Friday, May 6, 2011

ஜெத்மலானி - சட்டத்திற்கு சாபமாய் மாறிய வரம்

எப்போதும்  சில  பேரின்  வாழ்க்கைப் பக்கங்களை   புரட்டினால்  
நமக்கு எதாவது  ஒரு  பாடம்  கிடைக்கும் .அதில்  அவரின்    நடத்தையும் குணங்களும் ஏறத்தாழ  நமக்கு புரியும் .சிலபேர்   வாழ்க்கையோ  புதிராக ,குழப்பமாக  இருக்கும்  அல்லது  ஏன்   இப்படி  இருந்தார்  என்பதை சொல்லாமலே  விட்டுவிடுவார்கள் .அல்லது நமக்கு புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாமல்  இருக்கும்.ராம்ஜெத்மலானியும்  அப்படித்தான் .

சிலபேர்  பிறக்கும்போதே  அதீத  திறமை  வாய்ந்தவர்களாக 
பிறப்பார்கள் .வாழ்க்கையின்  எல்லா  கட்டங்களிலும் 
எல்லாரையும்  விட  முன்னணியில்  இருந்தே  
முன்னேறியிருப்பார்கள் .
ஆனால்  முன்னுக்கு  வந்தப்பின்  அந்த திறமை  நல்லதற்கு  பயன்படுகிறதோ  இல்லையோ தங்கள்  தனி 
 முன்னேற்றத்திற்கு  மட்டும்  பயன்படுத்த ஆரம்பித்து  , அதனாலேயே    மக்களுக்கு  தலைவர்   ஆகும்  தகுதியை 
 இழந்து  விடுகிறார்கள் .இது  போல்  பல  தலைவர்களை  மக்கள்  
இழந்திருக்கிறார்கள் .ராம்ஜெத்மலானியும் அப்படித்தான்.

புகழ் பெறுவதில்   இரண்டு  வழி  உண்டு .ஒன்று  -மிக  நல்லபிள்ளையாக  பெருவாரியான  மக்களுக்கு   ஒத்துப்போன  கருத்தை  முன்வைத்து  அதற்காக  போராடுவது.
மற்றொன்று -எல்லாரும்   எதிர்க்கும்  ஒரு  செயலை  அல்லது ஒரு  நபரை  ஆதரிப்பது .இதில்  இரண்டாம்  வகை மனிதர்களுக்கு தைரியம்  அதிகம்  இருக்க  வேண்டும் .
ராம்ஜெத்மலானியும் அப்படித்தான் .



முதலில்  அவர்  துணிச்சலுக்கு  ஒரு  சல்யுட் 
 

.வாழ்க்கையின் எல்லா  நிலையிலும் எதிர்ப்பவருடன்  எந்த விதத்திலும்  ' நோ  காம்ப்ரமைஸ் '

பள்ளி  வயதில்  இரட்டை  நிலை  உயர்வு  பெற்று  பதிமூன்று  வயதிலேயே   பள்ளிப்படிப்பை  கடந்தவர் ஜெத்மலானி. அவர்  தன்  பதினேழாவது  வயதில்  சட்டம்  முடித்தார்   என்றால்  உங்களுக்கு  நம்ப  முடிகிறதா ?

அடுத்து  அவர்  நீதிமன்றத்தில்  வக்கீலாக  ( குறைந்த வயது தகுதி இருபத்தி ஒன்று. ஆனால் தனி  அங்கிகாரமும்  , அனுமதியும்  பெற்று ) வாதாட ஆரம்பித்தது 
தன் பதினெட்டாம் வயதில்.

பாகிஸ்தானில்  பிறந்து  பிறகு  பிரிவினைக்குப்பின்  இந்தியா  வந்தவர்.பாகிஸ்தானில்  இருக்கும்போதே அதன்  முக்கிய   அம்சமான  வரைமறை  இல்லாத  திருமண  முறையை உபயோகப்படுத்தி  இரட்டை மணம்  செய்தவர் .அதுதான் ஜெத்மலானி :)

பம்பாயில்  இந்தியா  வாசத்தை  தொடங்கி  வக்கீலாக  வேலைப்
பார்த்த  ஜெத்மலானி  மீது
சமூகத்தின்  பார்வை  விழத்தொடங்கியது
,அவர்  கடற்படை  தளபதி  நானாவதி  ,தன் மனைவியின் காதலனை கொலை செய்த வழக்கில் இறங்கியபோதுதான் .அடுத்த வருடத்திலேயே   கள்ளக்கடத்தல்  கும்பல்  ஒன்றுக்காக  வாதாடி அவர்களின்  விடுதலைக்கு
 காரணமானதால்  . 'கடத்தல்காரர்களின்  வக்கீல் ' என்று  பெயர்  பெற்றது  குறிப்பிட  வேண்டியது
 .
இதற்கு  அவரின்  அழுத்தமான  பதில்
' நான்  வக்கீலின்  கடமையைத்தான்  செய்தேன் ' என்பதே .உண்மைதானே.. எந்த சட்டத்தில் கெட்டவர்களுக்கு ஆதரவாக வாதாட கூடாது என்று குறிப்பிட்டுள்ளது  ? இதன் மூலம் பிள்ளையார் சுழி போட்டு அரம்பித்ததுதான் ஜெத்மலானியின் சர்ச்சைக்குரிய வழக்குகள்.


