Saturday, February 19, 2011

நடுநிசி நாய்கள் - தப்பிச்சு ஓடிடுங்க..



 
இந்த படத்தை வேற யாராவது டைரக்ட் பண்ணியிருந்தா விமர்சனம் கேட்டுட்டோ  , இல்ல கொஞ்ச நாள் கழிச்சோ போய் பாத்திருப்பேன். பட் இது   கௌதம் மேனன் படம். வேற என்ன வேணும் ?  போகலாம்னு முடிவு பண்ணினது தப்பா போய்டுச்சு.

நீங்க இங்கிலீஷ் மிஸ்டரி படங்கள் அடிக்கடி பாக்கிறவரா Silence of the lambs , Rear window , se7en , SAW series ? அது மாதிரி தமிழ்ல ஒரு படமா இது இருக்கும்னு நெனைக்காதீங்க. வெறுத்துடுவீங்க. 'இல்லப்பா நான் அதெல்லாம் பாத்ததில்ல , எனக்கு சிகப்பு ரோஜா புடிக்கும் , அது மாதிரி இந்த படம்னு கேள்விப்பட்டேன். அதான் பாக்கலாம்.....னு' அப்படின்னு இழுத்தீங்கனா..சாரி நீங்க ஏமாந்துருவீங்க..  படம் திரிசங்கு மாதிரி எதையும் ஒழுங்கா சொல்லாம தலைகீழா நிக்குது..

மத்தவங்க கிராமத்து வன்முறைய சொன்னா நீங்க சிட்டி ரவுடியிசம் பத்தி அழகா  சொல்லுவீங்க .. உங்களுக்கு சைக்கோ  கதை எடுக்கணும்னு ஆசை இருக்குங்கிறத 'வேட்டையாடு விளையாடு '  படம் பாக்கும்போதே மெல்லிதா புரிய வச்சீங்க.. ஆனா அத இப்படி சொதப்பலா  எடுப்பீங்கன்னு யாரும் எதிர்ப்பார்க்கல  சார்..   
   
கௌதம் சார் .. முதல ஒரு விசயத்த கிளியரா புரிஞ்சிக்கோங்க. உங்க டார்கெட் ஆடியன்ஸ் ஒன்லி இளைஞர் பட்டாளம் .. தாய்குலங்கள் சப்போர்டோ , பேமிலி சப்போர்டோ  பெரியவங்களோ யாரும் இல்ல .. ஆக இளைஞர்களுக்கு கொடுக்கிறத ஒழுங்கா கொடுத்தாத்தான் நீங்க இருக்க முடியும்.

அந்த மாதிரி trend set பண்ணிடீங்க சார் .. மின்னலே , காக்க காக்க , விண்ணைத்தாண்டி வருவாயானு பசங்கள காந்தம் மாதிரி இழுக்க உங்களுக்கு தெரியும் . அது மாதிரி படம் கொடுங்க.. உங்க இடம் அப்படியே இருக்கும் .

சரிப்பா அப்ப நான் புதுசா எதுவும் ட்ரை பண்ண கூடாதான்னு நீங்க நியாயமா கேள்வி கேட்டீங்கனா  என் பதில் -  தாராளமா பண்ணுங்க சார்..  ஆனா  அந்த மாற்றத்துக்கு நீங்க ரெம்ப செதுக்கி செதுக்கி உழைக்கனும். உதாரணம் - லிங்குசாமி . குடும்ப படம் ஆனந்தம் கொடுத்திட்டு , ரன் மாதிரி ஆக்சன் genre கொடுத்து ஆச்சர்யப்படுத்தினாரு.அடிக்கடி பாரதிராஜா தன்னோட கிராமத்து கதைல இருந்து முழுசா ஒதுங்கி கொடி பறக்குது , சிகப்பு ரோஜானு unexpected ஆச்சர்யம் கொடுப்பாரு.

ஆனா நீங்க செஞ்சிருக்கிறது  உங்க முந்தய படத்துல அங்க அங்க வர சைக்கோ ப்ளாக்க பெருசா டெவெலப் பண்ணுன ஒரு படம். ஆனா பழைய படங்கள்ல அத மிக நேர்த்தியா காமிச்ச நீங்க , இங்க ரெம்ப சறுக்கிருக்கீங்க.

