Tuesday, February 8, 2011

இக்கரைக்கு அக்கரை...

நேற்று என் ஆருயிர் நண்பர் , ஒட்டன்சத்திரம் பண்ணையார் கோபிநாத் வேலை நிமித்தம் புனே சென்றிருந்தாலும் கூட  மிகவும் தேச அக்கறைப்பட்டு மின்மடலில் என்னைத்தாளித்து விட்டார். ' என்ன இப்படி கண்டுக்காம இருக்கீங்க ? எவ்வளவு பெரிய ஊழல் நடந்துருக்கு. இதே அதிமுக செஞ்சிருந்தா இந்நேரம் இப்படி இருப்பீங்களா ? ' என்று தொடங்கி ஏதோ என் சித்தி பையன் தப்பு பண்ணி நான் கண்டிக்காத மாதிரி மிகவும் வருத்தப்பட்டார். அவருக்கு என் முதல் பதிவை வாசிக்க சொல்லி அதில்  நான் குறிப்பிட்ட 'செய்ய போகும் சில குற்றங்களுக்கான முன்ஜாமின்கள்' பத்தியில் மூன்றாவது பாயிண்டை மீண்டும் பார்க்க வலியுறுத்துகிறேன்.

சரி அதற்காக ஒரு கேள்வி என்னை நோக்கி வீசும்போது அதைப்பற்றி கவலைப்படாமல் வேறு ஒருவரை அறிக்கை விட செய்து கொடநாடு சென்று ரெஸ்ட் எடுக்க என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை..

ஓவர் டு மெயின் கோர்ஸ் :

நீதிபதி: 'பெத்தவங்க ரெண்டு பேரையும்  ஈவு இறக்கம் இல்லாம கொலை பண்ணியிருக்க. இதுக்கு என்ன தண்டனை தெரியுமா ?'
குற்றவாளி :'எந்த தண்டனையா இருந்தாலும் யோசிச்சு கொடுங்கய்யா. நான் அப்பா அம்மா இல்லாத அநாதைங்க!'

இப்படிதான் போயிட்டு இருக்கு ஸ்பெக்ட்ரம்  வழக்கு. தப்பு பண்ணிடாங்க . மாட்டிகிட்டாங்க.. அதுவும் திமுக தப்பு பண்ணி மாட்டறது  இதுதான் முதல் தடவ. ஏன்னா எந்த ஒரு விசயத்தையும் பிளான் பண்ணி பண்றதுல கலைஞர்தான் ப்ளாக் பெல்ட் சங்கி மங்கி.

என்னடா   இவனும் ஸ்பெக்ட்ரம்  பத்தி பேச வந்துட்டானான்னு பயப்படாதீங்க.. அதோட ஹிஸ்டரி ஆப்
தி இன்சிடென்ட் ;ஜியாக்ரபி ஆப் தி ஆக்சிடென்ட் எல்லாம் நான் பேச போறதில்ல..ஆனா  இனி என்ன பண்ணலாம்-னு ஒரு முடிவு பண்ணணும்ல.. தேர்தல் வேற வேகமா வந்துட்டு இருக்கு.. நீங்க பாட்டுக்கு அவசரமா எப்போவும் இல்லாம கோபப்பட்டு ஓட்ட மாத்தி போட்டுற போறீங்க..?!!

அதுல்ல பாருங்க ..எல்லாருக்கும் அடிப்படையா ஒரு விஷயம் தெரியும். இவன் கெட்டவன் , அவன் நல்லவன் ,அதனால அவனுக்குதான்  ஓட்டு போடணும்னு நம்ம யாரும் நினைக்கறதில்ல. இவன் பெரிய திருடன் , அவன் சின்ன திருடன் , அதனால அவனுக்கு சப்போர்ட் பண்ணலாம்னுதான் ஒவ்வொரு தடவையும் நாம நெனைப்போம். வேற வழி இல்ல. அப்படியும் இல்லாம என்ன பண்றதுனே தெரியலேன்னா நம்மளே பெருந்தன்மையா 'அட அஞ்சு வருஷம் இவன் அடிச்சுட்டான். அடுத்த சான்ஸ் இவனுக்கு கொடுப்போம். அவனும் எத்தனை நாளைக்குதான் நமக்கு குரல் கொடுக்கற மாதிரியே நடிப்பான்'-னு ஆட்சிய மாத்தி விட்டுடுவோம்.

