Wednesday, June 8, 2011

மனிதாபிமானம் காப்போம்!

என் முந்தைய இந்த பதிவில் நம் தமிழ் மீனவர்கள்  மீது
சிங்களத்தின் தாக்குதல் பற்றி நம் எதிர்ப்பை தெரிவிக்க கடிதம் அனுப்ப
கோரியிருந்தேன்.அதில் கடைசியாக இப்படி கூறியிருந்தேன் - 'இது காந்திய வழி. நம்மால் ஆன முதல் எளிய நடவடிக்கை. அடுத்த போராட்டங்களுக்கு பிறகு இணைந்து  கை கொடுப்போம்.'

அடுத்த கட்டத்துக்கான நேரம் வந்து விட்டது. இதுவும் காந்திய வழிதான்.அமைதியாக , ஆர்ப்பாட்டம் இல்லாமல் மெழுகுத்திரி ஏந்தி நம் வேதனையை தெரியப்படுத்துவது . யாருக்கு தெரியப்படுத்துகிறோம் என்பதுதான் கேள்விகுறி.

ஆனால் குறைந்தது உலக மக்கள் உண்மையை அறிய ஏதுவாய் இருக்கும். கடலுக்கு நடுவில் அகப்பட்ட ஒரு இனம் படுகொலைகளாலும் , சித்திரவதைகளாலும் பரிதவிக்க , இடையே கடல் தடுத்து நிற்க , வெகு அருகில்  ,அடுத்த கரையில் அந்த இனத்தின் உடன்பிறந்த  கூட்டம் அமைதியாக போராட்டம் செய்வதை உலகம் அறியட்டும்.


ஜூன் 26  - எல்லாரும் மெரினாவுக்கு குடும்பத்துடன் வாருங்கள். இயலாதவர்கள் தனித்து வாருங்கள். வர முடியாதவர்கள் இதைப்பற்றி  கூடிய வரையில் ஊடகங்களில் (ஆர்குட்டோ, பேஷ்புக்கோ , அல்லது உங்கள் வலைப்பக்கமோ  ) பதிவிடுங்கள்.


விடியல் விரைவில் வர வேண்டிக்கொள்வோம்.அதுவரை வெளிச்சம் பெற விளக்கேற்றுவோம்.

No comments:

Post a Comment