அடுத்து  நடந்தது  எல்லாம்
நாடறிந்த  கதைகள்.இவரின்  அரசியல்  பிரவேசமும்  ,வாஜ்பாய்  தலைமையில் இரண்டு
முறை  சட்ட  அமைச்சர்  ஆன  கதையும்  , பிறகு  வாஜ்பாயையே  எதிர்த்து  போட்டியிட்டு  தோற்றதும்  இவரின் துணிவுக்கும்  இரும்பு
மனதிற்கும்  எடுத்துக்காட்டுகள் .

போதும்  முன்னுரை.
இப்போது  இவர்  ஆதரித்து  வழக்காடிய  நபர்கள்  மற்றும்  வழக்குகளின்  பட்டியல் :


1.பிரதமர்  இந்திரா  காந்தியைக்  கொன்றவர்களுக்கு  ஆதரவாக
2.ஹவாலா  புகழ்  ஹர்ஷத்  மேஹ்தாவுக்கு   அதரவாக
3.பங்குச்சந்தை  ஊழல் புகழ் கேத்தன்  பஃரேக்க்கு  ஆதரவாக
4.நிழலுலக  தாதா ஹாஜி  மஸ்தானுக்காக  
5. தீவிரவாதி  அப்சல் குருவுக்காக
( இது  ஒரு  விதத்தில்  நியாயமே . காரணம்  ஜெத்மலானி  கூறியதே  .'இவன்  மிக சுலபமாக  சாக  வேண்டியவன்   அல்ல . சிறையில்  காலங்காலமாக  உழந்து  தண்டிக்கப்படவேண்டியவன் ')
6.ஹவாலா  வழக்கில்  அத்வானிக்கு  ஆதரவாக
7.ஜெசிக்கா  லால்  கொலை  வலைக்கில்  மனு ஷர்மாவுக்காக
8.சொஹ்ரபுதின்  போலி  என்கவுண்டர் வழக்கில்  குஜராத்தின்  முனனாள்  உள்துறை  அமைச்சருக்காக
9.ராமவடார்  ஜக்கி  கொலை  வழக்கில்  அமித்  ஜோகியை  காப்பாற்ற
10.போன  வருடம்  ஐபிஎல்  முன்னாள்  தலைவர்  லலித்  மோடிக்காக
11.தற்போது  2ஜி  ஊழல்  வழக்கில்  கனிமொழிக்காக

தொண்ணூறு  வயது  நெருங்கியும் இன்னும்  சட்டத்தில்  எங்கெங்கு  சந்துகள்  இருந்தாலும்  , அதில்  கூடியவரையில்  புகுந்து குற்றவாளியைக்  காப்பாற்றும்  
இவரின் திறமையில்  எவருக்கும்  சந்தேகம்  இல்லை .


நான்கு  முறை இந்தியா  பார்  கவுன்சில்  தலைவராகவும்  ,இரண்டுமுறை  
நாட்டின்  சட்ட  அமைச்சராகவும் ,தற்போதைய  ராஜ்யசபா  
உறுப்பினராகவும்  .இருக்கும் இவரின்  தகுதியையும்  யாரும்  விமர்சிக்க  தேவை  இல்லை

ஆனால்  இவ்வளவு  நல்ல  திறமைகள்  இருந்தும்  அதை  
நல்லதுக்கு  பயன்படுத்தாமல் ,தொடர்ந்து  ஏன்  தவறான 
அணியின்  பக்கம் துணை  போகிறார்  ஜெத்மலானி ?
இவரின்  உத்தேசம்  பணமா  , புகழா , பதவியா ? அதுதான்  என்றால் இந்த  மூன்றையும்  அதிகமாகவே  அனுபவித்து  விட்டார் .
பிறகு  எதற்கு  2 ஜி பக்கம்  ?

ஊழல்களிலும்  மக்கள்  பணத்தை  சுரண்டுவதிலும்  கை  
தேர்ந்தவர்கள்,  இவரைப்  போல  சட்ட  வல்லுநர் துணை  இருக்கும்  தைரியத்தில்,  தவறுகளின்  எந்த 
உச்சத்துக்கும்  போகும்  நிலை இருக்கிறது.ஊர்  அறிந்த  2ஜி  ஊழலுக்கு  என்ன  சப்பைக்கட்டு  
கட்ட  போகிறார் ஜெத்மலானி என்று  எல்லாரும்  ஆவலாக  காத்திருக்கிறார்கள். 

இன்னொரு அம்பேத்காராக பேசப்பட வேண்டியவர். ஆனால் இவரை  முன்மாதிரியாய்  எடுத்துக்  கொள்ள  சட்டம்
படிப்பவர்களை அறிவுறுத்த  முடியாத   நிலைதான் இப்போது இருக்கிறது.

