Friday, August 5, 2011

பாப்கார்ன் பாக்கெட்- 20110805


ஒரு கட்சி மத்த கட்சியோட கூட்டணி அமைக்கிறது ஒன்னும் தப்பு இல்லை.. ஆனா ஒவ்வொரு தடவையும் கூட்டணி கட்சிய மாத்துறது , ஏதோ அவங்க கட்சி கொள்கை புத்தகத்துல ஆறாம் பக்கத்தில மூணாவது முக்கிய கட்டாய கொள்கை மாதிரி  செய்யிறது இந்த ஒரு கட்சியாத்தான் இருக்கும்.

கூட்டணி விபரம் :
1998-இல் அதிமுக ;  1999-இல்  திமுக ;
 2001-இல் அதிமுக ; 2004-இல் திமுக ;
2009-இல் அதிமுக ;2011-இல்  திமுக



இப்படி கட்சி ஆரம்பிச்சு இருபத்தி இரண்டு வருசமா அரசியல் நடத்திட்டு , இப்போ 'திராவிட இயக்கங்கள் ஏமாற்றுபவை ; இனி மேல எந்த தேர்தல் வந்தாலும் தனியாத்தான் போரிடுவோம்'-னு சொல்றது...ஹ்ஹிஹி வடிவேலு சொல்ற மாதிரி சின்னபுள்ளத்தனமால  இருக்கு..  

இந்த முடிவுக்கு சந்தோசப்படவும் இல்லை; வருத்தப்படவும் இல்லை-னு சொல்லியிருக்கிறார் கலைஞர். எப்பவும் போல அம்மா இதையெல்லாம் மதிக்கவே இல்ல.

' கற்றது தமிழ் ' அஞ்சலி மாதிரி எங்கள கேக்க வெச்சுடீங்களே டாக்டர்..

'நெஜமாத்தான் சொல்றீங்களா?'
--------------------------------------------------------

'வாகை சூட வா'  பாடல்கள் ஒரு புதிய முயற்சி. பீரியட் படம் என்பதால் படத்தில் வேலை செய்யும் எல்லாருக்கும் சவால்.ஆனாலும் கூடுதல் சவால் இசையமைப்பாளருக்குதான்.

பொக்கிஷம் தோற்றிருந்தாலும் பாடல்கள் மக்கள் மனதை    
தொட்டிருந்தன. பின்னர் வந்த மதராசபட்டிணம் இசை அலை இப்போதும் யாரையும் விடவில்லை. இன்னும் என் அலாரம் டோன் - 'தானதீம்தகிட' தான்.
இந்த நிலையில் இன்னொரு பீரியட் படம் என்றதும் முந்தைய படங்களின் எந்த சாயலும் இருக்க கூடாது என்ற பெரிய கட்டுக்குள் மொத்த படமும் மாட்டியிருக்கிறது. 
ஆனால் அதை இசை விசயத்தில் அற்புதமாக உடைத்திருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் கிப்ரான்.



எந்த மாதிரியும் இல்லாத புது மாதிரியாக , எந்த ஒரு பழைய படங்களையும் நினைவுபடுத்தாத ,மனதை பழைய கிராமத்து வீதிகளில் உலவ விட்டிருக்கிறார்.இசை  வாத்தியங்களும் பழைய கருவிகளின் இசைகளையே இதமாக   வீசுகிறன.

ஒரு பாடலுக்கு சிம்போனி உதவி  கொண்டும் உருவாகியிருக்கிறார். 
களவாணி இயக்குனரும், நாயகனும் இனி அவர்கள் திறமையை மீண்டும் காட்டுவார்கள் என்று நம்பலாம். அதுவும் பீரியட் கிராமத்து படமான  சுப்ரமணியபுரம் போல் அதே சக காலத்தில் நடக்கும் கதையை எடுக்க துணிந்துள்ள சற்குணத்திற்கு பாராட்டுக்கள்.

இனிய பாடல்கள் மண்வாசனையும், வறண்ட பூமியின் சுழல்காற்று வாசமும்  கலந்து   மயக்குகின்றன..கிப்ரானை இரு கை தட்டி வரவேற்கலாம்.
-------------------------------------------------

மூன்று மாத ஆட்சியில் , பழைய அமைச்சர்களையும் திமுக  முக்கிய புள்ளிகளையும் கைது செய்வதில் அரசு இயந்திரம் வெகு  மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த காட்சிகள் தமிழக மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல.. ஆனால்  தங்கள் குறைகள் எதுவும் மாறாமல் அப்படியே இருக்கிறதே என்ற ஆதங்கம் வளர்ந்து வருவது உண்மை.
குறிப்பாக மின்வெட்டு . முதல்வர் டெல்லி சென்று வந்த பின்னும் எந்த அறிவிப்பும் தற்போது வரை இல்லை.

கணிசமான எம்எல்ஏக்களை பெற்ற  தேமுதிகவும்  என்ன  செய்கிறது என்று தெரிய வில்லை. வெற்றியை கொண்டாட  வேண்டியதுதான். ஆனால் அந்த நேரத்தில் , தேர்தல்  வாக்குறுதிகளை மறக்காமல் இருக்க வேண்டும்.

