கள்.அழைப்புமணியை அழுத்தும் முன் முகத்தில் வேர்வை அரும்பியது. பாக்கெட்டை ஒரு முறை தொட்டுபார்த்து கொண்டு அடுத்தவனை திரும்பி பார்த்தான். அவன் தலையாட்டவே பொத்தானை அழுத்தினான்.</div><div>------------------------------------------------</div><div><br />
மூன்றாவது முறை அழைப்பு மணி கேட்டது.</div><div><br />
எரிச்சலாக தலையை உயர்த்தி பார்த்து அந்த சத்தத்தை அலட்சியபடுத்தினார் முத்து. தன் நாற்காலியிலிருந்து அவர் இம்மியும் நகரவில்லை. கண்கள் கருவளையத்தில் அகப்பட்டிருந்தன.மேஜையில் இருந்த இரண்டு குறிப்புகளையும் மீண்டும் குழப்பமாக பார்த்தார்.இரண்டும் விஷ்ணு பெயரில் இருந்தது. </div><div><br />
ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்து சென்று அறை மூலையில் இருந்த தொலைபேசியை எடுத்தார்.கை நடுக்கத்துடன் எண்களை அழுத்தினார்.<br />
</div><div><br />
</div><div></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0usDqV-4Q7WCpbodMBQ3Q2Qch3wrmLOCmEbAymwwe_i-tT9xm0r4KKNJNxWl5nQufg1vCSKZwQuklc3OFYHn6KM_PzQaVwe6y7pIRCeM3tfV3-aTU3EO6phHTxlF4XGuSBakO84C1Smze/s1600/potti_pic%255B5%255D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" kca="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0usDqV-4Q7WCpbodMBQ3Q2Qch3wrmLOCmEbAymwwe_i-tT9xm0r4KKNJNxWl5nQufg1vCSKZwQuklc3OFYHn6KM_PzQaVwe6y7pIRCeM3tfV3-aTU3EO6phHTxlF4XGuSBakO84C1Smze/s320/potti_pic%255B5%255D.jpg" width="320" /></a></div><div><br />
அதே நேரத்தில் மேஜை மேலிருந்த அவரின் அலைபேசி திடீரென கனைக்கத் தொடங்கியது. பதறியபடி , ஓடி சென்று பார்த்தார். நினைத்த இடத்திலிருந்துதான் அழைப்பு.இதயம் உச்சகட்ட வேகத்தில் துடிக்கத் தொடங்கியது. இரண்டு குறிப்புகளும் அவரை ஏளனமாக பார்த்ததுபோல் இருந்தது.</div><div><br />
'இனியும் தள்ளிபோட கூடாது.முடிவெடு.என்ன செய்யலாம்? யோசி யோசி..'</div><div><br />
அழைப்பு நின்றது. அலைபேசி திரையில் '67 missed call ' என்றிருந்தது. முத்து பொறுமை இழந்தார். தலை சுற்ற தொடங்கியது.அலைபேசியை தூர எறிந்தார்.</div><div><br />
அருகிலிருந்து ஸ்டீல் ஸ்கேலை எடுத்து கையைக் கிழிக்க ஆரம்பித்தார். ரத்தம் பெருக ஆரம்பித்து தரையை ஈரமாக்கியது. </div><div><br />
'கோகுல்ல்ல்லல்ல்.......' என்று வீறிட தொடங்கினார்.</div><div>முத்துவின் அலறல் வீதியில் எதிரொலித்தது. காய்ந்த சருகாக தரையில் உதிர்ந்தார். </div><div>-----------------------------------------------</div><div><br />
கதவை திறந்தபடி கவலை தோய்ந்த முகத்தோடு ஒரு நடுத்தர வயது பெண்மணி எதிர்பட்டார்.அருகில் ஒரு சிறுவன்.</div><div><br />
'நீங்க...?'</div><div><br />
'முத்து சார் இருக்காரா ? நாங்க அவருக்கு வேண்டியவங்க.'</div><div><br />
'உள்ளார வாங்க.நான் மீனாட்சி.அவர் வீட்டுலதான் இருக்காரு'</div><div><br />
ஹாலில் சிறிது நேரம் அமர்ந்திருந்தனர். தூரத்தில் அலைபேசி அடிக்கும் சத்தம் மெல்லியதாய் கேட்டது.</div><div><br />
'பையனை அனுப்பி கடைல வாங்குனதுதான். சமைக்க நேரமில்லை.சாப்பிடுங்க.<span id="6_TRN_fg">தொலவுல</span> இருந்து வரீங்களா?'</div><div><br />
மூன்று தட்டில் சாம்பார் இட்லியை பரிமாறியபடி மீனாட்சி கேட்டதற்கு மெல்லியதாய் தலையாட்டினார்கள். </div><div><br />
'அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. எதாவது முக்கியமான விஷயங்களா? இருங்க அவரை கூட்டிட்டு வரேன்.'<br />
என்றவர் திடீரென திரும்பி , 'உங்களுக்கு கோகுல்னு யாராவது தெரியுமா ? என்றார். மூன்று பேர் முகமும் மின்சாரம் பாய்ந்ததுபோல் திடுக்கிட்டன. திணறலாக மறுத்தார்கள். மீனாட்சி சந்தேகமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ,உள்ளே சென்றார்.<br />
<br />
'நாம நெனச்சது சரிதான். உடனே காரியத்தை முடிச்சாகணும். இனி தாமதிக்கிற ஒவ்வொரு வினாடியும் ஆபத்து.'<br />
</div><div><br />
அலைபேசி மீண்டும் அலறியது. திரும்பவும் மேலிடம். இப்போது அவனுக்கு பயம் அதிகரித்தது.மேலிடத்திற்கு என்ன காரணம் சொல்வது? ஆபத்து சுற்றி வளைக்க ஆரம்பித்திருப்பது மட்டும் அவனுக்கு நன்றாக புரிந்தது. அருகிலிருந்தவனைப் பார்க்க, அவனிடம் ஒரு பரிதாபமான பார்வை தோன்றியது.<br />
<br />
நடுத்தர வயதுக்காரர் சூழ்நிலையின் இறுக்கத்தை குறைத்தார்.பேச்சை மாற்றினார்.</div><div>'தம்பி என்ன படிக்கிற? பாவம் இந்த நேரத்துல எந்த கடைல இட்லி வாங்குன ?'<br />
</div><div>பையன் பேசிகொண்டிருக்கும்போதே ஒரு அலறல் சத்தம் மூவரையும் திடுக்கிட வைத்தது. உள்ளே ஓடினார்கள்.</div><div>---------------------------------------</div><div></div><div>டாக்டர் மீனாட்சியை தேற்றிகொண்டிருந்தார்.<br />
<br />
'ஒன்னும் இல்லம்மா. <br />
இப்போ நல்லா தூங்கிட்டிருக்கார் .இது ஒரு சின்ன depression . சூழ்நிலையோட இறுக்கத்தை மூளையும் மனசும் ஏத்துக்க முடியாதபடி அழுத்தம் வரும்போது இப்படி நடக்கறது இயற்கை. <br />
<br />
ஒரு விஷயத்தைப் பத்தி திரும்ப திரும்ப யோசிச்சு தீர்வு கிடைக்கலைனா இப்படி ஆகும்.இதுக்கு Obsessed stateன்னு சொல்லுவாங்க.<br />
ஆமா இந்த அளவுக்கு போக அவருக்கு என்ன பிரச்சனை? உங்களுக்குள்ள எதாவது சண்டையா?'<br />
<br />
கண்ணீரை கட்டுபடுத்திக்கொண்டே மீனாட்சி கதறலோடு கோபத்தில் பொங்க ஆரம்பித்தார் - 'அதெல்லாம் ஒன்னும் இல்லேங்க டாக்டர். பத்து நாள் முன்னாடி வரைக்கும் நல்லாத்தான் இருந்தாரு. எல்லாம் இந்த எழவு பிடிச்ச கம்ப்யூட்டர்னாலதான். <br />
எதோ கதை எழுதுற போட்டியாம். மூணாயிரம் ரூபா பரிசாம். அந்த அறிவிப்பு வந்ததுல இருந்து இந்த ஆளு புத்தியோடவே இல்லீங்க டாக்டர். <br />
<br />
வீட்டுபோன்ல இருந்தே செல்போனுக்கு கால் பண்ணிக்கிட்டு, பேப்பர் பேப்பரா எழுதி கிழிச்சு போட்டுட்டு ஒரே தொல்லைங்க டாக்டர்.<br />
<br />
பையன்கிட்ட ரெண்டு வரி அளவுக்கு எதையோ கொடுத்து ,இதே மாதிரி எழுதி பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வாடான்னு சொல்லி, கொட்ட கொட்ட அந்த கெரகத்த பார்த்துட்டு இல்லாத அட்டுழியம் பண்ணிட்டு இருந்தாருங்க டாக்டர். ஏணுங் டாக்டர் நீங்களே சொல்லுங்க ? அன்னைக்கு எதோ அவருக்கு தெரிஞ்சவங்க மூணு பேரு வந்ததால சட்டுன்னு இங்க வந்து சேர்க்கறதுக்கு ஆச்சுங்க. மவராசனுக நல்லா இருப்பாங்க.இல்லீனா இந்த மனுசனுக்கு எதாச்சும் ஆயிருந்தா எனக்கும் என்ர பையனுக்கும் யாருங்க டாக்டர் பொறுப்பு? <br />
<br />
ஆளு முழிச்சதும் , இந்த கன்றாவியெல்லாம் இனி தொடக்கூடாதுன்னு கண்டிசனா சொல்லிபோடுங்க டாக்டர்.மறுக்கா இது மாறி பண்ணுனா நான் பையன கூட்டிட்டு என்ர பாட்டுக்கு போய்ட்டே இருப்பேன். போதுஞ்சாமி இந்த புத்திகெட்ட ஆளு சகவாசம். இப்ப கதை ஒண்ணுதான் இந்த ஆளுக்கு கேடு.<br />
போட்டி வைக்கரானுகளாமா பொல்லாத போட்டி? நாசமா போறவனுக நல்லாவே இருக்க மாட்டானுக டாக்டர்.'<br />
<br />
--------------------------------------</div><div> பரிசல் , ஆதியை தேற்றிக்கொண்டிருந்தார்.<br />
<br />
'விடுப்பா அந்த ஆளுக்கு ஒன்னும் ஆகலைல.udanz இயக்கத்துக்கு எந்த கெட்ட பேரும் இல்ல.தப்பிச்சோம். '<br />
<br />
'யோவ் சும்மா இருய்யா.<br />
பெரிய தீவிரவாத இயக்கம் ரேஞ்சுக்கு பில்டப் பண்ணிக்கிட்டு <br />
இருக்கீங்க.<br />
நல்ல வேளை சரியான நேரத்துக்கு நம்ம போனோம் ,அந்த ஆளு உயிர் பிழைச்சான் .<br />
அந்த அம்மாவுக்கு மட்டும் நாம யாருன்னு தெரிஞ்சிருந்தது , செத்திருப்போம்..முதல தகவல் சொன்னவனுக்கு ஒரு பெரிய கும்புடு போடணும்.இல்லேன்னா நம்ம கதி என்ன ஆவறது ? '<br />
<br />
'ஒன்னும் ஆயிருக்காது. <br />
புலம்ப அரம்பிச்சிராத..அதான் போகும்போதே <br />
கஷ்டப்பட்டு கடன வாங்கி , பாக்கெட்ல பணமும் கொண்டு போயிருந்தோம்ல. ஒரு வேளை அந்த ஆளு கதை எழுதாம சாக மாட்டேன்னு சொல்லியிருந்தா, போதும்பா நீ கதை எழுதுனதுன்னு சொல்லி பணத்தை அப்போவே கொடுத்திருப்போம். பரவாயில்ல பணம் மிச்சம்.'<br />
<br />
பரிசல் பேசிக்கொண்டே போக தடுத்து நிறுத்தியது அலைபேசியின் அழைப்பு. மேலிடம்.ஒரு பெருமூச்சு விட்டபடி இப்போது அழைப்புக்கு பதில் கொடுத்தார்.<br />
<br />
'எங்கங்க இருக்கீங்க? மூணு மணி நேரமா கால் பண்ணிட்டு இருக்கேன்.எடுக்க மாட்டீங்கறீங்க.வீட்டுக்கு வாங்க.உங்களுக்கு இருக்கு.'<br />
<br />
'ஐயோ இல்லமா.அது ஒரு சின்ன பிரச்சனை. வந்து கூகிள்.. இல்ல கோகுல்....'<br />
<br />
'உளறாதீங்க..இன்னும் பத்து நிமிசத்துல வீட்டுல இருக்கணும்'<br />
<br />
பரிசலின் தவிப்பை ரசித்தபடி ஆதி கேட்டார்.<br />
<br />
'என்ன சங்கர் உங்களுக்கு , ட்ரைனுக்கு லேட் ஆகல?'<br />
<br />
பதில் சொல்லாமல் கேபிள் சங்கர் மிக சிரத்தையோடு எதையோ லேப்டாப்பில் டைப் செய்து கொண்டிருந்தார்.<br />
<br />
'சாப்பாட்டுக்கடை - திருப்பூரில் பதிவர்கள் சார்பில் ஓர் அவசரகூட்டம் ஆதி , பரிசல் தலைமையில் நடைபெற்றது. ....<br />
.....இவர்களின் ஸ்பெஷாலிட்டி சாம்பார் இட்லி .அருமையான நெய் மணக்கும் சாம்பார் இட்லி , <span id="6_TRN_uv">கொத்தமல்லிதழை</span> மிதக்க வெகு சூடாக இருக்கிறது. ம்ம்ம்ம் அட்டகாசமான சுவை.விலை கொஞ்சம் அதிகமென்றாலும் worth .திருப்பூர் போகும்போது தவறாம ஒரு நடை போயிட்டு வந்திருங்க.<br />
ராத்திரி ஒரு மணி வரைக்கும் பார்சலும் உண்டு.<br />
டிவைன்.'<br />
<br />
----------------------------------------------------------------</div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-6549264872065732632011-10-10T08:12:00.000+05:302011-10-10T08:12:13.236+05:30ஸ்டீவ் ஜாப்ஸ் - I-sad ...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div><div>கடவுளுக்கு ஒரு பொறாமை உண்டு. மிக நல்லவர்களை , அறிவு ஜீவிகளை பூமிக்கு அனுப்பி வைத்தால் வெகு சீக்கிரம் பொறுமை இழந்து விடுவார். உடனே அவர்களை திருப்பி அழைத்துக் கொள்வார். பாரதி ,ஷெல்லி , மொசார்ட்,கணிதமேதை ராமானுஜம் ,ப்ரூஸ்லீ ,மைக்கேல் ஜாக்சன், இப்படி பலர். இப்போது ஸ்டீவ் ஜாப்ஸ் - ஆப்பிள் கணினி நிறுவனர். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJj7uvqo9FD20pbhl3wYNQO3jz5QHOJ5QQcXabMy_K2drGgL66XcrSlfdZY3kq1OkRIgFXbJ1kcPD2sKSy6d5yDx4yGlZPJhRHr6AuPTURm475oXWxO8aKXLEcE0QUbBU0AtP4NNzb7PaS/s1600/steve-jobs-died.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" kca="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJj7uvqo9FD20pbhl3wYNQO3jz5QHOJ5QQcXabMy_K2drGgL66XcrSlfdZY3kq1OkRIgFXbJ1kcPD2sKSy6d5yDx4yGlZPJhRHr6AuPTURm475oXWxO8aKXLEcE0QUbBU0AtP4NNzb7PaS/s320/steve-jobs-died.jpg" width="320" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div></div><div></div><div><span id="6_TRN_cd"><span id="6_TRN_cg">இவரின் எண்ணமும் தொழில் முன்னேற்றமும் எந்த அளவுக்கு அதிக வளர்ச்சியடைந்ததோ அதே அளவுக்கு அவர் உடலில் புற்றுநோய் செல்களும் வளர்ந்து அவரை நாளுக்கு நாள் கொன்று வந்திருக்கிறது.அதை எதிர்த்து இவ்வளவு வருடங்கள் போராடியவர் , போன மாதம்தான் பணியில் இருந்து விருப்ப ஓய்வை அறிவித்தார்.</span></span><br />
வேலையில் இருக்கும்போது இவரை அணுக முடியாத மரணம் , ஓய்வை நாடியபோது வெகுசுலபமாக அதன் வேலையை முடித்துவிட்டது.</div><div></div><div>--------------------</div><div><br />
இனி இவரைப் பற்றி வெப்துனியா : <br />
</div><div></div><div><br />
<span style="color: black;">ஐபோன், ஐபாட், ஐடியூன்ஸ் போன்றவைகளை கண்டுபிடித்து ,கணினி தொழில்நுட்பத்தில் மைக்ரோசாப்டுக்கு போட்டியாக ஒரு சகாப்தமாக விளங்கியவர் ஸ்டீவ். </span></div><div><span style="color: black;"></span></div><div><span style="color: black;">இவரின் தகுதி என்று பார்த்தால் - பொறியியல் படிப்பில் எந்த முறையான பட்டமும் பெறவில்லை.கல்லூரியில் முதல் செமஸ்டருடனேயே படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு கணினி ஆர்வம் காரணமாக அந்த துறையில் மூழ்க தொடங்கினார்.</span><br />
<span style="color: black;"></span><br />
