Friday, March 11, 2011

'ஜெ ஜெ' - சில குறிப்புகள் : தேர்தல் டிட் -பிட்ஸ்

தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் தலைவர்கள் பற்றி முழுக்க ( அல்லது கொஞ்சமாவது ) தெரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம். ஆனால் தலைவர்கள் பின்னணியை அலசி அவர்களை பற்றிய நல்ல குணங்களை சொன்னால் அவரின் அனுதாபி/விசுவாசி என்றும் , மோசமான உண்மையை போட்டு உடைத்தால் 'நீ எதிர்கட்சிக்காரனா ?' என்றும் எதிர்கேள்வி கேட்பதும் வழக்கமான ஒன்று . அதைப்பற்றி நான் கவலைப்பட போவதில்லை. இது கட்சியின் அலசல் அல்ல , கட்சியை வழிநடத்தும் தனி மனிதர்களின் அலசல் .அந்த வரிசையில் முதலில் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவை பற்றி இந்த பதிவு .நடிப்புலக அனுபவம்  , நடனம் , புகழ்துதி எல்லாம் நமக்கு தேவை இல்லை . இவர்களிடம்  இருக்கும் அரசியலுக்கு தேவையான திறமைகள் பற்றி மட்டும் இங்கே . 




பெயர் : ஜெயலலிதா 
பிறப்பிடம்: மைசூர் 
படிப்பு: சென்னை பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளி 
               சென்னை பிரசன்டேசன் கான்வென்ட் சர்ச் பார்க் 

 படிப்பில் மிக சுட்டி. பத்தாவது தேர்வில் முதல் மதிப்பெண். வக்கீல் தொழிலில் ஈடுபட விருப்பம் கொண்டு , அது சம்பந்தப்பட்ட துறை நூல்களில் அதிக ஆர்வம் காட்டினார் . இந்திய அரசின் உயர்படிப்புக்கான உதவித்தொகைக்கு தகுதி பெற்றும் அதை விடுத்து தாயின் வற்புறுத்தலுக்காகவும் குடும்ப சூழ்நிலை கருதியும் நடிப்புலக பிரவேசத்திற்காக ஒதுங்கினார். 

தெரிந்த மொழிகள் : பன்மொழி புலமை பெற்றவர் . தமிழ் தவிர கன்னடம் , ஹிந்தி , ஆங்கிலம் உற்பட பல மொழிகள் சரளமாக பேசக்கூடியவர். இவரின் ஆங்கில புலமையை பல மூத்த பத்திரிக்கையாளர்களும் , அரசியல் தலைவர்களும் வியந்து பாராட்டியதுண்டு. 

பேச்சு திறன் : எதிர்கட்சியில் கலைஞர் போல் சொல்வன்மை மிக்கவர் வீற்றிருக்கும்போது ,அதை எதிர் கொள்ள நல்ல திறன் தேவை . இவர் அதில் சளைத்ததில்லை. 
1982ல் 'பெண்ணின் பெருமை ' என்ற தலைப்பில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னிலையில் தன முதல் பேச்சை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார். 
இரண்டு வருடம் கழித்து ராஜ்ய சபா உறுப்பினராக இருக்கும்போது , இவரின் பேச்சை கேட்டு வியந்து பாராட்டினார் இந்திரா காந்தி. 

அரசியல் பிரவேசம் :  1981. ஏழு வருடம் கழித்து ராஜ்ய சபா உறுப்பினர் பதவி . அடுத்த ஒரு குறுகிய காலகட்டத்தில் சட்டசபையில் நடந்த ஒரு அசம்பாவித சம்பவம் 'அடுத்த முறை , இங்கே காலடி எடுத்து வைத்தால் ,அது முதல்வராகத்தான் ' என்று சபதம் செய்ய வைத்தது.(என்னை பொறுத்த வரை ஜெயலலிதாவின் இந்த வளர்ச்சிக்கு காரணம் எம்.ஜி.ஆர் அல்ல , துரைமுருகன் தான் .. )  அந்த நிகழ்வு இவர் மேல் அனுதாப ஓட்டுகளை அள்ளி வீச செய்து ,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் தமிழ் முதல்வரானார். 

