Thursday, September 15, 2011

பாப்கார்ன் பாக்கெட் - 20110915

என்னிடம்  ,ஒரு நான்கு வருடம் முன்னால் சிக்னல் நிறுத்தத்தின்போது ,
விலாசம் தேடி அலைந்து கொண்டிருந்த ஒருவர் அட்ரஸ்ஸை கொடுத்து , நுனிநாக்கு ஆங்கிலத்தில் எங்கே என்று கேட்டார். விலாசம் நூறு ருபாய் நோட்டில். இது யார் கொடுத்தது என்று கேட்டதற்கு பதில்  'Well,I wrote.Why?'.

பளார் என்று அறைய தோன்றியது.பொறுமையாக இப்படி எழுதாதீர்கள் என்று சொன்னதற்கு , 'பாஸ் , அட்ரஸ் மட்டும் தெரிஞ்சா சொல்லுங்க..அட்வைஸ் வேண்டாம்.
நானே Financing செக்டார்ல தான் ஒர்க் பண்றேன். I know. Moreover that is my money' என்றார்.
பெருமூச்சோடு வழி சொன்னேன். ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாமல் சென்று விட்டார்.



'செல்வி - சுந்தரம் ' , 'என் உயிர் ரம்யா ',' பிரேம் BE CSC','இளையதளபதி ROCKS ' என்று உங்கள் புக்கில், வீடு சுவற்றில் , அப்பா சட்டையின் பின்னாடி ,  தாராளமாக எழுதுங்கள்  ; ரூபாய்  நோட்டில் வேண்டாமே...

படித்திருக்கிறோம்,அந்த அறிவு கொஞ்சமாவது இருந்தால் இதை மறுபடியும் செய்ய மாட்டோம். இது மாதிரி கிறுக்கல்களால் பல கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள்  செல்லாதவை ஆகின்றன.ATM ' எதுவும் இந்த நோட்டுகளை ஏற்றுகொள்ள  மறுக்கின்றன.

அரசாங்கத்தை அடிக்கடி ஒவ்வொரு விசயத்துக்கும் குற்றம் சொல்லும் நாம் , நம் பக்கம் இருக்கும் சில மிக முட்டாள்தனத்தை கவனிப்பதில்லை.
இதை சொல்லும்போது வார்த்தைகளில் கோபம் தொனிக்க காரணம் , இதை செய்வது படித்தவர்கள் மட்டுமே. எழுதபடிக்க தெரியாதவர்களுக்கு இதை செய்ய இயலாது.

பணத்தின் மதிப்பு , முதலீடு,அந்நிய செலாவணி ,பங்குவர்த்தகம் பற்றியெல்லாம் ஆதி முதல் அந்தம் வரை பேசும் நாம் , இந்த அர்த்தமற்ற செயலை தடுக்கவும் செய்ய வேண்டும். படித்தவர்க்கும் , படிக்காதவர்களுக்கும் வித்தியாசம் உண்டுதானே..அப்போ அதை செயலில் காண்பியுங்கள்.

BTW ,நான் அவருக்கு சொன்ன வழி , அவர் காட்டிய அட்ரஸ்க்கு நேர் எதிர் வழி. சொல்லிய நேரம் காலை பத்தரை. அப்போது வேளச்சேரி - தரமணி பக்கம்   டிராபிக் எப்படியிருக்கும் என்று உங்களுக்கு சொல்லத்தேவை இல்லை. எனக்கு குற்றவுணர்ச்சியே இல்லை. 
He deserves it.
-------------------------------------------

சட்டசபையில் பல புதுமுகங்கள் இருப்பதால் பார்க்கும் நமக்கு ஒரு அன்னியம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. அதுவும் விஜயகாந்த்,பண்ருட்டி தவிர அருண்பாண்டியன் உள்ளிட்ட தேமுதிக உறுப்பினர்கள் எல்லாரும் freshers .

கடந்த ஒரு மாதமாக கேப்டன் செய்திகள் பார்த்து வந்தேன். மிக விவரமாகத்தான் இருக்கிறார்கள்.அரசுக்கு ஒத்து ஊதும் வேலையை செய்யும்போதும் , நன்றாக பேலன்ஸ் செய்து தலைவரின் இமேஜையும் காப்பாற்றி வருகிறார்கள். நடுநிலை செய்திகள் இதிலும் துளிகூட இல்லை.




சட்டசபையில் திருக்குறள் வாசித்ததும் வெளியேறும் திமுக உறுப்பினர்கள்   நிலைமை பரிதாபம்தான். காரணம் மொத்தம் இருக்கும் இருபது பேர் என்ன கூச்சல் போட முடியும்? அதுவும் ஒரே இடத்தில இடம் ஒதுக்கப்படாமல்  இருக்கும்போது எந்த தைரியத்தில் கத்த முடியும்?

