Monday, April 11, 2011

பாப்கார்ன் பாக்கெட்- 20110411



ஒரு வழியா ஐபில் வந்துடுச்சு ..  வேகாத வெயில்ல அலைஞ்சுட்டு ஈவனிங் வீட்டுக்கு வந்து டிவியை போட்டா தாத்தா , அம்மா , அண்ணன் , கேப்டன் , ஐயா எல்லாரோட பிரசாரத்த  போட்டு இன்னும் தெருவுல , இரைச்சல்ல  இருக்குற மாதிரியே ஒரு பீலிங்..  இந்திய டீம் ஒன்னா இருந்து கடந்த ஒன்றரை   மாசமா   நம்மள பெரும்பாலும் காப்பத்துனாங்க.. இனி பத்து டீமா பிரிஞ்சிருந்து  அதே வேலைய செய்ய போறாங்க..


எந்த கட்சிக்கு ஒட்டு போட்டாலும் நாம சந்தோஷப்படுற மாதிரி எதுவும் நடக்க போறதில்ல .. மக்கள் உடனடியா எதாவது ஒரு டீமுக்கு சப்போர்ட் பண்ணி அவங்கள ஜெய்க்க வைச்சு அதுலயாவது  சந்தோசப்பட்டுக்கோங்க ..


நான் எப்போவும் போல ஆரம்பத்துல  சென்னை சூப்பர் கிங்க்ஸ் தான். அதுக்கு எதாவது ஆச்சுனா மும்பை இந்தியன்.. அதுக்கும் எதாவது ஆச்சுனா எந்த டீம் ஜெயிக்கிதோ அதுக்கு .. அட எல்லா பயகளும்  நம்ம அங்காளி பங்காளிகதான..
ஹிஹிஹி.. எவன் திட்டுனாலும் ஒரு பஞ்ச் டயலாக் வெச்சுருக்கேன்.. 'Rather supporting a team to win , itz better to support the Winning team'

------------------------------------------------------------------------

கலைஞர் டிவி ஆரம்பிச்சு வெச்ச 'நாளைய இயக்குனர்'  நிகழ்ச்சி மூலமா ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கு. போட்டிக்காக மட்டும் இல்லாம , பசங்க தாங்களாவே குறும்படம் எடுத்து பேஸ்புக் , யுடியூப் உட்பட எல்லா இணையதளங்களையும்    வெளியிட்டு கருத்தும் ஆலோசனையும் கேக்கறாங்க .. எதோ ஒரு ரெண்டு மூணு ஹிட் கொடுத்த ஒரு தனி இயக்குனர் , தான் என்ன கத்துகிட்டாரோ  அத   ஒட்டி விமர்சனம் பண்றத விட மக்களோட கருத்தை நேரடியா கேக்கற இந்த முறை வரவேற்கத்தக்கது..


கலைஞர் டிவி-இல் நான் பலமாதங்கள்  முன்னால் ரசித்த சிரித்த  நிகழ்வு : ஒரு இயக்குனர் தன படத்தை போட்டு காண்பிக்க , அன்று வந்திருந்த கெஸ்ட் வெங்கட் பிரபு 'இந்த கதை  எதோ மெயில்ல படிச்சா மாதிரி  இருக்கே'னு கேட்டதுதான்.. உத்தமரு கண்டுபிடிச்சிட்டாராம்.
அத விட வரவேற்கத்தக்கது , நூத்துக்கு தொண்ணூறு சதவீத இயக்குனர்கள் சினிமாத்தனம் ஏதும்  இல்லாம ,மெசேஜ் சொல்ற கண்றாவி எல்லாம் இல்லாம மிக எதார்த்தமா படம் எடுக்கறாங்க.  திறமை மிக்க எங்கள் இள இயக்குனர்களே , இது உங்க காலம்.. வோட்டு போட நாங்க இருக்கோம் .. கலக்குங்க..
---------------------------------------------------------------------------

போன தேர்தல்ல நல்ல விதமா நடந்துகிட்ட விஜயகாந்த் , ஏன் இந்த தடவ இப்படி வெளிபடையா தன்னை தானே அவமானபடுத்துற மாதிரி நடந்துகிறாரு?