<span style="color: black;">பிறந்தது - அமெரிக்கா, சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் , 1955 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ல் . அருகில் உள்ள ஒரு ஊரை சேர்ந்த தம்பதியரால் பிறந்த ஒரு வார காலத்திலேயே தத்தெடுக்கப்பட்டார். </span><br />
<span style="color: black;"></span><br />
<span style="color: black;">பள்ளி படிப்பின்போதே கம்ப்யூட்டர் விவகாரங்களில் ஆர்வம் காட்டிய ஸ்டீவ் ஜாப்ஸ், தாம் வசித்த நகருக்கு அருகில் உள்ள பாலோ ஆல்டோ என்ற ஊரில் இருந்த கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் கணினி நிபுணர்கள் உரையாற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஆர்வமுடன் சென்று வருவார்.பின்னர் கோடை விடுமுறையில் ஸ்டீவ் வாஸ்னிக் என்ற பொறியாளருடன் சேர்ந்து பணியாற்றினார். </span><br />
<span style="color: black;"></span><br />
<span style="color: black;">இந்நிலையில் போர்ட்லாண்டில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ், முதல் செமஸ்டருடனேயே தமது படிப்புக்கு மங்களம் பாடிவிட்டு கம்ப்யூட்டர் தொடர்பான வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்ட தொடங்கினார். </span><br />
<span style="color: black;"></span><br />
<span style="color: black;">இந்த ஆர்வம் அவரை வீடியோ கேம் டெக்னீசியன்களில் முன்னோடி எனக் கூறப்படும் அடாரி என்பவருடன் சேர்ந்து பணியாற்ற வைத்தது.அதன் பின்னர் தம்மை போன்றே கல்லூரி படிப்பை பாதியில்விட்ட வோஜ்னியாக் என்பவருடன் சேர்ந்து கம்ப்யூட்டர் கிளப் ஒன்றில் சேர்ந்தார். </span></div><div><span style="color: black;"></span></div><div><span style="color: black;">கம்ப்யூட்டர் மீதான இவர்கள் இருவரது ஆர்வமும் ஒரே அலைவரிசையில் ஒத்துப்போன நிலையில், 1976 ஆம் ஆண்டு இருவரும் சேர்ந்து தொடங்கியதுதான் " ஆப்பிள் கம்ப்யூட்டர்". </span><br />
<span style="color: black;"></span><br />
<span style="color: black;">இந்த நிறுவனத்தை தொடங்கியபோது ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு வயது 21; அவரது சகாவான வோஜ்னியாக்கின் வயது 26. </span><br />
<span style="color: black;"></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSNQz5JYlJ6V98TpNvK02VkPs7zQkaK0cQUS3NsQTpTrlyXNYvE-xR0ZLB6Qvin7EAjSAmLR4n33QcryPe3-VB7SZtRxelvYtnJX2viHwV4VRPeyQY7rFuLsX2SUd-k5IcGphd25bNq6jp/s1600/301674_10150322842613303_9171233302_8339632_485555707_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="color: black;"><img border="0" height="320" kca="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSNQz5JYlJ6V98TpNvK02VkPs7zQkaK0cQUS3NsQTpTrlyXNYvE-xR0ZLB6Qvin7EAjSAmLR4n33QcryPe3-VB7SZtRxelvYtnJX2viHwV4VRPeyQY7rFuLsX2SUd-k5IcGphd25bNq6jp/s320/301674_10150322842613303_9171233302_8339632_485555707_n.jpg" width="320" /></span></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><span style="color: black;">பின்னர் 1980 ஆம் ஆண்டு இருவரும் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டரை உருவாக்கி வெளியிட, அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. </span><br />
<span style="color: black;"></span><br />
<span style="color: black;">எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் கணினி தொழில் நுட்பத்தை மாற்றிய பெருமை இவருக்கே உரியது. சாதாரணமான கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக உருவாகிய ஆப்பிள் நிறுவனத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஐ பாடு மற்றும் ஐ டியூன்ஸ், ஐபோன் உருவாக்கியவர் இவரே. </span><br />
<span style="color: black;"></span><br />
<span style="color: black;">2003 ஆம் ஆண்டு ஐ பாடு உருவாக்கபட்ட பிறகு இசை உலகில் ஒரு மாற்றமே ஏற்பட்டது. சுமார் 20 கோடி பேர் இதில் பதிவு செய்து ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பாடல்களை பதிவிறக்கம் செய்து ரசித்து வருகின்றனர். </span><br />
<span style="color: black;"></span><br />
<span style="color: black;">2007 ஆம் ஆண்டு ஐ போனை இவர் உருவாக்கினார்.ஸ்மார்ட் போன் உருவாக இது ஒரு முன்னோடியாக விளங்கியது. 2011ல் உருவாக்கப்பட்ட ஐ டியூன்ஸ் சேவை மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டை கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம், கணினி யுகத்தில் புதிய வரலாற்றைப் படைத்தது.</span><br />
<span style="color: black;"></span><br />
<span style="color: black;">கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டேப்லட் பிசி என்ற கம்ப்யூட்டரை, ஐ பேடு பின்னுக்குத் தள்ளி, 2010 இறுதியில் ஒன்றரை கோடி விற்பனையானது. இவர் கடந்த ஆகஸ்ட் வரை அதன் தலைவராகவும் இருந்தார். </span></div><div><span style="color: black;"></span></div><div><br />
<span style="color: black;">சாதனையாளர்களை விதி அதிக நாட்கள் வாழவிடுவதில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம். ஆனால் அவரது சாதனைகளுக்கு அழிவில்லை!</span></div><div><span style="color: black;"></span></div><div><div><span style="color: black;">--------------------</span></div><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiUqkQ2xHUfXmfRDWmFfMRuk9Ee1QX-oTih_NNX8tA0cGsuAHX5IJzFElJXosBu-fBRI5g_pQr8XKCHPwvCDB32XKUanFd0Y23Y7jjkVYqYPmkERIReODkvblzOyL6kV0Kv8W-NHOJU94H/s1600/Untitled.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="color: black;"><img border="0" height="272" kca="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiUqkQ2xHUfXmfRDWmFfMRuk9Ee1QX-oTih_NNX8tA0cGsuAHX5IJzFElJXosBu-fBRI5g_pQr8XKCHPwvCDB32XKUanFd0Y23Y7jjkVYqYPmkERIReODkvblzOyL6kV0Kv8W-NHOJU94H/s320/Untitled.jpg" width="320" /></span></a></div><div><br />
<span style="color: black;">இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக உங்கள் வாழ்க்கை பாதை அமைந்துவிட்டது ஸ்டீவ். அந்த விதத்தில் நீங்கள் , இனி வெற்றி பெரும் ஒவ்வொரு இளைஞன் மூலமாகவும் , என்றும் உயிர்ப்போடுதான் இருப்பீர்கள். </span></div></div></div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-13952658347853226122011-10-07T09:20:00.000+05:302011-10-07T09:20:19.147+05:30எங்கேயும் எப்போதும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div>சேது வெற்றிக்கு பிறகு தமிழ் படங்கள் பார்முலா மாற்றப்பட்டது. கடைசி காட்சி மட்டும் கொடூரமாய் இருக்க வேண்டும் ; மீதி முழுக்க நகைச்சுவையாகவும் , </div><div>மசாலாத்தனம் உள்ளதாகவும் மேலோட்டமாக பார்த்தால் எதார்த்தமாகவும் இருக்க வேண்டும் என்பதை பல படங்களில் கடைபிடிக்கப்பட்டது.<br />
<br />
நந்தா, காதல், பிதாமகன்,7G ரெயின்போ காலனி,செல்லமே,பருத்திவீரன், காதலில் <span id="6_TRN_1w">விழுந்தேன்</span>, மைனா <span id="6_TRN_1x">என</span> ஒரு நீண்ட வரிசையில் படங்கள் வந்தன; வெற்றியும் பெற்றன. ஆனால் அந்த வகையில் பத்தோடு பதினொன்று என சேர்க்க முடியாத படம் - எங்கேயும் எப்போதும். காரணம் கடைசியில்.<br />
</div><div><br />
</div><div></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKiva3xySfjITMGrGN9wPHWb6YhjmUpCrlVV-C6xsjcNb_pkMe5wbLtQA7Z35Ge1GmEeny3kv40Eg48Uv7R2NlW3ldQ5N2yNPTzbLt2orP2MxAYm-w58dwG12JBTYyh6s0dboZ0vX3-dD9/s1600/engeyum_eppothum_movie_posters_08.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" kca="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKiva3xySfjITMGrGN9wPHWb6YhjmUpCrlVV-C6xsjcNb_pkMe5wbLtQA7Z35Ge1GmEeny3kv40Eg48Uv7R2NlW3ldQ5N2yNPTzbLt2orP2MxAYm-w58dwG12JBTYyh6s0dboZ0vX3-dD9/s400/engeyum_eppothum_movie_posters_08.jpg" width="400" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div>கிளைமாக்ஸ் காட்சி முதலில். அதை நோக்கி நடைபெறும் காட்சி நகர்த்தல்களில் படம் சொல்லும் முறை. ஆங்கில படங்களில் அதிகம் பயன்படுத்தபட்டிருந்தாலும் , தமிழில் தசாவதாரம்,அங்காடி தெரு , கிட்டத்தட்ட வெயிலில்.. இப்போது இந்த படத்தில். இதில் உள்ள ஒரே ஆபத்து , தெரிந்த கிளைமாக்ஸ் காட்சிக்கு சுவாரசியம் குறையாமல் பார்ப்பவரை அமர வைக்க தெரிந்திருக்க வேண்டிய உத்தி. அது இயக்குனர் சரவணனுக்கு இருக்கிறது.</div><div></div><div><br />
ஜெய் - சுப்ரமணியபுரம் வெற்றி மமதையில் இருந்து இறங்கி வந்து , தன் இடம் தெரிந்து நடித்திருக்கும் படம். இடையில் அவள் பெயர் தமிழரசி என்ற ஒரு நல்ல படம் கொடுத்தார். மற்றவை குப்பைகள். இந்த படத்தில் அவரின் அப்பாவித்தனமான நடிப்பும் , காதலிக்கு அடங்கி ஒடுங்கும் பாத்திரமும் கனகச்சிதம். </div><div>இது சரியான ட்ராக். ஜெய்.. போலாம் ரைட்...</div><div></div><div><br />
அஞ்சலி - கற்றது தமிழ் , அங்காடிதெரு போன்ற பேர் சொல்லும் படங்களில் , நினைவில் நிற்கும் பாத்திரங்களில் நடித்து இவரும் இடையில் ரெட்டசுழி, மங்காத்தா,ஆயுதம் செய்வோம் இன்னும் சில குப்பைகள் நடித்து மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். <br />
<br />
இந்த மாதிரி வாயாடி காதலி பாத்திரத்தில் நடிக்க நிறைய தைரியம் வேண்டும். பார்ப்பவருக்கு எதோ ஒரு இடத்திலாவது , 'இந்த சுமாரான பொண்ணுக்கு போய் எதுக்கு இவ்ளோ பயப்படறார்?' என்று நினைத்தால் கதை கந்தல். அதை உடைத்தெறியும் நடிப்பும் , அளவான அழகும் அஞ்சலிக்கு உண்டு. இதை தொடர்ந்தால் சுஹாசினி இடத்துக்கு வர முடியும். வாழ்த்துக்கள்.</div><div></div><div><br />
அனன்யா - ஷர்வானந் காதல் காட்சிகள் , இளைஞர்கள் மத்தியில் ஹிட். ' கோவிந்தா..கோவிந்தா' பாடலில் அனன்யாவின் நடிப்பும் , அப்பாவித்தனமும் , கடந்த இருபது நாளாக பேஸ்புக்கில் அதிகம் பகிரப்பட்ட ஒன்று. </div><div></div><div><br />
படத்தின் கதை இந்த நேரம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். எல்லாருக்கும் தெரிந்து பயன் இல்லை. ஓட்டுனர்கள்,குறிப்பாக தனியார் பேருந்து , லாரி ஓட்டுனர்கள் பார்க்க வேண்டிய படம். விஜய் டிவி இனி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் என்று தனியாக ஒரு பிரிவை ஆரம்பித்து இந்த படத்திற்கு தாராளமாக விருது கொடுக்கலாம்.<br />
</div><div></div><div><br />
முருகதாஸ் கொண்டாடப்பட்ட வேண்டிய இயக்குனர் ஒன்றும் அல்ல. ஆனால் இந்த படத்தை கொடுத்ததன் மூலம் பாராட்டப்பட வேண்டிய தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். சங்கர் S பிக்சர்ஸ் மூலம் செய்ததை, பிரகாஷ்ராஜ் முன்பு டூயட் மூவீஸ் மூலம் செய்ததை இவர் தொடரலாம் என்று நம்புவோம். புதிய பல இயக்குனர்கள் வர ஏணியாய்/ஏதுவாய் இருக்கும்.</div><div></div><div><br />
சரி , படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்று விட கூடாது. யோசிப்போம். இது ஒன்றும் மிகைபடுத்தப்பட்ட நிகழ்வு அல்ல. சென்னை - கோவை-திருச்சி - மதுரை- பெங்களுரு என்று இருக்கும் எல்லா தேசிய நெடுஞ்சாலைகளிலும் நடக்கும் அன்றாட விபத்துகளில் ஏற்படும் தனி மனித பாதிப்பை உணர்த்தும் கதை இது. <br />
<br />
நன்றாக படித்து , கணினி நிறுவனத்தில் வேலை வாங்கி , கடினமாக ஐந்து வருடம் உழைத்து பதவி உயர்வு பெற்ற பிறகே திருமணம் என்று சொல்லி ,அதன் பிறகு கல்யாணத்திற்கு தலையாட்டி , நிச்சியதார்த்ததிற்கு செல்லும்போது சமீபத்தில் விபத்தில் கருகிய என் தோழியை நினைக்கிறேன். மீதி வாழ்க்கையை எங்கு வாழ அனுப்பி வைக்கபட்டாள் சிரிக்க மட்டுமே தெரிந்த என் அப்பாவி தோழி ? காரணம் - முகமறியா ஒரு ஓட்டுனர். </div><div></div><div><br />
மேலும் வலியை உணர <a href="http://abimanyuonline.blogspot.com/2011/06/blog-post_17.html"><span style="color: #990000;">இதை</span></a><span style="color: black;">யும் </span>பார்க்கலாம். </div><div><br />
எங்கேயும் எப்போதும் - இப்போதும் எப்போதும் நினைவில் இருக்க வேண்டிய படம்.<br />
