Tuesday, April 12, 2011

வாக்களிக்க வழிகாட்டி : தேர்தல் 2011

தமிழக மக்களே ,
நாளைக்கு  ஒரு  நாள் நீங்கதான் கிங்மேக்கர்.. இந்த மாதிரி வாய்ப்பு  ஐந்து வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும். போன தடவை நமக்கு இந்த மரியாதை  கெடைச்சது  மே 8  2006 -இல் . இந்த தடவை ஏப்ரல் 13 - நாளைக்கு.




இந்த கட்சிக்குதான் ஓட்டு போடுவேன்னு தெளிவா கட்சி அபிமானிகளா இருக்குற நண்பரகளுக்கு எந்த ஐடியாவும் கொடுக்க தேவை இல்ல .   ஆனா எந்த கட்சிக்கு வாக்கு அளிக்கறது-னு குழப்பமா இருக்குறவங்களுக்கு சில டிப்ஸ் :

(அய்யயோ இப்படி குழப்பமா இருக்கேன்னு நீங்க ஃபீல் பண்ண தேவை இல்லை. திமுக ஊழல் செஞ்சுடுச்சு ;அதிமுகவுக்கு போடலாம்னு தெளிவா இருந்திருப்பீங்க .இப்போ அந்த அம்மாவும் எல்லா இலவசத்தையும் அறிவிச்சு , கூட்டணியில குண்டு வெச்சு உங்கள யோசிக்க வெச்சுட்டாங்க.. கேப்டனை   நாப்பதுக்கு நாப்பது ஜெயிக்க வைக்கனும்னு நினைச்சவங்க நம்பிக்கைல , கடந்த ஒரு மாச காலமா அட்டுழியம் பண்ணி அவரே மண்ணை போட்டுடாரு.
ஆக இந்த தடவை என்ன பண்ணலாம்னு புரியாம இருக்குறவங்க , முடிவெடுக்க மேல படிங்க )


1.கட்சிய சிந்திக்கிறத  விட்டுருங்க ; வேட்பாளரோட தனி குணநலன்கள பாருங்க ; அவர் படிப்பு,திறமை , நம்பகத்தன்மை ;அனுபவம் ; இது வரைக்கும் என்ன பண்ணியிருக்கார் ; அவரே போன தடவை எதாவது தொகுதி எம்எல்ஏவா இருந்திருந்த அங்க என்ன செஞ்சாரு-னு அலசுங்க .அவர் பதவிக்கு வரதுக்கு முன்னாடி அந்த தொகுதி எப்படி இருந்தது ; அவர் வந்தப்புறம் என்ன மாற்றம் வந்ததுன்னு தெரிஞ்சிக்கோங்க.

இதுல உங்களுக்கு ரெண்டு ரிசல்ட் கெடைக்க வாய்ப்பு இருக்கு . 

ஒன்னு - நல்லது செஞ்சிருப்பாரு.வளர்ச்சிகள் அதிகம் கொடுத்திருப்பாரு   ;  ஆளும்கட்சியோ , எதிர்கட்சியோ , கூடியவரை நல்ல விதமா தன் பதவியை பயன்படுத்தி ஒரு முன்னேற்றத்தை கொடுத்திருப்பாரு . - இதுதான் ரிசல்ட்னா இவருக்கு அடுத்த சான்ஸ் தாராளமா இவருக்கு கொடுங்க.

ரெண்டு : மேல சொன்ன எல்லாத்தையும் செஞ்சிருப்பாரு - ஆனா தொகுதிக்கு இல்லேங்க ;  அவர் குடும்பத்துக்கு. இந்த ரிசல்ட் வந்தா உங்களுக்கு இன்னும் வேலை அதிகம். அடுத்த ஸ்டெப் போகணும்.அது என்னனா ...
  உடனே முக்கிய எதிர் வேட்பாளர பாருங்க. அவர்கிட்ட இதே அலசல் பண்ணுங்க. ரிசல்ட் ஒன்னு-னா ஓகே . இல்லேன்னா அதுக்கு அடுத்த ஸ்டெப்.