இதுக்கு என் அதிமுக  நண்பன் சொன்ன குதர்க்கமான ஆதாரமற்ற ஆனால் சுவாரசியமான காரணம் -  ' கலைஞர் கிட்ட மொத்தமா பணம் வாங்கிட்டாருடா  கேப்டன் .. இந்த மாதிரி இந்த மாதிரி நான் அங்க போறேன் .. இந்த மாதிரி இந்த மாதிரி அங்க நடந்துக்குறேன் .. இந்த மாதிரி இந்த மாதிரி குடிச்சிட்டு பேசற மாதிரி அம்மாவுக்கு எதிராவும் அதிமுகவுக்கு எதிராவும் காமெடி பண்றேன்..  இந்த மாதிரி இந்த மாதிரி நாப்பது தொகுதிய உங்களுக்கு தரை வாத்து கொடுக்கறேன்..  அப்புறம் அம்மா தனி மெஜாரிட்டி வர்றது  கஷ்டம்.. இதுனால உங்களுக்கு ரெண்டு லாபம் .. ஜெயிச்சாலும் இந்த மாதிரி இந்த மாதிரி அஞ்சு வருஷம் நெறைய  சம்பாதிக்கலாம்.. தோத்தாலும் இந்த மாதிரி இந்த மாதிரி மைனாரிட்டி அதிமுக அரசுன்னு செய்தி வாசிக்கலாம் '  அப்டின்னு ஒரு மாஸ்டர் பிளான்டா...  ஏமாந்துராதடானு ரெம்ப வேண்டி கேட்டுகிட்டான்..

மத்தபடி எனக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையப்பா ... ஐயோ பாவம் ...நீங்களே கன்பீஸ் ஆகிடீங்க
---------------------------------------------------------------------------------------------

பொன்னர்  சங்கர் என்னாகுமோன்னு கவலையா இருக்கு.. யாரோ
பிரசாந்த்னு ஒரு நடிகராம் .. மணிரத்னம் , பாலு மகேந்திரா , ஷங்கர் படத்துல கூட நடிச்சிருக்கராம்.. எப்படி கதை நாயகர்கள் பாத்திரத்துக்கு பொருந்துவாருனு  தெரியல.. ட்ரைலர் நல்லாத்தான் வந்திருக்கு ..


ஆனா சரித்திர கதைகளோ அல்ல புகழ் பெற்ற நாவலை படம்
ஆக்கும்போதோ  ஒரு பிரச்சனை இருக்கு . புத்தகம் படிச்ச எல்லாரும் அவங்க மனசுல பொன்னர் சங்கருக்கு ஒரு உருவம் கொடுத்திருப்பாங்க.. அதை ஒட்டி திரையில இருந்தா படம் ஹிட். இல்லேன்னா என்னதான் நடிகர்கள் உசுர கொடுத்து நடிச்சாலும் செயற்கையா  தெரியும்  .. நடிகர் தியாராஜன் இதுல எப்படி தன திறமையை காட்டராருன்னு  பார்ப்போம்.

இதே பிரச்சனைதான் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆகும்போதும்  இருக்கும். கால சூழ்நிலைக்கு ஏற்ப கதைய மாத்தி  கொண்டு போனா விக்ரமோ , விஜயோ யார் நடிச்சாலும் பார்க்கலாம். அதே கதைனா அது முடியாது.. வந்தியத்தேவன் பாத்திரத்துக்கு என் மனசுல பதிஞ்ச நடிகர் முத்துராமன் ; பெரிய பழுவேட்டரையருக்கு விஜயகுமார் ; ஆழ்வார்க்கடியானுக்கு   பாலையா .. பொன்னியின் செல்வனுக்கு எம்ஜீஆர் ,..ஆதித்த கரிகாலனுக்கு சிவாஜி ..

