Tuesday, August 23, 2011

குறுக்கு வழி : A Fiction


----------------------------------------------------
ஆகஸ்ட்  14 ,2011:

'அப்போ இது நிச்சயம் சாத்தியம்தானா ஜெனரல்?
இந்த இக்கட்டான நிலைமையில் இந்த முயற்சி வெற்றி தருமா?'

'வேறு வழி இருக்கா..சொல்லுங்க சார்..?'

'கண்டிப்பா இல்ல..ஆனா இந்த மாதிரி முறை இருப்பதே எனக்கு ஒரு பக்கம் சந்தோசமாவும், இன்னொரு பக்கம் நம்ப முடியாமலும் இருக்கு..நான் சொன்னாலும் மினிஸ்டர் நம்பணுமே..'

'சார்..சில விஷயங்கள் ராணுவத்தை தாண்டி வெளிய போகாது..யார் ஆட்சிக்கு வந்தாலும் கூடியவரை அவர்களுக்கு தெரியாமல் இந்த கண்டுபிடிப்புகளை வைத்திருப்போம்.இப்போ நீங்களா ஆலோசனை கேட்டதால இத சொல்றோம்..வன்முறை எதுவுமே இல்லாம இந்த நிலைமையை சமாளிக்கணும்னா இதுதான் ஒரே வழி..'

'ஆல்ரைட். ஐ அக்ரீ.அப்போ யார் இந்த வேலைய செய்ய போறது?'

'ஒரு சீனியர் Grade-One சயன்டிஸ்ட்.லெவல் ஏ.இந்தியன் சீக்ரெட்  மிலிட்டரி சர்வீஸ் விங்'

'சரி.  ஆல் தி பெஸ்ட் . நான் மேலிடத்துக்கு தகவல் சொல்லிடறேன்.உங்க போன்காலுக்காக காத்திருப்பேன்.'

-------------------------------------------

 ஜூன்  23 , 1976:

'ஆச்சர்யமா  இருக்கு  டாக்டர் . நீங்க சொல்றத பாத்தா இந்த மருந்து தீவிரவாதத்த உலகம் முழுக்க ஒழிச்சிடும் போலிருக்கே'

'சந்தேகம் வேண்டாம் கவ்ரவ். என்னோட பதினைந்து வருட உழைப்பு  இது. அந்த மூணு பேர பார்த்தீங்களா..?'

'ஆமா... அபாரமான மாற்றம்..அதிலயும் சப்ஜெக்ட் 47 பேச்சும் நடையும் நூறு சதவீதம் மாறிடுச்சு..அவ்வளவு மூர்க்கமா தன்  நாட்டுக்காக  மனித வெடிகுண்டா ,எல்லை தாண்டி வந்தவன் இப்படியா அமைதியாவான்?  '

'இதுல ஆச்சர்யபடறதுக்கு ஒன்னும் இல்ல . மருத்துவத்தோட மிக எளிதான சிறப்பு இது.. மூர்க்கத்தை குறைச்சு , அமைதியான மனநிலையை கொடுக்கிற மாத்திரைகள் பல இருக்கே. ஆனா என் கண்டுபிடிப்பு அதோட அடுத்த கட்டம். கூடவே ஒரு சுயநலத்தை புத்திக்குள்ள செலுத்துது.. தன் பாதுகாப்பு , தன் குடும்பம்,தன் குழந்தைன்னு ஒரு வட்டத்த தாண்டாம அதுக்குள்ளயே யோசிக்க வைக்குது. தன் குடும்ப பயம் வந்துதுனாவே ஒரு மனுஷனுக்கு  தீவிரவாதம் ,கொள்கையெல்லாம் 
ரெம்ப தூரம் ஓடி போய்டும்.. பிடிவாதமும் காணாம போய்டும்..'

'எல்லாரையும் இப்படி மன்னிச்சு விட்டுட்டா நம்ம நாட்டுக்குத்தான் டாக்டர் ஆபத்து.?'