ஏதோ தோணியது.சொன்னேன். ஏதாவது முன்னேற்றம் 
ஏற்பட்டிருப்பதாக   நீங்கள் கருதினால்  பின்னூட்டத்தில் பட்டியலிடலாம்.அவசரப்படாதீங்க... உடனே எப்படி நடக்கும் என்று சொன்னாலும் சரி, இன்னும் ஒரு மூன்று மாதம் கழித்து ஏதாவது நடக்கிறதா என்று பார்ப்போம். ஏதாவது நடக்கும் என்று காத்திருப்பது ஒன்றும் மக்களுக்கு புதிதில்லையே..


பதிவு எழுதுன பின்னாடிதான் ' ஒரு வருடத்தில், மின்வெட்டு முற்றிலுமாக நீக்கப்படும்' என்று அறிவித்திருக்கிறது அரசு'
என்ற செய்தி பார்த்தேன். .மகிழ்ச்சி. பார்ப்போம்.
------------------------------------------------------

சச்சினுக்கு பாரதரத்னா பரிந்துரைகள் நாட்டில் எல்லா மூலைல இருந்தும் வந்து குவிஞ்சிட்டு இருக்கு. சமூகம்,கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் தேர்ந்தவங்க மட்டும்தான் பாரதரத்னாவுக்கு தகுதியானவங்கனு விதி இருக்கு. அதில் எந்த மாற்றமும் வராதுன்னும் மதிய அரசு அறிவிச்சாச்சு.ஆனா சச்சின் இந்தியாவோட சின்னம் - ஐகான் போல ஆகிட்டாரு. கொடுக்கலாம்.

ஒரு வேளை அப்படி சச்சினுக்கு பாரத ரத்னா கொடுத்தா , கண்டிப்பா விஸ்வநாதன் ஆனந்துக்கும்   கொடுக்கணும்.  அதுதான் நியாயம்.

இப்படி சச்சினுக்கு அங்கிகாரம் கிடைக்க போராடிட்டு இருக்குற இந்த நேரத்துல இப்படி ஆகிடுச்சேன்னு கிரிக்கெட் ரசிகர்கள் கவலைபட்டுட்டு  இருக்காங்க.
எனக்கு ரொம்ப சந்தோசம். 

தோல்வியும் கொஞ்சம் வேண்டும். அப்போதான் ஆணவம் தலைக்கு ஏறாது. அதை உலகத்துக்கு உணர்த்ததான்  நம்ம பசங்க இங்கிலாந்து கிட்ட ஒரு தடவைக்கு ரெண்டு தடவை தோத்து பாத்தாங்க..இதுக்கு போய் ஏன் எல்லாரும் கோபப்படுறீங்க?  

என்ன ..மத்த டீமுக்கும் இந்தியாவுக்கும் தோத்து போறதுல ஒரு சின்ன  வித்தியாசம். மத்த டீம் எல்லாம் தோற்பாங்க.. நாம மட்டும்  ரொம்ப  கேவலமா தோற்போம்.



மத்தவங்களுக்கு தேவையோ இல்லையோ தோனிக்கு இது கண்டிப்பா தேவையான ஒண்ணு. நடந்தது நல்லதுக்குதான். நம்புங்க..
----------------------------------------------------

நில மோசடி புகார் : கைதாகிறார் வடிவேலு ?
இந்த செய்திய பாத்ததும் திடீர்னு எனக்கு அவரோட ரெண்டு டயலாக் ஞாபகம் வருது..

'நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்..'


'எல்லா பக்கமும் அணை கட்டுறாங்களே..'

தேர்ந்த ஒரு கலைஞன் தற்போது படும்பாடு கவலை அளிக்கிறது என்றாலும் , இந்த வினை அவர் வலிய சென்று வாங்கிக் கட்டிகொண்டது என்பது எதார்த்தம்.

சமயத்தில் , அப்பாவியாய் இருந்து விடுவதே நல்லது என்று யோசிக்க தோன்றுகிறது. அதீத கோபம்   ,வஞ்சமாய் மாறினால்,விளைவுகளை அது அவர்களுக்கே எதிராக திருப்பி விடுகிறது. 
 ----------------------------------------------------------------------

தென்மேற்கு பருவகாற்று படத்தில் வந்த பாடல் . என்னை மீண்டும் இளையராஜாவின் 80-களுக்கு கூட்டிசென்றது . ராகநந்தன் இசையில் , வைரமுத்து எழுத்தில் உருவான பாடல்கள் அனைத்தும் இனிமை.

குறிப்பாக 'ஏடி கள்ளச்சி'  - விஜய் பிரகாஷ் , ஷ்ரேயா கோஷல் குரலில் மீண்டும் ஏதோ பாரதிராஜா - இசைஞானி கூட்டணியில் வந்த பசுமையான கிராமத்து பாடலின் திருப்தியே உண்டாக்கியது. கடந்த பத்து நாட்களாக  இந்த பாடலை தினம் ஒருமுறையாவது கேட்கிறேன்.



இசையில் கிடைக்கும் கிறக்கத்தை அப்படியே வரிகளிலும் காட்ட முடியும் என்பதை கவிஞர் ஆயிரமாவது முறையாக நிருபித்து விட்டார். ஆனந்தம்..

-----------------------------------

2 comments:

yogesh said...

மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்.....

அபிமன்யு said...

மிக்க நன்றி நண்பரே.

Post a Comment