Monday, June 13, 2011

பாப்கார்ன் பாக்கெட்- 20110609

தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே காணாமல் போகும் என்று அஞ்சாநெஞ்சன்  சொன்னார். தேர்தலுக்கு பின் 'இனி சூரியன் உதிக்கவே உதிக்காது' என்று அம்மா சொல்லியிருக்கிறார். ஆனால் இதையெல்லாம் செயல்படுத்தும் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் - எப்போதும் போலவே.ஆனால் இது புயலுக்குப் பின்னான  அமைதி என்று அம்மாவுக்கு இன்னும் புரியவில்லை.



எந்த அரசியல் சாணக்யனாலும் மக்களின் மனநிலையை
முழுதாக புரிந்துக்கொள்ள முடியாது.

பார்ப்போம் .. சூரியன், இலை,கை,முரசு எல்லாம் அடுத்த ஐந்து வருடத்தில் என்ன பரிணாம வளர்ச்சி அடைகிறது என்று..

ஹிஹி அதுவரைக்கும் நாம் எப்போதுமே மிக புனிதமான  பார்வையாளர்கள் கட்சியில் இருந்து ஆட்டத்தை கவனிப்போம்.
-----------------------------------------------------------------------

'இந்திய பிக்காஸோ' ஹுசைன் காலமாகி விட்டார். ஓவியத்தின் புது பரிணாமத்தை
காட்டியவர். கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்தவர் - கூடவே  எதிர்ப்பையும். பத்மஸ்ரீ விருதுக்கு சொந்தகாரர். சில படங்களும் இயக்கி தயாரித்துள்ளார். கலைஞனுக்கே    உண்டான கர்வமும் வளைந்து கொடுக்காத தன்மையும் இவரிடம் இருந்தது. இவருக்கு பாரத ரத்னா வழங்குவதற்காக,  ஆதரவாளர்கள் அளித்த மனு பரிசீலனையில் உள்ளது.


இந்து பெண் தெய்வங்களை ஆபாசமாக வரைந்தவர் என்று குற்றச்சாட்டு இவர் மீது  உண்டு. அதற்காக பலமுறை தாக்கப்பட்டிருக்கிறார். சிவசேனா அமைப்பினரின் நிரந்தர எதிரி. லண்டனில் கண்காட்சி நடத்தி பணம் சம்பாதித்த போதும் ,அங்கும் எழுந்த  எதிர்ப்பு , கண்காட்சியை மூட வைத்தது.
எனக்கு ஓவியக்கலையில் எந்த அறிவும் கிடையாது- ரசிப்பதை தவிர.
எந்த கருத்தை வலியுறுத்த இப்படி வரைந்தார் என்று எங்காவது விளக்கியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால்  நம் கோவில் சிற்பங்கள் கூட அப்படி ஆபாசமாகத்தானே  உள்ளன என்று யாரும் இதுவரை
சிந்திக்கவில்லை. காரணம் கோவிலில் நம் எண்ணங்கள் தவறான கண்ணோட்டத்துக்கு போவதில்லை.அதனால் சிற்பங்கள் ஆபாசமாக தெரிவதில்லை.

ஒருவேளை இவரின் ஓவியங்களையும் , நல்ல கண்ணோட்டத்துடன் பார்த்தால் யாருக்கும் உறுத்தாதோ ? அப்படியானால் தவறு ஓவியம் மீதல்ல , பார்ப்பவர் எண்ணப்படி தானே ?  இது என் நிலைப்பாடு அல்ல. ஏதோ இப்படியும் சிந்திக்கலாமே என்று தோணியது.அவ்வளவுதான்.


எப்படியோ , நிறைவான கலை வாழ்வை வாழ்ந்து விடைபெற்றிருக்கிறார் ஹுசைன்.அவரின் கலைத்திறனுக்கும் சாதனைகளுக்கும் தலைவணங்குவோம்.
------------------------------------------------------------------
இப்போதான் விக்ரம் திரும்ப ட்ரேக்குக்கு வந்திருக்கிறார். ரொம்ப வருஷம் கஷ்டப்பட்டுட்டு பாவம் அவர் பாட்டுக்கு  தில்,தூள்,சாமி,அந்நியன்னு கமர்சியல் படங்கள் கொடுத்து ஹிட் அடிச்சிட்டு இருந்தாரு. அவரை 'பீமா'  மூணு வருஷம்  , கந்தசாமி ஒரு வருஷம் , ராவணன் ரெண்டு வருஷம்னு மொத்தமா குத்தகைக்கு எடுத்து கவுத்து காயப்படுத்துனாங்க.



 நல்ல வேளை 'பொன்னியின் செல்வன்'  ட்ராப் ஆகி இவர்
காரியரை காப்பாத்துச்சு.  இப்போ ரிலீஸ் ஆகப்போற தெய்வத்திருமகன் நல்ல திருப்புமுனை கொடுக்கும்னு ட்ரைலர்
நம்ப வைக்குது.மதராசப்பட்டினம் விஜய் இந்த படத்தையும் ரிச் கிளாசிக்கா எடுத்திருக்கார். 