ஆனால் இவைப் பற்றி எந்த கவலையும் படாமல் தன் வழியில் வேகமாக போய்க்கொண்டிருக்கிறார் ஜெத்மலானி. மக்களின் கோபமான கேள்விகளுக்கெல்லாம்  அவரின் தீர்க்கமான பதில் 'நான் என் ஆத்மாவையும் , அறிவையும் யாருக்கும் அடகு வைக்கவில்லை.சட்டத்தில் முன் நிறுத்தப்படும் ஒருவனை , மக்கள் குற்றவாளியாக கருதிவிட்ட ஒரே காரணத்தினால் ஒரு வக்கீல் அவனை காப்பாற்றாமல் விடுவானானால் ,அந்த வக்கீலும் குற்றவாளியே '



மிக நேரான கூர்மையான பதில். பாராட்டப்படவேண்டியது.அதே சமயம் வருத்தப்படவேண்டியது . இந்த இருப்பக்க கத்தி கொள்கை  எப்போது எந்த பக்கம் பாயும் என்பது
இதுவரை யாரும் கணிக்கவில்லை.

என்ன செய்வது ? பாரதத்தின் சாபம் இது. ஆதி காலம் தொடங்கி பீஷ்மர்களும் துரோணர்களும் , துரியோதனர்கள் பக்கமே இருந்து தொலைக்கிறார்கள் .
ஆனால் நல்லவர்கள் பக்கம் இப்போதெல்லாம் எந்த கண்ணனும் காணப்படுவதில்லை.

10 comments:

Anonymous said...

unmai ashok... enna seiya.. its all about poor indian fate...

- Vikram

rajamelaiyur said...

But truth will win one day

rajamelaiyur said...

Vote potachu... Bye

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

//மும்பை தீவிரவாதி அப்சல் குருவுக்காக//

Are you sure?

வீராங்கன் said...

//துரியோதனர்கள் பக்கமே இருந்து தொலைக்கிறார்கள் .//

துரியோதனன் கெட்டவன் என்று எப்படி தீர்மாணித்தீர்கள். அப்போதைய மரபுப் படி அரசு மூத்தவனுக்கே சொந்தம். அடுத்த மன்னன் மூத்த மகந்தான். மரபுப் படி நாட்டை துண்டாட மாட்டார்கள். கிராமங்களைக்கூட பிரிக்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் நாட்டின் உரிமையில் பாண்டவர்களுக்கு பங்கே கிடையாது.

நீங்கள் சொன்ன அனைவரும் அப்போதைய மரபின்படியான தர்மத்தின்படியே நின்றனர்.

அதர்மமாக நாட்டை துண்டாட நினைத்தது, கடைசில் உண்மையான வாரிசிடமிருந்து நாட்டை பிடுங்கியது பாண்டவர்கள்தான். அவர்களுக்கு உதவியது கிருஷ்ணன் முதலானவர்கள்.

vasan said...

பிஜேபி ஆளும் ச‌த்தீஸ்க‌ர் நீதிம‌ன்ற‌ தீர்ப்புக்கு எதிராக‌வும், ச‌மூக‌ ஆர்வாள‌ர், சேவ‌க‌ர் டாக்ட‌ர் பினாய‌க் சிங்க்கு ஆதர‌வாக வாதிட்டும் இருக்கிறார். அவர் எப்போதும் ஒரு முர‌ணான‌ வ‌க்கீலாக‌வே இருந்து வ‌ந்திருக்கிறார்.

Hope said...

இவனை(என்ன மரியதை வேண்டி இருக்கு) போல் இந்தியவில் இருப்தால்தான் பணக்காரன் மேலும் மேல் பணக்காரன் ஆகிறான். ஏழை ஏழையாகி கொண்டே போகிறான். குற்றம் செய்தவர்களை வாழ வைத்து கொண்டு இருப்பவனை நீங்கள் வேறு புகழுகிரீர்களே. சாபக்கேடு.

PRABHU RAJADURAI said...

எனது இந்த பதிவில், உங்களுக்கு விடை கிடைக்கலாம்
http://marchoflaw.blogspot.com/2008/12/blog-post.html

PRABHU RAJADURAI said...

நானாவதி வழக்கில் ராம்ஜேத்மலானி பங்கு பெற்றார் என்பது எனக்கு புதிய செய்தி. அவரைப் பற்றி இங்கு கூறப்பட்டுள்ள வேறு பல செய்திகளும் நான் அறியாதவை நானாவதி வழக்கின் பல்வேறு தீர்ப்புகளை தொகுத்து கதை வடிவில் எழுதிய பதிவு
http://marchoflaw.blogspot.com/2006/09/blog-post_15.html

அபிமன்யு said...

வித்யாசாகரன் (Vidyasakaran)

திருத்தியதற்கு நன்றி நண்பரே ..மாற்றி விட்டேன்.

வீராங்கன்

அது உங்கள் கருத்து. மிகப் புதுமையான சிந்தனை. அப்படியும் யோசிக்கலாம். நன்றி தோழரே.

Prabhu Rajadurai

உங்கள் பதிவின் தகவல்கள் ஏராளம் நண்பரே. எனக்கு மிக பயனுள்ளதாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி.

Post a Comment