பொண்ணுக மட்டும் பாலியல் கொடுமையால பாதிக்கப்படறதில்ல , பசங்களும்தானு சொன்னது ஓகே. ஆனா அதை காட்சியில காட்டும்போது அந்த பையன் மேல அனுதாபம் வராம கோபம்தான் வருது ..காரணம் எந்த ஒரு வலுவான ஸாப்ட்  கார்னரும் அவன் சம்பந்தமா இல்ல ... சிகப்பு ரோஜாக்கள் வெற்றிக்கு காரணம் அந்த படத்துல கையாடப்பட்ட க்ரைம் மட்டும் அல்ல , கதைக்கு அஸ்திவாரமா இருந்த கமல் - ஸ்ரீதேவி காதல்..

 
இந்த மாதிரி  கதைக்களம் எடுத்துட்டிங்கன்னா என்பது சதவீத  காட்சிகள் நிகழ்வுகளாவும் மீதி  இருபது சதவீதம் காட்சிகள் அந்த நிகழ்வுகளுக்கு காரணமாகவும் இருக்கறது க்ரைம் கதைக்கான பார்முலா . பார்க்க சமீபத்திய படம் யுத்தம் செய் . ஹீரோ பாலியல் கொடுமைக்கு படிப்படியா ஆளாகறான்னு  இவ்வளவு நீளமா சொல்லிருக்க தேவை இல்ல.
 
 
 
எது எப்படியோ இந்த கதைக்கு பாடல் வேண்டாம்னு முடிவு பண்ணுனதுக்கு ஒரு பெரிய நன்றி. ஒளிப்பதிவு ஓரளவுக்கு படத்த காப்பாத்தியிருக்கு.ஆனா கதையும் , மையக்கருத்தை தவறுதலா  கையாண்ட விதமும் , சுத்தமா  இல்லாத த்ரில்லும் பாக்கறவங்களுக்கு பொறுமையை இழக்க வெச்சுடுச்சு.
 
நடுநிசி நாய்கள் - இருக்கிற பக்கம் இனி மேல போகாதீங்க கௌதம் சார் .. எங்களையும் கூப்பிடாதீங்க..  

11 comments:

Anonymous said...

nice but why ur n't says to story

Jayadev Das said...

நல்ல விமர்சனம், உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது. சொல்ல வந்ததை தெளிவாக எளிதாக புரியும் படி சொல்கிறீர்கள். நன்று. keep it up.

அபிமன்யு said...

@anony - i gave the storyline and i hope no need of whole story :)

சௌந்தர் said...

படம் திரிசங்கு மாதிரி எதையும் ஒழுங்கா சொல்லாம தலைகீழா நிக்குது..////

ம்ம்ம்ம் ரொம்ப நன்றி உண்மையை சொன்னதற்கு

சௌந்தர் said...

இந்த Word verification எடுத்து விடுங்க

Selvaraaj,Saravanan said...

en sir.. itha konjam neram munadi publish pannirka kodathu? padathai paarthuttu thappichu odi vanthutom..

ravisankar said...

good review..

ராம்ஜி_யாஹூ said...

u have not talked about father son homo sexual acts, why so, u should have written, that would have given much moreimpact

அபிமன்யு said...

ya i agree raamjee.. simply i don want to give a detailed review.. thanx for ur comment..

Kirubakaran said...

oru padatha pathi sariana vimarsanam kodunga parava illa. atha vittuttu ippadai thappichu odunga enrallam kodukkathinga. ithua nalla irukku ithu nalla illai enru sollunga athukku unkaluuku urimai irukkuthu . athukkaga aduthavangala parkka venam enru sollathinga. ean enral ungalukku pidichathu aduthavarukku pidikkamal pogalam. ungaluukku pidikkathathu aduthavrukku pidikkalam. ungal vimarsanthukku romba nanri

Sivakumar said...

ASATHAL!!!

Post a Comment