இதுதானயா காலங்காலமா நடந்துட்டு இருக்கு ? இப்போ மட்டும் என்ன உங்களுக்கு புதுசா ரோசம் ? அட மஞ்ச கலரு  தாத்தாவ பாத்துப்பாத்து போர் அடிச்சுடுச்சு; பச்சை கலரு அம்மாவ நெக்ஸ்டு பாப்போம்னு சொன்னீங்கனா அது நியாயம் .. நான் உங்க கட்சி .. அத விட்டுட்டு  எதோ இந்த பக்கம் ரெம்ப நல்லவங்க இருக்குற மாதிரி , 'ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு சாட்டையடி கொடுப்போம் ; ஆதரிப்போம் தென்னகத்து தெரசாவை..'-னு சொன்னா ரணகளம் ஆகிடும் ; ஆகிடுவீங்க..

அட நாம எதுக்கு இந்தியா பூரா பாக்கணும் ? உனக்கு  இப்போ தமிழ்நாட்டுல என்ன குறை ? டிவி இருக்கு ; ஒரே ஒரு ரூபாய்க்கு அரிசி இருக்கு ; ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு.. இந்தா கொஞ்ச நாளுல ப்ரீ சிம்கார்டு , மொபைலுனு அறிவிப்பாங்க. உனக்கு கொடுக்கத்தான அங்க இருந்து எடுத்திருக்காங்க..அது ஏன் உன் புத்திக்கு எட்டமாட்டிங்குது? அதுவும் இல்லாம அவங்களுக்கே மறுபடியும்  ஓட்டு போட தனியா பணம் கொடுப்பாங்களே .. நீ வேணாம்னு சொல்லிடுவியா ?

அப்புறம் அதிமுக ஆட்சிக்கு வந்தா திமுக தலைக சும்மா இருக்குமா ? பழைய கேஸ் எல்லாம் கிளருவாங்க. அப்புறம் அம்மாவைக் காப்பாத்த மத்தியஅரசு ஒன்னும் பண்ணாது . ஏனா டெல்லி அம்மாவுக்கும் நம்ம அம்மாவுக்கும்தான் பலகாலமா வாய்க்கால் தகராறு இருக்கே.. 

அட நம்ம அம்மா எப்போதான் யாருகூட சண்டை போடாம இருந்திருக்காங்க. அது பி.ஜே.பினாலும் சரி காங்கிரஸ்னாலும் சரி , கொஞ்சமே கொஞ்ச காலம் ஓட்டிட்டு இருந்த மூன்றாம் அணினாலும் சரி , எல்லாரோடவும்   ' நேனே உயரதிகாரி'னு பல்ராம் நாய்டு மாதிரி வெறைப்பா இருப்பாங்க .. அம்மா மேல நடந்த/நடக்கற  ஊழல் வழக்குகள் எல்லாம் இன்னும் நிலுவைல இருக்கேப்பா? அதோட மொத்த மதிப்பு தெரிய வரும்போது அப்புறம் அதுக்கு ஒரு தடவ கோபப்படுவியா?  புரிஞ்சிக்க மாட்டிங்கறியே?


ஆக நம்ம மாநிலத்த பொறுத்தவரைல நல்லவங்க அரசாண்டதெல்லாம் காமராஜர் காலத்துக்கு அப்புறமா காணாம போய்டுச்சு. அதுக்கப்புறம் வந்தவங்களும் சரியில்ல.. நாமளும் சரியில்ல. நம்ம தப்ப எல்லாம் பட்டியல் போட்டா நாள் எல்லாம் அதையே பண்ணிட்டு இருக்க வேண்டியதுதான். அதனால நல்லபுள்ளைக்கு அழகு அமைதியா ஆர்ப்பாட்டம் பண்ணாம எப்பவும்  போல  யாருக்காவது ஓட்ட போட்டுட்டு வேலைய  பாரு.. அது திமுகவுக்கு எதிராக்கூட இருக்கட்டும். ஆனா அவங்க ஊழல் செஞ்சாங்க அதனால்தான்  நான் எதிரா போட்டேன்னு சொன்னா அத ஏத்துக்கமுடியாது. ஏனா எதிர்தரப்பு அதவிட ஏடாகூடமாத்தான் இருக்கு.


முக்கியக்குறிப்பு:மேற்குறிப்பிட்ட யாவும் சராசரி குடிமகனுக்கு எதிராக எழுப்பியவை. இந்த கேள்விகள் எதுவும் உண்மையான, நேர்மையான , வருடம் தவறாமல் வரி கட்டுகிற , மனசாட்சிக்கு தகுந்தபடி வாக்களிக்கிற வெகு சில நல்லவர்களுக்கு அல்ல.
நீங்க எதாவது என்மேல  கோபப்பட்டு  டூ விடாதீங்க..

அதிமுக்கியக்குறிப்பு : நான் திமுக கெடியாதுங்கோவ்...

1 comment:

gopi said...

Dai..eppa enna solla vara..Arasiyalvathi mathirae kollaparyae !!

Post a Comment