இவரின் முழுத்திறமையும் வெளிவர தொடங்கியது , முதல் அமைச்சர் ஆனபின்தான்.  இவரின் செயல்கள் யாவுமே ஒரு அர்த்தம் உள்ளதாக Management Communication வல்லுனர்கள் கருத்து. 
Effective Communication என்பதை இவர் பெரும்பாலும் தன் பேச்சுக்கள் மூலம் வெளிப்படுத்துவதில்லை . சிறிய செயல்களில் அதை சாத்தியப்படுத்துகிறார்.


உதாரணம்:  சட்டசபையில் இவர் அமர்ந்திருக்கும்போது ,அடுத்த இடம் காலியாகவே இருக்கும். ஒரு இடம் விட்டுதான் பன்னீர் செல்வமோ வேறு யாரோ அமர்ந்திருப்பார்கள்.  தனக்கு பின் இன்னொரு ஆளுமை  ( Immediate Authority )  தான் இருக்கும் வரை இல்லை என்பதை குறிப்பால் உணர்த்தும் தன்மை இது.

ஒருவர் தன்மேல் அறிக்கைகளை எதிராக அள்ளி வீசினால் இவர் இதை கையாளும் விதம் இன்னொரு உதாரணம் . எந்த ஒரு எதிர் அறிக்கையும்  விடாமல் அவரை உதாசினப்படுத்துவார். 'நான் உன்னிடம் சண்டை போடும் அளவுக்கு நீ எனக்கு ஒரு பொருட்டே இல்லை' என்பதை சொல்லாமல் சொல்லும் விதம் அது. 

சரியான சமயத்தில் சரியான கேள்வி கேட்பது இவரின் இன்னொரு திறன் -' ராசாவை கைது செய்தால் எம்பிகளை இழப்போம் என்று நீங்கள் பயந்தால் பதினெட்டு எம்பிகளை உடனே தர , காங்கிரஸ் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர நான் தயார். உங்கள் நிலைப்பாடு என்ன ?' என்று ஒரே  கல்லில் இரண்டு மாங்காய்களாக , திமுகவை கக்கப்பட செய்தும் , காங்கிரஸ் கட்சியை முடிவு எடுக்க துரிதப்படுத்தியதும் இவர் அசாத்திய திறமை. 

ஹிட்லர் ஆட்சி , பாசிசம் என்று இவரின் மிக கட்டுப்பாடான ஆட்சியை எல்லோரும் விமர்சனம் செய்தாலும் , அப்படி ஒரு கடினமான எளிதில் அணுக முடியாத இமேஜாக தன்னை அடையாளப்படுத்துவதன்  மூலம் , தன் கட்சிக்குள் (நன்றாக கவனிக்க -   தன் கட்சிக்குள் மட்டும் ) ஒரு கட்டுப்பாடை, ஒழுங்கை முறைப்படுத்தி வைத்துள்ளார். 

செய் அல்லது செய்யாதே ( Either Zero or One / Be Black or White ) என்பதில் மிக தெளிவாக இருப்பார். ஒரு செயல் செய்ய முடிவு எடுத்தால் அதை மற்றவர்களுக்கு  நியாயபடுத்த முயற்சி செய்வதில்லை . அரைகுறையாக அதை விட்டுவிடுவதோ , இல்லை ஒத்தி போடுவதோ நடக்காது - அது தவறான ஒன்றானாலும் .