2.இப்போதான் மிக முக்கியமா சிந்திக்கணும். ஒரு மாயை எல்லாத்துகிட்டயும்  இருக்கு. சுயேட்சையா ஒருத்தர் நின்னா அவர் நல்லவராவே இருந்தாலும் , 'இவர் எப்படியும் தோக்க போறாரு. இவருக்கு போட்டு  என் வோட்டு எதுக்கு வீணாகனும் '-னு. ரெம்ப தப்புங்க. அவர் வெற்றி பெறுவாரோ  இல்லையோ , நல்லவரா இருந்தா   உண்மையிலேயே  மக்கள் மேல அக்கறை உள்ளவரா இருந்தா அவருக்கு நாம போடுற ஒவ்வொரு ஓட்டும் அவரை உற்சாகப்படுத்தும். இன்னும் மக்களுக்கு நல்லது செய்யணும்னு ஒரு உத்வேகம் பிறக்கும்.

அது இல்லாம அவர் டெபொசிட் காலியானா என்ன ஆகும் ? 'இவ்வளவு செஞ்சோமே; மக்கள் நம்மள ரெம்ப அவமானப்படுத்திட்டாங்களே'-னு  மொத்தமா பொது சேவைல இருந்து விலகிடுவாங்க. யாருக்கு நஷ்டம் ? நமக்குதான... எதோ ஒரு கட்சியில இருக்குற மோசமானவங்களுக்கு போட்டு அவர ஜெயிக்க வைக்கறதுக்கு பதிலா , இந்த மாதிரி எந்த கட்சி பலமும் இல்லாம, நல்லது செய்ய வாய்ப்பு கேட்கும் சுயேட்சிகளுக்கு சப்போர்ட் பண்ணினோம்னா , அவங்களுக்கு விழுகற ஒவ்வொரு வோட்டும் , அவரை  தட்டி கொடுத்து இன்னும் நமக்கு உதவி செய்ய வைக்கும். யோசிங்க.
    
 ஆனா சுயேச்சையும் சும்மா விளம்பரத்துக்கு நிக்கறாரு. தன் பெருமையை காட்ட போட்டி போடராருன்னா , நீங்க ரெம்ப பாவம். உங்களுக்கு வேற சாய்ஸ் இல்ல - 49  ஒ தவிர.

3. 49  - ஒ : இது பிரமாஸ்திரம்.'இந்திய குடிமகன் ஆகிய நான் , இந்த தேர்தலில் எனக்கு கிடைத்திருக்கும் ஓட்டு போடும் உரிமையை இந்த முறை யாரையும் ஆதரிக்க பயன்படுத்துவதில்லை என்று அரசினால் அங்கிகாரிக்கப்பட்ட  49 - ஒ வில் என் ஓட்டை பதிவு செய்வதன்  மூலம்  தெரியபடுத்துகிறேன்'.

பொதுவா இத நான் யாருக்கும் சிபாரிசு செய்யறதில்ல.   காரணம் - உன் தொகுதியில் நிக்கிற வேட்பாளரை ஒன்று நீ கட்சி அபிமானியாய் இருந்து ஏத்துக்கணும் ; அல்ல மேல் சொன்ன வழிகள் மூலம் ஏறக்குறைய  ஒழுங்கானவர அடையாளம் கண்டு ஏத்துக்கணும். இது எதுவுமே இல்லாம 'எனக்கு யாரையுமே பிடிக்கல;எல்லாரும் மோசம்'-னு யோசிக்காம 49 -ஐ உபயோகிப்பது முட்டாள்தனம்.


 இன்னொரு காரணம் , இதை கூட உன்னால அலசி ஆராய முடியலேன்னா நீ படித்திருந்து என்ன பிரயோஜனம்?  
அதுவும் சிலபேரு  , 49 -ஒ பயன்படுத்துவதை பெருமையான செயலா சொல்றாங்க. நான் பாராட்டறேன் .

 ஆனா ஒரு மிக சக்தி வாய்ந்த ஓட்டை பயன்படுத்தாமல் இப்படி செய்ய அவங்ககிட்ட ஆழமான காரணம் இருக்கணும். 