இருந்தாலும் இப்படியே வெளிநடப்பு செய்துகொண்டே இருந்தால் கட்சி  காணாமல் போய்விடும் வாய்ப்பு உண்டு. சரி..எவ்வளவோ சோதனைகளை தாண்டி வந்த சரித்திரம் திமுகவுக்கு உண்டு. இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஹ்ம்ம்..எந்த மாதிரியும் இல்லாத புது மாதிரியாக ஒரு சட்டசபை இப்போது.பாப்போம்.

---------------------------------------------

நேரு பிரதமரை  இருந்தபோது கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது கூடியவரை பத்திரிக்கைகளுக்கு புகைப்பட போஸ் கொடுக்க மறக்க மாட்டார். சிலசமயம் 'நேரு ஒரு விளம்பரப்பிரியர்' என்று பேர் வந்தபோது கூட அதை அவர் நிறுத்தவில்லை.

பிறகு ஒருமுறை இதற்கான காரணம் சொன்னார் -'நாட்டில் எவ்வளவு பேருக்கு படிக்க தெரியும்? எண்ணிக்கை குறைவுதானே..அவர்களுக்கு பத்திரிக்கையில் என் படம் பார்த்தால் நமக்காக அரசு எதோ புதிதாக செய்கிறது என்று நம்பிக்கை வரும் அல்லவா..அதுதான் நோக்கம் ' .தொலைநோக்கான பார்வை.



இதைபோல,நம் தற்போதைய  பிரதமர் முதன்முதலாக  ஒரு உருப்படியான காரியம் செய்திருக்கிறார். கண்தானம் செய்திருக்கும் அவரைப் பற்றி அடித்தள மக்களுக்கு தெரியவரும்போது ,கண்டிப்பாக கண்தானம் பற்றி கேள்வி கேட்பார்கள்.விஷயங்கள் புரியும்.நிறைய பேர் அதை பின்பற்றுவார்கள் என்பது உண்மை.

காரணம் ,கிராமத்து மக்கள் ஒரு நல்லதை யாராவது செய்தார் என்று கேள்விப்பட்டால்  தாங்களும் தங்கள் பங்குக்கு செய்யவேண்டும் என்ற வெள்ளந்தி  உள்ளம் உடையவர்கள்.
வாழ்த்துக்கள் சிங். இது தனிச்சையா எடுத்த முடிவுன்னு எதிர்பார்க்கலாம்.  இல்லேன்னா வாழ்த்துக்கள் சோனியா.
---------------------------------------------

திமுகவுக்கு போன தடவ ஓப்பனிங்  நல்லா இருந்துச்சு. ஃபினிஸிங்தான் சரியில்ல.இங்க அதிமுகவுக்கு ஓப்பனிங்கே சரியில்லையே..

இப்போதான் சமச்சீர் கல்வி விசயத்துல அடிவாங்கி பணிஞ்சு போன அரசு , இப்போ அடுத்த திட்டத்திலும் மண்ணை கவ்வ வேண்டியதாயிருச்சு.  அரசு கேபிள் டிவி கொண்டு வந்து நல்லது நடக்கும்னு எதிர்பார்த்த கேபிள்  ஆப்பரேட்டர்கள் இப்போ கதிகலங்கி போயிருக்காங்க.

என்னடா இது கிணறு வெட்ட பூதம் கெளம்புன கதையா இருக்குனு முழிக்க ஆரம்பிச்சு ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் எல்லாம் டிஜிட்டல்மயமாக இருக்கும்   இந்த காலத்தில் , பொதிகை சேனல் மாதிரி இன்னும் அனலாக் நெட்வொர்க் பக்கம் போகும் அரசு முறையை ,தலையில் அடித்துக்கொண்டு வெறிக்கிறார்கள் ஆப்பரேட்டர்கள்.

போன ஆட்சியில கேபிள் இருந்துது , டிவி இருந்துது , கரண்ட் இல்ல..இந்த ஆட்சியில டிவி மட்டும்தான் இருக்கு - அதுவும் கலைஞர் கொடுத்தது.அப்பப்போ கரண்ட் வருது. கேபிள் வரும்;ஆனா வராதுன்னு ஆயிடுச்சு..

பாவம் நம்ம பெண்கள். சாப்பாடு இல்லாம இருப்பாங்க..சீரியல் இல்லாம இருக்க மாட்டாங்க.ஆம்பளைகளையும் அலட்சியமா நெனச்சிடாதீங்க..அமைதியா இருப்பாங்க..கிரிக்கெட் பாக்க முடியலைனா மட்டும் ,விளைவுகள்  பயங்கரமா இருக்கும்..