-------------------</div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-77714773530272126442011-09-27T07:47:00.000+05:302011-09-27T07:47:47.772+05:30உள்ளாட்சித் தேர்தல் -A Solo Stunt<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div>'எங்கள் கூட்டணியே நேர்மையான கூட்டணி' </div><div></div><div><br />
' அதர்மத்தை அழிக்கவே இந்த கூட்டணி' </div><div></div><div><br />
'எங்கள் கொள்கைகள் வெவ்வேறாயினும் குறிக்கோள் ஒன்றுதான் ; அதன் விளைவே இந்த கூட்டணி ' </div><div></div><div><br />
'பழையதை மறந்து விட்டோம் ; இனி நடப்பது நல்லதாய் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த கூட்டணி ' </div><div></div><div><br />
'எங்கள் இரண்டு கட்சிகளும் , மக்கள் சேவை என்ற புள்ளியில் இணைந்திருக்கிறோம் என்பதை மக்களுக்கு சொல்லத் தேவையில்லை' </div><div></div><div><br />
'நாங்கள் ஒரே குருகுலத்தில் அரசியல் பயின்றவர்கள்.. நாங்கள் இணைவதில் என்ன ஆச்சர்யம்? '</div><div></div><div><br />
'இத்தனை வருடங்கள் எங்களை மதிக்காதவர்கள் கூட்டணியில் இருந்து இப்போதுதான் வெளியே வந்திருக்கிறோம். ஒரு விதத்தில் இது எங்களுக்கு ஒரு விடுதலை.இனி மக்கள் பணியே எங்களுக்கு முக்கியம்'</div><div></div><div><br />
'பாசிச கட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதை இல்லை. ஆனால் இங்கு வந்ததும் தலைவர் கட்டி அணைத்து வரவேற்றதில் ஏற்பட்ட கண்ணீரில் எங்கள் மனகசப்புகள் கரைந்துவிட்டன.. '</div><div></div><div><br />
யப்பா...இப்படி எத்தனை உளறல்கள் தாண்டி வந்திருக்கிறோம்.பொறுத்து வந்திருக்கிறோம். மேலே கண்ட அறிக்கைகள் அனைத்தும் ஒரு கட்சி ,இன்னொரு கட்சியுடன் கூட்டணி வைக்கும்போது கூறிய காரணங்கள் - . கொடுமை.</div><div></div><div><br />
திமுக தோற்றதில் யாருக்கு என்ன லாபம் கிடைத்ததோ என்னவோ , இந்த உள்ளாட்சி தேர்தல் ஒரு வரமாக ,தமிழக மக்களுக்கு கிடைத்து விட்டது.</div><div>தமிழக வரலாற்றிலேயே ,இந்த உள்ளாட்சி தேர்தல் மிக முக்கியமான ஒன்று.. நம்புங்கள்... யாரும் யாரோடும் கூட்டணி இல்லை... </div><div><br />
ஜெயிப்பது எந்த கட்சியாய் வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் Victory Factor எனப்படும் வெற்றிக்கான காரணத்தை, குழப்பமில்லாமல் நிர்ணயம் செய்ய மக்களுக்கு இப்போது ஒரே கேள்விக்கான பதில் தெரிந்தால் போதும் - 'இந்த கட்சிக்கு ஒட்டு போட்டால் ,ஏமாற்றாமல் மக்களுக்கு எதாவது செய்யுமா ? </div>இதற்கு முன் செய்திருக்கிறார்களா ?' - இது மட்டுமே..<br />
<div></div><div><br />
மற்ற முறை போல - ' நல்லவர்தான்..ஆனால் இவருக்கு போட்டால் , அந்த கட்சியில் நம் கட்சி கூட்டணி வைத்திருக்கிறதே .. என்ன செய்யலாம்?' என்றோ </div><div>'போன முறை ஒன்றும் செய்யவில்லை.இந்த முறை போட வேண்டாம் என்று பார்த்தால் , ஆளும் கட்சியோடு கூட்டு வைத்திருக்கிறாரே..எதாவது தேறுமா?' என்றோ 'குழப்பமா இருக்கே.. இந்த ஆள் ரெம்ப மோசம்.ஆனா என்ன பண்ணித்தொலைக்கிறது? நம்ம ஜாதிகட்சியோட ஆதரவுல நிக்கறாரே..' என்றோ எதுவும் குழம்ப வேண்டாம். </div><div></div><div><br />
எல்லாரும் தனித்தனி. அதற்காக எல்லாரும் 'நாங்கள் நல்லவர்கள்.அந்த தைரியத்தில்தான் தனியாக நிற்கிறோம்' என்று சொல்லவில்லை (சொல்ல தகுதியும் இல்லை). கூட்டணி படியவில்லை. அதுதான் காரணம்.</div><div></div><div><br />
சரி .. இப்போ ஒரு பாமரத்தனமா, வெள்ளந்தியா , சராசரி வாக்காள ஜனமா கட்சிகள அலசுவோம். <br />
<br />
</div><div></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIQm7T7t3SXkGD2MNKPt6fUczzh61VayLCwEOlTh1vWfSGYd0pIONtuUaQWO1pfCugXaZJQUSqKu6ifCSa9A8L3UHva98d7IhaHoXU9Vd2lDaTY2luvrQUl_5IhAphs4EofugH6NOPoJxu/s1600/jayalalitha_1317195.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" kca="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIQm7T7t3SXkGD2MNKPt6fUczzh61VayLCwEOlTh1vWfSGYd0pIONtuUaQWO1pfCugXaZJQUSqKu6ifCSa9A8L3UHva98d7IhaHoXU9Vd2lDaTY2luvrQUl_5IhAphs4EofugH6NOPoJxu/s320/jayalalitha_1317195.jpg" width="239" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div>அதிமுக தனி மெஜாரிட்டி. ஏற்கனவே சொன்ன மாதிரி ,தேர்தல் முடிஞ்சதும் தேமுதிகவை (இன்னபிற சில்லறை கட்சிகளை )அம்மா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. கட்சியில் நடந்த பொதுக்குழு கூட்ட நிர்வாக கூட்டம் (இதுல்ல என்ன சுத்தி வளைக்கிறது ? அம்மா தான் கட்சி. அம்மா மட்டும்தான் கட்சி )கழட்டி விடும் என்ற உண்மை அரசியலில் அ , ஆ மட்டுமே தெரிஞ்ச சின்ன பையனுக்கு கூட தெரியும்.</div><div></div><div><br />
அம்மா அம்மாதான். எப்பவாவது 'இந்த கட்சியை கூட்டணியிலிருந்து அதிமுக விலக்குகிறது'ன்னு அவங்களா சொல்லிருக்காங்களா.. ? அந்த கட்சியே வெளிய போறோம்னு அழுதுட்டு ஓடிவர மாதிரி பண்ணுவாங்க..அதான் பெர்பெக்ட் லீடர்ஷிப்.</div><br />
ஆக அதிமுக தனியாக <span id="6_TRN_ik"><span id="6_TRN_il">நிக்கறதுல </span></span>எந்த சந்தேகமும், ஆச்சர்யமும் இல்லை.<br />
<div><br />
</div><div></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRt6l6WVeuLP1WrLVXIMBlEWdmJux5mQobkOKB86Im3g1523-a27_d51GSzIZPtOdkUr2rUG3NuyiXh0ehdBhGC3j93RlKndskrzgfR33wNT1X_foyfYlSQ6uuQZr7q6s5WHPX3XgdyMfO/s1600/vijayakanth_cartoon.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" kca="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRt6l6WVeuLP1WrLVXIMBlEWdmJux5mQobkOKB86Im3g1523-a27_d51GSzIZPtOdkUr2rUG3NuyiXh0ehdBhGC3j93RlKndskrzgfR33wNT1X_foyfYlSQ6uuQZr7q6s5WHPX3XgdyMfO/s320/vijayakanth_cartoon.jpg" width="263" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div><br />
திமுக.. மன்னிக்கவும்..அடுத்த நாலரை வருசத்துக்கு தேமுதிகவுக்கு அப்புறம்தான் திமுகவை பத்தி பேச முடியும். </div><div>சரி.. தேமுதிக சிறந்த எதிர்கட்சியாக கடந்த நான்கு மாதமாக ,மிக சிறப்பாக ,அருமையாக ,ஒட்டு போட்ட மக்களுக்காக உடனடியாக.. அட என்னப்பா செஞ்சிருக்காங்க..யாராச்சும் சொல்லுங்க - சட்டசபையில் நூற்றுக்கு நூறு சதவீதம் Attention போடுவதை தவிர. </div><div></div><div><br />
சரி இப்போ ஒரு வழியா கூட்டணியில் இருந்து வெளிய வந்திருக்காங்க.. அவங்க கேட்டது மாதிரி அவங்களுக்கு மார்க் போட இன்னும் ஒரு ஆறு மாசம் கொடுப்போம். (இப்படி ஆறு ஆறு மாசம் கொடுத்து அடுத்த தேர்தலே வந்துடும் போல ) .</div><div></div><div><br />
இப்போ அவங்க தனி. கூட மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட். இந்திய கம்யுனிஸ்டையையும் கூப்பிட போறார் கேப்டன். ஹ்ம்ம் அதனால ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்ல. ஏறக்குறைய தேமுதிக மட்டும்தான். ராஜ அதிர்ஷ்டம் சூழ்நிலை காரணமா யாருக்காவது ஒரு தடவ வரும். ஆனா அத தக்க வைக்கிறது உங்க சாமர்த்தியம் கேப்டன். இதை அப்புறமா பேசலாம். இப்போ இவங்க தனி. அதான் நமக்கு முக்கியம்.<br />
<br />
</div><div></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0E6rj5P2y3yd1KMd2A1o0FgtsAhS4_D7sEY9e0-MI0B6n6jVM_SLYSs9bubF8BmTr4wzPL-vpR1VczhiRLF2pqA5QXJEHgZG21FbYI01pxn6nA41l94KVipy3M-WdVBBovy8TrtMS9rBM/s1600/karunanidhi1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" kca="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0E6rj5P2y3yd1KMd2A1o0FgtsAhS4_D7sEY9e0-MI0B6n6jVM_SLYSs9bubF8BmTr4wzPL-vpR1VczhiRLF2pqA5QXJEHgZG21FbYI01pxn6nA41l94KVipy3M-WdVBBovy8TrtMS9rBM/s320/karunanidhi1.jpg" width="233" /></a></div><div><br />
</div><div>சரி..இப்போ திமுக. தோல்விக்கு பிறகு சட்டசபை பக்கம் வரலை. மன்னிக்க. சட்டசபைக்கு உள்ள வரல. பெரும்பாலும் எல்லாரும் உள்ள இருக்காங்க. வெளிய இருக்கறவங்க ,உள்ள இருக்குறவங்கள போய் பாத்துட்டு இருக்காங்க. அவங்க இப்போ ஏழை கட்சி ஆகிட்டாங்களாம் -திமுக தலைவர் சொல்லியிருக்கார்.. ஆனா நல்ல முடிவு எடுத்திருக்காங்க - தனியா நிக்கறதுன்னு. </div><div></div><div><br />
'உன்னால நான் கெட்டேன்;என்னால நீ கெட்ட'-ன்னு எத்தனை நாள்தான் கோபத்தை அடக்கிட்டு கைகோர்த்து இருக்கறது. இந்த தடவ தனியாவே அடி வாங்கிக்கிறோம்ன்னு காங்கிரஸ்க்கு டாட்டா காமிச்சிட்டார் தாத்தா . இந்த கட்சி சார்பா நிக்கறதுக்கு , ஜெயிலுக்கு போக பயப்படாம தைரியமா இருக்க , வேட்பாளர்கள் கிடைச்சிடாங்க போல .அதுவே பெரிய சந்தோசம். இப்போ இவங்க தனி.<br />
<br />
</div><div></div><div></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBMREIFyIaHG2k46fy6F1hUDCYf181_cxb9425fkRA20WOU_rNV3tWinEi0l84IkWOB3VXia6iyiyo5Fc99MPDzk86qDOphfXqXRM2EJ1i2BEcYzjIQpP3Tdmb8i2q3OKNen2hPtO_LD5r/s1600/180309congress.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" kca="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBMREIFyIaHG2k46fy6F1hUDCYf181_cxb9425fkRA20WOU_rNV3tWinEi0l84IkWOB3VXia6iyiyo5Fc99MPDzk86qDOphfXqXRM2EJ1i2BEcYzjIQpP3Tdmb8i2q3OKNen2hPtO_LD5r/s320/180309congress.jpg" width="261" /></a></div><div><br />
</div><div>அடுத்து காங்கிரஸ். வெளி கூட்டணி எதுவும் எடுபடல. சரி உள்ளயாவது ஒற்றுமையா இருக்கறாங்களானா அப்படி எதுவும் தெரியல. மத்தியில சிதம்பரம் நெலமையும் சரியில்ல;உள்ளூர்ல காங்கிரஸ் கரைவேட்டிக்கும் கட்டம் சரியில்ல. நாடு முழுக்க எதிர்ப்பலை. அது எப்படிங்காணும் இவ்வளவு அடிவாங்கியும் பயமே இல்லாம தனியா ஒட்டு கேக்க வரீங்க..?..</div><div>ஹ்ம்ம் எந்த தைரியத்துல தனியா நிக்கறாங்கன்னு தெரியல. ஆனா தனியா நிக்கறாங்க. </div><div></div><div><br />
பாமக - ரெண்டு மாசம் முன்னாடியே டாக்டர் சொல்லிட்டார் - நாங்க இனி தனி-ன்னு. இப்படி சொல்றோமே ? மக்களாவது நம்மள சேர்த்துக்குவாங்களான்னு ஒரு தடவைக்கு நாலு தடவ யோசிச்சு சொல்லிருக்கணும். இந்த தடவையாவது சொல்லுங்க டாக்டர் - உங்க கொள்கைதான் என்ன? சரி அத விடுங்க.. உலக மகா அதிசயம் .. இவங்களும் தனி.</div><div></div><div><br />
மதிமுக..சாரி - வைகோ தனியா நிக்கறார். </div><div></div><div><br />
மீதி இருக்குற கட்சிகளும் பெருசா எந்த கூட்டணியும் இல்லாம அங்கங்க தனி கடை போட்டுருக்காங்க.. <br />
<div>எத்தனை பேர் மறந்து போய் பழக்கதோசத்துல 'எங்க கூட்டணிக்கு ஒட்டு போடுங்க'-ன்னு சொல்ல போறாங்களோ?!!!? .</div><div>இனி பிரசாரத்துலதான் பெரிய காமெடி இருக்கு. </div></div><div><br />
பிரசாரம் நடக்க நடக்கவே , சொல்லும் விஷயங்களுக்கு ஏற்ப அதிமுகவில இருந்து பல கட்சிகள் சட்டபேரவையில் வெச்ச கூட்டணியிலிருந்து விலக்கப்படும். </div><div></div><div><br />
சரி மக்களே.. கட்சிக்கு தனித்தனியா மார்க் போட ரெம்ப வசதியான சந்தர்ப்பம். அது பூஜ்யம்னாலும் பரவாயில்ல..சந்தோசமா போடுங்க. </div><div>யாருக்கு தெரியும்? இந்த தேர்தல்ல தமிழ்நாட்டுல இருந்து பல கட்சிகள் காணாமலேயே போய்டலாம். </div><div></div><div><br />
முந்துங்கள் இந்த சலுகை இந்த முறை மட்டுமே. இந்த ஒரு முறையாவது மக்கள் எல்லாரும் கூட்டணி வைப்போம். </div><div></div><div><br />
Get Ready Folks...<br />
<br />
</div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-64681799723186314742011-09-15T08:59:00.000+05:302011-09-15T08:59:40.467+05:30பாப்கார்ன் பாக்கெட் - 20110915<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div>என்னிடம் ,ஒரு நான்கு வருடம் முன்னால் சிக்னல் நிறுத்தத்தின்போது ,<br />
விலாசம் தேடி அலைந்து கொண்டிருந்த ஒருவர் அட்ரஸ்ஸை கொடுத்து , நுனிநாக்கு ஆங்கிலத்தில் எங்கே என்று கேட்டார். விலாசம் நூறு ருபாய் நோட்டில். இது யார் கொடுத்தது என்று கேட்டதற்கு பதில் 'Well,I wrote.Why?'.<br />
<br />
பளார் என்று அறைய தோன்றியது.பொறுமையாக இப்படி எழுதாதீர்கள் என்று சொன்னதற்கு , 'பாஸ் , அட்ரஸ் மட்டும் தெரிஞ்சா சொல்லுங்க..அட்வைஸ் வேண்டாம்.<br />
நானே Financing செக்டார்ல தான் ஒர்க் பண்றேன். I know. Moreover that is my money' என்றார்.<br />