கர்ணன் கிட்ட இருக்குற நாகஸ்திரம் மாதிரி நம்ம வோட்டு. ஒரு தடவைதான் பயன்படுத்த முடியும். அதையும் தகுந்த காரணம் இல்லாம 49 -ஒவில் தூக்கில் போடாதீங்க.


காரணங்கள் எது வேணுமானாலும் இருக்கலாம் - ஆனால் நான் கேட்டுகிறது இதுதான். ' நான் 49 -ஒ இந்த தேர்தலில் பயன்படுத்தினேன். அதற்கு காரணங்கள் இவை ' -னு வரிசையா பட்டியல் போட்டு உங்க நண்பர்கள்,உறவினர்கள் ,பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட  சொன்னாதான்  அதோட பயன்பாடு பூர்த்தியாகுது. அதை  தைரியமா வரிசைபடுத்தி நியாயமான காரணங்களை சொல்ல உங்களுக்கு முடியுமா..? ஏகப்பட்ட விவாதம் நடக்க வாய்ப்பிருக்கு.. எதிர்கொள்ள தயாரா இருக்கீங்களா?   அப்போ proceed...

மொத்தத்தில் எந்த கட்சி வேட்பாளரும் , சுயேட்சிகளும் சரியாக இல்லாமல் இருந்தா தாராளமாக 49 - ஒ பயன்படுத்தலாம். ஒரு சின்ன சந்தேகம் - நம்பிக்கை  யாரோ ஒரு வேட்பாளர் மீது ,அவர் நல்லது செய்வாருன்னு உங்களுக்கு தோணுச்சுனா அவருக்கே உங்க வோட்ட பதிவு செய்யுங்க நண்பர்களே.

அப்புறம் முக்கியமான விஷயம் /விண்ணப்பம் : கண்டிப்பா வோட்டு போட போயிருங்க. அது 49 -ஒனாலும் சரி .வேற எதுனாலும் சரி. இல்லேன்னா உங்க வோட்டு உங்களோடது இல்ல.

 எவ்வளவு சீக்கிரம் போயி உங்க கடமையை நிறைவேத்துறீங்களோ   அவ்வளவு  நேரம் உங்க பேரு உங்களுக்கு சொந்தம் . இல்லேன்னா ' நீங்களா பத்மநாபன் ? உண்மைய சொல்லுங்க .. ஏற்கனவே உங்க வோட்டு பதிவாயிடுச்சு ..  ஏன்பா இவர போலீஸ் கிட்டயும் ஏஜென்ட்   கிட்டயும் கூப்பிட்டு போயி உண்மையானு விசாரி ' தான் பதிலா கிடைக்கும். 




வாழ்த்துக்கள் வாக்காள பெருமக்களே..  எத்தன தடவ தப்பா நீங்க தேர்ந்தெடுத்தாலும் அதை திருத்திக்க இன்னொரு தடவை வாய்ப்பு கொடுக்குது நம்ம இந்திய ஜனநாயம்.. யூஸ் பண்ணிக்கோங்க.

//பதிவை படிக்கும் அனைவருக்கும் இனிய சன் டிவி பத்தொன்பதாம் வருட துவக்க  நாள் வாழ்த்துக்கள்.   (அதான் தமிழ் புத்தாண்டு இல்லைன்னு அரசாங்கமே சொல்லிடுச்சே ! )//

2 comments:

Anonymous said...

//சன் டிவி பத்தொன்பதாம் வருட துவக்க நாள் வாழ்த்துக்கள். (அதான் தமிழ் புத்தாண்டு இல்லைன்னு அரசாங்கமே சொல்லிடுச்சே ! )//


நக்கல்யா உனக்கு.. இன்னா சோக்கா கலாய்க்கிற...

பாலா said...

அருமையான யோசனைகள். இந்த முறை நிறைய பேர் கன்ப்யூஸ் ஆகித்தான் இருக்கிறார்கள்.

//இனிய சன் டிவி பத்தொன்பதாம் வருட துவக்க நாள் வாழ்த்துக்கள்.

ஹி ஹி உங்களுக்கும் பகுத்தறிவு ஜாஸ்தியோ?

Post a Comment