 'நான்கு வருஷம் கழித்து வரபோகும் வாக்காள மடையர்களுக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்கவா   போகிறது?'ன்னு குறுக்குதனமா யோசிக்காதீங்க.. இப்போவே சரி செய்துடுங்க. தாய்குலங்கள் ஓட்டு மிக முக்கியம் அமைச்சரே..
------------------------------------------------------

சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணிக்கு அறிவிக்கப்பட்ட பரிசுதொகை...அடேங்கப்பா - தலா இருபத்தி ஐந்து ஆயிரம் ரூபாய்.
இதுதான் தேசிய விளையாட்டுக்கு , அரசு அளிக்கும் மரியாதையா?

லட்சங்களை போன நூற்றாண்டிலேயே தாண்டி , குறைந்தது அணியில் இடம் மட்டும்  பிடித்தாலே போதும் -கிரிக்கெட் வீரருக்கு கோடிகளை சம்பளமாக  தரும் அரசு , இதர விளையாட்டுகளுக்கு மட்டும் ஏதோ போனால் போகட்டும் என்று கிள்ளித் தருவது வெட்கப்பட வேண்டிய விஷயம்.


எந்த வீரரும் அந்த பணத்தை வாங்க மறுக்க ,இப்போது அதை ஆறுமுறை உயர்த்தி ஒன்றரை லட்சம் அறிவித்திருக்கிறார்கள். 
கிரிக்கெட் மோகம் என்பது தவறல்ல..அதே சமயம்,  மற்ற விளையாட்டில்  நம் அணியினர் சாதிக்கும்போது அதை பாராட்ட தவறக்கூடாது. எந்த வீரனுக்கும் அங்கீகாரம்தான் முதல் சம்பளம்.

திறமையானவரை  பாராட்டக்கூட வேண்டாம்..ஆனால் கண்டிப்பாக அவமானப்படுத்த கூடாது.. 
மற்றவர்கள் எப்படியோ போகட்டும்.. நாம் குறைந்தது நம் பாராட்டுகளை ஃபேஸ்புக்கிலாவது  பகிரலாமே...யோசியுங்கள்..
-------------------------------------------

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்..அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும் ?

அற்புதம் கண்ணதாசா..  காலம் தாண்டி நிற்கும் கவிஞன்...


-------------------------------------------------

8 comments:

இராஜராஜேஸ்வரி said...

படித்தவர்க்கும் , படிக்காதவர்களுக்கும் வித்தியாசம் உண்டுதானே..அப்போ அதை செயலில் காண்பியுங்கள்.


அதைத்தானே அவர்காண்பித்தார்!
நீங்கள் எதிர்வழி காண்பித்தீர்கள்!!

விழிப்புணர்வு வந்திருந்தால் சரி....

Samantha said...

Hockey matter..very poor..government has to do somehing big

பாலா said...

நண்பரே இருப்பதிலேயே கேனத்தனம், ரூபா நோட்டில் எழுதுவதுதான். படைச்ச அறிவுள்ள எவனும் இதை செய்யமாட்டான்.

அட பிரதமரை பற்றி ஒரு நல்ல செய்தி...

என்ன கொடுமை பாருங்க. டிவி பார்க்க முடியாட்டி ஆட்சியை மக்கள் கவிழ்த்துவிடும் நிலைமைக்கு நாடு முன்னேறிவிட்டது. நீங்க சொல்றது மாதிரி எங்க எரியாவில் இப்போதெல்லாம் கரண்ட் கட் கிடையாது.

ஹாக்கி அணி பாவம். என்னத்த சொல்ல...

N.H. Narasimma Prasad said...

அருமையான பதிவு அசோக். பகிர்வுக்கு நன்றி.

கேரளாக்காரன் said...

Route maathi vuttathukku oru salute. Antha avinju pona kanna naai kooda saapdaathu boss.

குறையொன்றுமில்லை. said...

அருமையான பதிவு. படிச்சவங்களே இப்படில்லாம் பண்ணலாமா?

Manoj said...

i agree that we shouldn't write in currency notes, i donno why the govt giving blank space in currency notes. do u know any reason why they leave the blank space?

மனசாலி said...

எனக்கு தெரிந்து ரூபாய் நோட்டில் எழுதுபவர்களில் முதல் இடத்தில் இருப்பது மலையாளீகள். அடுத்தது பேங்க்கில் வேலை பார்ப்பவர்கள்.

Post a Comment