பெருமூச்சோடு வழி சொன்னேன். ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாமல் சென்று விட்டார்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKG2961F1JR9v4ysKBlEGCjP5kTZqgnVub2i4PmV8iw1XrOAy8vzWNhDrLAqcmawOFmgcL_pEjcvf6qH-aNky2WWiVzajXnJngtzgS5rg-bbCL1W-Ga9qXTJD1lDmD4jH5HbhX2tFwfHCd/s1600/Old-Indian-Rupees8.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="209" rba="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKG2961F1JR9v4ysKBlEGCjP5kTZqgnVub2i4PmV8iw1XrOAy8vzWNhDrLAqcmawOFmgcL_pEjcvf6qH-aNky2WWiVzajXnJngtzgS5rg-bbCL1W-Ga9qXTJD1lDmD4jH5HbhX2tFwfHCd/s320/Old-Indian-Rupees8.jpg" width="320" /></a></div></div><div></div><div><br />
'செல்வி - சுந்தரம் ' , 'என் உயிர் ரம்யா ',' பிரேம் BE CSC','இளையதளபதி ROCKS ' என்று உங்கள் புக்கில், வீடு சுவற்றில் , அப்பா சட்டையின் பின்னாடி , தாராளமாக எழுதுங்கள் ; ரூபாய் நோட்டில் வேண்டாமே... <br />
<br />
படித்திருக்கிறோம்,அந்த அறிவு கொஞ்சமாவது இருந்தால் இதை மறுபடியும் செய்ய மாட்டோம். இது மாதிரி கிறுக்கல்களால் பல கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவை ஆகின்றன.ATM ' எதுவும் இந்த நோட்டுகளை ஏற்றுகொள்ள மறுக்கின்றன.<br />
<br />
அரசாங்கத்தை அடிக்கடி ஒவ்வொரு விசயத்துக்கும் குற்றம் சொல்லும் நாம் , நம் பக்கம் இருக்கும் சில மிக முட்டாள்தனத்தை கவனிப்பதில்லை.<br />
இதை சொல்லும்போது வார்த்தைகளில் கோபம் தொனிக்க காரணம் , இதை செய்வது படித்தவர்கள் மட்டுமே. எழுதபடிக்க தெரியாதவர்களுக்கு இதை செய்ய இயலாது. <br />
<br />
பணத்தின் மதிப்பு , முதலீடு,அந்நிய செலாவணி ,பங்குவர்த்தகம் பற்றியெல்லாம் ஆதி முதல் அந்தம் வரை பேசும் நாம் , இந்த அர்த்தமற்ற செயலை தடுக்கவும் செய்ய வேண்டும். படித்தவர்க்கும் , படிக்காதவர்களுக்கும் வித்தியாசம் உண்டுதானே..அப்போ அதை செயலில் காண்பியுங்கள்.<br />
<br />
BTW ,நான் அவருக்கு சொன்ன வழி , அவர் காட்டிய அட்ரஸ்க்கு நேர் எதிர் வழி. சொல்லிய நேரம் காலை பத்தரை. அப்போது வேளச்சேரி - தரமணி பக்கம் டிராபிக் எப்படியிருக்கும் என்று உங்களுக்கு சொல்லத்தேவை இல்லை. எனக்கு குற்றவுணர்ச்சியே இல்லை. <br />
He deserves it.<br />
-------------------------------------------<br />
<br />
சட்டசபையில் பல புதுமுகங்கள் இருப்பதால் பார்க்கும் நமக்கு ஒரு அன்னியம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. அதுவும் விஜயகாந்த்,பண்ருட்டி தவிர அருண்பாண்டியன் உள்ளிட்ட தேமுதிக உறுப்பினர்கள் எல்லாரும் freshers . <br />
<br />
கடந்த ஒரு மாதமாக கேப்டன் செய்திகள் பார்த்து வந்தேன். மிக விவரமாகத்தான் இருக்கிறார்கள்.அரசுக்கு ஒத்து ஊதும் வேலையை செய்யும்போதும் , நன்றாக பேலன்ஸ் செய்து தலைவரின் இமேஜையும் காப்பாற்றி வருகிறார்கள். நடுநிலை செய்திகள் இதிலும் துளிகூட இல்லை. <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlJC9P-TiNNlEkiRTIi4w7hyphenhyphenRgTXJEFyPkEv0eboyiqp7iIkpghJXfXhlyMRha-Y01Bftmf0sdrB-n3SMDwxcDkNuzh4bjbFSw12BDfxS4ltHs7uBiUhFYjf9A0cZHB_pbbN-m-a2UDKOq/s1600/06THASSEMBLY_773898f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="215" rba="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlJC9P-TiNNlEkiRTIi4w7hyphenhyphenRgTXJEFyPkEv0eboyiqp7iIkpghJXfXhlyMRha-Y01Bftmf0sdrB-n3SMDwxcDkNuzh4bjbFSw12BDfxS4ltHs7uBiUhFYjf9A0cZHB_pbbN-m-a2UDKOq/s320/06THASSEMBLY_773898f.jpg" width="320" /></a></div><br />
<br />
சட்டசபையில் திருக்குறள் வாசித்ததும் வெளியேறும் திமுக உறுப்பினர்கள் நிலைமை பரிதாபம்தான். காரணம் மொத்தம் இருக்கும் இருபது பேர் என்ன கூச்சல் போட முடியும்? அதுவும் ஒரே இடத்தில இடம் ஒதுக்கப்படாமல் இருக்கும்போது எந்த தைரியத்தில் கத்த முடியும்?<br />
<br />
இருந்தாலும் இப்படியே வெளிநடப்பு செய்துகொண்டே இருந்தால் கட்சி காணாமல் போய்விடும் வாய்ப்பு உண்டு. சரி..எவ்வளவோ சோதனைகளை தாண்டி வந்த சரித்திரம் திமுகவுக்கு உண்டு. இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று பார்ப்போம். <br />
<br />
ஹ்ம்ம்..எந்த மாதிரியும் இல்லாத புது மாதிரியாக ஒரு சட்டசபை இப்போது.பாப்போம்.<br />
<br />
---------------------------------------------<br />
<br />
நேரு பிரதமரை இருந்தபோது கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது கூடியவரை பத்திரிக்கைகளுக்கு புகைப்பட போஸ் கொடுக்க மறக்க மாட்டார். சிலசமயம் 'நேரு ஒரு விளம்பரப்பிரியர்' என்று பேர் வந்தபோது கூட அதை அவர் நிறுத்தவில்லை. <br />
<br />
பிறகு ஒருமுறை இதற்கான காரணம் சொன்னார் -'நாட்டில் எவ்வளவு பேருக்கு படிக்க தெரியும்? எண்ணிக்கை குறைவுதானே..அவர்களுக்கு பத்திரிக்கையில் என் படம் பார்த்தால் நமக்காக அரசு எதோ புதிதாக செய்கிறது என்று நம்பிக்கை வரும் அல்லவா..அதுதான் நோக்கம் ' .தொலைநோக்கான பார்வை.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA-ezWpaLcDC-ZDfQ3s3zmPci_hkIihhFcbguX9VJG-6WTP3pEmAdrMaJy_NFwMZZ4jo6omAOzvlXV-6qkTRt9epYPq_iCcE9jCL782v1tR9PgRRItsxPb6U6MogiCXU1AdsCJZG06WBrG/s1600/manmohan_singh_199455.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" rba="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA-ezWpaLcDC-ZDfQ3s3zmPci_hkIihhFcbguX9VJG-6WTP3pEmAdrMaJy_NFwMZZ4jo6omAOzvlXV-6qkTRt9epYPq_iCcE9jCL782v1tR9PgRRItsxPb6U6MogiCXU1AdsCJZG06WBrG/s320/manmohan_singh_199455.jpg" width="261" /></a></div><br />
இதைபோல,நம் தற்போதைய பிரதமர் முதன்முதலாக ஒரு உருப்படியான காரியம் செய்திருக்கிறார். கண்தானம் செய்திருக்கும் அவரைப் பற்றி அடித்தள மக்களுக்கு தெரியவரும்போது ,கண்டிப்பாக கண்தானம் பற்றி கேள்வி கேட்பார்கள்.விஷயங்கள் புரியும்.நிறைய பேர் அதை பின்பற்றுவார்கள் என்பது உண்மை.<br />
<br />
காரணம் ,கிராமத்து மக்கள் ஒரு நல்லதை யாராவது செய்தார் என்று கேள்விப்பட்டால் தாங்களும் தங்கள் பங்குக்கு செய்யவேண்டும் என்ற வெள்ளந்தி உள்ளம் உடையவர்கள்.<br />
வாழ்த்துக்கள் சிங். இது தனிச்சையா எடுத்த முடிவுன்னு எதிர்பார்க்கலாம். இல்லேன்னா வாழ்த்துக்கள் சோனியா.<br />
---------------------------------------------<br />
<br />
திமுகவுக்கு போன தடவ ஓப்பனிங் நல்லா இருந்துச்சு. ஃபினிஸிங்தான் சரியில்ல.இங்க அதிமுகவுக்கு ஓப்பனிங்கே சரியில்லையே..<br />
<br />
<span id="6_TRN_du"><span id="6_TRN_dv"><span id="6_TRN_dw"><span id="6_TRN_dx"><span id="6_TRN_dy"><span id="6_TRN_dz"><span id="6_TRN_e0">இப்போதான்</span></span></span></span></span></span></span> சமச்சீர் கல்வி விசயத்துல அடிவாங்கி பணிஞ்சு போன அரசு , இப்போ அடுத்த திட்டத்திலும் மண்ணை கவ்வ வேண்டியதாயிருச்சு. அரசு கேபிள் டிவி கொண்டு வந்து நல்லது நடக்கும்னு எதிர்பார்த்த கேபிள் ஆப்பரேட்டர்கள் இப்போ கதிகலங்கி போயிருக்காங்க.<br />
<br />
என்னடா இது கிணறு வெட்ட பூதம் கெளம்புன கதையா இருக்குனு முழிக்க ஆரம்பிச்சு ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் எல்லாம் டிஜிட்டல்மயமாக இருக்கும் இந்த காலத்தில் , பொதிகை சேனல் மாதிரி இன்னும் அனலாக் நெட்வொர்க் பக்கம் போகும் அரசு முறையை ,தலையில் அடித்துக்கொண்டு வெறிக்கிறார்கள் ஆப்பரேட்டர்கள்.<br />
<br />
போன ஆட்சியில கேபிள் இருந்துது , டிவி இருந்துது , கரண்ட் இல்ல..இந்த ஆட்சியில டிவி மட்டும்தான் இருக்கு - அதுவும் கலைஞர் கொடுத்தது.அப்பப்போ கரண்ட் வருது. கேபிள் வரும்;ஆனா வராதுன்னு ஆயிடுச்சு.. <br />
<br />
பாவம் நம்ம பெண்கள். சாப்பாடு இல்லாம இருப்பாங்க..சீரியல் இல்லாம இருக்க மாட்டாங்க.ஆம்பளைகளையும் அலட்சியமா நெனச்சிடாதீங்க..அமைதியா இருப்பாங்க..கிரிக்கெட் பாக்க முடியலைனா மட்டும் ,விளைவுகள் பயங்கரமா இருக்கும்..<br />
<br />
'நான்கு வருஷம் கழித்து வரபோகும் வாக்காள மடையர்களுக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்கவா போகிறது?'ன்னு குறுக்குதனமா யோசிக்காதீங்க.. இப்போவே சரி செய்துடுங்க. தாய்குலங்கள் ஓட்டு மிக முக்கியம் அமைச்சரே..<br />
------------------------------------------------------<br />
<div><br />
சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணிக்கு அறிவிக்கப்பட்ட பரிசுதொகை...அடேங்கப்பா - தலா இருபத்தி ஐந்து ஆயிரம் ரூபாய்.</div><div>இதுதான் தேசிய விளையாட்டுக்கு , அரசு அளிக்கும் மரியாதையா?<br />
<br />
லட்சங்களை போன நூற்றாண்டிலேயே தாண்டி , குறைந்தது அணியில் இடம் மட்டும் <span id="6_TRN_21">பிடித்தாலே</span> போதும் -கிரிக்கெட் வீரருக்கு கோடிகளை சம்பளமாக தரும் அரசு , இதர விளையாட்டுகளுக்கு மட்டும் ஏதோ போனால் போகட்டும் என்று கிள்ளித் தருவது வெட்கப்பட வேண்டிய விஷயம்.<br />
<br />
</div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinL64ckMJX07Z3_7NSRs_6o_kHpmpM-iFq03BHmn5SkFVM-hC6s7I3XkBaVWZBfG-ee3wSRJS0pkxV6Xwcj6HhuXHyAy9C4LwGLGhSj-tnq0czqhRR2Sjn7ogKk6WrHtxLYZZuAmVibHcG/s1600/Indian_hockey_Team.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" rba="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinL64ckMJX07Z3_7NSRs_6o_kHpmpM-iFq03BHmn5SkFVM-hC6s7I3XkBaVWZBfG-ee3wSRJS0pkxV6Xwcj6HhuXHyAy9C4LwGLGhSj-tnq0czqhRR2Sjn7ogKk6WrHtxLYZZuAmVibHcG/s320/Indian_hockey_Team.jpg" width="320" /></a></div><br />
எந்த வீரரும் அந்த பணத்தை வாங்க மறுக்க ,இப்போது அதை ஆறுமுறை உயர்த்தி ஒன்றரை லட்சம் அறிவித்திருக்கிறார்கள். </div><div></div><div>கிரிக்கெட் மோகம் என்பது தவறல்ல..அதே சமயம், மற்ற விளையாட்டில் நம் அணியினர் சாதிக்கும்போது அதை பாராட்ட தவறக்கூடாது. எந்த வீரனுக்கும் அங்கீகாரம்தான் முதல் சம்பளம். </div><div><br />
திறமையானவரை பாராட்டக்கூட வேண்டாம்..ஆனால் கண்டிப்பாக அவமானப்படுத்த கூடாது.. </div><div>மற்றவர்கள் எப்படியோ போகட்டும்.. நாம் குறைந்தது நம் பாராட்டுகளை ஃபேஸ்புக்கிலாவது பகிரலாமே...யோசியுங்கள்..</div>-------------------------------------------<br />
<br />
<div>வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்..அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும் ?</div><div><div><br />
அற்புதம் கண்ணதாசா.. காலம் தாண்டி நிற்கும் கவிஞன்...</div></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/u2uTvseL6Rw?feature=player_embedded' frameborder='0'></iframe></div><br />
-------------------------------------------------</div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-39139851254435356432011-09-07T08:08:00.001+05:302011-09-07T08:10:49.369+05:30மங்காத்தா - A well deserved 50*<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div>இது புதுகதைன்னு யாரும் கண்டிப்பா சொல்ல முடியாது. அதுவும் அடித்தட்டு தமிழ் ரசிகன் கூட குறைஞ்சபட்சம் டப் செய்யப்பட ஹாலிவுட் படத்தை பார்த்து தன்னோட பார்வைய விலாசமாகிட்ட இந்த காலகட்டத்துல , இது மாதிரி ஒரு திருப்பமான கதை வந்ததே இல்லைன்னு சொல்லமுடியாது..தமிழுக்கு இது கொஞ்சம் புதுசு.அவ்வளவுதான்.</div><div><br />
</div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyw2t-vxno3d9rgrBlcsw1IF5kPt4ItGCKy3ffOKdIB78KNPTEaRqLyyeIWRBZdUyxg7ZyfmCxuL17OzT_ba4FTY6tWiZ-iMoTpIzLgte8ClNXKNvhOpUWvRB8UZew2DAAQaZwC66Zs6TM/s1600/mankatha_Poster.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="256" nba="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyw2t-vxno3d9rgrBlcsw1IF5kPt4ItGCKy3ffOKdIB78KNPTEaRqLyyeIWRBZdUyxg7ZyfmCxuL17OzT_ba4FTY6tWiZ-iMoTpIzLgte8ClNXKNvhOpUWvRB8UZew2DAAQaZwC66Zs6TM/s320/mankatha_Poster.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><br />