இவரின் (நியாயமான ,உண்மையான  ) சில சாதனைகள் :
  • கந்துவட்டி முறையை ஒழித்தது.
  • லாட்டரி சீட்டுக்கு முற்றுபுள்ளி  வைத்தது .
  • பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி 
  • தொட்டில் குழந்தை திட்டம் 
  • வீராணம் குடிநீர் திட்டம் 
  • சிறைகளில் ,நீதிமன்றங்களில்  வீடியோ கான்பரன்சிங் முறை
  • வீரப்பனை ஒழித்தது 
  • மகளிர் காவல் நிலையம் 
(இலவச அன்னதானம் என்று பிச்சைக்காரர்களை வளர்த்ததும் , மழைநீர் சேகரிப்பு என்று வீட்டுக்கு வீடு தோண்டியதும் சாதனை என்று ஏற்றுக்கொள்ள முடியாது ) 

இவரை இந்தியாவின் இரும்பு பெண்மணி என்பதில் எள்ளளவும் எதிர்வார்த்தை இல்லை .இவரின் படிப்பு ,பன்மொழி புலமை , செயல் திறமை ,ஆளுமைத்தன்மை ஆகிய இவைகளை மட்டும் பார்த்தால் , நாட்டின் பிரதமராகும் தகுதி கூட இவருக்கு இருக்கிறது. 

மேற்கூறிய யாவும் இவரின் உண்மையான தகுதிகள் . மற்றபடி இவரின் ஊழல் சாதனைகளும் , காவல்துறையை அடியாளாக பயன்படுத்தியதையும் உங்களுக்கு நியாபகப்படுத்த தேவை இல்லை . இதை மனதில் ஒரு ஓரத்தில் வைத்துக்கொண்டு இந்த தேர்தலை எதிர்கொள்ளுங்கள் . 



என்னை பொறுத்த வரை அமெரிக்க தேர்தல் போல் தனி மனித திறமைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு தலைவரை தேர்ந்தெடுக்க சொன்னால் ஜெயலலிதா கண்டிப்பாக ஒரு சரியான தேர்வாக இருப்பார்.  

முடிவு உங்கள் கையில். பிற தலைவர்களை பற்றி பின்னர் .. 

10 comments:

Anonymous said...

Great writing..I agree with u...

Anonymous said...

good superb

Jayadev Das said...

\\' ராசாவை கைது செய்தால் எம்பிகளை இழப்போம் என்று நீங்கள் பயந்தால் பதினெட்டு எம்பிகளை உடனே தர , காங்கிரஸ் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர நான் தயார். உங்கள் நிலைப்பாடு என்ன ?'\\அனாவசியமா வாஜ் பாயி அரசைக் காலை வாரிவிட்டு தேர்தல் வரச் செய்த புண்ணியவதி இவர். இங்க மட்டும் ஆதரவு தருவார் என்று என்ன நிச்சயம்? காங்கிரஸ் அதுவும் இல்லை இதுவும் இல்லை என்று நடுத்தெருவில் தான் நிற்கும். இந்தியாவையே ஆளக் கூடிய ஒருத்தர் சசிகலா சொல்லும் எந்த விதமான கேணத்தனமான செயலைச் செய்து, தமிழ்நாட்டையே சசிகலாவும் அவரது சாதிக் காரர்களும் லூட் அடிக்க விடுவது ஏன்? அப்படி என்ன இருவருக்கும் நடுவே?

Unknown said...

I differ with you in the following. Rain Water Harvesting was a great achievement. The way it was enforced and made it as a mandate was appreciable.

Anonymous said...

total time waste

Anonymous said...

"ஓட்ட போட்டேன்னு சொல்லாதே. வித்தேன்னு சொல்லு"

அண்ணன் அஞ்சாசிங்கம் புட்டுபுட்டு வைக்கிறார்.

Anonymous said...

Good Analysis.

Can you don one for Kalaignar.

I too would say, Rain Water Harvesting was a great achievement.

Rettaival's Blog said...

Good one !

Anonymous said...

iwould like to add one point that she never failed to raise her tone for the welfare of tamilnadu

அபிமன்யு said...

I agree with you jayadev.. Thanks for all..

Post a Comment