Monday, August 8, 2011

நண்பர்கள் என்னும் தொல்லைகள்..

'உன் சேர்க்கை சரியில்ல.. பிரெண்ட் பிரெண்ட்-ன்னு சுத்தறது நிறுத்து ..அப்போதான் உருப்படுவ..' - அப்பா

'நீ நல்ல பையன்தாண்டா.. அவன் சரியில்லையே..சரியான உதவாக்கரை ஆச்சே.. ' - என் அம்மா

'நீ நல்ல பையன்தாண்டா.. அவன் சரியில்லையே..சரியான உதவாக்கரை ஆச்சே.. ' - அவன் அம்மா

'இப்படி படிக்காம காலேஜுல உங்கள மாதிரி குரூப் சேர்ந்து சுத்துனவங்க  எல்லாம் வெளிய எவ்ளோ கஷ்டபடுறாங்க தெரியுமா..?' - வாத்தியார்

இதையெல்லாம் தாண்டி ,காப்பாற்றி வந்த  நட்பு எந்நாளும் நம்மை தலை குனிய வைக்காது.. மாறாக நம்மை பலப்படுத்தும்;துணை நிற்கும்.உயிர் காக்கும்..




பெரும்பாலும் பள்ளிபடிப்பு ஆரம்பிக்கும்போதே , இதுவும் ஆரம்பமாகும்.. இதற்கு எந்த நியதியும் தகுதியும் கிடையாது. காலங்கள் செல்ல செல்ல , பல சண்டைகள்,மனஸ்தாபங்கள் ,
பிரிவுகள், எல்லாம் தாண்டி பலப்பட்டு அந்திம காலம் வரை கூட வரும் - நட்பு..

'நீ இதை கொடு;நான் இதை தருகிறேன்' என்ற சொந்தபந்தங்களுக்கான அடிப்படை பரிவர்த்தனை தேவை ஏதும் இல்லாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்   நட்பு.

நட்புகளில் பல இன்னல்கள் வரும்.ஆனால் அதன் சிறப்பு , விளைவுகள் சிறிதோ பெரிதோ , நட்பு தயக்கம் ஏதுமின்றி தொடரும்.

-------------------------------------
'பேசாம இருடா .. மாட்டிக்குவோம்..மிஸ் நம்மளயே பாக்கறாங்க..'

'பயப்படாதடா.. சரி சொல்லு .. இன்னைக்கு முதல் பஸ்ல போக வேண்டாம் .. கிரௌன்ட்ல  கொஞ்ச நேரம் விளையாண்டுட்டு ,அப்புறம்..'

'என்னப்பா அங்க ரெண்டு பேருக்கும் எப்போ பாத்தாலும் .. கொஞ்சம் என்கிட்டயும் சொல்லுங்க..'

'தொலஞ்சுது...சொன்னேன் கேட்டியா.. நீயே சொல்லுடா..'

' மிஸ்..அது..இவன் எதோ கிளாஸ் முடிஞ்சதும் விளையாடலாம்னு சொல்லிட்டு இருந்தான் மிஸ் '

'அட பாவி.. கதைய மாத்திட்டியேடா..'

'நீயும் படிக்க மாட்ட.. அடுத்தவனையும் படிக்க விட மாட்ட.. வெளிய போய் நிக்கறியா..'

'இனி உன் கூட சத்தியமா பேச மாட்டேன்டா '

--------------------------------------------------------------

 'என்னடா என்ன  ஆச்சு ? '

' மூணு  பேப்பர் போயிடுச்சுடா..'

'ஆண்டவா..காப்பாத்திட்ட... சூப்பர்டா.. நீ மட்டும் பாஸ் ஆகியிருந்தா நான் அடுத்த தடவை தனியா  அரியர்ஸ் எழுதணும்...'

'இனி உன் கூட சத்தியமா பேச மாட்டேன்டா '

-----------------------------------------------------

'என்ன ஏன்டா திட்டறா..அவ உனக்கு சரியான  பொண்ணே இல்லடா..அதான் வெட்டி விட்டேன்.'

'அந்த ஜூனியர் பொண்ணு விஷயத்துலயும் இதையேதாண்டா சொன்ன'

'என்னடா பண்றது.. அவளும் உனக்கு சரியான பொண்ணு இல்லடா.. அதான் வெட்டி விட்டேன்'

'டேய்..அதை நான் முடிவு பண்ணும்டா..உனக்கு ஏன்டா?.. '

'எனக்கு என்னவா ? யாரு மீதி ரெண்டு வருஷம் தனியா சைட் அடிப்பா? என்னால முடியாதுப்பா..'

'டேய்.இனி உன் கூட சத்தியமா பேச மாட்டேன்டா'
----------------------------------------------------------

'மச்சான் ..மொதல் ரவுண்ட் க்ளியர் பண்ணிட்டேன்டா..
இனி க்ரூப் டிஸ்கசன் மட்டும் ஒழுங்கா பண்ணனும்..'

'பண்ணிக்கோ..எங்கள இப்போவே போ-ன்னு சொல்லிட்டாங்க..உனக்கு சாயந்தரம்  சொல்லுவாங்க'

'டேய்..உனக்கு வாய்ல நல்ல வார்த்தையே வராதாடா.. சரி அரை மணி நேரம் இருக்கு.. அந்த புக்க கொடு '

'அத நான் அப்பவே பிரசாத்கிட்ட கொடுத்து அனுப்பிட்டேன்..யாரு கைலயே வெச்சிருப்பா..சீக்கிரம் வாடா.. பீச்சுக்கு போவலாம்..'