அதுக்காக Italian Job , Inside Man மாதிரி இப்படி ஒரு பாங்க் ராபரி கதைல வேகத்தை அப்படியே கொண்டு வந்துடாங்கனு பெருமையும் பட முடியல..இடைல ரெண்டு பாட்டு முதல் பாதியில பொறுமையை சோதிக்க வைக்குது.. <br />
<br />
அப்புறம் என்ன படத்த காப்பாத்துது..? <br />
<br />
அஜித் அஜித் அஜித்<br />
<br />
இதுதான் படத்தோட வெற்றி. வேற எதுவும் இல்ல.. <br />
<br />
<div>கிட்டத்தட்ட ஆறு, ஏழு ஆங்கில படங்களிலிருந்து <strike>Copy</strike> inspire செய்யப்பட்டு எடுத்த காட்சிகள்-ன்னு நல்லா தெரிஞ்சாலும் , யாரும் அதை பெருசா குறை சொல்ல முடியல. காரணம் - அஜித் </div><div></div><div><br />
நாலு ஹீரோயின் இந்த படத்துக்கு எதுக்கு..அதுவும் அஞ்சலி , ஆண்ட்ரியா தேவையே இல்ல.. வெறும் ஸ்டார் வேல்யுக்காக இத்தனை பேரை கதைக்குள்ள டைரக்டர் எறக்கியிருக்காருன்னு படத்த கோவிச்சிக்க முடியல. காரணம் - அஜித்.<br />
<br />
ஹீரோ நடுத்தர வயசு , அதுவும் கெட்டவன் , முடியெல்லாம் நரைச்சு தனக்கு வயசு நாப்பது ஆகபோகுதுன்னு அவனே சொல்றான், பஞ்ச் டயலாக் எதுவுமே இல்ல , ஹீரோயினோட கடைசியா சேரவே இல்ல..கிளைமாக்ஸ்ல போலீஸ்கிட்ட செமத்தியா அடி வாங்குறான் .. ஹீரோ எப்படி இருக்கணுமோ அப்படி எந்த இலக்கணமும் இந்த படத்துல ஹீரோவுக்கு இல்ல.. என்னடா தமிழ் படம் எடுத்துருக்கீங்கன்னு சத்தம் போட முடியல .. <br />
காரணம் - அஜித்.<br />
<br />
அட..அதான் கதைக்கு சப்டைட்டில் கூட-'Strictly No Rules' .<br />
<br />
எம்ஜீஆர் கெட்டவரா நடிச்சா மக்கள் ஏத்துக்கமாட்டாங்க .. சிவாஜி டான்ஸ் ஆடி , சண்டை போட்டா கண்டிப்பா எடுபடாது. அடுத்து வந்த ரஜினி இது ரெண்டையும் செஞ்சு சூப்பர் ஸ்டார் ஆனாரு. ( கமல் பாதை வேற.அவர இங்க சேர்க்க வேண்டாம்). ரஜினிக்கு அப்புறம் அந்த வித்தை ஒருத்தருக்கு கைவந்து ,அத மக்களும் ரசிக்கறாங்கன்னா அது அஜித் தான்.<br />
<br />
இல்லைனா வாலியும்,அமர்க்களமும் , அட்டகாசம் வெள்ளைசட்டையும் <br />
<div>ஃப்ளாப் ஆகி படுத்துருக்கும். பில்லா ரீமேக் பண்ண யாரும் இருக்க மாட்டாங்க..</div>முகவரியும் கொடுப்பாரு; தீனாவும் கொடுப்பாரு; ரெண்டுக்கும் கனகட்சிதமா பொருந்துற முகம்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXbNDg9o4VNeO2YjH-Hm2CPHnwx84KAGp-pU27ksAU3TZZLNSl2lkhtf8PMBKw5aj-wYiKMys1rRAJV4HD5zxrtwpO_pUIxzYDOMHh3bJbx0wKih2oB0RUDYkIKBuDO-HTbLgWSMusI_O5/s1600/ajith_mankatha_new_photos.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" nba="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXbNDg9o4VNeO2YjH-Hm2CPHnwx84KAGp-pU27ksAU3TZZLNSl2lkhtf8PMBKw5aj-wYiKMys1rRAJV4HD5zxrtwpO_pUIxzYDOMHh3bJbx0wKih2oB0RUDYkIKBuDO-HTbLgWSMusI_O5/s320/ajith_mankatha_new_photos.jpg" width="294" /></a></div><br />
'Good Cop Bad Cop' <br />
விஷயத்தை அழகா நடிப்புல கொண்டுவர ஒரு ஹீரோவ சரியா பயன்படுத்துனா, லாஜிக் முன்னபின்ன இருந்தாலும் படம் <br />
கண்டிப்பா கல்லா கட்டும்னு முதல நிருபிச்சவர் ஷங்கர் - படம் சிவாஜி.அடுத்து அதை அழகா கையாண்டிருக்கார் வெங்கட்பிரபு.<br />
<br />
வெள்ளை கட்டம்போட்ட நீல சட்டை. மேக்கப் இல்லாத , கருப்பு வெள்ளை கலந்த முடி. நரைத்த தாடி. ஒரு சராசரி , அதிக பில்டப் இல்லாத ஆனா ஆண்மைத்தனமான கேரக்டர் . அதிகபடியா அப்பப்போ கூலிங் கிளாஸ்.வெகு அலட்சியமா தம் அடிச்சிட்டே பேசுற வசனம்-ன்னு தனி ஆவர்த்தனம் பண்ணிருக்கார் அஜித்.<br />
<br />
அர்ஜுன் இருந்தாலும் உண்மையான ஆக்சன் கிங் அஜித் தான். தண்ணியடிச்சிட்டு அடுத்த நாள் தலைய பிடிச்சிட்டு 'இனி மேல சத்தியமா தண்ணி அடிக்க கூடாது'ன்னு புலம்புவதிலிருந்து , வெகு கத்தலா 'இது என் கேம். நான்தான் ஓவர்னு சொல்லுவேன்'ன்னு போனில் வெளுத்துகட்டுவதிலிருந்து ,காரிலிருந்து வெகு ஸ்டைலாக ஜெயப்ரகாஷை தள்ளிவிடும்வரை பாவனைகளின் அத்தனை பௌண்டரியையும் தொட்டிருக்கிறார் அஜித்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCP3Niuf8ItGZixT4UhQdxEolnaDMUCSVRuF__f359N_7EZCe_9zmmR9-nX1Y3kQMUC0MESsUeNOeQwET7bFWmSb3yV3Gz8fV1Yy6H1n5ryOC_W_ZfL-ahvSUJ4yeSF6UajsIyfS9vLo-I/s1600/metromasti_photos.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" nba="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCP3Niuf8ItGZixT4UhQdxEolnaDMUCSVRuF__f359N_7EZCe_9zmmR9-nX1Y3kQMUC0MESsUeNOeQwET7bFWmSb3yV3Gz8fV1Yy6H1n5ryOC_W_ZfL-ahvSUJ4yeSF6UajsIyfS9vLo-I/s320/metromasti_photos.jpg" width="315" /></a></div><br />
இந்த படம் வேறு யாரை வைத்து எடுத்திருந்தாலும் முதல் நாளே தியேட்டரை விட்டு ஓடியிருக்கும்.இப்போதோ படம் இமாலய வெற்றி - உபயம் அஜித் . <br />
விஜய் ரசிகர்களும் மனசார பாராட்டும் படம்.<br />
<br />
வெங்கட்பிரபு நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார்.ஆனால் அவர் சிரிப்பு மூட்ட வழக்கமாக செய்யும் ஃபார்முலா போர் அடிக்க ஆரம்பிச்சிருச்சு. இந்த படத்திற்கு பெரிய திருஷ்டிபொட்டு பிரேம்ஜி அமரன். தம்பியை கொஞ்சம் அடக்கி வாசிக்க வைச்சு , அவருக்கு வீணா கொடுக்கும் பில்டப்பை ஒதுக்கி வைச்சு அடுத்த படம் கொடுக்கலைனா வெங்கட்பிரபு மறுபடியும் நடிக்க வரும் ஆபத்து ரசிகர்களுக்கு இருக்கு. பார்த்துகோங்க. <br />
தம்பிக்காக காமெடிக்கு <br />
மெனக்கெடரத விட்டுதொலைங்க..எங்களுக்கு இப்போ அவர பாத்தா சத்தியமா சிரிப்பு வரல..<br />
<br />
மத்தபடி நீங்க எங்க இருந்தோ கதைய கொண்டு வந்து ரசிகர்களை ரசிக்க வைச்சாலும் 'Spicing it UP' வித்தை உங்களுக்கு நல்லா வருது.வாழ்த்துக்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQJy2Vm-GK5L_VyKQwvrg9lGm-T9PvVJvbrAwYDwe3N8jqRB_uyF5Gv1VTq7iJQgNjfFgkXkGoVn6jB1GKEMqva730LevrFkRAjgWYGGc3jq0mjMa2xTa5kxw4zmJdBqT54d_K7f_regcJ/s1600/Mankatha_Movie_On_Location_Stills_%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" nba="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQJy2Vm-GK5L_VyKQwvrg9lGm-T9PvVJvbrAwYDwe3N8jqRB_uyF5Gv1VTq7iJQgNjfFgkXkGoVn6jB1GKEMqva730LevrFkRAjgWYGGc3jq0mjMa2xTa5kxw4zmJdBqT54d_K7f_regcJ/s320/Mankatha_Movie_On_Location_Stills_%25281%2529.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div>தன் கூட்டாளிகளை எதிரிகள் தியேட்டர் வாசலில் சுத்தி வளைச்சு நிற்கும்போது, ஜெயப்ரகாஷ் பின்னால் மெதுவா துப்பாக்கியோடு நடந்து வந்து கை தூக்கி அஜித் சிரிக்கும்போது , விசில் சத்தமும் 'தல' கூச்சலும் காதை பிளக்குது.. <br />
<br />
மங்காத்தா பேருக்கான அர்தத்த கடைசியா தெரிய வரும்போது கைதட்டல் தெறிக்குது..<br />
<br />
ஆக , அத்தனை பேர் இருந்தாலும் , படம் முழுக்க தெரிவது அஜித் தான்.எல்லா பாவத்தையும் கங்கை கொண்டுபோவது மாதிரி , படத்தோட எல்லா குறையையும் அஜித்தோட அசத்தல் நடிப்பு & இமேஜ் தட்டிட்டு போய்டுச்சு.<br />
<br />
மங்காத்தா - அஜித்தின் 'சிவாஜி'.. </div></div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-2807599191291671242011-09-05T09:49:00.000+05:302011-09-05T09:49:33.335+05:30மூன்றாம் கடவுள் தினம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div closure_uid_92ghx="204">ஆசிரியர்கள் தினமாக செப்டம்பர் ஐந்தை அப்போதுதான் அறிவித்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. ஒரு கல்லூரியில் அந்த நாளை கொண்டாட ,விழா ஏற்பாடு செய்து ,அங்கே பணி புரிந்த விரிவுரையாளர்களை பேச அழைத்தனர். எல்லாரும் ஆசிரியர் தின பெருமையைப் பற்றி விலாவரியாக பேச, </div><div> <b>சந்திர மோகன் ஜெயின் </b> என்னும் ஒருவர் மட்டும் தன் முறை வந்ததும் இப்படி சொன்னார்:</div><div><div closure_uid_92ghx="203"><br />
</div><div closure_uid_92ghx="203">'ஒரு ஆசிரியராக இருந்து , அதை விட்டு விலகி <span id="6_TRN_1r">ஜனாதிபதியாக</span> பொறுப்பேற்றுகொண்ட ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர்கள் தினமாக கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.ஒரு வேளை அவர் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு , மீண்டும் ஆசிரியர் பணிக்கு திரும்பினால், அவர் திரும்பிய அந்த நாளை ஆசிரியர்கள் தினமாக வெகு சிறப்பாக கொண்டாடலாம்' என்று பொட்டில் அடித்ததுபோல் சொல்லிவிட்டு சென்றார்.</div><div closure_uid_92ghx="203"><br />
</div></div><div><div closure_uid_92ghx="205">பின்னாளில் அந்த<strong> </strong>சந்திர மோகன் ஜெயின் , மக்களால் ஓஷோ என்று கொண்டாடபட்டார். </div></div><div>-----------------------------------</div><div><br />
<div closure_uid_92ghx="206">திலகர் காலத்தில் சுதந்திரம் கிடைப்பதற்கான சாத்தியகூறுகள் அதிகம் இருந்தன.அப்போது அவரை அணுகிய நண்பர்கள் , சுதந்திர இந்தியாவில் அவர் வகிக்க விரும்பும் பதவியைப் பற்றி நிறைய ஆலோசனைகள் கூறியபடி இருந்தனர். சிலர் , அவரை ஜனாதிபதியாக வேண்டும் என்றும் , சிலர் பிரதமமந்திரி ஆக வேண்டும் என்றும் சொல்ல , திலகர் கொஞ்சங்கூட தயங்காமல் சொன்ன பதில்:</div><div closure_uid_92ghx="206"><br />
</div></div><div><div closure_uid_92ghx="207">'நான் ஏன் பிரதமமந்திரி ஆக வேண்டும்? நான் மீண்டும் என் ஆசிரியர் பணிக்கு செல்வேன்.. நூறு பிரதமர்களை உருவாக்குவேன்..'</div></div><div>-------------------------------------<br />
<div closure_uid_auox0c="115"><div><br />
<div closure_uid_92ghx="208">நீங்கள் ஓஷோவை ஆதரிக்கிறீர்களோ ,அல்ல திலகர் வழியை பின்பற்றுகிறீர்களோ எதுவும் தவறில்லை. ஆனால் எந்த துறை</div><div closure_uid_92ghx="208">வல்லுனரையும் உருவாக்கும் ஆசிரியர் இனத்தை வாழ்த்த ,</div></div><div>அவர்களுக்கு நன்றி செலுத்த வருடத்தில் ஒரு நாள்,அது எந்த நாளாக இருந்தாலும் சரி, ஒதுக்குவது மிக முக்கியம்.</div><div></div><div><br />
<div closure_uid_92ghx="209">உலகறிந்த பெரியவர்களைத் தவிர, என் வாழ்க்கையில் நான் சந்தித்த யாரையும் முன்மாதிரியாய் நினைத்து முன்னேற இயலவில்லை.ஆனால் ஒரு சிலர் நாம் நினைவுப்படுத்தாமலேயே , நம் மனதில் அவ்வப்போது வந்து நமக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துவார்கள். அதில் கண்டிப்பாக நமக்கு ஆசிரியராய் இருந்த ஒருவராவது இருப்பார்.அப்படி இல்லையென்றால் நீங்கள் </div></div><div><div closure_uid_92ghx="210">அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று அர்த்தம். நானும் கிட்டத்தட்ட அப்படிதான் , அவரை சந்திக்கும் வரை.</div><div closure_uid_92ghx="210"><br />
</div></div><div><div closure_uid_92ghx="115"><br />
</div><div class="separator" closure_uid_92ghx="163" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjc_0uU4I5WFbQtAL_qGky-8O51ABuEtZhYHu58rolsMcPSqXGFflDSEwlQCbl45MM92fU4KEs6O9woia2XAYIGgb5CTNhmwzdJW3lUENx-bJKn7zr2G89ODGZXtN7g89Ty-R3TEUxDZHre/s1600/im0711_teacher.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="231" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjc_0uU4I5WFbQtAL_qGky-8O51ABuEtZhYHu58rolsMcPSqXGFflDSEwlQCbl45MM92fU4KEs6O9woia2XAYIGgb5CTNhmwzdJW3lUENx-bJKn7zr2G89ODGZXtN7g89Ty-R3TEUxDZHre/s320/im0711_teacher.jpg" width="320" xaa="true" /></a></div><div closure_uid_92ghx="115"><br />
</div><div closure_uid_92ghx="115"><br />
</div></div><div closure_uid_auox0c="116">பதினோராவது வகுப்பு தொடங்கியபோது , புதிதாக எங்கள் பள்ளிக்கு வந்து சேர்ந்தார் முத்துகுமாரசாமி - பௌதீக ஆசிரியர் .MKS என்று சுருக்கி கூப்பிட சொன்னார். </div><div closure_uid_auox0c="116"><div><div closure_uid_92ghx="211"><br />
</div><div closure_uid_92ghx="211">எல்லாரும் ஆசிரியர் பணி என்ன என்பதில் மிக சரியான ஒரு தவறான அபிப்ராயம் வைத்திருக்கிறோம்.பாடம் சொல்லிக் கொடுப்பவன்தான் வாத்தியார் என்று. அல்ல. வாழக் கற்றுக்கொடுப்பவன்தான் உண்மையான குரு. MKS இரண்டாம் வகை. </div><div closure_uid_92ghx="211"><br />