உங்க அபிப்ராயம் என்ன?
-------------------------------------------------------------------------------------

 நம்மவர் படத்த ரெம்ப நாள் கழிச்சு (நாகேஷ் மறைவுக்குபிறகு )  நேத்து பாத்தேன். நாகேஷ் பொண்ணு தற்கொலை பண்ணுன பிறகு இருக்கும் காட்சிகள் எல்லாரையும் அழ வைக்கும். என்ன ஒரு அசாதாரணமான நடிப்பு ? அலட்டிக்காமல் , ஓவராக்ட் செய்யாமல் நம்மோடு சேர்த்து கமலையும் அழ வைத்திருப்பார். அதுவும் ' தலையணை இல்லை  .. நான் இப்போ என்ன பண்றது?'-னு அழுகையை வார்த்தையில் வெளிபடுத்திய விதம் நம் இருதயதுடிப்பை எகிற வைக்கும் காட்சி.




 உங்களுக்கு எதுக்கு சார் அவார்ட் ? அத உங்களுக்கு தர தகுதி சிவாஜிக்கு அப்புறமா இப்போ எவனுக்கும் இல்லை...

-----------------------------------------------------------------------------------------------


கடைசி கார்ன் :


சும்மா மொபைல்ல  பாட்டு மட்டுமே கேட்டுகிட்டு இருக்காதீங்க.. நெட்ல எஸ். வீ. சேகர் , க்ரேசி  மோகன் நாடகம் எல்லாம் இருக்கு .. தரவிறக்கம் பண்ணி கேளுங்க.. புது அனுபவமா இருக்கும் .. என்ன நடந்து போகும்போது தனியா சிரிச்சோம்னா   எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்கதான்  .. அட அதெல்லாம்  ஃப்ரீயா விடுங்க..


கொஞ்சம் நல்ல பசங்கனா ,  சுகிசிவம் , புலவர் கீரன்  சொற்பொழிவும் இருக்கு .. அதையும் கேளுங்க.. வேண்டாட்டி விட்டுருங்க ' உங்க வயசு என்ன அங்கிள் ?'னு கிண்டல் பண்ணகூடாது சொல்லிட்டேன்..


//உங்க வேலைக்கு நடுவில இந்த பாப்கார்ன் சுவையா , கொரிக்க இதமா , ரிலாக்ஸா இருக்குற மாதிரி பீல் பண்ணுனிங்கனா ஒரு பின்னூட்டம் போடுங்க  ..  அப்பப்போ தொடர்ந்து தரேன். இல்லேன்னா சொல்லிடுங்க .. மெசின ஆஃப் பண்ணிடுறேன். //

----------------------------------------------------------------------------------------------

6 comments:

Vijay Anand said...

//சும்மா மொபைல்ல பாட்டு மட்டுமே கேட்டுகிட்டு இருக்காதீங்க.. நெட்ல எஸ். வீ. சேகர் , க்ரேசி மோகன் நாடகம் எல்லாம் இருக்கு .. தரவிறக்கம் பண்ணி கேளுங்க.. புது அனுபவமா இருக்கும் //

Any download link u have , pls pass. It is very useful for me.

அபிமன்யு said...

கண்டிப்பாக நண்பரே..

http://isaitamil.in/download/pc.php?id=8

http://search.4shared.com/q/1/suki%20sivam

என்ஜாய் ...

Anonymous said...

ரொம்ப நன்றி அபிமன்யு....

Anonymous said...

ரொம்ப நன்றி அபிமன்யு.... Vijay

பாலா said...

பாப்கார்ன் மிக அருமை. நான் பெரும்பாலும் எஸ் வி சேகர், லியோனி பட்டிமன்றம் ஆகியவற்றை கேட்பேன்.

Anonymous said...

boss... popcornu sollittu oru mini mealsae potuteenga.. superb...

ramamurthy

Post a Comment