மிக கவனமா நடிக்க வேண்டிய கேரக்டர்.குணா கமல் , வில்லன்  அஜித் சாயல் வராம அதே சமயம் மனநிலை பாதிக்கப்பட்ட நபரோட அழுத்தம் குறையாம நடிக்கணும்.அதவிட முக்கியம் , பிதாமகன்ல ஏறத்தாழ இதே பாத்திரம்.அதன் சாயலும் இருக்க கூடாது. விக்ரம் நடிப்பு ,முகபாவனை ஓவர் ஆக்டிங் இல்லைன்னு தெரியுது. எதிர்பார்ப்போம்.



உடனே அடுத்த படம்  'ராஜபாட்டை' வேலைல இறங்கி மறுபடியும் சுறுசுறுப்பாகிட்டாரு. தொடர்ந்து மூணு ஹிட் கொடுத்த சுசிந்திரன் டைரக்சன். இதுவும் விக்ரமுக்கு  பழைய இடத்தை வாங்கி தர ஸ்கோப் இருக்கு.பார்ப்போம்.கமான் சியான்.
 -------------------------------------------------------------------------

ஒருவரின் நம்பிக்கையை , அடுத்தவர் நினைத்தால்  மிக எளிதாக சிதைத்து விட முடியும் என்பதற்கான காட்சி.இந்த கருத்தை இதை விட நகைச்சுவையாக யாராலும் சொல்ல முடியாது.




'மேன் ப்ரம் தி சவுத் ' 
என்னும் சிறுகதையிலிருந்து அதன்  கருவை  எடுத்து
ரஜினியின் சிகிரெட் பிடிக்கும் ஸ்டைலை ,லாவகத்தை ,
மிக அழகாக இதில் உபயோகப்படுத்தியிருப்பார் பாலசந்தர்.
ரஜினியும் அருமையாக நடித்திருப்பார்.ஒவ்வொரு தடவையும்  சிகிரெட்டை தூக்கிப் போட்டு பிடித்த பின் , மாறும் அவரின் முக உணர்ச்சிகள் அற்புதம். பந்தாவாக ஆரம்பித்து பின்
பம்முவதில் அவர் காட்டும் அலட்சிய நடிப்பு ரசிக்க வைக்கிறது.
Excellent Rich Classic.
-----------------------------------------------------------------------------

கடைசி கார்ன்:

இது வரைக்கும் கூகுள் மொழிபெயர்ப்பு கருவியைத்தான் பயன்படுத்தி வருகிறேன்.அது என்னை படாதபாடு படுத்தி வருகிறது.மொழிபெயர்க்கும் போது மிக சாதுவாக இருக்கும் அது  , வாக்கியங்களை ப்ளாக்கருக்கு இடம்பெயர்க்கும்போது ஆக்ரோஷமாய் ஃபார்மட்டிங்கை கன்னாபின்னாவென மாற்றி
விடுகிறது.

எனக்கு பதிவை உருவாக்கும் நேரத்தை விட அதை வரிவரியாக ஒழுங்குப்படுத்தி பதிவிடும்போதுதான் அதிக நேரம் எடுக்கிறது.கடினமான வேலைக்கு (உண்மையாக , சத்தியமாக  )இடைப்பட்ட அகால நேரத்தில் , இதெல்லாம் செய்யும்போது எரிச்சலில் சில சமயம் ' இந்த பதிவு வாழ்க்கையில் இருந்து ஒய்வு பெறலாம் ' என்று அறிக்கை கொடுக்க நினைக்க வைக்கிறது.

ஆனால் என்னை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான வாசகர்கள்  , ஹ்ம்ம் ஓகே லட்சக்கணக்கான ,  அட ஒரு ஆயிரம் , போங்கப்பா.. சரி நூற்றுக்கணக்கான பேர் நிலைமையை எண்ணி அந்த எண்ணத்தை தியாகம் செய்து விட்டேன்.
எனக்கு இதில்  விவரம் தெரிந்த யாராவது உதவினால் என் சேவை தொடரும்.இல்லையென்றால் நானும் 'வலையுலக மக்கள் எனக்கு ஒய்வு அளித்து விட்டார்கள் ' என்று ரத்தினசுருக்கமாய் சொல்லிவிட்டு ஓடிவிடுவேன். 

பாத்துக்கோங்க...
இருக்குற மொக்கைப் பதிவர்கள்ல நான்தான் ரெம்ப கம்மியா மொக்கை போடறேன்னு 'கயோலா-பிக்ஸன்' கருத்துக்கணிப்பு சொல்லிருக்கு.
-------------------------------------------------------------------------

4 comments:

rajamelaiyur said...

//
எந்த அரசியல் சாணக்யனாலும் மக்களின் மனநிலையை
முழுதாக புரிந்துக்கொள்ள முடியாது.
///
உண்மை ...உண்மை

rajamelaiyur said...

இன்று எனது வலையில்

சிறந்த பொழுதுபோக்கு தளம் - விருது

N.H. Narasimma Prasad said...

இந்த வார பாப் கார்ன் சூப்பர். ஆனா தமிழ்மணத்துல ஒட்டு போடலாம்னு பார்த்தா, 'no such post' அப்படின்னு வருது. அதை கொஞ்சம் சரி பார்க்கவும்.

அபிமன்யு said...

எனக்கு சரியாகதான் ஒட்டு போட வருகிறது பிரசாத்.

ராஜா ..உங்கள் விருதுக்கான பக்கத்தின் லிங்க் கொடுக்கவும் நண்பரே.

Post a Comment