</div></div><div><div closure_uid_92ghx="212">எதற்கும் வளைந்துகொடுக்காத தைரியம். நேராக கண்ணை ஊடுருவி மனதைப் படிக்கும் பார்வை. </div><div closure_uid_92ghx="212">யாரையும் அடிக்க தேவையில்லை - வெறும் எச்சரிக்கையில் மட்டுமே மாணவனின் தவறை ஒத்துக்கொள்ள வைத்து விடும் கண்ணியம். இதுதான் MKS.</div><div closure_uid_92ghx="212"><br />
</div></div><div closure_uid_auox0c="121"><div closure_uid_92ghx="213">வகுப்பில் யாரையும் கண்டிக்க மாட்டார்.அத்தனை பேர் முன்னிலும் அவமானபடுத்தமாட்டார்.அதிகமாக போனால் அவரின் கோபத்தின் உச்சக்கட்டம் 'Quit the hall'லில் முடியும். தனியாக அழைத்து தவறை சொல்லி திருத்துவார்.திருந்த வேண்டும்.இல்லையென்றால் கண்டிப்பாக திருத்துவார். </div></div><div closure_uid_auox0c="121"><br />
பாடம் நடத்தும்போது புத்தகம் அவர் கையில் என்றுமே இருந்ததில்லை. வெறுங்கையை வீசி வகுப்புக்கு வரும் ஒரே வாத்தியார் அவர்தான். அவர் நடத்துவதை ஒரு முறை கவனித்தால் , கண்டிப்பாக புத்தகத்தை மறுபடியும் மேயத்தேவை இல்லை.<br />
<div closure_uid_auox0c="123"><br />
<div closure_uid_92ghx="214">'Be Black or White' என்பதற்கு மிக சிறந்த உதாரணம். எந்த சூழ்நிலையில் எப்படி இருக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும்.மார்க் எடுக்கவில்லை என்றால் வார்த்தையாலேயே <span id="6_TRN_8w"> புரட்டி எடுப்பவர் , </span> மாணவர்கள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு </div><div closure_uid_92ghx="214"> சுற்றுலா கூட்டிச்சென்று கூடப்படிக்கும் மாணவன் போல் விளையாடுவார். </div></div><div closure_uid_auox0c="123"><br />
</div><div closure_uid_92ghx="215">புத்தகத்திற்கு அட்டை போடாமல் கந்தலாக வைத்திருக்கும் மாணவனைப் பளார் என்று அறையும் ஆசிரியர் மத்தியில் , அவர் புன்னகையுடனே இப்படி சொன்னார் - 'எவ்வளோ அழகான பையன் நீ. புத்தகத்தையும் அதே மாதிரி வெச்சா நல்லா இருக்கும் இல்ல..?' . அடுத்த நாள் புத்தகம் பளீர்.</div><div closure_uid_92ghx="215"><br />
</div><div closure_uid_92ghx="217">மொழிபாடங்களிலும், கணிதத்திலும் நல்ல மதிப்பெண் எடுக்கும் நான் இயற்பியலிலும் , பௌதீகத்திலும் ஒரு சுமார் ரகம்தான்.காரணம் எனக்கு பிடிக்காத பாடத்தில், ஆர்வம் இல்லாமல் எதோ படிக்கவேண்டுமே என்று காட்டிய மெத்தனம்.</div><div closure_uid_92ghx="218"><br />
</div><div closure_uid_92ghx="218">என் விஷயத்தில் அவர் முடிவெடுக்க சிரமபட்டார். மோசமான மாணவன் என்று முடிவெடுக்கவும் முடியவில்லை அதே சமயம் அவர் பாடத்தில் மட்டும் அக்கறை காட்டாமல் இருப்பவனை விடவும் முடியவில்லை. ஒருநாள் மிக வருந்தி என்னை அழைத்து சொன்னார் - ' நல்லா படிக்கிறவன் நீ. ஆனா பிடிக்காதத, வலுக்கட்டாயமா படிக்க சோம்பேறித்தனம்.உன் விருப்புவெறுப்பை பாடத்துல காட்டக்கூடாது. பின்னால வருத்தபடுவ.போ' . </div><div closure_uid_92ghx="218"><br />
</div><div closure_uid_92ghx="218">அவர் சொன்ன பின்னால , ரிசல்ட் வரும்போது வந்தது. பௌதீகத்தில் மட்டும் ஒரு முப்பது குறைந்து என் இஞ்சினீரிங் கட்-ஆப் மார்க்கில் ஓரளவு நல்ல அடி. மெரிட் சீட் கிடைக்க விடாமல் தடுத்தது ,அவர் சுட்டிக்காட்டிய என் மெத்தனம்.வருத்தப்பட்டேன்.</div><div closure_uid_92ghx="219"><br />
</div><div closure_uid_92ghx="219">வெறும் மனப்பாடம் செய்வது அவருக்கு பிடிக்காது. அந்த விஷயத்தில் மதிப்பெண் என்ன எடுத்தாலும் பாராட்ட மாட்டார். புரிதல்தான் அவர் இலக்கு. டியுசன் எடுக்கும்போது செருப்பு அணிந்து பாடம் நடத்த மாட்டார். அவர் வீடு திருவிழா போல் வண்டிகளால் சூழப்பட்டிருக்கும்.அவர் சோர்வாக இருந்து நான் பார்த்ததில்லை.</div><div closure_uid_92ghx="219"><br />
</div><div closure_uid_92ghx="219"> ஒரு கல் , ஆணி, பை, சாக்பீஸ் என எது கையில் கிடைத்தாலும் அதை வைத்து அழகாக ,சொல்லவேண்டிய விஷயத்தை விளக்குவார்.ஒருமுறை , ப்<span>ஃ</span>யூஸ் போன ட்யுப்லைட்டை கரண்ட் கம்பத்தில் போகும் வயர்கள் அருகில் பிடித்தால் அது எரியும் என்று அவர் சொல்ல , கிட்டத்தட்ட இருபது பேர் ஏழு , எட்டு ட்யுப்லைட்களை இரவில் அப்படி செய்து பார்த்து ஏதோ நாங்களே அந்த உண்மையை கண்டுபிடித்த மாதிரி சத்தம் போட்டு அக்கம்பக்கம் இருப்பவர்கள் துரத்தும் வரை சந்தோசத்தை கொண்டாடினோம். </div><div closure_uid_92ghx="219"><br />
</div><div closure_uid_92ghx="219">வசதி குறைந்த மாணவர்களிடம் அவர் எந்த கட்டணமும் வாங்கியதில்லை. அதையும் அவரால் உதவிபெற்ற மாணவன் ஒருவன் சொல்லித்தான் எனக்கு தெரியும். </div><div closure_uid_92ghx="219"><br />
</div>அவரை பொறுத்தவரை நான் அவரிடம் பயின்ற மாணவரில் ஒருவன். என்னை சரியாக நினைவு வைத்திருப்பாரா என்பது சந்தேகமே.இல்லையென்றாலும் தவறில்லை.நினைவில் வைக்கும் அளவுக்கு நான் அவருக்கு எந்த பெருமையையும் தந்ததில்லை.<br />
<div closure_uid_92ghx="165"><br />
</div><div closure_uid_92ghx="165"><br />
</div><div class="separator" closure_uid_92ghx="187" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgutd9ABWZWViRulOzNDnvlPNZHggao2m7vxc0dB2VCcdzjW5RekwevcUXY9gTwEA2rvGa1CMM-MIpYwdebw4OgzKZ4tz7DQjRYVgmffAa22_s6Uid2eubZPxjY36-K_7fm5Bhk6qYrEVJm/s1600/School-Blackboard.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgutd9ABWZWViRulOzNDnvlPNZHggao2m7vxc0dB2VCcdzjW5RekwevcUXY9gTwEA2rvGa1CMM-MIpYwdebw4OgzKZ4tz7DQjRYVgmffAa22_s6Uid2eubZPxjY36-K_7fm5Bhk6qYrEVJm/s320/School-Blackboard.jpg" width="320" xaa="true" /></a></div><div class="separator" closure_uid_92ghx="187" style="clear: both; text-align: center;"><br />
</div><div closure_uid_92ghx="165">பதினோரு வருடம் கடந்தாயிற்று.இன்று வரை எதை செய்தாலும் ஒரு ஒழுங்கும்,அக்கறையும்,சரியாக செய்தால் எவருக்கும் பயப்படத் தேவையில்லை என்ற தைரியமும் கொண்டிருப்பது அவரிடம் கற்ற பாடம்தான்.எதிலும் <span id="6_TRN_8q">Practical அணுகுமுறை</span> என்பது அவர் சொல்லிகொடுத்த மிகபெரிய மந்திரம்.</div><div closure_uid_92ghx="165"><br />
</div><div closure_uid_92ghx="165">நான் கடைபிடிக்கும் வாழ்க்கைமுறை யாராவது பாரட்டும்படியிருந்தால் அந்த பாராட்டு அவருக்கே சேரும். அவர் வாழும்முறையை பார்த்தே அதை மிகத்தெளிவாக கற்றுக்கொண்டேன். அவரிடம் இதுவரை நான் சரியாக கற்றுகொள்ளாதது..வேறென்ன? பௌதீகம்தான்.</div><div closure_uid_92ghx="165"><br />
</div><div closure_uid_92ghx="164">இப்படி எத்தனையோ ஆசிரியர்கள் , நம்மை வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள்.படிக்கும் காலத்தில் அவர்களை , அவர்களின் கட்டுபாடுகள் நமக்கு பிடிக்காமல் போனாலும் காலம் தாண்டியும் நாம் அவர்களுக்கு கட்டுப்பட்டுள்ளோம்.</div><div closure_uid_92ghx="220"><br />
</div><div closure_uid_92ghx="220">இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்.</div></div></div></div></div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-19314028361510682052011-09-03T08:37:00.000+05:302011-09-03T08:37:29.681+05:30பாப்கார்ன் பாக்கெட் - 201100903<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div closure_uid_q5wxxj="196" closure_uid_qi5hjk="107"><div><div closure_uid_c2gsl5="228"><div closure_uid_q5wxxj="113">தூக்குதண்டனையை ரத்து செய்ய கோரி உண்மையான போராட்டம் நடந்து வருகிறது.அதில் கிட்டத்தட்ட வெற்றியும் அடைந்து விட்டோம். </div><div closure_uid_q5wxxj="113"><br />
</div><div closure_uid_q5wxxj="113">சீட்டுபெற பேரம் பேசி இரண்டு திராவிட கட்சிகளாலும் ஒதுக்கப்பட்டாலும், எத்தனையோ சறுக்கல்களை சந்தித்தாலும், விமர்சனங்களால் காயப்பட்டிருந்தாலும்,கட்சியை ,அதன் தரத்தை <span id="6_TRN_8o">தொண்ணூறு </span><span id="6_TRN_8p">சதவீதம்</span> இழந்திருந்தாலும், இன்னும் எத்தனையோ 'உம்'களுக்கு நடுவிலும் <span id="6_TRN_9q">ஈழத்தமிழர்கள்</span> விஷயத்தில் மட்டும் கலப்படமில்லாத அக்கறை காட்டி வருகிறார் வைகோ.மனமார்ந்த வாழ்த்துக்கள் போர்வாளே..</div><div closure_uid_q5wxxj="113"><br />
</div><div closure_uid_q5wxxj="113"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2os_JszXv_3gBjKF__yN49uveHc6JwgfKtt0IcmWrh1avzqeGWRElmPx4hfNFm_BXUH9fZLKA6nuQya4e9DJaZfGcy53ofRNo2hecZX5RL8Q9rfkfnXK59u98usCAWiiia4eEJJuyInKE/s1600/Vaiko1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2os_JszXv_3gBjKF__yN49uveHc6JwgfKtt0IcmWrh1avzqeGWRElmPx4hfNFm_BXUH9fZLKA6nuQya4e9DJaZfGcy53ofRNo2hecZX5RL8Q9rfkfnXK59u98usCAWiiia4eEJJuyInKE/s320/Vaiko1.jpg" width="320" xaa="true" /></a></div><br />
<div closure_uid_q5wxxj="139">இந்த போராட்டத்தில் பழைய வைகோவின் தீரத்தையும் , வேகத்தையும்,நேர்மையையும் </div><div>பார்த்தது உண்மை... பொடா சிறைவாசம் எதுவும் இவர் துணிச்சலை துளி கூட குறைக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. </div><div closure_uid_q5wxxj="139"><br />
</div><div closure_uid_q5wxxj="139">மக்கள் என்ன உங்களை வேண்டுமென்றா ஒதுக்கினார்கள்? தடம் மாறி சென்ற விளைவு அது.. உண்மையில் இப்போது நீங்கள் வனவாசம் முடிந்து வந்தது போலிருக்கிறது போனதெல்லாம் போகட்டும். மற்றவைக்கு எப்படியோ, எங்கள் ஈழ சகோதரர்களை காப்பாற்ற , அவர்களுக்கு குரல் கொடுக்க நீங்கள் கண்டிப்பாக எங்களுக்கு வேண்டும் வைகோ. திரும்பி வந்த உங்களை வரவேற்கிறோம்.</div></div></div><div closure_uid_c2gsl5="117"><div closure_uid_c153d2="104">------------------------------------------</div><br />
தமிழ் புத்தாண்டு இனி மறுபடியும் ஏப்ரல் இல். இதை அறிவித்து , அடுத்த தேர்தலில் அதிமுக ,தனது சாதனை பட்டியலில் 'மாணவர்களுக்கு மீண்டும் ஒரு நாள் விடுமுறை வாங்கி தந்த அதிமுக அரசு' என்று சொல்லி மாணவர்களின் ஓட்டை தாராளமாக வேட்டையாடலாம். உங்களுக்கு அதுக்கு உரிமை இருக்கு அம்மா. <br />
<div closure_uid_c2gsl5="227"><br />
</div><div closure_uid_c2gsl5="231"><div closure_uid_r69rk7="118"><div closure_uid_qi5hjk="172">ஹ்ம்ம்..திமுக அறிவிச்சதுல , வேற என்ன மிச்சம் இருக்கு மாத்தறதுக்கு?</div><div closure_uid_qi5hjk="173">--------------------------------------------</div></div></div></div><div><div closure_uid_c2gsl5="228"><div closure_uid_q5wxxj="141"><br />
</div><div closure_uid_q5wxxj="141">பயங்கரம் :</div><div closure_uid_q5wxxj="141"><br />
</div></div></div><div class="separator" closure_uid_c2gsl5="181" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieh3YEkxlKo5jfj04BskmuS9zdYstSmBDh8yvBBq1FJR5QeAz_kfHWhBU0Cn2AcChqozgCyeKYwPL_hSDXzJEHiGEGPoUxHepTNI44hHqd1-BOpCvy18uwpevTb8iElSEFgj1Sax8l_PIk/s1600/315763_241591415882754_100000956922083_669263_6912641_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieh3YEkxlKo5jfj04BskmuS9zdYstSmBDh8yvBBq1FJR5QeAz_kfHWhBU0Cn2AcChqozgCyeKYwPL_hSDXzJEHiGEGPoUxHepTNI44hHqd1-BOpCvy18uwpevTb8iElSEFgj1Sax8l_PIk/s320/315763_241591415882754_100000956922083_669263_6912641_n.jpg" width="320" xaa="true" /></a></div><div class="separator" closure_uid_c2gsl5="181" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" closure_uid_c2gsl5="181" style="clear: both; text-align: center;"><br />
</div>அதிபயங்கரம் :<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiN1zRgKhYPLtjX9DEzjLB8CE2vKoZ0fiWdI96UlzP3-dJsEGc3ledhCEY7KGt5UlF7gI4uqzgaO_U7BtSg8fbqzHFnn5giZ7rtNH1C2caHGXPnRyTTTQT54FcPuilXgHWrmQA58suVd8G5/s1600/2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiN1zRgKhYPLtjX9DEzjLB8CE2vKoZ0fiWdI96UlzP3-dJsEGc3ledhCEY7KGt5UlF7gI4uqzgaO_U7BtSg8fbqzHFnn5giZ7rtNH1C2caHGXPnRyTTTQT54FcPuilXgHWrmQA58suVd8G5/s320/2.jpg" width="320" xaa="true" /></a></div><br />
<br />