'இல்ல..போர்னு வந்தால் நேருக்கு நேர் மோதலாம். அதில் எத்தனை பேரை வேணுமென்றாலும் அழிக்கலாம். ஏன்னா  அது நாடுகள் சம்பந்தப்பட்டது. அப்படி சாகும் வீரர்கள் ஒன்றும் தவறானவர்கள் அல்ல..தங்கள் நாட்டுக்காக போரிட்டு அழிகிறார்கள்..ஆனால் தீவிரவாதிகள் அப்படி அல்ல..தவறான மனிதர்களின் மூளை சலவையினால் பாதை மாறியவர்கள்.திருந்தப்படவேண்டியவர்கள். அவர்களில் ஒருவனை  அழித்தால் தீவிரவாதிதான் சாகிறான்.ஆனால் தீவிரவாதம் சாகாது.அதற்கு இந்த முறைதான் சரி..'
 
'இனி அடுத்த கட்டம் என்ன டாக்டர் ?'

'வேற என்ன? உடனே இந்த மருந்த இந்திய  ராணுவத்துக்கு அர்பணிக்கிறதுதான்.. இனி எதிர்பக்கம் எந்த தீவிரவாதி வந்தாலும் , கொல்லணும்னு அவசியம் இல்ல... மனுசனா ,அதுவும் தன்னலத்துக்காக  அடங்கிபோற சாதுவான மனுசனா மாத்திடலாம்..
இந்தியா அஹிம்சை தேசம்னு பெருமையா சொல்லிக்கலாம் கவ்ரவ்.'

'பாராட்டுக்கள் டாக்டர் மோத்தா '

புதிய குரல் கேட்டு இருவரும் திரும்பினார்கள்.  ராணுவ உடையில் மிடுக்காக ஜெனரல்.அருகில் புது நாகரீக உடையில் ப்ரித்வி. 

----------------------------------------------

ஆகஸ்ட்  18 ,2011:

'எனக்கு ரெம்ப பயமா இருக்கு. இதெல்லாம் நடக்குமா? இன்னும் கொஞ்ச நேரத்துல ஆள் ஜெயில்ல இருந்து வெளிய வர போறதா செய்தி வந்திருக்கு... '

'சார்..இத கண்டிப்பா நம்பலாம். இது வரைக்கும் படத்தில,கதைல  மட்டுமே சாத்தியம்னு நெனச்ச டைம் மெசின் ,இப்போ நம்ம ராணுவ விஞ்ஞானிகள் கிட்ட கைக்குழந்தை மாதிரி இருக்கு... எல்லா பிரச்சனையும் சுமுகமா முடிஞ்சுடும்.'

காரியதரிசி பேசிக்கொண்டே போக , அவரை சந்தேகமாக , கலக்கமாக பார்த்தார் மந்திரி.

-----------------------------------------------

ஜூன்  23 , 1976:

'எனக்கு புரியல ஜெனரல். நான் இந்த மருந்த தீவிரவாதிகளுக்காக கண்டுபிடிச்சிருக்கேன்.அதை நம்ம ராணுவ வீரன் ஒருத்தன்கிட்டயே  சோதனை செய்ய என்ன அவசியம்?'

'எதுவும் கேக்காதீங்க டாக்டர் மோத்தா.மேலிடத்து உத்தரவு.உடனடியா இது நடந்தாகணும்.'

'சாரி ஜெனரல்.காரணம் தெரியாம நான் இதுக்கு ஒத்துக்க முடியாது'

'சரி டாக்டர்..நீங்க ப்ரித்விகிட்ட பேசுங்க..அவர் எவ்வளவு சிரமப்பட்டு இங்க வந்திருக்காருன்னு தெரிஞ்சா நீங்க கண்டிப்பா ஒத்துக்குவீங்க'

'ஹாய்.ஐ அம் டாக்டர்.ப்ரித்வி.உங்க கண்டுபிடிப்பு அபாரம்.ஆனா
ஏன் பயப்படுறீங்கனு தெரியல..தப்பா போய்டும்னு நெனச்சா ?'

'வாட் நான்சென்ஸ். என் கண்டுபிடிப்ப கேள்வி கேட்க , சந்தேகப்பட உங்களுக்கு என்ன தகுதி இருக்கு.?'