'ஏன்டா உனக்கு இந்த புத்தி..இனி உன் கூட சத்தியமா பேச மாட்டேன்டா' 

---------------------------------------------------------

என்னதான் இம்சையான நண்பனாக இருந்தாலும் , என்ன சண்டை வந்தாலும் அது கண நேரத்தில் காணாமல் போய் விடும்..

நட்பின் சக்திக்கு   முன் , எதிர் வரும் கஷ்டத்திற்கு மட்டுமல்ல ,இடையில் வரும்  கோபத்திற்கும் ஆயுள் இல்லை..

தப்பு செய்திருந்தால், தாய் அடித்தால் கூட சீறும் நம் சுய கவுரவம் , நண்பனின் உரிமையான 'பளார்' முன் உள்ளே பதுங்கி  விடுகிறது..

யோசித்து பாருங்கள்..
கம்யூனிசம் என்பது கண்டிப்பாக நட்பில் மட்டுமே காண முடியும்..எந்த பேதமும் இல்லாமல் நெருங்கிய உறவு தருவது நட்பில் மட்டும்தான்.

ஆணோ பெண்ணோ , நட்பு என்று வரும்போது அங்கே இன பேதங்கள் தளர்ந்து போய் , இங்கிதமும்,செருக்கும் தாண்டிய புனித உறவுக்கு இதயங்கள் ஆட்கொள்ளபடுகிறன..



பள்ளியில் ,ரத்தம் வர சண்டை போட்ட நண்பனுடன் அடுத்த நாளே சிறிது பேசிய  நாட்கள்.. வஞ்சம் என்பது உறவுகளுக்கு நடுவில்தான்.. நட்பில் இல்லை..

அக்கா கல்யாணத்தில் கூட்டமாக வந்து எல்லா வேலையும் செய்த நண்பர்கள்..எல்லாம் முடிந்த பின், கடைசியாக இருப்பதை கௌரவம் பாக்காமல் சாப்பிட்டு செல்லும் அந்த பாசம்..

எல்லா நண்பர்களும் ஒரே வீட்டில் சேர்ந்து இருக்கும்போது , ஒருத்தனுக்கு மட்டும் காரம் ஆகாது என்பதற்காக , எல்லாரும் தங்கள் சுவையை தியாகம் செய்த அந்த கரிசனம்...

நண்பனுக்கு கல்யாணம் என்றால் , எத்தனையோ திட்டு வாங்கியும் , விடுப்பு எடுத்து சென்னையோ , பெங்களூரோ , எங்கிருந்தோ பஸ்ஸில் கூட்டத்தில் கால் கடுக்க பத்து மணி நேரம் நின்று வந்து , வாழ்த்தும் அந்த அன்பு..

அம்மாவோ அப்பாவோ உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது , கேட்காமலேயே வந்து உதவி செய்து தோளில் சாய வைத்து ஆறுதல் படுத்தும் நேசம்...

இதுதான் சார் நட்பு...

குறைவாக சொல்லவில்லை..பெரும்பாலும் தகுதி பார்த்து வருவது காதலும் கல்யாணமும்..இது நிதர்சனம்..

இவன் இப்படி ஒரு நல்ல நிலைக்கு வருவான் என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உயிரை கொடுப்பது , பெற்றோருக்கு அடுத்து நண்பர்கள்தான்..

அதில் இணக்கங்கள் எவ்வளவு இருக்குமோ அதே அளவு பிணக்கங்களும் இருக்கும்..ஆனால் இறுதியில் ஜெயிப்பது நட்புதான்... எல்லா மனகசப்பும் அடுத்த முறை பார்க்கும்போது  சொல்லும் 'எப்படிடா இருக்க?'வில் செத்து போகும்..

பிரிந்த காதலை கூட மறந்து விடுகிறோம்.. ஏதோ ஒரு காரணத்துக்காக பிரிந்த நண்பனை நினைத்தால் அழுகிறோம்..உங்கள் அந்த நட்பு உண்மை என்றால் ,கண்டிப்பாக 'எதற்கு பிரிந்தோம்?' என்ற  காரணம் மறந்திருக்கும்.. நட்பு மட்டும் ஞாபகம் இருக்கும்..

இது வரை நாம் மறந்த நண்பர்களுக்கும் , நம்மை மறந்த நண்பர்களுக்கும்  , 'நண்பர்கள் தின வாழ்த்துக்கள்' சொல்லி நட்பை உயிர்ப்பிப்போம்.




நண்பர்கள் தொல்லைதான் சார்..

ஆனால் அந்த தொல்லை எந்த எல்லை வரை போகிறதோ , அது வரை நம் நட்பின் ஆழம் இருக்கிறது என்பது திண்ணம்..

வாழ்த்துக்கள் சொல்லி நண்பனை மூன்றாம் மனிதனாக்க  வேண்டாம். இன்றைக்கும் எப்போதும் போல அழகாக இம்சைப்படுத்துங்கள்..

நட்பின் வாழ்த்தும் அரவணைப்பும் உங்களுக்கு என்றென்றும் இருக்கும்.

WORSHIP THE FRIENDSHIP.....

4 comments:

பாலா said...

பள்ளி கல்லூரி நட்புகள் எல்லாத்தையும் கிளறி விட்டுட்டியே நண்பா.

அபிமன்யு said...

எனக்கும் எல்லா ஞாபகங்களும் வந்து இம்சித்தது பாலா... :)

Sudarsan said...

Superb Post

aotspr said...

"நட்பு எந்நாளும் நம்மை தலை குனிய வைக்காது".

நல்ல கருத்து.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

Post a Comment