<div closure_uid_c2gsl5="186"><div closure_uid_h8hi2u="108"><div closure_uid_q5wxxj="195">தீவிரவாதம்:</div></div></div><div closure_uid_c2gsl5="186"><br />
</div><div class="separator" closure_uid_qi5hjk="151" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixZ4Xzm0uOlZXSkvtQLDfxHL1-jKPl7Qpg8cZIgUzrmRf-kc7lebWOx9mPCVG-qUzyXiNzRxn1j7djo09S3pu4nu3quO3qZKeA-vZ0W3yAjk1uWJMdjkTs34nYcOpLf9bzQ_5rhAeaKrwO/s1600/3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixZ4Xzm0uOlZXSkvtQLDfxHL1-jKPl7Qpg8cZIgUzrmRf-kc7lebWOx9mPCVG-qUzyXiNzRxn1j7djo09S3pu4nu3quO3qZKeA-vZ0W3yAjk1uWJMdjkTs34nYcOpLf9bzQ_5rhAeaKrwO/s320/3.jpg" width="320" xaa="true" /></a></div><div class="separator" closure_uid_qi5hjk="151" style="clear: both; text-align: center;"><br />
</div><div closure_uid_q5wxxj="130">விஜய் ரசிகர்களே,உங்க தலைவர் வாழ்க்கை இப்போ உங்க கைலதான் இருக்கு.. யார் ஆட்சி, காலநேரம் எல்லாம் பாத்துட்டு கட்அவுட் வைங்க..</div><div closure_uid_c2gsl5="186"><div closure_uid_q5wxxj="197">--------------------------------------------------------------</div><div closure_uid_q5wxxj="197"><br />
</div></div><div closure_uid_c2gsl5="186" closure_uid_qi5hjk="169"><div closure_uid_q5wxxj="198">அமெரிக்காவோட அணு ஒப்பந்தம் போடலாமா வேண்டாமான்னு ஓட்டெடுப்பு எடுக்கும்போது , அலம்பலா பேசி கைத்தட்டு வாங்கிய லாலு , இப்போ அதே மக்களவையில் தூங்கி , காமெடி பீஸ் ஆகியிருக்கார்.. </div><div closure_uid_q5wxxj="198"><br />
</div><div closure_uid_q5wxxj="198">சபாநாயகர் மீராகுமார் அதைப்பார்த்து , லாலு கட்சி எம்பியை அழைத்து ,அவரை எழுப்ப சொல்லியிருக்கிறார். தூங்கி வழிந்து,பின் அசடு வழிந்து அமர்ந்திருக்கிறார் லாலு.</div><div closure_uid_q5wxxj="198"><br />
</div><div closure_uid_q5wxxj="131">பதினைந்து வருடத்திற்கு முன் ஏதோ ஒரு டப் செய்யப்பட்ட விஜயசாந்தி படத்தில் இதைப்போல ஒரு காட்சியை பார்த்த ஞாபகம்.மேலாக பார்த்தால் </div>சிரிப்பா இருக்குற இந்த விஷயத்தில , என்னால சிரிக்க முடியல.. அவமானப்பட்டது லாலு அல்ல..அவரை தகுதியானவர்ன்னு தேர்ந்தெடுத்து அனுப்பி வெச்ச தொகுதி மக்கள்.<br />
<div closure_uid_q5wxxj="131"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMQvQJ8Ga_aiJZD-lkNvG4GPF1uoJLZY6OdtD57fvtpxajJJYZFDGoq68lb2yMw8c_4thb89XFXQEuDJzuJ6Dbk-RHYdl7aPbXblUnAw8S_v35rtkDvq2xDIWg2P3zQFX7sZlDDFfbMpfR/s1600/untitled.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMQvQJ8Ga_aiJZD-lkNvG4GPF1uoJLZY6OdtD57fvtpxajJJYZFDGoq68lb2yMw8c_4thb89XFXQEuDJzuJ6Dbk-RHYdl7aPbXblUnAw8S_v35rtkDvq2xDIWg2P3zQFX7sZlDDFfbMpfR/s320/untitled.bmp" width="297" xaa="true" /></a></div><div closure_uid_q5wxxj="201"><br />
</div><div closure_uid_q5wxxj="201">தனிப்பட்டு அவரோட இடத்துல இருந்து பாத்தா இது கூட தப்பு இல்ல..ஆளும்கட்சியோட கூட்டணி வெச்சிருந்தாலாவது எதிர்க்கட்சிய பார்த்து சிரிக்கலாம்,பேச நெறைய நேரம் தருவாங்க..தைரியமா எதிர்த்து பேசலாம்,என்ன பேசினாலும் கைதட்ட ஆள் இருக்கும்..பண்ணைல இருந்தாலாவது ஆடு மாடு கணக்கு பார்த்திருக்கலாம்..</div><div closure_uid_q5wxxj="201"><br />
</div><div closure_uid_q5wxxj="201">இப்போ என்னத்த பேசி,என்ன பண்ண..பேசாம அமைதியா கவனிக்கலாம்னா பாதி புரியவே மாட்டீங்குது..அவரும் என்ன செய்வார் பாவம்..</div>-------------------------------------------------</div><div closure_uid_qi5hjk="146"><br />
பெரிய சூதாட்டம்..</div><div closure_uid_c2gsl5="271"><div closure_uid_qi5hjk="147"><br />
சன் பிக்சர்ஸ் -> ஸ்டுடியோ கிரீன் -> க்ளவுட் நைன் -> ராடான் பிக்சர்ஸ் -> மறுபடியும் சன் பிக்சர்ஸ்.</div></div><div closure_uid_c2gsl5="271"><br />
</div>நிஜமாவே 'மங்காத்தா'தான். <br />
<br />
<div class="separator" closure_uid_qi5hjk="145" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZDO0nql7Pu1dzqP2TM21LU-GZsjHS7DGFTLQs82meQJPLlskDxtN0aES6TK8JlXlCpHTVrmqc5WsQPvcGqzzxyzW-_mxOudhy3q7EoVkxxGPZKX4jW6Nm2Tn3kPoYOf1zd6rCnZKH4dVY/s1600/Mankatha_Latest_Release_Poster_Banner_Wallpaper.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZDO0nql7Pu1dzqP2TM21LU-GZsjHS7DGFTLQs82meQJPLlskDxtN0aES6TK8JlXlCpHTVrmqc5WsQPvcGqzzxyzW-_mxOudhy3q7EoVkxxGPZKX4jW6Nm2Tn3kPoYOf1zd6rCnZKH4dVY/s320/Mankatha_Latest_Release_Poster_Banner_Wallpaper.jpg" width="256" xaa="true" /></a></div><div class="separator" closure_uid_qi5hjk="145" style="clear: both; text-align: center;"><br />
</div><div closure_uid_qi5hjk="148"><div closure_uid_q5wxxj="202">வசூல் வெளுத்துக்கட்டுது. நாலு <span>ஃ</span>ப்ளாப்க்கு நடுவே ஒரு ஹிட் படம் கொடுத்தாலும் நச்சுனு அடுத்த ரெண்டு வருஷம் பேசப்படற மாதிரி அத கொடுக்கறதுதான் அஜித் ஸ்பெசாலிட்டி. </div><div closure_uid_q5wxxj="202"><br />
</div><div closure_uid_q5wxxj="202">விஜய்க்கு வேலாயுதம் கை கொடுத்து , போட்டியை சமப்படுத்துவாரா ,இல்ல இந்தியா கிரிக்கெட் டீம் மாதிரி சரணடைவாரானு படம் வரவரைக்கும் காத்திருக்கலாம். </div><div closure_uid_q5wxxj="202"><br />
</div><div closure_uid_q5wxxj="202">Ajith Fans , Ya Damn sure U can open the bottle...</div></div>---------------------------------------<br />
<div closure_uid_c2gsl5="223" closure_uid_qi5hjk="149"><div closure_uid_qi5hjk="171"></div><div closure_uid_qi5hjk="171"><div closure_uid_q5wxxj="206">என் அம்மாவோட எதாவது புது கோவிலுக்கு போனா கடவுளைப் பார்த்து கும்பிட்டு, என்கிட்ட <span id="6_TRN_o">சொல்லுவாங்க - ' ரெம்ப சக்தியான சாமிடா.. நல்லா கும்பிட்டுக்கோ'</span></div></div><div><div closure_uid_q5wxxj="205">எனக்கு சிரிப்பு தாங்காது - 'ஏம்மா? சாமினாலே சக்தியோட இருக்குற ஒன்னுதான ? அது என்ன ரொம்ப சக்தியான சாமி..? அப்போ மத்த சாமிக்கெல்லாம் சக்தி கம்மியா இருக்கா?'</div><div closure_uid_q5wxxj="205"><br />
</div></div><div>'<span id="6_TRN_3a">அதிகப்ரசங்கி</span>..எதிர்பேச்சு பேசாம சாமிய கும்பிடுடா..'</div><div><div closure_uid_c2gsl5="119"><br />
<div closure_uid_q5wxxj="207">பேச்சுவாக்கில சில சமயம் நாம சொல்லற <span id="6_TRN_p">வசனங்கள்</span> அர்த்தம் இல்லாததா இருக்கும்.சிரிப்பாகவும் இருக்கும்.. </div><div closure_uid_q5wxxj="207"><br />
</div></div></div><div closure_uid_c2gsl5="120">'அன்னா ஒரு நேர்மையான காந்தியவாதி..' - காந்தியவாதினாவே அவர் நேர்மையாதானப்பா இருந்தாகணும்.</div><div closure_uid_c2gsl5="120"></div><div closure_uid_c2gsl5="120"><div closure_uid_q5wxxj="210"><br />
</div><div closure_uid_q5wxxj="210">இந்த மாதிரி ஒரே அர்த்தத்த தொனிக்கிற இரு வார்த்தைகளை தொடர்ந்து <span closure_uid_q5wxxj="209" id="6_TRN_y">சொல்லுறதுக்கு ஆங்கிலத்துல ஏதோ பேர் .. மறந்து போய்டுச்சு..</span></div><div closure_uid_tgoecj="115"> இதெல்லாம் நம்ம அன்றாட வாழ்க்கைய அழகாக்குற சிறு தவறுகள்.. </div><div><div closure_uid_q5wxxj="211">அனுமதிக்கலாம்..</div>-------------------------------------<br />
<br />
இசையில் சாதனையின் உச்சம்..<br />
<br />
<div closure_uid_q5wxxj="212">ஏற்றஇறக்கம்தான் இசையின் தரத்தையும் அதன் மயக்கத்தையும் அதிகரிக்கும் ஒரே விஷயம்.அதை தியாகம் செய்துவிட்டு ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரு பாடலை காலம் தாண்டி மக்களை ரசிக்க வைத்திருப்பது இசைஞானியைத் தவிர யாரால் முடியும்? </div><div closure_uid_q5wxxj="212"><br />
</div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/W4A4XorTuUU?feature=player_embedded' frameborder='0'></iframe></div>------------------------------------------</div></div></div></div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-87157466891841638802011-08-23T09:01:00.001+05:302011-08-23T09:54:49.635+05:30குறுக்கு வழி : A Fiction<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div closure_uid_nh14dr="123"><div closure_uid_nh14dr="126"><div closure_uid_4fzap6="126"><br />
</div><div closure_uid_4fzap6="126"><strong>----------------------------------------------------</strong></div><div closure_uid_4fzap6="126"><strong closure_uid_4fzap6="133">ஆகஸ்ட் 14 ,2011:</strong></div></div><div closure_uid_4fzap6="128" closure_uid_nh14dr="126"></div><div closure_uid_nh14dr="126"><div closure_uid_nh14dr="135"><div closure_uid_n4m73x="161"><div closure_uid_4fzap6="125"><br />
</div><div closure_uid_4fzap6="125">'அப்போ இது நிச்சயம் சாத்தியம்தானா ஜெனரல்? </div></div><div closure_uid_n4m73x="161"><div closure_uid_4fzap6="113">இந்த இக்கட்டான நிலைமையில் இந்த முயற்சி வெற்றி தருமா?'</div><div closure_uid_4fzap6="113"><br />
</div></div></div><div>'வேறு வழி இருக்கா..சொல்லுங்க சார்..?'</div><div><br />
<div closure_uid_4fzap6="119">'கண்டிப்பா இல்ல..ஆனா இந்த மாதிரி முறை இருப்பதே எனக்கு ஒரு பக்கம் சந்தோசமாவும், இன்னொரு பக்கம் நம்ப முடியாமலும் இருக்கு..நான் சொன்னாலும் மினிஸ்டர் நம்பணுமே..'</div><div closure_uid_4fzap6="119"><br />
</div><div closure_uid_n4m73x="162">'சார்..சில விஷயங்கள் ராணுவத்தை தாண்டி வெளிய போகாது..யார் ஆட்சிக்கு வந்தாலும் கூடியவரை அவர்களுக்கு தெரியாமல் இந்த கண்டுபிடிப்புகளை வைத்திருப்போம்.இப்போ நீங்களா ஆலோசனை கேட்டதால இத சொல்றோம்..வன்முறை எதுவுமே இல்லாம இந்த நிலைமையை சமாளிக்கணும்னா இதுதான் ஒரே வழி..'</div></div><div><br />
'ஆல்ரைட். ஐ அக்ரீ.அப்போ யார் இந்த வேலைய செய்ய போறது?'</div><div closure_uid_nh14dr="132"><div closure_uid_n4m73x="123"><br />
<div closure_uid_4fzap6="130">'ஒரு சீனியர் Grade-One சயன்டிஸ்ட்.லெவல் ஏ.இந்தியன் சீக்ரெட் மிலிட்டரி சர்வீஸ் விங்'</div></div></div><div><br />
'சரி. ஆல் தி பெஸ்ட் . நான் மேலிடத்துக்கு தகவல் சொல்லிடறேன்.உங்க போன்காலுக்காக காத்திருப்பேன்.'</div></div><div closure_uid_nh14dr="126"></div><div closure_uid_nh14dr="126"><br />
-------------------------------------------</div><div closure_uid_nh14dr="126"><br />
<div closure_uid_4fzap6="135"> <strong>ஜூன் 23 , 1976:</strong></div><div closure_uid_4fzap6="135"><br />
</div></div><div closure_uid_nh14dr="126"></div><div><div closure_uid_4fzap6="136">'ஆச்சர்யமா இருக்கு டாக்டர் . நீங்க சொல்றத பாத்தா இந்த மருந்து தீவிரவாதத்த உலகம் முழுக்க ஒழிச்சிடும் போலிருக்கே'</div><div closure_uid_4fzap6="136"><br />
</div></div><div>'சந்தேகம் வேண்டாம் கவ்ரவ். என்னோட பதினைந்து வருட உழைப்பு இது. அந்த மூணு பேர பார்த்தீங்களா..?'</div><div closure_uid_nh14dr="119"><br />
'ஆமா... அபாரமான மாற்றம்..அதிலயும் சப்ஜெக்ட் 47 பேச்சும் நடையும் நூறு சதவீதம் மாறிடுச்சு..அவ்வளவு மூர்க்கமா <span id="6_TRN_1y">தன் <span id="6_TRN_1z">நாட்டுக்காக <span id="6_TRN_20">மனித வெடிகுண்டா ,எல்லை தாண்டி வந்தவன் இப்படியா அமைதியாவான்? </span></span></span> '</div><div><br />
<div closure_uid_4fzap6="147">'இதுல ஆச்சர்யபடறதுக்கு ஒன்னும் இல்ல . மருத்துவத்தோட மிக எளிதான சிறப்பு இது.. மூர்க்கத்தை குறைச்சு , அமைதியான மனநிலையை கொடுக்கிற மாத்திரைகள் பல இருக்கே. ஆனா என் கண்டுபிடிப்பு அதோட அடுத்த கட்டம். கூடவே ஒரு சுயநலத்தை புத்திக்குள்ள செலுத்துது.. தன் பாதுகாப்பு , தன் குடும்பம்,தன் குழந்தைன்னு ஒரு வட்டத்த தாண்டாம அதுக்குள்ளயே யோசிக்க வைக்குது. தன் குடும்ப பயம் வந்துதுனாவே ஒரு மனுஷனுக்கு தீவிரவாதம் ,கொள்கையெல்லாம் </div></div><div closure_uid_nh14dr="125">ரெம்ப தூரம் ஓடி போய்டும்.. பிடிவாதமும் காணாம போய்டும்..'</div><div closure_uid_nh14dr="125"><div><br />