'வாஸ்தவம்தான்.உங்க திறமையை சந்தேகப்பட இப்போ எனக்கு தகுதி மட்டும் இல்ல வயசும் இல்ல.. பை தி பை ,எனக்கு இப்போ ஆறு வயசுதான் ஆகுது'

மோத்தா முகத்தில் குழப்பமும் வியப்பும். ப்ரித்வி பேசத் தொடங்கினார்.

 ----------------------------------------

ஆகஸ்ட்  18 ,2011:

'உங்களுக்கு எப்படி இத பத்தி தகவல் தெரிஞ்சுது?'

'சமீபத்துல ராணுவத்துல நம்பிக்கையான என் ஆள் மூலமா அங்க நடந்த முக்கியமான பரிசோதனைகளைப் பற்றிய தகவல் எனக்கு கிடைச்சுது சார். அதுல எனக்கு ரெம்ப வியப்பா  பட்டது டாக்டர் மோத்தா மேற்கொண்ட பரிசோதனைதான்.

சுயநலம் புகுத்தி ஒரு மனிதனோட முழு போராட்ட குணத்தையும் மாத்தி அமைதியாக்குற மருந்தை கண்டுபிடிச்சு, அதுல  
வெற்றியும் அடைஞ்சிருக்காரு.ஆனா எதோ ஒரு காரணத்தால அவர் கண்டுபிடிச்ச மருந்துகள ,அதன் ரகசியத்த ராணுவத்துக்கு கொடுக்காம   பரிசோதனை தோல்வினு அவரா விலகிட்டார்.

ஆனா அவரோட முயற்சி வெற்றிங்கறது ,அவர் சோதனைக்கு உட்பட்ட  தீவிரவாதிகள தொடர்ந்து கண்காணிச்ச நம்ம ராணுவம்   உறுதிபடுத்திருக்கு. அவரோட மருந்துதான் இப்போ நமக்கு கை கொடுக்க போகுது. '

 பேசி கொண்டே போன அவரை ,பாக்கெட்டில்  ஈங்காரமிட்ட செல்போன் தடுத்தது
---------------------------------------

ஜூன்  23 , 1976:

'ஓகே ப்ரித்வி .உங்கள் திட்டத்திற்கு அரைமனதுடன் சம்மதிக்கிறேன்.மருந்த கொடுக்க வேண்டிய ஆள் பேர் என்ன ?

'இந்திய ராணுவத்தில் வேலை பார்க்கும் டிரைவர். 1965இல் நடந்த இந்திய பாகிஸ்தான்  போரில்  
ஒரு  ட்ரக்கில் எறியப்பட்ட குண்டுவீச்சில், உயிர் தப்பிய ஒரே வீரன்.  
பேர் - கிஷன் பாபுராவ் .'

அரை மணி நேரம். ஒரு மயக்க நிலையில் அந்த ராணுவ வீரனை கொண்டு வந்து படுக்க வைத்தார்கள்.

டாக்டர் மோத்தா , மருந்து கலக்கப்பட்ட ஊசியை எடுத்தார்.

----------------------------------------

ஆகஸ்ட்  18 ,2011:

'ஹலோ.மினிஸ்டர் பி.ஏ ?'

'சொல்லுங்க ஜெனரல். உங்க போன்காலுக்காகதான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். '

'போன காரியம் சக்சஸ்.
அனுப்புன ஆள் வெற்றிகரமா வேலையை முடிச்சிட்டு திரும்பிட்டார்.. '

'கிரேட்.உங்க திட்டம் அபாரம். நான் அப்புறம் கூப்பிடறேன்.'
போனை அணைத்து விட்டு சிரித்தார்.

பிறகு சொன்னார் - 'இப்போ ஆள தைரியமா வெளிய விடலாம் சார்.அமைதியா அவர் வீட்டுக்கு மட்டும் போவார்'

-----------------------------------------

ஜூன்  23 , 1976:

'உண்மையாதான் சொல்றீங்களா மோத்தா..'