'எல்லாரையும் இப்படி மன்னிச்சு விட்டுட்டா நம்ம நாட்டுக்குத்தான் டாக்டர் ஆபத்து.?'</div><div><br />
<div closure_uid_4fzap6="137">'இல்ல..போர்னு வந்தால் நேருக்கு நேர் மோதலாம். அதில் எத்தனை பேரை வேணுமென்றாலும் அழிக்கலாம். ஏன்னா அது நாடுகள் சம்பந்தப்பட்டது. அப்படி சாகும் வீரர்கள் ஒன்றும் தவறானவர்கள் அல்ல..தங்கள் நாட்டுக்காக போரிட்டு அழிகிறார்கள்..ஆனால் தீவிரவாதிகள் அப்படி அல்ல..தவறான மனிதர்களின் மூளை சலவையினால் பாதை மாறியவர்கள்.திருந்தப்படவேண்டியவர்கள். அவர்களில் ஒருவனை அழித்தால் தீவிரவாதிதான் சாகிறான்.ஆனால் தீவிரவாதம் சாகாது.அதற்கு இந்த முறைதான் சரி..'</div></div></div> <br />
<div><div closure_uid_4fzap6="138">'இனி அடுத்த கட்டம் என்ன டாக்டர் ?'</div><div closure_uid_4fzap6="138"><br />
</div></div><div><div closure_uid_4fzap6="148">'வேற என்ன? உடனே இந்த மருந்த இந்திய ராணுவத்துக்கு அர்பணிக்கிறதுதான்.. இனி எதிர்பக்கம் எந்த தீவிரவாதி வந்தாலும் , கொல்லணும்னு அவசியம் இல்ல... மனுசனா ,அதுவும் தன்னலத்துக்காக அடங்கிபோற சாதுவான மனுசனா மாத்திடலாம்..</div></div><div>இந்தியா அஹிம்சை தேசம்னு பெருமையா சொல்லிக்கலாம் கவ்ரவ்.'</div><div><br />
'பாராட்டுக்கள் டாக்டர் மோத்தா ' </div><div><br />
புதிய குரல் கேட்டு இருவரும் திரும்பினார்கள். ராணுவ உடையில் மிடுக்காக ஜெனரல்.அருகில் புது நாகரீக உடையில் ப்ரித்வி. </div><div closure_uid_nh14dr="136"><br />
----------------------------------------------</div><div closure_uid_4fzap6="139" closure_uid_nh14dr="136"><div closure_uid_nh14dr="137"><div closure_uid_nh14dr="138"><br />
<div closure_uid_4fzap6="126"><strong closure_uid_4fzap6="133">ஆகஸ்ட் 18 ,2011:</strong></div><br />
<div closure_uid_4fzap6="149">'எனக்கு ரெம்ப பயமா இருக்கு. இதெல்லாம் நடக்குமா? இன்னும் கொஞ்ச நேரத்துல ஆள் ஜெயில்ல இருந்து வெளிய வர போறதா செய்தி வந்திருக்கு... '</div></div><div closure_uid_n4m73x="122"><br />
<div closure_uid_4fzap6="171">'சார்..இத கண்டிப்பா நம்பலாம். இது வரைக்கும் படத்தில,கதைல மட்டுமே சாத்தியம்னு நெனச்ச டைம் மெசின் ,இப்போ நம்ம ராணுவ விஞ்ஞானிகள் கிட்ட கைக்குழந்தை மாதிரி இருக்கு... எல்லா பிரச்சனையும் சுமுகமா முடிஞ்சுடும்.'</div></div></div><div closure_uid_4fzap6="172"><div closure_uid_n4m73x="133"><div closure_uid_4fzap6="150"><br />
</div><div closure_uid_4fzap6="150">காரியதரிசி பேசிக்கொண்டே போக , அவரை சந்தேகமாக , கலக்கமாக பார்த்தார் மந்திரி.</div></div><div closure_uid_n4m73x="133"><br />
-----------------------------------------------</div></div></div><div closure_uid_4fzap6="142" closure_uid_nh14dr="133"><div><br />
<div closure_uid_4fzap6="157"><strong>ஜூன் 23 , 1976:</strong></div><br />
<div closure_uid_4fzap6="152">'எனக்கு புரியல ஜெனரல். நான் இந்த மருந்த தீவிரவாதிகளுக்காக கண்டுபிடிச்சிருக்கேன்.அதை நம்ம ராணுவ வீரன் ஒருத்தன்கிட்டயே சோதனை செய்ய என்ன அவசியம்?'</div></div><div><br />
'எதுவும் கேக்காதீங்க டாக்டர் மோத்தா.மேலிடத்து உத்தரவு.உடனடியா இது நடந்தாகணும்.'</div><div><br />
'சாரி ஜெனரல்.காரணம் தெரியாம நான் இதுக்கு ஒத்துக்க முடியாது'</div><div><br />
<div closure_uid_4fzap6="154">'சரி டாக்டர்..நீங்க ப்ரித்விகிட்ட பேசுங்க..அவர் எவ்வளவு சிரமப்பட்டு இங்க வந்திருக்காருன்னு தெரிஞ்சா நீங்க கண்டிப்பா ஒத்துக்குவீங்க'</div></div><div><br />
<div closure_uid_4fzap6="146">'ஹாய்.ஐ அம் டாக்டர்.ப்ரித்வி.உங்க கண்டுபிடிப்பு அபாரம்.ஆனா </div><div closure_uid_4fzap6="155">ஏன் பயப்படுறீங்கனு தெரியல..தப்பா போய்டும்னு நெனச்சா ?'</div></div><div><br />
<div closure_uid_4fzap6="144">'வாட் நான்சென்ஸ். என் கண்டுபிடிப்ப கேள்வி கேட்க , சந்தேகப்பட உங்களுக்கு என்ன தகுதி இருக்கு.?'</div></div><div><br />
'வாஸ்தவம்தான்.உங்க திறமையை சந்தேகப்பட இப்போ எனக்கு தகுதி மட்டும் இல்ல வயசும் இல்ல.. பை தி பை ,எனக்கு இப்போ ஆறு வயசுதான் ஆகுது'</div><div><br />
மோத்தா முகத்தில் குழப்பமும் வியப்பும். ப்ரித்வி பேசத் தொடங்கினார்.</div><div><div closure_uid_n4m73x="136"><br />
----------------------------------------</div><div closure_uid_4fzap6="156"><br />
</div><div closure_uid_4fzap6="126"><strong closure_uid_4fzap6="133">ஆகஸ்ட் 18 ,2011:</strong></div><div closure_uid_4fzap6="143"><br />
</div><div closure_uid_4fzap6="143">'உங்களுக்கு எப்படி இத பத்தி தகவல் தெரிஞ்சுது?'</div><div closure_uid_4fzap6="143"><br />
</div><div closure_uid_4fzap6="159">'சமீபத்துல ராணுவத்துல நம்பிக்கையான என் ஆள் மூலமா அங்க நடந்த முக்கியமான பரிசோதனைகளைப் பற்றிய தகவல் எனக்கு கிடைச்சுது சார். அதுல எனக்கு ரெம்ப வியப்பா பட்டது டாக்டர் மோத்தா மேற்கொண்ட பரிசோதனைதான். </div><div closure_uid_4fzap6="160"><br />
</div><div closure_uid_4fzap6="160">சுயநலம் புகுத்தி ஒரு மனிதனோட முழு போராட்ட குணத்தையும் மாத்தி அமைதியாக்குற மருந்தை கண்டுபிடிச்சு, அதுல </div><div closure_uid_4fzap6="160">வெற்றியும் அடைஞ்சிருக்காரு.ஆனா எதோ ஒரு காரணத்தால அவர் கண்டுபிடிச்ச மருந்துகள ,அதன் ரகசியத்த ராணுவத்துக்கு கொடுக்காம பரிசோதனை தோல்வினு அவரா விலகிட்டார்.</div><div closure_uid_4fzap6="160"><br />
</div><div closure_uid_4fzap6="160">ஆனா அவரோட முயற்சி வெற்றிங்கறது ,அவர் சோதனைக்கு உட்பட்ட தீவிரவாதிகள தொடர்ந்து கண்காணிச்ச நம்ம ராணுவம் உறுதிபடுத்திருக்கு. அவரோட மருந்துதான் இப்போ நமக்கு கை கொடுக்க போகுது. '</div><div closure_uid_4fzap6="160"><br />
</div><div closure_uid_4fzap6="162"> பேசி கொண்டே போன அவரை ,பாக்கெட்டில் <span id="6_TRN_hc"><span id="6_TRN_he"> ஈங்காரமிட்ட </span>செல்போன் </span>தடுத்தது</div><div closure_uid_4fzap6="162">---------------------------------------</div></div><div closure_uid_4fzap6="163" closure_uid_n4m73x="130"><div><div><div closure_uid_nh14dr="142"><div closure_uid_4fzap6="158"><br />
</div><div closure_uid_4fzap6="157"><strong>ஜூன் 23 , 1976:</strong></div><div closure_uid_4fzap6="158"><br />
</div><div closure_uid_4fzap6="158">'ஓகே ப்ரித்வி .உங்கள் திட்டத்திற்கு அரைமனதுடன் சம்மதிக்கிறேன்.மருந்த கொடுக்க வேண்டிய ஆள் பேர் என்ன ?</div><div closure_uid_4fzap6="158"><br />
</div></div><div closure_uid_nh14dr="139">'இந்திய ராணுவத்தில் வேலை பார்க்கும் டிரைவர். 1965இல் நடந்த இந்திய பாகிஸ்தான் போரில் <br />
<div closure_uid_nh14dr="143"><div closure_uid_n4m73x="128"><div closure_uid_4fzap6="164">ஒரு ட்ரக்கில் எறியப்பட்ட குண்டுவீச்சில், உயிர் தப்பிய ஒரே வீரன். </div><div closure_uid_4fzap6="164">பேர் - கிஷன் பாபுராவ் .'</div></div></div><div closure_uid_nh14dr="143"><br />
அரை மணி நேரம். ஒரு மயக்க நிலையில் அந்த ராணுவ வீரனை கொண்டு வந்து படுக்க வைத்தார்கள்.<br />
<br />
டாக்டர் மோத்தா , மருந்து கலக்கப்பட்ட ஊசியை எடுத்தார். </div></div><div closure_uid_nh14dr="139"><div closure_uid_n4m73x="129"><br />
----------------------------------------</div></div></div><div closure_uid_n4m73x="135"><div closure_uid_4fzap6="126"><br />
</div><div closure_uid_4fzap6="126"><strong closure_uid_4fzap6="133">ஆகஸ்ட் 18 ,2011:</strong></div><br />
'ஹலோ.மினிஸ்டர் பி.ஏ ?'</div></div><div><br />
<div closure_uid_4fzap6="165">'சொல்லுங்க ஜெனரல். உங்க போன்காலுக்காகதான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். '</div><div closure_uid_4fzap6="165"><br />
</div></div><div closure_uid_nh14dr="141"><div closure_uid_n4m73x="125">'போன காரியம் சக்சஸ்.</div>அனுப்புன ஆள் வெற்றிகரமா வேலையை முடிச்சிட்டு திரும்பிட்டார்.. '</div><div><br />
'கிரேட்.உங்க திட்டம் அபாரம். நான் அப்புறம் கூப்பிடறேன்.'</div><div>போனை அணைத்து விட்டு சிரித்தார்.<br />
<br />
பிறகு சொன்னார் - 'இப்போ ஆள தைரியமா வெளிய விடலாம் சார்.அமைதியா அவர் வீட்டுக்கு மட்டும் போவார்'</div><div><br />
-----------------------------------------<br />
<div closure_uid_4fzap6="157"><br />
</div><div closure_uid_4fzap6="157"><strong>ஜூன் 23 , 1976:</strong></div><br />
'உண்மையாதான் சொல்றீங்களா மோத்தா..'</div><div><div closure_uid_nh14dr="139"><div closure_uid_n4m73x="137"><br />
'ஆமா.. </div>நான் என் பரிசோதனை தோல்வின்னு சொல்லிட போறேன். இது சம்பந்தமான எல்லா தகவல்களையும் அழிச்சிட போறேன்.<br />
<div closure_uid_n4m73x="137">திவிரவாதிகள மனமாற்றம் செய்யணும்னு நான் கண்டுபிடிச்ச மருந்தை,இந்த மாதிரி நல்லவங்கள ஓரங்கட்ட உபயோகபடுத்துவாங்கனு எனக்கு இப்போதான் தெரியுது.'</div><br />
'அப்போ இந்த வீரன் நல்லவனா?'<br />
<div closure_uid_nh14dr="144"><div closure_uid_n4m73x="127"><br />
<div closure_uid_4fzap6="168">'ஆமா. இன்னும் 35 வருஷம் கழிச்சு நாட்டுல ஊழலுக்கு எதிரா ஒரு மாபெரும் புரட்சி ஏற்படுத்த போற ஒரு போராளி. அவரோட தேச உணர்வை அழிச்சு , சுயநலத்தை புகுத்திட்டா , அவர் </div><div closure_uid_4fzap6="168">அமைதியாயிடுவார்ன்னு நம்பித்தான் இப்போ டைம் மெசின் மூலமா இங்க வந்திருக்காங்க. தற்போது ப்ரித்வி வந்த வருங்காலத்தில் </div>இதே நேரத்தில் , இவர் சிறையில் இருக்கிறார். அவர் வெளிவரும்போது மனம் மாறியிருக்க வேண்டும் என்பதே இவர்கள் எண்ணம். ஆனா அவங்களுக்கு ஒரு உண்மை தெரியாது' </div></div><br />
'என்ன டாக்டர் அது?'<br />
<div closure_uid_n4m73x="163"><br />
'நான் அவருக்கு</div>அந்த மருந்தை செலுத்தவே இல்ல .செலுத்தியிருந்தாலும் பெரிய மாற்றம் <span id="6_TRN_4d">ஏற்படாதுன்னு </span>நெனைக்கிறேன்.'<br />
<br />
<div closure_uid_4fzap6="167">'ஏன் அப்படி?'</div><br />
<div closure_uid_4fzap6="169"><div closure_uid_pqngcm="103">'அவரோட மிலிட்டரி <span id="6_TRN_51">ரெகார்ட்</span> புரட்டி பாத்தேன். ஆள் இது வரைக்கும் கல்யாணமே செஞ்சுக்கல.அந்த குண்டுவீச்சில உயிர் பிழைச்ச பின்னாடி ,மறுபடியும் ஒரு விபத்துல இருந்து தப்பிச்சிருக்கார். அதன் பின்னாடி சமூக சிந்தனையோடவே வாழ்ந்திட்டிருக்கார்.</div><div closure_uid_pqngcm="122">எதுவுமே தனக்குன்னு இல்லாதவன்கிட்ட என்ன சுயநலத்த விதைக்க முடியும்? '</div></div><br />
'அப்போ அவர் மனம் மாறிட்டார்-ன்னு நெனச்சுட்டு போனவங்களோட கதி ?'<br />
<br />
கவ்ரவ் கேள்விக்கு மோத்தா ஒரு விஷம சிரிப்பு சிரித்தார். <br />
<br />
-------------------------------------------------------<br />
<br />
<strong closure_uid_4fzap6="133">ஆகஸ்ட் 18 ,2011:</strong><br />
<div closure_uid_4fzap6="173"><br />
</div>டெல்லி மைதானம்: <br />
<div closure_uid_4fzap6="170"><br />
</div><div closure_uid_4fzap6="170">'இந்தியாவுக்கு இரண்டாம் சுதந்திர போருக்கான நேரம் வந்து விட்டது.நான் இல்லாவிட்டாலும் இளைஞர்களே , விட்டு விடாதீர்கள்..' </div><div closure_uid_4fzap6="170">- மக்களின் மிகுந்த ஆரவாரத்திற்கு இடையே துடிப்பான பேச்சைத் தொடங்கினார் அன்னா ஹசாரே என்றழைக்கப்படும் கிஷன் பாபுராவ். </div><div closure_uid_4fzap6="170"><br />
</div><div closure_uid_4fzap6="170">---------------------------------------------------------</div></div></div></div></div></div></div>அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.com9