'ஆமா..
நான் என் பரிசோதனை தோல்வின்னு சொல்லிட போறேன். இது சம்பந்தமான எல்லா  தகவல்களையும் அழிச்சிட போறேன்.
திவிரவாதிகள மனமாற்றம் செய்யணும்னு நான் கண்டுபிடிச்ச மருந்தை,இந்த மாதிரி நல்லவங்கள  ஓரங்கட்ட உபயோகபடுத்துவாங்கனு எனக்கு இப்போதான் தெரியுது.'

'அப்போ இந்த வீரன் நல்லவனா?'

'ஆமா. இன்னும் 35 வருஷம் கழிச்சு நாட்டுல ஊழலுக்கு எதிரா ஒரு மாபெரும்  புரட்சி ஏற்படுத்த போற ஒரு போராளி. அவரோட தேச உணர்வை அழிச்சு , சுயநலத்தை புகுத்திட்டா , அவர்  
அமைதியாயிடுவார்ன்னு நம்பித்தான் இப்போ டைம் மெசின் மூலமா இங்க வந்திருக்காங்க. தற்போது ப்ரித்வி வந்த வருங்காலத்தில் 
இதே நேரத்தில் , இவர் சிறையில் இருக்கிறார். அவர் வெளிவரும்போது மனம் மாறியிருக்க வேண்டும் என்பதே இவர்கள் எண்ணம். ஆனா அவங்களுக்கு ஒரு உண்மை தெரியாது'

'என்ன டாக்டர் அது?'

'நான் அவருக்கு
அந்த மருந்தை செலுத்தவே இல்ல .செலுத்தியிருந்தாலும் பெரிய மாற்றம் ஏற்படாதுன்னு  நெனைக்கிறேன்.'

'ஏன் அப்படி?'

'அவரோட மிலிட்டரி ரெகார்ட் புரட்டி பாத்தேன்.  ஆள் இது வரைக்கும் கல்யாணமே செஞ்சுக்கல.அந்த குண்டுவீச்சில உயிர் பிழைச்ச பின்னாடி ,மறுபடியும் ஒரு விபத்துல இருந்து தப்பிச்சிருக்கார். அதன் பின்னாடி சமூக சிந்தனையோடவே  வாழ்ந்திட்டிருக்கார்.
எதுவுமே தனக்குன்னு இல்லாதவன்கிட்ட  என்ன சுயநலத்த விதைக்க  முடியும்?  '

'அப்போ அவர் மனம் மாறிட்டார்-ன்னு நெனச்சுட்டு போனவங்களோட கதி ?'

கவ்ரவ் கேள்விக்கு மோத்தா ஒரு விஷம சிரிப்பு சிரித்தார்.

-------------------------------------------------------

ஆகஸ்ட்  18 ,2011:

டெல்லி மைதானம்:

'இந்தியாவுக்கு இரண்டாம் சுதந்திர போருக்கான நேரம் வந்து விட்டது.நான் இல்லாவிட்டாலும் இளைஞர்களே  , விட்டு விடாதீர்கள்..' 
- மக்களின் மிகுந்த ஆரவாரத்திற்கு இடையே துடிப்பான பேச்சைத் தொடங்கினார்  அன்னா ஹசாரே என்றழைக்கப்படும் கிஷன் பாபுராவ். 

---------------------------------------------------------

9 comments:

குறையொன்றுமில்லை. said...

ஓ, அப்படியா விஷயம். சுவாரசியம்.

Anonymous said...

Dude.. wow.. great story man..keep rocking..

- Ram J

அபிமன்யு said...

ராம்.. தமிழே வரலயே ? :)

Anonymous said...

சூப்பர்.. சூப்பர்... கலக்குங்க நண்பா...


-வினவு பாலா..

Anonymous said...

super story abimanyu...
great..keep it up..

-Jayadev

Anonymous said...

அருமையான படைப்பு... வாழ்த்துக்கள்

- சித்திரை

Anonymous said...

எனக்கு ஒரே குழப்பமா இருக்கு..

யாருங்க இந்த அன்னா ?

Anonymous said...

Who is prithvi? how he says , he is 6 years old ?

aotspr said...

சூப்பர் சூப்பர்....
அருமையான பதிவு.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Post a Comment